Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Malarodu Thaniyaga...
Malarodu Thaniyaga...
Malarodu Thaniyaga...
Ebook79 pages27 minutes

Malarodu Thaniyaga...

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

சிவப்பிரகாசத்திற்கும், சிவகாமிக்கும் தான் ஜன்மப்பகை என்றில்லை... பள்ளியில் ஒன்றாகப் படிக்கும் சிவப்பிரகாசத்தின் மகன் கார்த்திகேயனுக்கும், சிவகாமியின் மகள் மலருக்கும் எப்பொழுதும் வெட்டுப்பழி, குத்துப் பழிதான்...

விபத்துக்கு மலர்தான் காரணம் என்று தெரிந்ததும் சிவப்பிரகாசமும், கார்த்திகேயனும் மலரை எப்படிப் பழிவாங்கத் துடிக்கிறார்கள்? மலர் அதில் எப்படிப் பலியாகிறாள்? எஜமானின் உண்மைத் தன்மை தெரிந்ததும் வேலுச்சாமியின் நிலைமை என்ன? தெரிந்துக் கொள்ள வாசிப்போம்.

Languageதமிழ்
Release dateDec 3, 2022
ISBN6580110009129
Malarodu Thaniyaga...

Read more from Anuradha Ramanan

Related to Malarodu Thaniyaga...

Related ebooks

Reviews for Malarodu Thaniyaga...

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Malarodu Thaniyaga... - Anuradha Ramanan

    C:\Users\INTEL\Desktop\Logo New\pustaka_logo-blue_3x.png

    https://www.pustaka.co.in

    மலரோடு தனியாக...

    Malarodu Thaniyaga...

    Author:

    அனுராதா ரமணன்

    Anuradha Ramanan

    For more books

    https://www.pustaka.co.in/home/author/anuradha-ramanan-novels

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    அத்தியாயம் 1

    அத்தியாயம் 2

    அத்தியாயம் 3

    அத்தியாயம் 4

    அத்தியாயம் 5

    அத்தியாயம் 6

    அத்தியாயம் 7

    அத்தியாயம் 8

    அத்தியாயம் 9

    அத்தியாயம் 10

    முன்னுரை

    அனும்மாவும் நானும் இந்தக் கதைகளும்...

    அனும்மாவின் கதைகளை அச்சில் ஏறுவதற்கு முன் சுடச்சுட படித்து அனுபவித்த பாக்கியசாலி நான். வெகுநாட்களுக்குப் பிறகு மீண்டும் அந்தக் கதைகளைப் படிக்க சந்தர்ப்பம் கிடைத்ததில் மட்டமற்ற மகிழ்ச்சி எனக்கு.

    அனும்மா கதைகளில் வரும் கதாபாத்திரங்கள், நமக்கு மிகவும் பரிச்சயமான, நம்மிடையே நடமாடும் சகமனிதர்கள். அவர்களின் சந்தோஷங்கள், வருத்தங்கள். சோகங்கள், வாழ்க்கையில் அவர்கள் எதிர்கொள்ளும் போராட்டங்கள், இவற்றைத் தன் எழுத்தில் பிரதிபலிப்பதே அனும்மாவின் வெற்றி ரகசியம்.

    படிப்பவர்களுக்கு அவர்களையோ, அவர்களைச் சேர்ந்தவர்களையோ இந்தக் கதைகள் கண்டிப்பாக ஞாபகப்படுத்தும்.

    மலரோடு தனியாக கதையில் இடம்பெறும் பண்ணையார் சிவப்பிரகாசம், பணத்திமிரில் ஊரிலிருப்பவர்களையெல்லாம் தன் அடிமையாக நடத்தும் விதம் கண்டு அவரைப் பிடிக்காத அவரின் மாமன் மகள் சிவகாமி, அவரை மணிக்க மறுக்கிறாள்.

    சந்தர்ப்பவசத்தால் அவரிடம் தேவதா விசுவாசம் வைத்திருக்கும் வேலுசாமியையே திருமணம் செய்ய வேண்டிய கட்டாயம்...

