Ore Kadal
By Kulashekar T
()
About this ebook
காதல் என்பதற்குள் பயணித்துப் பார்த்ததில் அது எதிர்பார்ப்பை கடந்துபோய் நிமிர்ந்து நிற்கிற ஒரு மனநிலை என்று தோன்றுகிறது. இங்கே எதிர்பார்ப்புகள் இல்லாத உறவு இருக்கிறதா என்ன... இருந்தால் அங்கே உத்தரவாதமாய் காதல் இருக்கலாம். உள்ளது உள்ளபடி நிறைகுறைகளோடு அந்த உயிரை அப்படியே ஏற்றுக்கொள்வது என்று ஒரு கருத்து சொல்லப்படுவதுண்டு. அதையே அப்படிப்பட்ட நிறைகுறைகள் நிறைகுறைகளாகவே தெரியாதது என்று சொல்வது இன்னும் நெருக்கமாய் தோன்றுகிறது. பரஸ்பர புரிதல் அவர்களின் சுதந்திரத்திற்கு துணை சேர்க்கிறது. வாழ்வை எளிமையான இலக்கணத்திற்குள் கொண்டு வந்து நிறுத்துகிறது. சௌகர்யமாய் கம்ஃபர்டபிளாக பரஸ்பரம் உணரச் செய்கிறது. அங்கே தவறென்பதும் கிடையாது... சரியென்பதும் கிடையாது... இரண்டிற்கும் நடுவே மையத்தில் என எல்லா விசயத்திலும் ஒரு புள்ளியில் மையம் கொண்டுவிடுகிறது. அது சாத்தியப்பட்டு விடுகிறபட்சம் எது இல்லாவிட்டாலும் எல்லாமும் இருக்கிறதாய் உணரச் செய்கிறது. அது வானத்திற்கு கீழே உள்ள அத்தனையையும் புரிவியலோடு உணரச் செய்கிறது.
இங்கே காதலை அப்படி வெளிப்படுத்திவிட முடியாதபடி அனைவருக்கும் இந்த முரண்பட்ட சமுதாயம் மாயமாய் தடை விரிக்கிறது. அனைவரையும் வெளிமுகத்தோடும், உள்முகத்தோடும் இருக்கும்படி ரகசியமாய¢ நிர்பந்தித்துக் கொண்டேயிருக்கிறது. அவள் அப்படிப்பட்ட வதைப்புக்கு ஆட்படுத்தப்பட்ட ஒரு பெண் தான். அவளுக்குள் காலங்காலமாய் அடக்கி வைக்கப்பட்டிருந்து இருக்கிற காதல் பனிமலையாய் உறைவு கொண்டு இறுகி விரிந்தபடி கிடக்கிறது. அது அவளை கடந்துபோகவிடாமலும், சும்மா இருக்கவிடாமலும் படுத்துகிறது. சொல்லின் உணர்வு வழியாய் பாதாளம் பயணித்து அதன் வேர் தொட்டு அந்த உணர்வின் ஒட்டுமொத்த குறியீடு பதுங்கியே யிருக்கிறது. வழிமேல் விழி வைத்து வழியறியாத மனங்களோடு. எதையும் வெளிக்காட்ட அனுமதிக்காமல் காலம் சங்கிலியிட்டிருந்தது. அங்கே அரங்கேற்றவே படாத குளுமை பனிமலை யாய் உறைவுற்று ஒரு பக்கம் கிடந்தது. எரிமலைகள் அருகிலேயே வாய் பொத்திய மௌனிப்பில் இருந்தது. சூறாவளி பக்கத்திலேயே அடைபட்டு புழுங்கிப்புழுங்கி உப்புப் படிவ மலைத்திட்டு களாகி அதனுள் இமையறுத்து விழித்திருந்தது. தூண்டிலில் மாட்டிக் கொண்டிருந்த அலைகளின் ஒடுக்கம் சுனாமிகளாய் பரிணமித்தபடி இருந்தது.
