Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Naattu Nadappu Part 1
Naattu Nadappu Part 1
Naattu Nadappu Part 1
Ebook121 pages44 minutes

Naattu Nadappu Part 1

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

எந்த ஒரு விஷயத்தையும் மேற்பார்வை மூலம் ஒரு முடிவுக்கு கொண்டு வரமுடியாது. அதை ஆழ்ந்து அனுபவித்தால் தான் அதன் உண்மை நிலை தெரியவரும் இதேபோல் நாட்டு நடப்பிலும் சில உண்மை நிலையை ஆராய்வோம் நகைச்சுவை உணர்வுடன்…

Languageதமிழ்
Release dateJun 14, 2022
ISBN6580148907590
Naattu Nadappu Part 1

Read more from S.Ve. Shekher

Related to Naattu Nadappu Part 1

Related ebooks

Related categories

Reviews for Naattu Nadappu Part 1

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Naattu Nadappu Part 1 - S.Ve. Shekher

    https://www.pustaka.co.in

    நாடகப்பிரியா-வின் S.Ve. சேகர்-இன்

    நாட்டு நடப்பு - 1

    Nadagapriya-Win S.Ve. Shekher-In

    Naattu Nadappu Part 1

    எழுத்து

    ராதா

    எண்ணம், இயக்கம்

    S.Ve. சேகர்

    For more books

    http://www.pustaka.co.in/home/author/s-ve-shekher

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    புடவை கடை

    இஞ்சினியரிங் காலேஜ்

    புது மாப்பிள்ளை

    சங்கீதம்

    உறவினரை விரட்ட யோசனை

    சேனல் ஆரம்பித்தல்

    போனில் எஸ்.வி பேசிக் கொண்டு இருக்க

    நர்ஸ்

    லோ பட்ஜெட் மகாபாரதம்

    இன்ஷூரன்ஸ்

    மெரீனாவை சுத்தப்படுத்துதல்

    பஜார் கடையாளர்

    குழந்தை

    ரசிகர் மன்ற மோதல்

    ஹீரோவுக்கு கதை சொல்லுதல்

    ஃபாஸ்ட் புட் சென்டர்

    மெக்கானிக்

    சேல்ஸ் பர்சன்

    பிச்சைக்காரன்

    கார் லோன்

    கல்யாண அழைப்பிதழ்

    மிஸ் இந்தியா

    டிராவல்ஸ்

    சங்கம் ஆரம்பிக்க ஐடியா

    அனாதை விடுதி

    அவனுக்கு அதிருஷ்டம் சார்

    நாடகப்பிரியா குழுவினர் என்னுடைய கண்ணாமூச்சி நாடகத்தை மிக வெற்றிகரமாக நூறு முறைக்கு மேல் மேடையேற்றினார்கள். அப்புறம் பல நாடகங்கள். நாடகப் பிரியாவின் கொடி உயரத்தில் பறக்க ஆரம்பித்து விட்டது. பிற்பாடு எஸ்.வி. சேகருக்கு திரைப்படத்தில் நடிக்க வாய்ப்பு வந்தபோது அவருக்கே உரித்தான நகைச்சுவையுடன் என்னிடம் சொன்னார், எனக்கு நாலுபடம் இருக்கு சார் கையில. தமிழ் சினிமா எவ்வளவு கெட்டுப் போச்சு பாருங்க.

    அன்றுமுதல் இன்றுவரை, பல ஆண்டுகள் எங்களுக்குள்ள, நெருக்கத்தில் நான் அவரிடம் கண்டது, எடுத்த காரியத்தை முடிக்கிறவர். வெற்றி, தோல்வியைப் பற்றிய அனாவசியக் கவலை எல்லாம் இல்லாமல், அலுக்காமல், சலிக்காமல், உழைக்கிறவர். மிகுந்த தன்னம்பிக்கையும், திறமையும் கொண்டவர். பிறரை எளிதில் எடை போடக்கூடியவர். ஒரு இலக்கு வைத்துக்கொண்டு அதை நோக்கி தீர்மானமாக நகர்ந்து கொண்டிருக்கிறவர்.

    பல ஆண்டுகள் அவர் செய்த முயற்சிகள், உழைப்பு இவை பற்றி அறிந்துகொள்ள வாய்ப்பில்லாத சில நண்பர்கள் இப்போது அவர் இருக்கும் உயர்ந்த நிலை குறித்து என்னிடம் சொல்லுவார்கள், அவனுக்கு நல்ல அதிர்ஷ்டம் சார். அவர்களுக்கெல்லாம் நான் ஒன்று சொல்லுவேன். ஜெயிக்கிறவர்கள் எப்போதுமே அதிர்ஷ்டத்தில்தான் ஜெயிக்கிறார்கள். உங்களுக்கு சந்தேகம் இருந்தால் தோற்றவனைக் கேட்டுப் பாருங்கள் என்றார் ஒரு அறிஞர்.

    பெரிய அளவில் ஜெயிப்பதற்கு வேண்டுமானால் அதிர்ஷ்டம் சேகருக்கு துணைக்கரம் நீட்டியிருக்கலாம். ஆனால் எஸ்.வி. சேகர் இயல்பாகவே ஜெயிக்கிறவர், அதற்குரிய முயற்சியும் ஆற்றலும் அவருக்கு இருக்கின்றன.

