Mel Maadi Kaali
()
About this ebook
பணத்தை மிச்சப்படுத்த சாப்பிடக்கூட மறுக்கும் பரமசிவம். இவரின் மகள் அனு. பரமசிவத்தின் வீட்டிற்கு குடிபுகும் தேவா. அனுவை, தேவா காதலிக்கிறான். பரமசிவம் இவர்களின் காதலை ஏற்பாரா? கஞ்சத்தனம் மெல்ல மெல்ல மாறியதா? மேலும் இவ்வீட்டில் நடக்கும் விஷயத்தை நகைச்சுவையோடு எடுத்துரைக்கிறார் கோவை அனுராதா.
Read more from Kalaimamani Kovai Anuradha
Aathichoodi Nadagangal Rating: 0 out of 5 stars0 ratingsPeikku Vaakkappattal? Rating: 0 out of 5 stars0 ratingsNagaichuvai Nadagangal Rating: 0 out of 5 stars0 ratingsSirippu Nadagangal Rating: 0 out of 5 stars0 ratingsChinnanchiru Sirukathaigal Rating: 0 out of 5 stars0 ratingsKondrai Vendhan Rating: 0 out of 5 stars0 ratingsUnnai Arindhaal... Rating: 0 out of 5 stars0 ratingsKavarchi Illamal Kalyanama? Rating: 0 out of 5 stars0 ratingsThallupadi Dhandapani... Rating: 0 out of 5 stars0 ratingsVendam Andha Pathavi Uyarvu... Rating: 0 out of 5 stars0 ratingsMaanbumigu Maamiyar Rating: 0 out of 5 stars0 ratingsMaamiyaar 65@hotmail.com Rating: 0 out of 5 stars0 ratingsAviyal Rating: 0 out of 5 stars0 ratingsAanandha Nilaiyam Rating: 0 out of 5 stars0 ratingsPuthiya Porattam Rating: 0 out of 5 stars0 ratingsSel Sundari... Rating: 0 out of 5 stars0 ratingsPavithra Rating: 0 out of 5 stars0 ratingsSithalukku Sontha Veedu Rating: 0 out of 5 stars0 ratingsPodhu Nalam Ponnusamy Rating: 0 out of 5 stars0 ratings
Related to Mel Maadi Kaali
Related ebooks
Unnai Arindhaal... Rating: 0 out of 5 stars0 ratingsVilagava Pazhaginom? Rating: 0 out of 5 stars0 ratingsMalarodu Thaniyaga... Rating: 0 out of 5 stars0 ratingsSorna Rating: 0 out of 5 stars0 ratingsNeethaney Enathu Nizhal... Rating: 0 out of 5 stars0 ratingsKaadhal Enbathu... Rating: 5 out of 5 stars5/5Thaniyadha Thagangal Rating: 0 out of 5 stars0 ratingsNandhini Oru Nandhavanam Rating: 5 out of 5 stars5/5Unnai Naan Swasikiren… Rating: 0 out of 5 stars0 ratingsManal Sirpangal Rating: 0 out of 5 stars0 ratingsUthama Thirudi Rating: 5 out of 5 stars5/5Dowry Tharatha Gowri Kalyanam Rating: 0 out of 5 stars0 ratingsPuthiya Porattam Rating: 0 out of 5 stars0 ratingsEppodhum Nee! Rating: 2 out of 5 stars2/5Priyasagaa Rating: 5 out of 5 stars5/5Ivalum Oru Thodarkathaithan...! Rating: 0 out of 5 stars0 ratingsNeeye.. Neeye.. Kadhal Theeye.. Rating: 4 out of 5 stars4/5Marupadiyum Padikkalam Rating: 0 out of 5 stars0 ratingsSherlack Sharmaji Rating: 0 out of 5 stars0 ratingsமாறியது நெஞ்சம்! Rating: 0 out of 5 stars0 ratingsManasellaam NIrainjavane Rating: 4 out of 5 stars4/5மனசெல்லாம் நிறைஞ்சவனே! Rating: 0 out of 5 stars0 ratingsThallupadi Dhandapani... Rating: 0 out of 5 stars0 ratingsParappatharku Oru Vanam Vendum Rating: 4 out of 5 stars4/5Enni Irunthathu Edera... Part - 5 Rating: 3 out of 5 stars3/5Ketkum Varam Kidaikkum Varai...! Rating: 0 out of 5 stars0 ratingsVilagava? Vilagiva..! Rating: 5 out of 5 stars5/5Thenralaga Nee Varuvaayaa Rating: 5 out of 5 stars5/5தென்றலாக நீ வருவாயா Rating: 0 out of 5 stars0 ratingsUnmeethu Nyabagam... Rating: 0 out of 5 stars0 ratings
Reviews for Mel Maadi Kaali
0 ratings0 reviews
Book preview
Mel Maadi Kaali - Kalaimamani Kovai Anuradha
https://www.pustaka.co.in
மேல் மாடி காலி
Mel Maadi Kaali
Author:
கலைமாமணி கோவை அனுராதா
Kalaimamani Kovai Anuradha
For more books
https://www.pustaka.co.in/home/author/kalaimamani-kovai-anuradha
Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.