அவள் அவளின் சுதந்திரமான உணர்வுகளை சுற்றிலும் கட்டமைத்திருந்த கடல் சுவற்றை ரகசிய அழுத்தங்களால் அழுத்தித் திறக்க முனைந்து கொண்டேயிருந்தாள். வழி கிடைக்காமல், வழி தெரியாமல் அவளின் உணர்வலைகள் முட்டிமோதி அவளுக்குள்ளாகவே காலங்காலமாய் வெளி காண துடித்து, நசுங்கி, பொசுங்கி, கசங்கி, கலங்கி ஆழ்மனதுக்குள் ஓசையற்ற ஓலங்களை வெளிப்படுத்திக்கொண்டேயிருந்தது. அவளுக்குள் இருந்த அந்த உந்துதல் மட்டும் குறையாமல் கூடிக்கொண்டேயிருப்பதை அவளின் அந்தரங்க பார்வையால் உணர முடிந்தது. உள்ளே சடங்கு சம்பிரதாயங்கள் கடக்கும் உடைப்புக்கான தருணத்திற்காக முண்டிக்கொண்டேயிருந்தது.
எப்போதும் பெண் மீது நிகழ்த்தப்படும் ஆக்கிரமிப்பு, அடக்குமுறை அவளை சராசரியாக காட்ட வைக்கிறது. அவளின் உள்மனது அதை உடைத்தெறிந்து கொண்டு தன் காதலை பீய்ச்சி அடிக்க சமயம் பார்த்துக் காத்திருக்கிறது.
அவனுக்கு காதலின் அர்த்தம் பிடிபடுவதேயில்லை. அதனால் காதலே அர்த்தமற்றதாய் அவனுக்கு ஆகிப்போகிறது. அவளே காதலாகி காதலின் அர்த்தமுமாகி உணர்த்திச் செல்கிறாள்.
இந்த சமுதாயத்தில் ஆணுக்குள் அப்படியரு காதல் வருகிறபோது முதல் மரியாதை தந்து சிலாகிக்கப் படுகிறது. ஆனால் அதையே அதே உணர்வுகள் கொண்ட ஒரு பெண்ணுக்குள் என்கிறபோது நினைத்துப் பார்க்கக்கூட தயங்குகிறது. இந்த முரண்பட்ட கோணல் சமுதாயத்தின் விதிமுறைகள் அப்படித் தானே இயங்குகிறது.
அடக்கி வைக்கப்பட்டிருக்கிற உணர்வுகளின் குறியீடாய் அவள் இருக்கிறாள். யுகம்யுகமாய் அடக்கிவைக்கப்பட்டிருந்த காதல் அவளின் ஜீன்களில் தேங்கிப்போன படிவங்களாய்... உயிர் படிவங்களாய் அடர்வுகொண்டு தொடர்ந்தவண்ணமிருக்கிறது. அவள் காலங்காலமாய் மறுக்கப் பட்டு வந்திருக்கிற காதலின் ஒட்டுமொத்த அடையாளமாய் இருக்கிறாள். தடை போடப்போட தேங்கிப்போய்விடவில்லை. அடத்தியாகி, மட்டம் உயர்த்தி ஒரு நாள் நதி அந்த மேட்டின் மீதும் ஏறி அத்தனையையும் நொறுக்கிக்கொண்டு கடக்கும் என்கிற நியதியை நிரூபணமாக்குகிறது. அது ஒரு புள்ளியில் இலக்கணம் தகர்த்து அவனுக்குள் சீறிப்பாய்கிறது. புதிய இலக்கணமாய் பரிணமித்து நிமிர்வு கொள்கிறது. சுனில் கங்கோ பாத்யாயா எழுதிய கதையை மூலமாக கொண்டு சியாம் பிரசாத் எழுதிய திரைக்கதையை அடியற்றி உருவாக்கப்பட்ட இந்த படைப்பு காதலின் அறியாத யதார்த்தத்தை நேர்மையோடு உங்கள் மனதில் பதிவுசெய்து புதிய புதிய சிந்தனானுபவத்தை விதைத்துச் செல்லும்.
