Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Enakkum Thayam Vizhum
Enakkum Thayam Vizhum
Enakkum Thayam Vizhum
Ebook102 pages58 minutes

Enakkum Thayam Vizhum

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

Pattukkottai Prabakar is a prolific writer of Tamil crime and detective fiction. At the same time he has penned lot of novels in all other genres like love, social, comedy. He has also worked as screenplay and dialogue writer for more than 25 tamil movies. He has also worked as a screenwriter in the Tamil film industry, and also for Paramapadham, the first Tamil-language "mega-serial" shown on Doordarshan. First published in the 1977 in Anandha Vikatan. He has written more than three hundreds novels, more than two hundred short stories. Lots of his novels are translated in Telugu and Kannada. He has also worked as a Dialogue writer in more than ten movies in Tamil. Prabakar's novels most commonly feature the adventures of the detective couple Bharat and Susheela, of Moonlight Agencies, and their employees Marikkozhunthu (a.k.a. Madhavi) and Ravi. There is a running gag in the books about the slogans on Susheela's T-shirts.
Languageதமிழ்
Release dateSep 6, 2020
ISBN6580100905799
Enakkum Thayam Vizhum

Read more from Pattukottai Prabakar

Related to Enakkum Thayam Vizhum

Related ebooks

Related categories

Reviews for Enakkum Thayam Vizhum

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Enakkum Thayam Vizhum - Pattukottai Prabakar

    http://www.pustaka.co.in

    எனக்கும் தாயம் விழும்!

    Enakkum Thayam Vizhum!

    Author:

    பட்டுக்கோட்டை பிரபாகர்

    Pattukottai Prabakar

    For more books

    http://www.pustaka.co.in/home/author//pattukottai-prabakar-novels

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    அத்தியாயம் 1

    அத்தியாயம் 2

    அத்தியாயம் 3

    அத்தியாயம் 4

    அத்தியாயம் 5

    அத்தியாயம் 6

    அத்தியாயம் 7

    அத்தியாயம் 8

    அத்தியாயம் 9

    அத்தியாயம் 10

    அத்தியாயம் 11

    அத்தியாயம் 12

    அத்தியாயம் 13

    1

    என் முன் கதையில் துவங்கினால் தனியாக ஒரு பாகம் தேவைப்படும். 'என்ன, ஒரு முப்பத்தி மூணு, முப்பத்தி நாலு வயசிருக்குமா உனக்கு?' என்று தான் எல்லோருமே கேட்கிறார்கள். போன வெள்ளி இரவு சந்தித்த இருட்டில் முகம் தெளிவில்லாத அந்த கேரளப் பெண் உள்பட.

    ஆனால் இருபத்தாறு தான். நம்ப வைக்க பர்த் சர்ட்டிஃபிகேட் கைவசம் இல்லை. புதுக்கோட்டைக்குப் பக்கத்தில் கீரனூரில் என் வீட்டு ட்ரங்குப் பெட்டியில் இருக்கிறது. இருக்கிறதோ, இல்லை கோபமாகக் கிழித்துப் போட்டு விட்டார்களோ.

    தாய்க்குத் தலைமகன் கல்லூரிப் படிப்பு முடித்த கையோடு பாங்குக்குப் போக வேண்டும். அல்லது வெற்றிலை பாக்குக் கடையாவது வைத்து பொறுப்பாக செயல்பட வேண்டும். இரண்டுமில்லாமல், சினிமாவில் பெரிய ஹீரோ ஆக வேண்டும் என்று என்னைப் போல ஆசைப்பட்டால், குடும்பத்தினருக்கு கோபம் வரத்தான் செய்யும்.

    அப்பா என்பவர் விறகுக் கட்டையைத் தூக்கத்தான் செய்வார், செய்தார். அம்மா என்பவள் விரல்களில் நெட்டி முறிய 'நீ உருப்பட மாட்டே' என்று அருள் வாக்கு சொல்லத்தான் செய்வாள், செய்தாள்.

    ஆனால் உருப்படுவேன் என்று நிரூபிக்க அசாத்திய வெறி வரும். வந்தது. ஒரு நட்ட நடு ராத்தியில் அகப்பட்ட பணத்துடன் அருகாமை ரயில் நிலையம் வந்து டிக்கெட் வாங்காமல் (வீட்டிற்கு உருக்கமாக மூன்று பக்கத்திற்கு கடிதம் எழுதி வைத்து விட்டு) வந்தாரை வாழ்விக்கும் (சிலரை மண்ணோடு மண்ணாக்கி ஒழித்துக் கட்டும்) சென்னைக்கு வரச்சொல்லி சூழ்நிலை நிர்பந்திக்கும்.

    நிர்பந்தித்தது. வந்தேன்.

    எப்போது? 19 எண்பத்தி நாலாம் வருஷம் ஐப்பசி மாசம் தீபாவளி முடிந்த, தெருவெல்லாம் பட்டாசுக் குப்பையால் கிடந்த இரண்டாம் நாள். ஜலதோஷ மூக்காக வானம் ஒழுகிக் கொண்டிருந்த காலை நேரம்.

