Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Kaadhal Mudichu
Kaadhal Mudichu
Kaadhal Mudichu
Ebook82 pages28 minutes

Kaadhal Mudichu

Rating: 5 out of 5 stars

5/5

()

Read preview

About this ebook

காதலுக்கு சாதி, மதம், மொழி, அந்தஸ்து என்று பல பிரச்சினைகள் குறுக்கே வந்து நிற்பதைத்தான் நாம் இந்தச் சமூகத்தில் கண்டிருக்கிறோம். ஆனால், இப்போதெல்லாம் பல காதல் முறிவுக்கு அந்தக் காதலர்களே காரணமாக இருக்கிறார்கள் என்பது அதிர்ச்சியான உண்மை!

காதல் முறிவுகள் சகஜமாகிவிட்டன. சரியான 'புரிதல்' இல்லாமல் அவசரப்பட்டு காதலைச் சொல்லிவிட்டு, பழகிப் பார்த்து ஒருவரை ஒருவர் துல்லியமாகப் புரிந்துகொண்ட பிறகு வாழ்நாள் முழுவதும் அந்த அழகான அன்புப் பயணத்தைத் தொடர வாய்ப்பு இல்லை என உணர்ந்து மனம்விட்டுப் பேசி விலகுகிறார்கள் பல காதலர்கள்.

இது ஒரு வகையில் நல்லதும்கூட! எக்கச்சக்கமாக செலவு செய்து, உற்றார்-உறவினரை அழைத்து திருமணம் நடந்த பின்னர்... 'ஒத்துவரவில்லை' என்று விவாகரத்துக்காக நீதிமன்றத்தில் நிற்பதற்கு இது எவ்வளவோ பரவாயில்லை!

அப்படியொரு காதல் ஜோடிக்குள் ஏற்படும் பிரச்சினைகளை இந்தக் கதை அலசுகிறது. 'அவர்களுக்குள் அப்படி எந்த மாதிரியான பிரச்சினை ஏற்படுகிறது? அதற்கான தீர்வாக என்ன முடிவு செய்தார்கள்?' என்பதைச் சொல்லும் நாவலே 'காதல் முடிச்சு'

- பட்டுக்கோட்டை பிரபாகர்

Languageதமிழ்
Release dateAug 10, 2020
ISBN6580100905495
Kaadhal Mudichu

Read more from Pattukottai Prabakar

Related to Kaadhal Mudichu

Related ebooks

Reviews for Kaadhal Mudichu

Rating: 5 out of 5 stars
5/5

1 rating0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Kaadhal Mudichu - Pattukottai Prabakar

    http://www.pustaka.co.in

    காதல் முடிச்சு

    Kaadhal Mudichu

    Author:

    பட்டுக்கோட்டை பிரபாகர்

    Pattukottai Prabakar

    For more books

    http://www.pustaka.co.in/home/author//pattukottai-prabakar-novels

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    அத்தியாயம் 1

    அத்தியாயம் 2

    அத்தியாயம் 3

    அத்தியாயம் 4

    அத்தியாயம் 5

    அத்தியாயம் 6

    அத்தியாயம் 7

    அத்தியாயம் 8

    அத்தியாயம் 9

    அத்தியாயம் 10

    அத்தியாயம் 11

    அத்தியாயம் 12

    அத்தியாயம் 13

    அத்தியாயம் 14

    அத்தியாயம் 15

    அத்தியாயம் 16

    அத்தியாயம் 17

    முன்னுரை

    காதலுக்கு சாதி, மதம், மொழி, அந்தஸ்து என்று பல பிரச்சினைகள் குறுக்கே வந்து நிற்பதைத்தான் நாம் இந்தச் சமூகத்தில் கண்டிருக்கிறோம். ஆனால், இப்போதெல்லாம் பல காதல் முறிவுக்கு அந்தக் காதலர்களே காரணமாக இருக்கிறார்கள் என்பது அதிர்ச்சியான உண்மை!

    காதல் முறிவுகள் சகஜமாகிவிட்டன. சரியான 'புரிதல்' இல்லாமல் அவசரப்பட்டு காதலைச் சொல்லிவிட்டு, பழகிப் பார்த்து ஒருவரை ஒருவர் துல்லியமாகப் புரிந்துகொண்ட பிறகு வாழ்நாள் முழுவதும் அந்த அழகான அன்புப் பயணத்தைத் தொடர வாய்ப்பு இல்லை என உணர்ந்து மனம்விட்டுப் பேசி விலகுகிறார்கள் பல காதலர்கள்.

