Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Kollathaan Ninaikirean
Kollathaan Ninaikirean
Kollathaan Ninaikirean
Ebook108 pages43 minutes

Kollathaan Ninaikirean

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

தான் அடைந்த சோதனைகள், அவமானங்களைத் தாண்டி முன்னுக்கு வந்தவன் அஸ்வின்குமார். அவன் மனைவியால் பட்ட துயரமென்ன? அப்பாவி பெண் ப்ரீத்தியை கொலை செய்தது யார்? பணத்தாசை பிடித்த ஆர்த்தியை கொலை செய்ய என்ன காரணம்? யாரை கொல்ல நினைத்தார்? வாசிப்போம்…

Languageதமிழ்
Release dateJun 14, 2022
ISBN6580152008273
Kollathaan Ninaikirean

Read more from Punithan

Related authors

Related to Kollathaan Ninaikirean

Related ebooks

Reviews for Kollathaan Ninaikirean

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Kollathaan Ninaikirean - Punithan

    C:\Users\INTEL\Desktop\Logo New\pustaka_logo-blue_3x.png

    https://www.pustaka.co.in

    கொல்லத்தான் நினைக்கிறேன்

    Kollathaan Ninaikirean

    Author:

    புனிதன்

    Punithan

    For more books

    https://www.pustaka.co.in/home/author/punithan

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    முன்னுரை

    அத்தியாயம் 1

    அத்தியாயம் 2

    அத்தியாயம் 3

    அத்தியாயம் 4

    அத்தியாயம் 5

    அத்தியாயம் 6

    அத்தியாயம் 7

    அத்தியாயம் 8

    அத்தியாயம் 9

    அத்தியாயம் 10

    முன்னுரை

    இது இரவல் நடை

    தமிழ் இலக்கியத்தில் ஆரம்பகால நாவல்கள் எல்லாம் அடுப்படிக்குத்தான் குடியேறின. ஆண் வர்க்கத்தைப் படிக்க வைத்த நாவல்கள் என்றால், ஆரணி குப்புசாமி முதலியார், வடுவூர் துரைசாமி அய்யங்கார், ரங்கராஜ் போன்றோர் படைத்த மர்ம, துப்பறியும் நாவல்களைத்தான் சொல்லலாம். அப்புறம் வரலாற்று, சமுதாய, செக்ஸ் கதைகள் திசை திருப்பின.

    எந்த நிலையிலும் மர்மக் கதைகளுக்குள்ள மவுசு குறையாது என்பதை அறுபதுகளில் மீண்டும் தூக்கி நிறுத்தியவர் ‘மர்மக் கதை மன்னன்’ தமிழ்வாணன்தான் என்பதில் இரண்டாவது கருத்துக்கு இடம் இல்லை என்று நேர்மையான இலக்கிய விமரிசகர்கள் நிச்சயம் ஒப்புக்கொள்வார்கள்.

    அதனால் அவரது உதவியாளனாய் அவர் எதிரே அமர்ந்து சுவாசித்ததில், எனக்கும் அந்த மர்மக்கதை வித்தை கைவரப் பெற்றிருக்கலாம் என்று குமுதத்துக்கு நான் வந்த பிறகு ஆசிரியர் எஸ்.ஏ.பி. அவர்கள் நம்பினார்கள். அந்த நம்பிக்கையை எனக்கும் ஏற்படுத்தினார்கள்.

    இணையாசிரியர் ரா.கி. ரங்கராஜன் அவர்களிடம் ஏதாவதொரு மர்மக் கதைக்கான தலைப்புச் சொல்லும்படி ஆசிரியர் அவர்கள் கேட்டார்கள். தலைப்புச் சூட்டுவதில் மன்னர் அவர். எனது நாவல்கள் பலவற்றுக்குத் தலைப்பு - அவரது உபயம்தான்.