    அப்போது எனக்குத் தெரிந்த ஒரே ஆசாமி மிஸ்டர் நம்பிக்கை.

    கல்லூரி நாடகங்களில் கதாநாயகனாக நடிக்க நான் தான் அகப்படுவேன். உயரம் சிவப்பு. முகத்தில் காயத் தழும்போ, பருவோ கிடையாது, மீசை வேறு மெனக்கெட்டு பயிர் செய்தது போல வளமையாக, சிகரெட் பரிச்சயமில்லாத (அப்போது) உதடுகள். போதாதா?

    டயலாக் பிரமாதமாக உருப்போடும் திறமை நம் + பாய்ண்ட். தமிழ் பாடத்தில் பள்ளி தினங்களில் செய்யும் மனப்பாடம் செய்து, செய்து பழக்கம்.

    ராஜாத்தி, நீ ஆயிரம் தான் காரணம் சொன்னாலும் என்னால உன் முடிவை ஏத்துக்க முடியாது. கொஞ்சம் யோசித்துப் பார். நீயும், நானும் ஜோடிப் புறாக்களாக நம் சுதந்திர காதல் வானில் சிறகடித்துப் பறந்த நாட்களை நினைவுப் பெட்டகத்தில் இருந்து தூக்கி எறிந்து விடமுடியுமா? முதன் முதலா நாம சந்திச்சமே அந்த சந்திப்பை உன்னால மறந்துட முடியுமா பவானி? என்னை ஏமாத்திடாதே பவானி. என்னால் காதல் தோல்வியைத் தாங்க முடியாது. இந்த சமுதாயத்தின் வரலாறு இன்னொரு தேவதாசை தன் பக்கங்களில் பதிவு செய்து கொள்வதில் உனக்குச் சம்மதம்தானா பவானி?

    பழைய சிவாஜி படத்தில் போல திடீரென்று செந்தமிழ், திடீரென்று வழங்கு தமிழ் என்று கைக்கு வந்தபடி அருணாசலம் எழுதின வசனங்களைத் தப்பில்லாமல் பேசுவதில் நான் கெட்டிக்காரன்.

    அந்த அருணாசலம் அப்புறம் 'தீப்பிழம்பு' என்று ஜிப்பா மாட்டிக்கொண்டு மணீஸ் கபே, சுபத்ரா ரெடிமேட்ஸ் விளம்பரங்களின் தயவில் எட்டு பக்கத்திற்கு ஒரு சிற்றிதழ் நடத்திக் கொண்டிருந்தான் (தனிச் சுற்றுக்கு மட்டும்)

    பாரீஸ் கார்னர் நாராயண முதலித் தெருவில் ஒருமுறை யதேச்சையாகப் பார்த்து, ஒதுங்கி நின்று லெஸி சாப்பிட்ட போது கல்யாணமாகிவிட்டது என்றான். சிதம்பரத்தில் மாமனார் வைத்துக் கொடுத்திருக்கும் அச்சாபீஸில் ஒழுங்காக உட்கார்ந்து ஃபேரெக்ஸுக்கும், ஐடெக்ஸுக்கும் பணம் பண்ணிக் கொண்டிருப்பதாகச் சொன்னான்.

    தீப்பிழம்பு என்னடா ஆச்சு என்றால், 'அணைஞ்சு போச்சு' என்றான். ‘சரி, நீ என்ன செய்றே? சினிமாவில் இருக்கிறதா சொன்னாங்க?' என்றான்.

    சினிமாவில் தான் இருந்தேன் அவன் கேட்ட போது, ஆனால் சொல்லிக் கொள்கிற மாதிரியான உத்யோகம் இல்லை. அதனால்...

    என்ன அருணா இப்படி கேக்கறே? தெலுங்குல பதினேழு படம் பண்ணிட்டேன். மலையாளத்துல மூணு, தமிழ்ல இப்ப ஆனந்த பாபுவுக்கு ஃபிரண்டா ஒரு படம் பொங்கலுக்கு ரிலீசாகுது. தெலுங்குல ஹீரோவா பண்ணப் போறேன். ஸ்க்ரின் டெஸ்ட் எல்லாம் முடிஞ்சி காஸ்ட்யூம் எல்லாம் தச்சிட்டாங்க. அடுத்த வாரம் ஊட்டில மூணு ஸாங் எடுக்கறாங்க. ஆனா ப்ரட்யூஸர் சிங்கப்பூர்லேந்து ஒரு செக் எதிர்பார்த்துக்கிட்டிருக்கார். அது வந்துட்டா உடனே பூஜை தான் என்றேன்,

    அருணாசலம் ப. காட்டான் யா. பார்ப்பது போல வியந்துவிட்டு 'ஆல் தி பெஸ்ட்' என்று புருடாவுக்கு வாழ்த்துச் சொல்லிச் சென்றான்.

    சினிமாவில் ஏழு வருட வாழ்வில் இன்றைக்கு இந்த 91ல் நான் எப்படி இருக்க வேண்டும்?

    Enjoying the preview?
    Page 1 of 1