Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Nee Mattum
Nee Mattum
Nee Mattum
Ebook155 pages49 minutes

Nee Mattum

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

நீ+இன்னொரு நீ = நாம்

வாழ்க்கை என்கிற சித்திரம் மாய உறவுச் சங்கிலிகளின் நீட்சியில் இயங்கிக் கொண்டிருக்கிறது. உணர்வுக் குவியலாய் வாழ்க்கை மாறிப் போவதற்கும், பரவசத்தின் அர்த்தமாகிறதற்கும் இந்த உறவுகள் பாலமிடுகின்றன.

பொதுவாக உறவுகள் பலதரப்பட்டவை. பெரும்பாலும் உறவுகள் தேயக்கூடியவை. பணத்தால், பொருளால், காலத்தால் அவை அலைக்கலைக்கப்பட்டு ஒரு கட்டத்தில் புள்ளியாய் சிறுத்து, மினுங்கி, மறைந்தே போகின்றன. காரணம் எதிர்பார்ப்புகள். எதிர்பார்ப்புகள் வளர்ந்த வண்ணம் இருப்பவை. அதனால் நிறைவேறாமையை, சகிப்பின்மையை அது எந்த தருணத்திலும் எட்டிவிடக் கூடிய சாத்தியம் இங்கே பணத்தால் அதிநுட்ப வியாபார உத்தியோடு உருவாக்கப்படுகிற திருமணம் முதலான உறவுகள் விரைவிலேயே அதிருப்திக்குள்ளாகி, உராய்வு கொண்டு அதன் விளைவாய் படிப்படியாய் தேய்மானம் கொள்ள நேர்கிறது யதார்த்தம்.

எழுத்தாளர் ஸ்டெல்லா ப்ரூஸ் அவருடைய காதல் மனைவி மரித்த சில நாட்களில் தானும் மரித்துப் போனார். அடுத்தடுத்த நொடிகளில் மரித்துப் போன காதல் தம்பதிகள் ஏராளம் வரலாற்றின் பக்கங்களில் பதியப்பட்டு இப்போதும் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள்.

அந்த அளவிற்கு வாழ்வே தன் லைஃப் பார்ட்னர் என்று நினைக்கிற அளவிற்கு ஒரு உறவு உண்டாகிறதென்றால், அது என்ன இலக்கணம்? ஒத்த ரசனையா? வெளிப்படாமல் மனதிற்குள்ளேயே ஒளிந்திருக்கிற ஒத்த ரகசிய விருப்பங்களா? ஒருவரிடம் இல்லாத, ஆனால் அதிவிருப்பத்திற்குரிய ஒன்று மற்றொருவரிடம் இருந்து, இரண்டும் ஒன்றாய் சங்கமிக்கும் போது புதிய படைப்பாக பரிமளிக்கிற அதிசயமா? பரஸ்பரம் நிலவும் புரிதலா? ஒத்த பலங்கள் அல்லது ஒத்திருக்கிற பலவீனங்களா?

எது பிரிக்க முடியாத பந்தங்களை கட்டமைக்கின்றன? அந்த கட்டமைவிற்கு பெயர் தான் பிளட்டோனிக் காதலா? தேய்பிறை அறியாத முழுமதியா? எதிர்பார்ப்பிற்கு எல்லாம் அப்பாற்பட்டதா? நேர்எதிர்மறைகளுக்கு மத்தியில் ஊடாடும் மாயநதியா? ஒப்பீடுகள் கடந்த ஒப்பற்றதன்மையா? விவரிக்க முடியாத பிரமத்தின் சாயல் கொண்டதா?

காதல் பலவிதம். எழுத்தை காதலித்தவர்கள் இருக்கிறார்கள். கொள்கையை காதலித்தவர்கள் இருக்கிறார்கள். சமூகத்தை காதலித்தவர்கள் இருக்கிறார்கள். மனிதத்தை காதலித்தவர்கள் இருக்கிறார்கள். உயிராய் காதலித்து நீ மட்டும் போதும் என காதலின் நினைவுகளோடு மட்டுமே முழுவாழ்நாளும் வாழ சித்தமாயிருக்கிற ஷாஜகான்களும், செல்மாக்களும், கயஸ்களும், கலீல் ஜிப்ரான்களும், ஃபிரைடா காலேக்களும் இருக்கவே இருக்கிறார்கள். அப்படியான ஒரு காதலுக்காக அந்த காதலன் செய்கிற பிரமிக்க வைக்கிற செயல்கள் தான் இந்த நாவல். இது காதல் கதையா, துப்பறியும் கதையா என இனம்காண முடியாதபடிக்கு விறுவிறுப்பாக அரங்கேறியிருக்கும் ஒரு வித்யாசமான காதல் கதை.