All other copyright © by Author.
All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.
பொருளடக்கம்
காட்சி - 1
காட்சி - 2
காட்சி - 3
காட்சி - 4
காட்சி - 5
காட்சி - 6
காட்சி - 7
காட்சி - 8
காட்சி - 9
காட்சி - 10
காட்சி - 11
காட்சி - 12
காட்சி - 13
காட்சி - 14
காட்சி - 15
காட்சி - 16
காட்சி - 17
காட்சி - 18
காட்சி - 19
காட்சி - 1
(தூண்கள் எப்போது சாயும்... உத்திரங்கள் கீழேவிழும் என்று பயப்படும் அளவுக்கு அது ஒரு தாத்தாவுக்குத் தாத்தாகாலத்து வீடு. சுவரில் பல இடங்களில் விரிசல் ஏற்பட்டு, அதிலிருந்து அடையாறு ஆலமரத்தின் குஞ்சுகள் எட்டிப் பார்த்துக் கொண்டிதிருந்தன. வீட்டின் நடு முற்றத்திலிருந்து மாடி போர்ஷனுக்குப் போவதற்காகக் கரையான் அரித்த மரத்தால் ஆன மாடிப்படிகள்... ஹாலின் நடுவே புதை பொருள் ஆராய்ச்சிக்காரர்கள் தோண்டி எடுத்ததைப்போல ஒரு பழைய்ய சோபா...)
வீட்டுத் தலைவி பார்வதி, கையில் ஆறிப் போன கஞ்சியை எடுத்துக்கொண்டு வந்தவள் ஹாலில் தன் கணவனைக் காணாமல் தேடுகிறாள்.
பார்வதி: என்னது ஹால்ல யாரையும் காணும்... இவரு எங்க போயிட்டாரு? மணி எட்டாகப் போகுது. கஞ்சிகூடக் குடிக்கலே... ம்... என்னங்க... என்னங்க...
(சோபாவின் பின்னால் இருந்து குரல் மட்டும் கேட்கிறது.)
பரமசிவம்: என்னடி... என்னங்க... என்னங்கன்னு கொஞ்சறே? கஞ்சியை இப்படிக்கொண்டா...
பார்வதி: அட... குரல் மட்டும் கேக்குது... ஆனா ஆளைக் காணும்...? எங்க இருக்கீங்க?
பரமசிவம்: அட... என் அறிவுக் களஞ்சியமே... இது என்ன மைசூர் அரண்மனையா? ஆள் எங்க இருக்கான்னு தெரியாமத் தேடறதுக்கு... இங்க வாடி...
(சோபாவுக்கு அடியில் இருந்து எழுந்திருக்கிறார். கையில் பேப்பர் இருக்கிறது.)
பார்வதி: இவ்வளவு பெரிய சோபா இருக்கு... கீழே உட்கார்த்து பேப்பர் படிக்கிறீங்களே... ரொம்ப நல்லாயிருக்குங்க...
பரமசிவம்: பைத்தியக்காரி... சோபாவை வாங்கிப்போட்டா அதுலயே உட்கார்ந்து தேய்க்கணும்னு அவசியம் இல்லேடி... அடிக்கடி உட்கார்ந்து எழுந்திரிச்சா ஸ்பிரிங் எல்லாம் லொட லொடத்துப் போகாது...? அப்புறம் ரிப்பேர் முன்னால வரும்... காசு பணத்துக்குச் செலவு பின்னால வரும். அதுனாலதான் இந்தப் பரமசிவம் எப்பவும் சோபாவுக்குப் பக்கத்துல உட்காருவான். எப்படி, ஐடியா?
பார்வதி: அருமையான ஐடியா... நாலு பேரு கேட்டா சிரிக்கப் போறாங்க...
