Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Just Jolly Part - 1
Just Jolly Part - 1
Just Jolly Part - 1
Ebook122 pages47 minutes

Just Jolly Part - 1

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

சிரிப்பும் மகிழ்ச்சியும் கூடிய உணர்வை தூண்டும் கலை வடிவங்களே நகைச்சுவை. நவரசங்களில் ஒன்றான நகைச்சுவை என்பது ஒருவருடைய மன உளைச்சல் மன இறுக்கம் போன்றவற்றில் இருந்து மீண்டு ஆரோக்கியமான உடல் மற்றும் மன நிலையைப் பேண உதவும். இத்தகைய சுவையை சுவைப்பதற்கு வாருங்கள் எஸ்.வி. சேகரின் ஜஸ்ட் ஜாலி வாசிக்கலாம்.

Languageதமிழ்
Release dateJun 25, 2022
ISBN6580148907553
Just Jolly Part - 1

Read more from S.Ve. Shekher

Related to Just Jolly Part - 1

Related ebooks

Related categories

Reviews for Just Jolly Part - 1

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Just Jolly Part - 1 - S.Ve. Shekher

    https://www.pustaka.co.in

    நாடகப்பிரியா-வின் S.Ve. சேகர்-இன்

    ஜஸ்ட் ஜாலி பாகம் 1

    Nadagapriya-Win S.Ve. Shekher-In

    Just Jolly Part – 1

    எழுத்து

    கோவி கோவன்

    எண்ணம், இயக்கம்

    S.Ve. சேகர்

    For more books

    http://www.pustaka.co.in/home/author/s-ve-shekher

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    S.Ve. சேகருக்கு பத்மஸ்ரீ

    23 நாடகங்கள் 4001 நாடகக் காட்சிகள் இந்த சாதனையை தமிழ்நாட்டை பொருத்த வரை பலரும் செய்து இருந்தாலும் எஸ்.வி. சேகர் ஒருவர்தான் 25 ஆண்டுகளில் இந்த சாதனை செய்து இருக்கிறார். அது மட்டும் அல்ல. 25 ஆண்டுகள் 4000 நாடகங்கள் என்றால் ஏறத்தாழ 11 ஆண்டுகள் அவர் மேடையிலேயே கழித்திருக்க வேண்டும். இது நிச்சயமாக தமிழ் நாடக மேடையை பொருத்தவரை சாதனைதான். தொலைக்காட்சி ஆதிக்கம் வந்தபிறகு தொடர்ந்து வெற்றிகரமாக நாடகம் நடத்துபவர் சேகர். அதுமட்டுமல்ல. அவர் நாடகம் நடத்தி லட்சக்கணக்கான பணத்தை நல்ல காரியங்களுக்காக வசூல் செய்தும் கொடுத்திருக்கிறார். அவரது பொது நல நோக்கம் நிச்சயமாக பாராட்டப்பட வேண்டிய விஷயம். தமிழ் நாடக உலகம் நலிந்து வருகிறது என்று கூறுகிற காலகட்டத்தில் தொடர்ந்து வெற்றி நாடகங்கள் போட்டு ரசிகர்களை சிரிக்க வைத்துக் கொண்டு இருக்கும் சேகர் நிச்சயமாக நம் பாராட்டுக்கு உரியவர். இன்று மேடையிலே வீற்றிருக்கும் பெரியவர்கள் அனைவரும் நாடக வளத்தை நன்கு அறிந்தவர்கள். சேகர்க்கு முன்பு இந்த சாதனையை செய்த திரு. சோ அவர்கள் சேகருக்கு நாடக ரத்னா என்ற பட்டத்தை வழங்க வந்திருக்கிறார். சேகரின் நாடக விழாவில் கலந்துகொள்ள வேண்டும் என்று கவிப்பேரரசு வைரமுத்துவிடம் சந்தித்துக் கேட்ட பொழுது பல்லாயிரக் கணக்கானவர்கள் மனத்தில் சேகர் இருக்கிறார். அதற்காகவே அவர் பாராட்டு விழாவில் நான் கலந்துகொள்ள வருகிறேன் என்று ஒப்புதல் கூறினார்.