படித்துப் பாருங்கள். படிக்கிற ஒவ்வொருவரையும் இந்த நாவல், இந்த மாதிரியான காதல் மனது ஒன்று மட்டும் நமக்குள் இருந்தால் போதும் என்று நினைக்க வைக்கும்.

காதலுடன், தி. குலசேகர்

Languageதமிழ்
Release dateAug 12, 2019
ISBN6580124003593
Nee Mattum

Read more from Kulashekar T

Related authors

Related to Nee Mattum

Related ebooks

Reviews for Nee Mattum

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Nee Mattum - Kulashekar T

    http://www.pustaka.co.in

    நீ மட்டும்

    Nee Mattum

    Author:

    தி. குலசேகர்

    T. Kulashekar
    For more books

    http://www.pustaka.co.in/home/author/kulashekar

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    அத்தியாயம் 1

    அத்தியாயம் 2

    அத்தியாயம் 3

    அத்தியாயம் 4

    அத்தியாயம் 5

    அத்தியாயம் 6

    அத்தியாயம் 7

    அத்தியாயம் 8

    அத்தியாயம் 9

    அத்தியாயம் 10

    அத்தியாயம் 11

    அத்தியாயம் 12

    அத்தியாயம் 13

    அத்தியாயம் 14

    அத்தியாயம் 15

    அத்தியாயம் 16

    அத்தியாயம் 17

    அத்தியாயம் 18

    அத்தியாயம் 19

    அத்தியாயம் 20

    அத்தியாயம் 21

    அத்தியாயம் 22

    அத்தியாயம் 23

    அத்தியாயம் 24

    அத்தியாயம் 25

    அத்தியாயம் 26

    அத்தியாயம் 27

    அத்தியாயம் 28

    அத்தியாயம் 29

    அத்தியாயம் 30

    அத்தியாயம் 31

    அத்தியாயம் 32

    அத்தியாயம் 33

    அத்தியாயம் 34

    அத்தியாயம் 35

    அத்தியாயம் 36

    அத்தியாயம் 37

    அத்தியாயம் 38

    அத்தியாயம் 39

    அத்தியாயம் 40

    அத்தியாயம் 41

    அத்தியாயம் 42

    அத்தியாயம் 43

    அத்தியாயம் 44

    அத்தியாயம் 45

    அத்தியாயம் 46

    அத்தியாயம் 47

    அத்தியாயம் 48

    அத்தியாயம் 49

    அத்தியாயம் 50

    அத்தியாயம் 51

    அத்தியாயம் 52

    அத்தியாயம் 53

    அத்தியாயம் 54

    அத்தியாயம் 55

    அத்தியாயம் 56

    அத்தியாயம் 57

    அத்தியாயம் 58

    அத்தியாயம் 59

    அத்தியாயம் 60

    அத்தியாயம் 61

    அத்தியாயம் 62

    அத்தியாயம் 63

    அத்தியாயம் 64

    அத்தியாயம் 65

    அத்தியாயம் 66

    அத்தியாயம் 67

    தி. குலசேகர்

    தி. குலசேகர்90-களில் எழுதத் துவங்கியவர். இதுவரை, சிறுகதைகள், குறுநாவல்கள், கவிதைகள், கட்டுரைகள், திரைத்துறை சார்ந்த நூல்கள் என இருபத்தைந்திற்கும் மேற்பட்ட நூல்கள் எழுதியிருக்கிறார். இவரது சிறுகதைகள் ‘தி. குலசேகர் கதைகள்’ என்கிற தலைப்பில் தொகுப்பப்பட்டு வெளிவந்திருக்கிறது.

    விருதுநகர் வி.ஹெச்.என்.எஸ்.என் கல்லூரியில் இளங்கலை ரசாயணமும், மதுரை அமெரிக்கன் கல்லூரியில் முதுகலை ரசாயணமும் படித்து, பின், மதுரை காமராசர் பல்கலை கழகத்தில் இதழியல் படித்திருக்கிறார்.