    சிவப்பிரகாசத்திற்கும், சிவகாமிக்கும் தான் ஜன்மப்பகை என்றில்லை... பள்ளியில் ஒன்றாகப் படிக்கும் சிவப்பிரகாசத்தின் மகன் கார்த்திகேயனுக்கும், சிவகாமியின் மகள் மலருக்கும் எப்பொழுதும் வெட்டுப்பழி, குத்துப் பழிதான்... ஒரு விபத்தில் கார்த்திகேயனின் காலில் பலமான அடிபட காரணமாகிறாள் மலர். கிட்டத்தட்ட ஆறு மாதங்கள் சிகிச்சையில் இருக்கிறான் கார்த்தி...

    விபத்துக்கு மலர்தான் காரணம் என்று தெரிந்ததும் சிவப்பிரகாசமும், கார்த்திகேயனும் மலரை எப்படிப் பழிவாங்கத் துடிக்கிறார்கள்?

    மலர் அதில் எப்படிப் பலியாகிறாள்?

    எஜமானின் உண்மைத் தன்மை தெரிந்ததும் வேலுச்சாமியின் நிலைமை என்ன?

    விறுவிறுப்பான குடும்பக்கதையை தியேட்டரில் போய் பார்த்துவிட்டு வந்த திருப்தி.

    வெகு நாட்களுக்குப் பிறகு திரும்பவும் அனும்மாவின் இந்தக் கதையைப் படிக்க சந்தர்ப்பம் கிடைத்ததில் மட்டற்ற மகிழ்ச்சி எனக்கு...

    அன்புடன்

    ஜெயந்தி சுரேஷ்

    1

    வீடு அமைதியாக இருந்தது. இத்தனைக்கும் வீட்டில் மலர் இருக்கிறாள்... பூ இருக்கிறாள்... எட்டு வயசு அழகு... வீட்டினர் எல்லோராலும் செல்லமாய் ‘அறுந்தவால்’ என்று அழைக்கப்படும் குறும்புக்காரச் சிறுவனும் இருக்கிறான்.

    பதினெட்டு வயசு மலர்கொடி, தன் தங்கைக்குச் சரியாய் வம்புக்கு நிற்பாள். தங்கை பூங்கொடியோடு பெரும் குரலெடுத்து, அம்மாவை தன் கட்சிக்கு அழைப்பாள்.

    அம்மா பாரும்மா... இவ தினமும், நான் துவைச்சு உலர்த்தி வச்சிருக்கிற உள்பாவாடையை எடுத்துக் கட்டிட்டு காலேஜுக்குப் போயிடுறா... கேட்டா ‘அது என்னுது’ன்னு நினைச்சேங்கறா... ‘துவைச்சுத் தாடி’ன்னா, அதுவும் மாட்டேங்கிறா...

    சிவகாமி பெரியவளை இழுத்து வைத்து, கன்னத்தை இழைப்பாள்.

    ஏய், திமிசுக்கட்டை... உன்னைவிட மூணு வயசு சின்னவ அவ எத்தனை பொறுப்பா, தன் துணிமணியைத் தானே துவைச்சு உலர்த்தி, மடிச்சு வைக்கிறா... அவளோடதை எடுத்துக் கட்டிட்டு, நீ சண்டை போடுறியா?

    அதுக்காக...? நான் இப்பத்தான் காலேஜ்லேருந்து வீட்டுக்கு வர்றேன். இன்னும் உள்ளே நுழையக்கூட இல்லே... வாசல்லே என்னை நிற்க வச்சு, ‘எங்கே, பெட்டிகோட்’டை காட்டுடீங்கிறாம்மா. அதுமட்டும் நியாயமா? இருக்கட்டும் அப்பா வரட்டும், சொல்றேன். இதுக்காகத்தான் ரெண்டு பேருக்கும் ஒரே நிறத்தில் துணி வாங்காதேன்னு சொல்றேன்... கேட்கிறியா...

    கன்னத்தைத் தடவிக்கொண்டே... மலர் எட்டு ஊருக்குக் குதிப்பாள்...

    சின்னவள்

    Enjoying the preview?
    Page 1 of 1