    Super Writer Sujathaவைப் பற்றி உங்கள் அனைவருக்கும் தெரியும். அவர் நாடகங்கள் தவறாமல் பார்ப்பவர் என்றாலும் மற்ற நாடகங்கள் பற்றி மேடையில் ஏறி பாராட்டுவது என்பது சற்று குறைவான விஷயம். காரணம் அவர் மனத்துக்குப் பிடித்தால்தான் மேடைக்கு வந்து பாராட்டுவார்கள். அவரிடம் கேட்டதும், எனக்கு சேகருடைய நாடகங்கள் மிகவும் பிடிக்கும். கண்டிப்பாக வருகிறேன் என்றார்.

    தமிழ் நாடக மேடையை பொறுத்தவரை பல சாதனைகளை செய்த யாருக்குமே மத்திய அரசின் கௌரவமான பத்மஸ்ரீ விருது அளிக்கப்படுவது இல்லை. வட இந்தியாவில் பம்பாயிலும், டெல்லியிலும் எவ்வளவோ நாடக நடிகர்களுக்கு பத்மஸ்ரீ விருது கொடுக்கும் போது தமிழ்நாட்டில் யாருக்கும் கிடைக்கவில்லை என்பதை கூறி இதை மத்திய அமைச்சர் டெல்லியில் சொல்லி இங்கு சிறப்பாக தமிழ் மேடைநாடகம் போட்டுவரும் எஸ்.வி. சேகருக்கு பத்மஸ்ரீ கிடைக்கும்படியாக எங்கள் சார்பாக கேட்டுக்கொள்கிறோம்.

    - திரு. ராது

    (4001வது நாடக விழாவில்)

    சமர்ப்பணம்

    யார் எதைச் சொன்னாலும் பொறுத்துக்கொள்ள முடியும். ஆனால் நாடகப் பிரியாவைப் பற்றி ஒரு வார்த்தை தவறாகப் பேசினாலும் அடிதான் என்ற அளவுக்கு தன் நாடகக்குழுவின் மேல் தீவிரமான மதிப்பு உடையவன் என் நண்பனும் நாடகப் பிரியாவின் அஸ்த்திவார மெம்பருமான குரு என்று அழைக்கப்படும் குருமூர்த்தி. மேடை நிர்வாகத்தில் நம்பர் ஒன். என்னுடைய தனிப்பட்ட வளர்ச்சியிலும், மகிழ்ச்சி அடைபவன் குரு.

    திரு. சோவிற்கு எப்படி ஒரு ரங்காச்சாரியோ அதுபோன்று எஸ்.வி. சேகருக்கு ஒரு மச்சி ராமசாமி என்று சொல்லும் அளவிற்கு ஒரு சிறந்த மேடை குழு நிர்வாகி என் நண்பன் ஸ்டேட் பேங்க் ராமசாமி. செல்லமாக எல்லோரும் மச்சி என்று அழைத்து – இப்போது கேசட்டிலேயே மச்சி ராமசாமி என்று மாற்றும் அளவிற்கு வந்துட்டார். ஒன் மோர் எக்சார்சிஸ்ட் நாடகத்தில், திரு. சீதாராமன், ராமசாமியை, காட்சியின் இடைவெளியில் எனக்கு அறிமுகப்படுத்தினார். உடனே நான் என் கையிலிருந்த சாப்பாட்டு தட்டை ராமசாமியிடம் கொடுத்து இதை கழுவி அங்க வைச்சுடங்கன்னு சொல்லிட்டு மறுபடியும் சீனுக்குள்ள போயிட்டேன். நாடகத்தின் இடைவேளையில் சீதாராமன் என்னிடம் வந்து அவனும் என் பேங்க்குலதான் வேலை பாக்குறான். அவனை இப்படி இன்சல்ட் பண்ணிட்டியே என்றார். அதற்குள் அங்குவந்த ராமசாமி, சார் தட்டை அலம்பி குருமூர்த்திகிட்ட குடுத்துட்டேன் என்றான். சரி தாங்ஸ். நீ நம்ப குழுவில் சேர்ந்தாச்சு. இன்னிலேயிருந்தே மேடை நிர்வாகத்தில் பங்கு எடுத்துக்கன்னு சொல்லி எல்லோர்கிட்டயும் அறிமுகப்படுத்திவைச்சேன். சுமார் நாற்பது பேர் கொண்ட எங்களது குழு வெளிநாட்டிற்குப் போகும் போது பதினான்கு பேராக சுருங்கிவிடும். (அழைப்பவர்களின் பாரத்தை குறைப்பதற்காக) அப்படி இருந்தும் எந்தக் குறையுமில்லாமல் எங்கள் நாடகங்கள் வெற்றிகரமாக நடந்ததற்குக் காரணம் மச்சி ராமசாமி.