பரமசிவம்: நாலு பேரைப் பத்தி நமக்கு என்னடி கவலை. கையில காசு வரும்போது சேர்த்து வச்சுக்கணும்... இல்லாமப்போனா நம்மை ஒரு நாய்கூடச் சீண்டாது... விவரம் கெட்டுப் போயி பேசறயே...
பார்வதி: எல்லாம் எனக்குத் தெரியும்... அதுக்காக இப்படியா கஞ்சத்தனம் பிடிப்பாங்க... இந்தக் கஞ்சியையாவது சோபாவுல உட்கார்ந்து குடிச்சித்தொலையுங்க...
பரமசிவம்: (கஞ்சியை வாங்கிச் சர்ரென்று உறிஞ்சுகிறார்.)
பார்வதி: (தலையில் அடித்துக்கொண்டு) கண்றாவி... கண்றாவி...
பரமசிவம்: என்னடி கண்றாவி... நான் கஞ்சி குடிக்கிறது உனக்குக் கண்றாவியா?
பார்வதி: ஆமா... நீங்க கஞ்சி குடிக்கிறது நாலு வீட்டுக்குக் காது கேக்கணுமா? இப்படி எருமை மாடு கழுநீரை உறிஞ்சிற மாதிரி குடிக்கிறீங்களே... நல்லாவா இருக்கு...? போதாக்குறைக்குக் கட்டியிருக்க வேட்டியில ஆயிரத்தெட்டு கிழிசல்... பேருதான் பங்களா பரமசிவம்... சோழவந்தான் பரம்பரை மிராசு... ஆளைப் பாரு...
பரமசிவம்: புரியாமப் பேசறயே பார்வதி... இந்தக் கந்தல் வேட்டிக்குத் தனி மகிமையே இருக்குடி... உனக்குத் தெரியாதா?
பார்வதி: அப்படி ஒண்ணு இருக்குன்னு எங்கிட்ட நீங்க இத்தனை நாளா சொல்லவேயில்லையே.
பரமசிவம்: நீ கேக்கலே... நான் சொல்லலே... அநாவசியமா ஒரு வார்த்தையைக்கூட இந்தப் பரமசிவம் வேஸ்ட் பண்ணமாட்டான்.
பார்வதி: ஐயா... இப்ப கேக்கறேன்... உங்க கந்தல் வேட்டி மகிமையைச் சொல்லுங்களேன்...
பரமசிவம்: பார்வதி... ஒருதரம் நான் வேண்டுதலுக்காகப் பிச்சை எடுத்துத் திருப்பதிக்குப் போனேனே... ஞாபகம் இருக்கா?
பார்வதி: ஆமா... நீங்க எப்பத்தான் பிச்சை எடுக்காம திருப்பதிக்குப் போயிருக்கீங்க?
பரமசிவம்: அடி... தெருவுல உருண்டுகிட்டே போனேனே... அதைச் சொல்றேன்... அந்தத் தடவைதான் பார்வதி, இந்தக் கந்தல் வேட்டியோட சக்தியை நான் கண்கூடா பார்த்தேன்...
பார்வதி: அதென்னங்க சக்தி?
பரமசிவம்: மலைப்படியில என்கூட ஒரு பட்டு வேட்டிக்காரனும் வந்தான். வழியில ஒரு அரிவாள் மீசைக்காரன் ஒருத்தன் பெரிய வெங்காயம் நறுக்கற கத்தியைக் காட்டி மிரட்டி, பட்டு வேட்டிக்காரன்கிட்ட இருந்து வாட்ச், பணம் எல்லாத்தையும் புடுங்கிகிட்டான். எங்கே என் இடுப்புல இருக்கற பணமும் போயிடுமோங்கற பயத்துல நான் அப்படிமே மயக்கம் போட்டு விழுந்துட்டேன்.
பார்வதி: ஐயையோ... அப்புறம்...
பரமசிவம்: ஐயையோ என்னடி... மயக்கம் தெளிஞ்சு எழுந்தப்போ... என் இடுப்பு பணம் அப்படியே இருந்துது... இந்தக் கந்தல் வேட்டிக்காரன்கிட்ட எங்கே பணம் இருக்கப் போகுதுன்னு பேசாமபோயிட்டான்போல இருக்கு... இன்னொரு வேடிக்கையைப் பாரு... என்னைச் சுத்தி பத்து பைசாவும், இருபது பைசாவும் ஏகப்பட்ட சில்லறை...