    தூத்துக்குடி ஸ்பிக் நிறுவனத்தில் பணியாற்றிய இவர், பின்னர், இயக்குநர் கே.பாக்யராஜ், ராஜன் சர்மா டி.எஃப்.டி, ரேவதி, வஸந்த், இராதாகிருஷ்ணன் பார்த்திபன் போன்றவர்களிடம் துணை-இணை இயக்குநராக பணியாற்றியிருக்கிறார். தற்சமயம் திரைப்படத்துறையில் இணை இயக்குநராக பணியாற்றியபடி, இலக்கியத் துறையிலும் ஒரு சேர பயணிக்கிறார்.

    1989-ல் தினமலரின் டி.வி.ஆர் நினைவு சிறுகதைப் போட்டியில் இவரது ‘நினைவில் நின்றவை’ கதை மூன்றாம் பரிசும், 1990-ல் ‘பெண் கோலம்’ கதைக்கு முதல் பரிசும் பெற்றிருக்கிறார். மேலும், நீலமலை தமிழ்ச் சங்க விருது, லில்லி-தேவசிகாமணி நினைவு இலக்கிய விருதுகள் பெற்றிருக்கிறார். இவரது சிறுகதை நூல்கள் சாந்திநிகேதன் பல்கலை கழகத்தில் பணியாற்றும் பேராசிரியர் முத்தையா அவர்களால் பெங்காலியில் மொழி பெயர்க்கப்பட்டு, ‘பிரேமாந்தர்’ இதழில் வெளியிடப்பட்டிருக்கிறது.

    நீ+இன்னொரு நீ = நாம்

    வாழ்க்கை என்கிற சித்திரம் மாய உறவுச் சங்கிலிகளின் நீட்சியில் இயங்கிக் கொண்டிருக்கிறது. உணர்வுக் குவியலாய் வாழ்க்கை மாறிப் போவதற்கும், பரவசத்தின் அர்த்தமாகிறதற்கும் இந்த உறவுகள் பாலமிடுகின்றன.

    பொதுவாக உறவுகள் பலதரப்பட்டவை. பெரும்பாலும் உறவுகள் தேயக்கூடியவை. பணத்தால், பொருளால், காலத்தால் அவை அலைக்கலைக்கப்பட்டு ஒரு கட்டத்தில் புள்ளியாய் சிறுத்து, மினுங்கி, மறைந்தே போகின்றன. காரணம் எதிர்பார்ப்புகள். எதிர்பார்ப்புகள் வளர்ந்த வண்ணம் இருப்பவை. அதனால் நிறைவேறாமையை, சகிப்பின்மையை அது எந்த தருணத்திலும் எட்டிவிடக் கூடிய சாத்தியம் இங்கே பணத்தால் அதிநுட்ப வியாபார உத்தியோடு உருவாக்கப்படுகிற திருமணம் முதலான உறவுகள் விரைவிலேயே அதிருப்திக்குள்ளாகி, உராய்வு கொண்டு அதன் விளைவாய் படிப்படியாய் தேய்மானம் கொள்ள நேர்கிறது யதார்த்தம்.

    எழுத்தாளர் ஸ்டெல்லா ப்ரூஸ் அவருடைய காதல் மனைவி மரித்த சில நாட்களில் தானும் மரித்துப் போனார். அடுத்தடுத்த நொடிகளில் மரித்துப் போன காதல் தம்பதிகள் ஏராளம் வரலாற்றின் பக்கங்களில் பதியப்பட்டு இப்போதும் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள்.

    அந்த அளவிற்கு வாழ்வே தன் லைஃப் பார்ட்னர் என்று நினைக்கிற அளவிற்கு ஒரு உறவு உண்டாகிறதென்றால், அது என்ன இலக்கணம்? ஒத்த ரசனையா? வெளிப்படாமல் மனதிற்குள்ளேயே ஒளிந்திருக்கிற ஒத்த ரகசிய விருப்பங்களா? ஒருவரிடம் இல்லாத, ஆனால் அதிவிருப்பத்திற்குரிய ஒன்று மற்றொருவரிடம் இருந்து, இரண்டும் ஒன்றாய் சங்கமிக்கும் போது புதிய படைப்பாக பரிமளிக்கிற அதிசயமா? பரஸ்பரம் நிலவும் புரிதலா? ஒத்த பலங்கள் அல்லது ஒத்திருக்கிற பலவீனங்களா?