    அடுத்தபடியாக எனக்கு உதவியாளனாகவும், நாடகப்பிரியா நடிகனாகவும், நிர்வாகியாகவும் இருந்தவன் பிஸ்கட் கணேசன்தான் வேலை பார்த்துக் கொண்டிருந்த பிஸ்கட் கம்பெனியின் வளர்ச்சிக்காக அதைவிட்டு விலகி என் குழுவில் இணைந்தவன். P.A. பதவிக்கு 100 சதவிகிதம் நம்பிக்கையானவன். இன்றுவரை சைக்கிள் ஸ்கூட்டர் எதுவும் ஓட்டத் தெரியாமல் வாழ்க்கையை சிறப்பாக ஒட்டிக்கொண்டிருப்பவன். இவர்களையெல்லாம் ர் போட்டு என்னுடைய நட்பை தள்ளிவைக்க விருப்பப்படவில்லை. இன்றும் நாடகப்பிரியாவின் வெற்றிகளுக்கு இவர்களின் பங்களிப்பும் முக்கிய காரணம். ஆகவே குருமூர்த்தி, மச்சி ராமசாமி, பிஸ்கட் கணேசனுக்கு இந்தப் புத்தகத்தை காணிக்கையாக்குகின்றேன்.

    ஜஸ்ட் ஜாலி பாகம் 1

    சில பேரு தலையணை சைஸ்ல மணி பர்ஸ் வச்சிருப்பாங்க பாத்திருக்கீங்களா. உல்லாற பணம் இருக்குதோ இல்லையோ, ஏகப்பட்ட பேப்பர், நோட்டு எல்லாம் இருக்கும்...

    கேட்டா எல்லாம் செலவு கணக்கு இருக்கு... அட்ரஸ் இருக்கு... போன் நம்பர் இருக்கும்பாங்க...

    ஒருத்தர், இப்படி குப்பையாட்டம் மணிபர்ஸை வச்சிருக்கிறது ஒரு வித்தியாசமான காரணம் சொன்னாரு.

    இந்த குப்பைக்கு நடுவுல பணத்தை வச்சிருந்தா, என்னோட மனைவியால அவ்ளோ சீக்கிரம் பணத்தை எடுக்க முடியாது - ன்னாரு.

    இன்னொருத்தர் பர்ஸ் உல்லாற ஒரு குட்டி தேளை போட்டு வச்சிருந்தாரு... கேட்டா, எவனாவது பிக்பாக்கெட் அடிச்சிட்டு போனா, அவனை போட்டு தள்ளிடும்ல... அதுக்காகத்தான்னாரு... நல்ல வேளை மனைவிக்காகத்தான் அதைப் போட்டு வச்சிருக்கேன்னு சொல்லல... ஒரு வேளை அதுக்காகக்கூட இருக்கும். யாரு கண்டா...

    ஒருத்தர் சட்டை பாக்கெட்ல ஏகப்பட்ட பாங்க் பாஸ்புக் வச்சிருந்தாரு... இவ்ளோ பேங்க்லேயா அக்கவுண்ட் வச்சிருக்கீங்க. அந்தளவுக்கு சம்பாதிக்கிறீங்களா... பேஷ்... பேஷ்...ன்னேன்...

    சம்பாதிச்சாதான் பாஸ் புக் வச்சிருக்கணுமா... எனக்கு எல்லா பேங்க்லேயும் அக்கவுண்ட் ஓபன் பண்ணி வச்சிக்கிறது

    Enjoying the preview?
    Page 1 of 1