பார்வதி: அது எப்படிங்க? உங்க இடுப்புப் பணம் குட்டிபோட்டிடிச்சா?
பரமசிவம்: நான் இந்தக் கந்தல் வேட்டியைக் கட்டிகிட்டுப் படுத்திருந்தேனா...? பாக்கறவன் நா என்னவோ பிச்சைக்காரன் போல இருக்குன்னு இரக்கப்பட்டு, என்மேல சில்லறையை வீசிட்டுபோயிருக்கான்... ஹி... ஹி... தரிசனம் முடிஞ்சு வீட்டுக்கு வர்ற வரைக்கும் எனக்குச் செலவுக்கு அதுவே சரியா இருந்துது... இடுப்புப் பணம் பத்திரமா இரும்புப் பொட்டிக்குப் போயிடிச்சி... எப்படி இந்தக் கந்தல் வேட்டி மகிமை...?
பார்வதி: என்னங்க... என்னங்க... கட்டின பொண்டாட்டி... ஒரு வரம் கேக்கறேன்... கொடுக்கறீங்களா?
பரமசிவம்: என்ன அந்தச் சில்லறையில பங்கு கேக்கறயா...? பண விவகாரத்தைத் தவிர வேற என்ன வேண்டுமானாலும் கேளு...
பார்வதி: தயவுசெஞ்சு இந்தக் கந்தல் வேட்டிப் புராணத்தை வேற யார் கேட்டாலும் சொல்லமாட்டேன்னு சத்தியம் பண்ணிக் கொடுங்க... எனக்கு மானம் போயிடும்...
பரமசிவம்: அவ்வளவுதானே...? கவலையை விடு... ஆமா... பார்வதி... நீயும் தினமும் கோவிலுக்குப் போறே... கடைத்தெருவுக்குப் போறே... யாராவது தெரிஞ்சவங்களைப் பிடிச்சி நம்ம வீட்டு மேல் மாடிக்கு ஒரு குடித்தனக்காரங்களைப் பார்க்கக்கூடாதா...? எத்தனை நாளா காலியா இருக்கு?
பார்வதி: நம்ம வீட்டு மாடிக்கு எவன் குடி வருவான்...? எல்லாரும் உயிருக்கு ஆசைப்படறாங்க... எப்ப யாரு தலையில விழப் போகுதோ...? இந்த லட்சணத்துல குடித்தனம் வந்து வாடகை வேற வரணும்னு ஆசைப்படறீங்க பாருங்க...
பரமசிவம்: அதெல்லாம் கவலைப்படாதே... கீழே விழுந்தாலும் மேல அப்படியே நிக்கும்... அவ்வளவு ஸ்ட்ராங்கா எங்க தாத்தா கட்டியிருக்காராம்... நானும் பார்க்கறேன்... மேல் மாடி காலின்னு போர்டுமாட்டி வருஷம் ஒண்ணாகுது... இன்னும் ஒரு பய வந்து வீடு கேக்க மாட்டேங்கறானே... வாடகை வேணும்னாலும் எட்டணா... நாலணா கொறைச்சிக்கலான்னு பார்க்கறேன்...
பார்: இங்க பாருங்க... அதுக்காக கண்ட கழுதைங்களைக் கொண்டு வந்து குடித்தனம் வச்சிடாதீங்க... நமக்கு வயசுக்கு வந்த பொண்ணு இருக்கு... ஞாபகம் இருக்கட்டும்.
பரம: அதுக்காகத்தானே கல்யாணம் ஆகாத யோக்கியமான பையனா குடித்தனம் பார்க்கறேன்... அப்படியே நம்ம பொண்ணையும் பிடிச்சிக் கொடுத்துடலாம்... செலவும் மிச்சம்...
பார: நினைச்சேன்... இப்படி ஏதாவது பிச்சைக்கார புத்தி இருக்கும்னு... இங்க பாருங்க... குடித்தனம் வைக்கறதா இருந்தா கல்யாணம் ஆனவங்களைத்தான் பார்க்கணும். இல்லேன்னா குடித்தனமே வேண்டாம். அந்தக் காசு வந்துதான் சாப்பிடணும்னு நமக்கு அவசியம் இல்லே... ஞாபகம் வச்சிக்கிங்க...
பரம: உனக்கு உலக விவகாரமே தெரியலே பார்வதி. இந்தக் காலத்துல கல்யாணம் ஆனவன்தான் பித்தலாட்டம் பண்றான். சின்னப் பசங்க காதல்