    ‘கொல்லத்தான் நினைக்கிறேன்’ - கடந்த ஆண்டு வெளிவந்த எனது மாலைமதி நாவல், முப்பதாண்டு இடைவெளி, இது மாடர்ன் ரைட்டிங் இன்றைய அவசர இலக்கியக் கண்ணோட்டத்தில், எனக்குத் தொழில் எழுத்து. காலத்தை அனுசரித்துப் போக வேண்டும்.

    ‘பாட்டுத் திறத்தாலே இவ் வையத்தைப் பாலித்திட வேண்டும்’, என்று சொல்ல பாரதி அல்ல நான். உங்கள் தோளில் கைபோட்டுக்கொண்டு உங்களுக்குக் கதை சொல்லும் உங்கள் சினேகிதன்.

    நேர்மைக்குப் புறம்பாகச் செல்பவர்கள் எப்படியெல்லாம் நிலைகுலைந்து போகிறார்கள் என்று சுருக்கென்று உங்கள் நெஞ்சில் ஒரு முள் குத்தினால் அதுவே என் கதைக்கு வெற்றி.

    மர்மக் கதை உணர்வையும் தூண்டி அதிலே ஒரு வனப்பையும் வடித்துக் கொடுத்திருக்கும் வண்ணப் புகைப்படம் எடுத்து வழங்கிய புகைப்பட நிபுணர் ராஜா பொன்சிங்கு-கு எனது பாராட்டுக்கள்.

    சென்னை -10.

    அன்பு,

    புனிதன்

    1

    அஸ்வின் குமார் அன்று தலைகொள்ளாத மகிழ்ச்சியில் இருந்தான்.

    நாற்பதுகளின் வால் பகுதியில் இருந்தாலும் அந்தச் சிவப்பும் செம்பட்டைக் கண்ணும் கருகரு பிடரி முடியும் சுடர்புருவமும் எந்தப் பெண்ணும் கூட்டுச் சேர்ந்துகொள்ள ஆசைப்படும் பெண்மையின் நளினம் கலந்த இளஞ்சிவப்பு உடம்பும், எல்லாவற்றுக்கும் மேல் ஒரு சிங்கப்பூர் டூரிஸ்ட் உடுப்பைத் திருடிக் கொண்டுவந்து மாட்டிக்கொண்டாற் போல் அப்படியொரு பளீர் பனியன், முட்டிப் பக்கம் வட்டம் போட்ட கார்ட்ராய் பாண்ட் அடச்சே, என்ன காம்பினேஷன்!

    ஒரு பி.இ. இன்ஜினீயர் - ஆர்க்கிடெக்ட் இப்படியா இருப்பான்! இதுதான் அவனுடைய தனி முத்திரை - இந்த வித்தியாசமான பளீர்தான் அவனுடைய மேற்பார்வையில் உருப்பெறும் ஐந்து நட்சத்திர ஓட்டல்களின் வடிவமைப்பில் வெளிப்பட, எங்கே எங்கே என்று அஸ்வின் குமாருக்கு அப்படியொரு மவுசு ஏற்படுத்திக் கொடுத்திருக்குமோ!

    ஆமாம், இன்றைக்கு ஓட்டல் கட்டிடக் கலைக்கு தன்னேரில்லாத பெரும் பேர் அவனைத் தேடி வந்து ஒட்டிக்கொண்டிருக்கிறது என்றால் - எல்லாம் ஓர் இரண்டாண்டு வளர்ச்சிதான். அதாவது வெளித்தெரியும் வளர்ச்சி.

    அதற்கு முன்னால் அவனுக்கு ஏற்பட்ட சோதனைகள். அடைந்த அவமானங்கள் - பூசிக் கொண்ட சேறுகள் வேண்டாம். கூடுமானவரை அவற்றைப் பற்றி நினைப்பதோ, பேசுவதோ, பிறர் பேசக் கேட்பதோ அவனுக்கும் சுத்தமாய் ஒத்துக்கொள்ளாது.