Read more from Kulashekar T
Biggboss - Oviya Varaiyum Devathai Padimam Rating: 0 out of 5 stars0 ratingsThe Day I Became A Woman Rating: 0 out of 5 stars0 ratingsWhite Nights - Venmayamana Iravugal Rating: 0 out of 5 stars0 ratingsVikramadithanukku Vedhalam Sonna Puthir Kathaigal Rating: 5 out of 5 stars5/5Mr and Mrs Iyer Rating: 0 out of 5 stars0 ratingsFirst Teacher Rating: 0 out of 5 stars0 ratingsOru Snegithikkaga... Rating: 0 out of 5 stars0 ratingsMulla Kathaigal Rating: 0 out of 5 stars0 ratingsSpring Autumn Winter Summer Spring Rating: 0 out of 5 stars0 ratingsA Separation Rating: 0 out of 5 stars0 ratingsThulli Thiriyum Ninaivalaigal - Part 3 Rating: 0 out of 5 stars0 ratingsCity Lights Rating: 0 out of 5 stars0 ratingsUyirkaadhal Rating: 0 out of 5 stars0 ratingsChildren of Heaven Rating: 0 out of 5 stars0 ratingsTitanic - Oru Kaadhalin Varalaru Rating: 0 out of 5 stars0 ratingsNinaivellam Poovasam! Rating: 0 out of 5 stars0 ratingsVaanampadi Rating: 0 out of 5 stars0 ratingsBigg Boss 2 - Episode 13 Rating: 0 out of 5 stars0 ratingsNivethitha Rating: 0 out of 5 stars0 ratingsBaran Rating: 0 out of 5 stars0 ratingsTen Rating: 0 out of 5 stars0 ratingsAadhalin Kaadhalaagalaam Rating: 0 out of 5 stars0 ratingsAkira Kurasewawin Red Beardum… Azhiyaachudar Anithavum… Rating: 0 out of 5 stars0 ratingsDevadas - Azhiyaa Kaadhal Rating: 0 out of 5 stars0 ratingsCharulatha Rating: 0 out of 5 stars0 ratingsBigg Boss 2 - Episode 3 Rating: 0 out of 5 stars0 ratingsUnnil Ennai Kaangirean Rating: 0 out of 5 stars0 ratingsCharlie Chaplin - Oru Muzhumayana Dharisanam Rating: 0 out of 5 stars0 ratingsW.P.A Soundrapandian Rating: 0 out of 5 stars0 ratings
Related authors
Related to Ore Kadal
Related ebooks
Titanic - Oru Kaadhalin Varalaru Rating: 0 out of 5 stars0 ratingsThe Apartment Rating: 0 out of 5 stars0 ratingsCast Away Rating: 0 out of 5 stars0 ratingsDevadas - Azhiyaa Kaadhal Rating: 0 out of 5 stars0 ratingsThe Road Home Rating: 0 out of 5 stars0 ratingsRun Lola Run Rating: 0 out of 5 stars0 ratingsCity Lights Rating: 0 out of 5 stars0 ratingsSpring Autumn Winter Summer Spring Rating: 0 out of 5 stars0 ratingsKaadhal Iravu Rating: 5 out of 5 stars5/5Anthareen Rating: 0 out of 5 stars0 ratingsCharulatha Rating: 0 out of 5 stars0 ratingsMathilukal Rating: 0 out of 5 stars0 ratingsChildren of Heaven Rating: 0 out of 5 stars0 ratingsFirst Teacher Rating: 0 out of 5 stars0 ratingsAval Appadithan Rating: 0 out of 5 stars0 ratingsKalloori Pookkal Rating: 0 out of 5 stars0 ratingsTheethum Nandrum Rating: 0 out of 5 stars0 ratingsUdaimul Rating: 0 out of 5 stars0 ratingsAagasa Thoothu Rating: 5 out of 5 stars5/5Ainthum Moondrum Onpathu Rating: 1 out of 5 stars1/5Ithu Sathiyam Rating: 5 out of 5 stars5/5Pa. Vijay Oru Paarvai Rating: 5 out of 5 stars5/5Theeraakkadhal Rating: 0 out of 5 stars0 ratingsMeetchi Rating: 0 out of 5 stars0 ratingsUpasaram Rating: 5 out of 5 stars5/5Ennai Thavira Rating: 5 out of 5 stars5/5Uyirkaadhal Rating: 0 out of 5 stars0 ratingsCelluloid Chozhan! Rating: 0 out of 5 stars0 ratingsPirithoru Maranam Rating: 0 out of 5 stars0 ratingsMeengal Urangum Kulam Rating: 0 out of 5 stars0 ratings
Reviews for Ore Kadal
0 ratings0 reviews
Book preview
Ore Kadal - Kulashekar T
http://www.pustaka.co.in
ஒரே கடல்
காதல் கடல்
Ore Kadal
Kaadhal Kadal
Author:
தி. குலசேகர்
T. Kulashekar
For more books
http://www.pustaka.co.in/home/author/kulashekar
Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.