    இது ஒரு வகையில் நல்லதும்கூட! எக்கச்சக்கமாக செலவு செய்து, உற்றார்-உறவினரை அழைத்து திருமணம் நடந்த பின்னர்... 'ஒத்துவரவில்லை' என்று விவாகரத்துக்காக நீதிமன்றத்தில் நிற்பதற்கு இது எவ்வளவோ பரவாயில்லை!

    அப்படியொரு காதல் ஜோடிக்குள் ஏற்படும் பிரச்சினைகளை இந்தக் கதை அலசுகிறது. 'அவர்களுக்குள் அப்படி எந்த மாதிரியான பிரச்சினை ஏற்படுகிறது? அதற்கான தீர்வாக என்ன முடிவு செய்தார்கள்?' என்பதைச் சொல்லும் நாவலே 'காதல் முடிச்சு'

    - பிரியங்களுடன்,

    பட்டுக்கோட்டை பிரபாகர்

    *****

    1

    அம்பிகா குளித்து முடித்து பாத்ரூமுக்குள்ளேயே தரையின் ஈரத்தில் புடவை முனை பட்டுவிடாமல் லாவகமாகக் கட்டிவிட்டு, சுவரில் ஒட்ட வைத்திருந்த 'ஸ்டிக்கர்' பொட்டை எடுத்துக்கொண்டு வெளியே வந்தாள்.

    துவைக்கும் கல்லில் அமர்ந்து, கால்களை ஆட்டியபடியே பல் விளக்கிக் கொண்டிருந்த அண்ணன் சேகர் குதித்திறங்கி, துப்பிவிட்டு, சரியா முக்கால் மணி நேரமாச்சு... நீ உள்ளே போயி என்றான்.

    வெள்ளிக்கிழமை! தலைக்கு குளிச்சேன்.

    யார் வேணாங்கறா? நான் 'ஆபீஸ்' போனதும், உக்காந்து குளியேன் ஒரு மணி நேரம். வீட்ல சும்மா உக்காந்திருக்கிற உனக்கு என்ன அவசரம்?

    நடந்து கொண்டிருந்தவள் நின்று திரும்பி தன் அண்ணனை லேசான முறைப்புடன் பார்த்தாள்.

    நான் ஒண்ணும் வீட்ல சும்மா உக்காந்திருக்கல. நானும் 'லைப்ரரி' போகணும் என்றாள்.

    ஆமாம்! 'லைப்ரரி'யில் 'அட்டென்ஸ்' எடுக்கறாங்களா? என்று கூறிவிட்டு குளியலறைக்குள் நுழைந்தான் சேகர்.

    அம்பிகா தலைவாரி, பின்னலிட்டு... உதிர்ந்த கேசங்களைச் சுருட்டி குப்பைக் கூடையில் போட்டுவிட்டு... ஊஞ்சலில் அமர்ந்து ஒற்றைக் கால் மடக்கி, ஒற்றைக் கால் தொங்க விட்டுக்கொண்டு காலை பத்திரிக்கை படித்த அப்பாவிடம் வந்தாள்.

    அவர் நிமிர்ந்து பார்த்து, சாப்பிட்டியா? என்றார்.

    அவரது மடியில் வைத்திருந்த 'வானொலி', சொட்டு நீலம் விளம்பரம் சொல்லிக் கொண்டிருந்தது.

    நீங்க 'ரேடியோ' கேக்கறீங்களா... பத்திரிக்கை படிக்கிறீங்களா?

    ரெண்டும் என்று புன்னகைத்தார்.

    ஆக... வீட்ல உங்களைச் சுத்தி என்ன ரகளை நடந்தாலும் காதில் விழாது. இல்லைன்னா காதுல விழக்கூடாதுன்னு இந்த நாடகமா? என்றாள், கைகளைக் கட்டிக்கொண்டு.

    சேகர் அப்படி என்ன சொல்லிட்டான் அம்பிகா? என்றார் 'ரேடியோ'வின் சத்தத்தைக் குறைத்து, பத்திரிக்கையை மடக்கி வைத்து...

    ஓ... கேட்டுச்சா? சொல்லுங்க! நான் வீட்ல சும்மா உக்கார்ந்திருக்கேனா?

    அவனுக்கு 'ஆபீஸ்' போற அவசரம்மா.

    இல்லைப்பா. வேலைக்குப் போற அதிகாரம்.

    ஸ்... மெதுவாப் பேசு. வித்யா காதில விழப் போகுது.

    Enjoying the preview?
    Page 1 of 1