    போதும். ஒரு கல்யாணத்தின் பேரால் ஒருத்தியிடம் அவனடைந்த அவமானங்கள், சிறுமைகள், கீழ்ப்பார்வைகளால் விளைந்த தலைகுனிவுகள் போதும்.

    இப்போதுதான் மெள்ள மெள்ள எழுந்து...

    அஸ்வின் கன்ஸ்ட்ரக்ஷன்ஸ் இதோ உருப்படியாய்த் தலை நிமிர்ந்திருக்கிறது. இவனைப் போலவே தலை எடுத்த உடுப்பிக்காரர் ராம்பிரசாத் இவனைப் பூரணமாய் நம்பித்தான் பொறுப்பை ஒப்படைத்தார். குறுக்கீடு ஏதும் இல்லாமல் கேட்டபோதெல்லாம் கணக்குப் பார்க்காமல் கொட்டிக் கொடுத்தார். இல்லாவிட்டால் இப்படியொரு நூதன டிசைனில் ஐந்து மாடிக் கட்டிடமாய் இந்த ஐந்து நட்சத்திர ஓட்டலை அஸ்வின் குமாரால் அமைத்து முடித்திருக்க முடியுமா? இதன் திறப்பு விழாவில் உடுப்பிக்காரருக்கு வேண்டப்பட்ட மத்திய மந்திரி ஒருத்தர் வந்து கட்டிடத் திறப்பு விழாவைக் கோலாகலமாய் ரிப்பன் வெட்டித் திறந்து வைக்கப்போகிறார். வெட்டுவதற்குத் தங்க முலாம் கத்தரி தயாராகிக் கொண்டிருக்கிறது. கட்டிட அமைப்பையே டிசைன் பண்ணிச் செய்திருக்கும் அழைப்பிதழ் ஒன்றே ஐம்பது பெறும் என்று பேசிக்கொள்கிறார்கள்.

    என்ன சொன்னாள் அவள்? ‘பிச்சைக்காரப் பிழைப்பு’ கோடி கோடியாய்ச் சம்பாதிக்கிறான் காண்டிராக்டர். அவனுக்குப் பிளான் போட்டுக் கொடுக்கிறியா, பிளான்? அந்த வரும்படியிலே வயித்துக்கு அடைச்சிக்கிற வாழ்க்கை போறும்னா என் கழுத்திலே தாலி கட்டி அந்த வெத்துக் கயித்தாலே என்னை இழுத்துட்டு வந்தே? என்னமோ இன்ஜினீயர்னாங்களே, காரும் பங்களாவும் சீருமா இருக்கலாம்னு வந்தா, இங்கே ஒரே போர். நோ. என்னோட ஸ்டெனோ வேலை எனக்கு இதைவிட ஜாஸ்தியா சம்பாதிச்சிப் போட்டு அந்தஸ்தா வச்சிருக்கும். பார்க்கறியா? பார்க்கத்தானே போறே? ‘குட்பை,’ என்று சொல்லி விட்டுப் போனாளே...

    அவள் எங்கே யார்கூட எப்படியெல்லாம் வாழ்ந்து கொண்டிருக்கிறாள் என்பது அஸ்வின் காதில் விழுந்து கொண்டுதான் இருந்தது. காதில் மட்டுமா? கண்ணிலும் படத்தானே செய்தது!

    ஒருமுறை பீச் ரோடில் அவனைச் சுமந்து சென்ற டிவி.எஸ்50 பைக் அவனைக் காலை வாரிவிட்டு நகர மறுக்க, அஸ்வின் இறங்கி இன்ஜின், பெட்ரோல் டாங்க். பக்கம் தடவிக்கொடுத்து தாஜா பண்ணி அதனிடம் கெஞ்சிக் கொண்டிருந்தபோது சறுக்கிக்கொண்டு வந்து நின்ற டொயாட்டா

    Enjoying the preview?
    Page 1 of 1