All other copyright © by Author.
All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.
பொருளடக்கம்
அத்தியாயம் 1
அத்தியாயம் 2
அத்தியாயம் 3
அத்தியாயம் 4
அத்தியாயம் 5
அத்தியாயம் 6
அத்தியாயம் 7
அத்தியாயம் 8
அத்தியாயம் 9
அத்தியாயம் 10
அத்தியாயம் 11
அத்தியாயம் 12
அத்தியாயம் 13
அத்தியாயம் 14
அத்தியாயம் 15
அத்தியாயம் 16
அத்தியாயம் 17
அத்தியாயம் 18
அத்தியாயம் 19
அத்தியாயம் 20
அத்தியாயம் 21
அத்தியாயம் 22
அத்தியாயம் 23
அத்தியாயம் 24
அத்தியாயம் 25
அத்தியாயம் 26
அத்தியாயம் 27
அத்தியாயம் 28
அத்தியாயம் 29
அத்தியாயம் 30
அத்தியாயம் 31
அத்தியாயம் 32
அத்தியாயம் 33
அத்தியாயம் 34
அத்தியாயம் 35
அத்தியாயம் 36
அத்தியாயம் 37
அத்தியாயம் 38
அத்தியாயம் 39
அத்தியாயம் 40
அத்தியாயம் 41
அத்தியாயம் 42
அத்தியாயம் 43
அத்தியாயம் 44
அத்தியாயம் 45
அத்தியாயம் 46
அத்தியாயம் 47
அத்தியாயம் 48
ஒர் அறிமுகம்
இவரின் சிறுகதை தொகுப்பு நூல்களை கவிஞர் மீராவின் அன்னம் பதிப்பகம்
பிரசுரித்திருக்கிறது. மீராவை தன்னை பெறாத தந்தை என்று நினைவு கூறுகிறார். இவரின் வாழ்க்கைப் பயணத்தில் அவரோடு சேர்ந்து பயணித்த காலம் சிலிர்ப்பானவை என்கிறார். திரைப்படத்துறையை இவர் தேர்ந்தெடுத்ததும் இவரை கவிக்கோ அப்துல் ரகுமான் மூலம் இயக்குநர் பாக்யராஜிடம் உதவி இயக்குநராக சேர்ந்துவிட்டதும் கவிஞர் மீரா தான். பிரபல இதழ்களில் ஏழு நாவல் வெளி வந்திருக்கிறது. இவரின் படைப்புகளை அன்னம், சந்தியா, ஆழி, ப்ளாக்ஹோல் மீடியா, வருண் பதிப்பகம் போன்ற பதிப்பகங்கள் வெளியிட்டிருக்கின்றன.
இவரது வாழ்வில் மறக்க முடியாத மனிதர்களில் எழுத்தாளர் தனுஷ்கோடி ராமசாமி முக்கியமானவர். தனது முதல் புத்தகம் ஒரு சிநேகிதிக்காக
வெளியீட்டில் அறிமுகமான நாளில் இருந்து நினைவின் கடைசித்துளி வரை துளியும் குறையாத நட்போடும், வாஞ்சையோடும் ஆழ்மனதிற்கு நெருக்கமாக இயைந்துகொண்ட மனிதம் அவர் என்கிறார். அதேபோல பூர்ணம் விசுவநாதனின் நட்பும் அபாரமானது என்கிறார். இவரின் வானம்பாடி
புத்தகத்தை தனக்கு பிடித்த புத்தகம் என ஒரு கட்டுரையில் பூர்ணம் குறிப்பிட்டிருக்கிறார். இவரது கதைகளில் உள்ள உயிர்ப்பு பற்றி சுஜாதா, கமல்ஹாசன் போன்றவர்களிடம் சிலாகித்து கூறியிருக்கிறார். இயக்குநர் வசந்த்திடம் துணை இயக்குநராக சேர்த்து விட்டதும் இவர் தான். இந்த மூவரின் நட்பை குலசேகர் தன் வாழ்வின் அர்த்தங்கள்
என்கிறார்.