    தன்னுடைய நாடகத்தை எஸ்.வி. சேகரைவிட அழகாக யாரும் விமர்சிக்க முடியாது. ‘வீட்ல போர் அடிச்சா பீச்சுக்குப் போய் கொஞ்ச நேரம் கவலையை மறந்து உட்கார்ந்து விட்டு வருவதில்லையா? அது மாதிரிதான் என்னுடைய நாடகம்’ என்பார். எதற்கு பீச்சுக்குப் போகிறாய் என்று யாரும் கேட்பதில்லை. பீச்சில் என்ன இருக்கிறது என்று யாராவது கேட்கிறார்களா? அது போல்தான் சேகரின் நாடகத்திற்கு விமர்சனம் தேவை இல்லை. தன்னுடைய நாடகத்தில் ரசிகர்கள் நிச்சயமாக இரண்டு மணி நேரம் தங்கள் கவலையை மறந்து இளைப்பாற முடிகிறது என்பதை நன்கு தெரிந்து வைத்திருக்கிறார். எதையோ சாதிக்கப்போகிறோம் என்று ஆரம்பித்து, கடைசியில் இவ்வளவுதானா என்கிற மாதிரி இல்லாமல் தன்னுடைய குறிக்கோளை அளவாக வைத்துக் கொண்டு அதை வெற்றிகரமாக செயலாக்கவும் செய்து வருகிறார்.

    நாடகப்பிரியாவின் சாதனையை பாராட்ட எஸ்.வி. சேகரைப் பற்றி எழுதியிருக்கிறேன்.

    அவருடைய 3000-ஆவது நாடக சாதனை, அவரைப் போலவே ஆற்றல் இருக்கும் சிலருக்கு ஊக்கம் அளிக்கும்.

    எஸ்.வி. சேகரும், நாடகப் பிரியாவும் தொடர்ந்து வளர என்னுடைய வாழ்த்துக்கள்.

    - கே. கே. ராமன்

    (3000வது நாடக விழா மலரிலிருந்து)

    சமர்ப்பணம்

    தமிழில் அ என்றால் அம்மா, அன்பு என்றுதான் சொல்லிக் கொடுப்பார்கள். தஞ்சாவூரில் பஞ்சாபகேச ஐயர் - தங்கம்மாள் தம்பதியருக்கு பிறந்தவர் என் அம்மா தம்மு என்று சகோதர சகோதரிகளால் அழைக்கப்படும் தர்மாம்பாள். என் தந்தை எஸ்.வி. வெங்கடராமனை திருமணம் செய்து கொண்ட பிறகு அலமேலு வெங்கடராமனாக பெயர் மாற்றம் அடைந்து என் தந்தையால் ‘அம்மு’ என்று அழைக்கப்பட்டவர். நடுத்தர ஆசாரமான குடும்பத்தில் பிறந்து வளர்ந்ததால் கடவுள் நம்பிக்கை மிக்கவர். எங்கள் குடும்பத்தின் ஹோம் மினிஸ்டர். மற்றும் கடனில்லாத பட்ஜெட்டில் குடும்பத்தில் உள்ள அனைவரையும் சிறந்த நிலைக்கு கொண்டு வந்த நிதி அமைச்சர். அண்ணா மன்னி என்று எங்கள் குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் கொண்டாடும் அளவைவிட மிக அதிகமாக தன் கணவரின் குடும்பத்தையும் நேசித்தவர். நான், என் தங்கை சுசீலா, தம்பிகள் ராஜா வைத்தியநாதன், கிருஷ்ணமூர்த்தி அனைவரும் மிக ஒற்றுமையாகவும், மிக நல்ல நிலைமையில் இருப்பதற்கு எங்கள் அம்மா எங்களை வளர்த்தவிதமும் ஒரு காரணம். தான் படித்த படிப்பைவிட அதிக விஷய ஞானமுள்ளவர். குடும்பக் கவலைகள் தந்தைக்குத் தெரியாமல் பார்த்துக் கொண்டவர். இன்றும் தன்னுடைய சகோதர சகோதரிகளை விட்டுக் கொடுக்காதவர். அமெரிக்காவில் எந்த மாகாணத்தில் எந்த யூனிவர்சிட்டி இருக்கிறது என்றால் உடனே சொல்லக் கூடியவர். யாரையும் கண்டித்து பேசத் தெரியாதவர். என் தந்தையைப் பற்றி சொல்லும் அனைத்து செயல்களுக்கும் பின்னால் இருந்து உதவியவர். மாதா, பிதா, குரு, தெய்வம் இவற்றில் முதலாவதாக இருப்பதற்கு அனைத்து தகுதிகளையும் படைத்த என் அம்மாவிற்கு இந்த புத்தகத்தை காணிக்கையாக்குகின்றேன்.

    புடவை கடை

    சேகர் போனில் ஒருவருடன் பேசுவது

    போன்: டேய் சேகர் என் பொண்டாட்டிக்கு புது புடவை வாங்கி குடுத்துருக்கேன், அத எடுத்துக்கிட்டு அவ உன் வீட்டுக்குதான் வரா... குடும்பத்தோட எஸ்கேப் ஆயிடு... அப்புறம் உன்னையும்... புது புடவையும் எடுக்க சொல்லி உன் மனைவி நச்சரிக்க போறங்க...

    எஸ்.வி: என் மனைவி வீட்டுல இல்லை...

    போன்: எங்க...?

    எஸ்.வி: புது நெக்லஸ் எடுத்து குடுத்தேன். அத காட்ட உன் வீட்டுக்கு வந்துட்டு இருக்கா... பெட்டர் நீ எஸ்கேப் ஆயிடு...

    என்று போனை வைக்க...

    எஸ்.வி: பொங்கலுக்கும் புத்தாண்டுக்கும் இப்பவே பொடவை

    Enjoying the preview?
    Page 1 of 1