    எது பிரிக்க முடியாத பந்தங்களை கட்டமைக்கின்றன? அந்த கட்டமைவிற்கு பெயர் தான் பிளட்டோனிக் காதலா? தேய்பிறை அறியாத முழுமதியா? எதிர்பார்ப்பிற்கு எல்லாம் அப்பாற்பட்டதா? நேர்எதிர்மறைகளுக்கு மத்தியில் ஊடாடும் மாயநதியா? ஒப்பீடுகள் கடந்த ஒப்பற்றதன்மையா? விவரிக்க முடியாத பிரமத்தின் சாயல் கொண்டதா?

    காதல் பலவிதம். எழுத்தை காதலித்தவர்கள் இருக்கிறார்கள். கொள்கையை காதலித்தவர்கள் இருக்கிறார்கள். சமூகத்தை காதலித்தவர்கள் இருக்கிறார்கள். மனிதத்தை காதலித்தவர்கள் இருக்கிறார்கள். உயிராய் காதலித்து நீ மட்டும் போதும் என காதலின் நினைவுகளோடு மட்டுமே முழுவாழ்நாளும் வாழ சித்தமாயிருக்கிற ஷாஜகான்களும், செல்மாக்களும், கயஸ்களும், கலீல் ஜிப்ரான்களும், ஃபிரைடா காலேக்களும் இருக்கவே இருக்கிறார்கள்.

    அப்படியான ஒரு காதலுக்காக அந்த காதலன் செய்கிற பிரமிக்க வைக்கிற செயல்கள் தான் இந்த நாவல். இது காதல் கதையா, துப்பறியும் கதையா என இனம்காண முடியாதபடிக்கு விறுவிறுப்பாக அரங்கேறியிருக்கும் ஒரு வித்யாசமான காதல் கதை.

    படித்துப் பாருங்கள். படிக்கிற ஒவ்வொருவரையும் இந்த நாவல், இந்த மாதிரியான காதல் மனது ஒன்று மட்டும் நமக்குள் இருந்தால் போதும் என்று நினைக்க வைக்கும்.

    காதலுடன்,

    தி. குலசேகர்

    நீ மட்டும்

    1

    ‘லெட்ஸ் ப்ரேக் அப்’ என்றாள் சௌந்தர்யா.

    ‘ஆர் யூ ஜோக்கிங்????’

    அந்த வார்த்தையை அவள் வாழ்நாளில் எந்த ஒரு கணத்திலும் அவளிடமிருந்து அகில் எதிர்பார்த்திருக்கவில்லை. இத்தனை சீக்கிரம் இப்படியொரு இடியை அவள் உயிருக்குள் பாய்ச்சுவாள் என அவன் கனவிலும் நினைக்கவில்லை. உதடுகள் வார்த்தைகளற்று தனித்துப் போனதில், துடிதுடித்தன.

    அவள் முகம் ஒற்றை நொடியில் யுகமாற்றமாய் அப்படி இறுகிப் போயிருந்தது.

    ‘அப்படி நான் என்ன பண்ணிட்டேன் சௌந்தர்யா’

    அவள் ஆவேசமாய் கத்தினாள்.

    ‘டோன்’ட்.. டோன்’ட்.. உன் உதடுகளுக்கு என் பேரை இனியொரு தடவை உச்சரிக்கறதுக்கு அருகதை இல்ல..’

    ‘விசாரிக்காமலே வெர்டிக்ட்டா.. யு ஆர் நாட் டெமாக்ரடிக்.. இது நியாயமேயில்ல..’

    ‘என்னோட ரூல் மிலிட்ரி ரூல் தான்.. ஆனா, அதில சந்தேகத்துக்கு ஒரே தண்டனை.. அது ஆயுள் தண்டனை தான்.’

    ‘இந்தளவுக்கு நீ கோபப் படற மாதிரி எதுவுமே நடக்கல..’

    ‘அப்புறம் எப்பிடி கரெக்டா.. இந்த இடத்துக்கு சொல்லி வச்ச மாதிரி, சொல்லி வச்ச

    Enjoying the preview?
    Page 1 of 1