இயக்குநர் சந்தோஷ் சிவனின் டெரரிஸ்ட்
மல்லி' ஆகிய திரைப்படைப்புகளுக்கு எழுத்து வடிவம் கொடுத்து நூலாக்கியிருக்கிறார்.
தாமரை இதழில் இவர் எழுதிய திரை விமர்சனங்கள் நுட்பம் மிகுந்தவை. இவரின்
வருண் பதிப்பகம் வெளியீட்டில்
சமூகநீதிக் காவலர் டபிள்யு.பி.ஏ. சௌந்திர பாண்டியன்" என்கிற வாழ்க்கை வரலாற்று நூலை எழுதியிருக்கிறார்.
இவரது ஒரு சிநேகிதிக்காக
தொகுப்பில் உள்ள சிறுகதைகள் பேராசிரியர் டாக்டர் முத்தையா அவர்களால் வங்கமொழியில் மொழி பெயர்க்கப்பட்டு, பிரேமாந்தர்' இதழில் பிரசுரிக்கப் பட்டிருக்கிறது.
வானம்பாடி நூல் குறித்த கட்டுரையை
எனக்குப் பிடித்த புத்தகம் என்கிற தலைப்பில்
தினமணிக்கதிரில் பூர்ணம் விஸ்வநாதன் எழுதியிருக்கிறார். இவரது
மனதில் ஒரு பிரார்த்தனை" சிறுகதை காவ்யா பதிப்பகம் வெளியிட்ட 'நெல்லைச் சிறுகதைகள்' தொகுப்பு நூலில் இடம் பெற்றிருக்கிறது.
புதிய பார்வை - நீலமலை தமிழ்ச்சங்கம்
இணைந்து நடத்திய சிறுகதைப் போட்டியில் மூன்றாவது பரிசு பெற்றிருக்கிறார், ஆறுதல் பரிசு, மூன்றாம் பரிசு, முதல் பரிசு என தினமலர் நடத்திய டி.வி.ஆர் நினைவு சிறுகதைப் போட்டிகளில் தொடர்ந்து மூன்று முறை பரிசுகள் பெற்றிருக்கிறார். நேசங்களுடன்' சிறுகதை நூலுக்கு
லில்லி தேவசிகாமணி நினைவு இலக்கிய சிறப்புப் பரிசு" பெற்றிருக்கிறார்.
அமெரிக்கன் கல்லூரியில் முதுகலை ரசாயணம் படித்துக் கொண்டிருக்கையில், தூத்துக்குடி ஸ்பிக் நிறுவனத்தில் பணி கிடைத்து, அங்கே இருந்த காலங்களில் உலக திரைப்படங்கள் மற்றும் இலக்கிய பரிட்சயமேற்பட்டு, படித்தும், எழுதியும் கொண்டிருந்தவர், பின் திட்டமிட்டபடி திரைப்படத்துறைக்கு வந்து தன்னை ஐக்கியப்படுத்திக் கொண்டிருக்கிறார். இதழியலில் முதுகலை பட்டயப்படிப்பும் அஞ்சல் வழியில் படித்திருக்கிறார்.
விளம்பரப் படம், டெலிஃபில்ம், நெடுந்தொடர்களில் திரைக்கதை, வசனம் மற்றும் எபிசோட் இயக்குநராகவும் பணியாற்றியிருக்கிறார். தமிழகத்தின் பல மாவட்டங்களில் வாழும் பழங்குடியினர் வாழ்க்கை வரலாறு பற்றிய ஆவணப்படத்தின் உருவாக்கத்தில் கவிஞர் லீனாமணிமேகலையோடு இணைந்து பணியாற்றி இருக்கிறார். குமுதம் டாட் காம் இணையதள தொலைக்காட்சிக்காக பல துறைகளைச் சார்ந்த பிரபலங்களின் நேர்காணலை இயக்கியிருக்கிறார். நடிகை ரோகினி தொகுத்து வழங்க கேப்டன் தொலைக்காட்சிக்காக உலக சினிமா
என்கிற தொடர் நிகழ்ச்சியை எழுதி, இயக்கியிருக்கிறார். இவர் எழுதி இயக்கிய நீ+நீ=நாம்
என்கிற குறும்படம் வேந்தர்
தொலைக்காட்சியில் தேர்வாகியிருக்கிறது.