Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Thulli Thiriyum Ninaivalaigal - Part 3
Thulli Thiriyum Ninaivalaigal - Part 3
Thulli Thiriyum Ninaivalaigal - Part 3
Ebook226 pages1 hour

Thulli Thiriyum Ninaivalaigal - Part 3

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

குழந்தை மனது பிரபஞ்சத்தையே நேசிக்கச் செய்யும் வல்லமை கொண்டது. அதன் விசாலம் எல்லையற்றது. எல்லாத் திசைகளிலும் வியாபித்திருப்பது. அணிச்ச மலரையும்விட மென்மையானது. அதனைக் காப்பாற்றுவதும், உணர்வில் தக்கவைத்துக் கொள்வதுமே ஒவ்வொரு உயிரின் உன்னதத்தை உயிர்ப்போடு இயங்கச் செய்வதற்கான எளிய சூத்திரம். எழுத்தாளர் ஆர்.கே. நாராயணனின் மால்குடி தினங்கள் , மக்சீம் கார்கியின் எனது குழந்தைப் பருவம் போல தமிழில் ஒரு யதார்த்த தளத்தில் இயங்கக் கூடிய குழந்தை இலக்கியமாய் அதே நேரம் யாரும் படிக்க முடிகிற எளிய பதிவாய் ஆக்க வேண்டும் என்கிற எண்ணத்தின் பிரதிபலிப்பே இந்தக் கட்டுரைகளில் இடம்பெற்றிருக்கிற கடிதங்கள்.

இதில் உள்ள கட்டுரைகள் ஒவ்வொன்றும் ஒரு அனுபவம் மற்றும் அதன் கிளை அனுபவங்கள். அப்படி இதில் எத்தனை எத்தனையோ அனுபவங்கள். அந்த அனுபவங்கள் எழுத்துக்களைக் கடந்து செல்கையில் வளர்ந்தவர்களின் குழந்தைப் பருவத்தைக் கிள்ளிவிட்டு, அவர்களுக்குள் காலம் ஜெயித்து மாறா சாசுவதத்துடன் மாற்றமற்று அப்படியப்படியே ஒளிந்திருக்கும் குழந்தைப் பருவத்திற்குள் ஆட்காட்டி விரல் பிடித்து அழைத்துச் செல்லும்.

இதில் குழந்தைப் பருவத்து அனுபவங்களும், குழந்தை மனதோடான அனுபவங்களுமாய் நிறைந்திருக்கும். குழந்தைகள், டீன்ஏஜ் பருவத்தினர் என்றழைக்கப்படும் இளந்தளிர்த் தலைமுறைகள் மற்றும் குழந்தை மனது மாறாதிருப்பவர்கள் அனைவருக்குமான பதிவுகளாய் இதன் வீச்சு படிப்பவர் நினைவுகளில் தடம் பதிக்கும். இதன் வழித் தடங்களில் உங்களின் அனுபவங்களோடு ஒத்திருக்கிற சம்பவங்கள் தட்டுப்பட்டுக் கொண்டேயிருக்கும். அதன் தொடர்ச்சியாய் உங்களின் மனதில் எஞ்சிய பிரத்யேக குழந்தை உலகத்தின் அனுபவங்களின் நீட்சியாய், ஞாபகத்தில் கொண்டு வந்து, வார்த்தைகள் கடந்த இனம்புரியாத குதூகலத்திற்குள் மனதின் கைபிடித்து அழைத்துச் செல்லும்.

அதனால் அந்த அனுபவப் பகிர்வினை அவர்களால் உள்வாங்கிக் கொள்ள முடிகிறது. அனுபவங்களாகவோ, கதை வடிவங்களாகவோ சொல்லப்படுகிற எண்ணங்கள் அவர்களை லெகுவில் சென்றடைகின்றன. அவர்கள் அதனைத் தங்களின் தேவைக்கேற்பப் புதுப்பித்துக் கொள்ளவும் அதில் இடம் இருக்கிறபடியால் அந்த உத்தி அவர்களுக்கு ஏற்புடையதாகிறது. பெற்றோர்கள் அன்பாகி, அன்புடன் தயாரித்துத் தருகிற எளிய உணவுகூட அவர்கள் உடம்பிற்கு மிகவும் உகந்ததாக மாறிப் போகிறது. வெறுப்போடோ, சலிப்போடோ தயாரித்துத் தருகிற ஊட்டமான உணவுகூட அவர்களுக்கு ஒத்துக் கொள்ளாததாகி விடுகிறது என்கிறது அறிவியல். எதையும் பரந்த, பேதமற்ற அன்பிதத்துடன் செய்தால் குழந்தை உள்ளங்கள் அந்த இதத்தில் கதகதப்பு கொள்ளும்.

இன்றைய அதி வேகமான நகரச் சூழ்நிலையில் ஒரு குடும்பத்தில் எல்லோரும் ஒரே நேரத்தில் இருப்பதென்பது அரிது. அப்படியே இருந்தாலும் தொலைக்காட்சி அவர்கள் நேரத்தை பிடுங்கிக் கொள்ளாமல் இருக்கிறதென்பது அரிதிலும் அரிது. அப்பிடியே ஒன்றாயிருந்து தொலைக்காட்சியும் குறுக்கிடாமல் இருக்கிற நேரத்திலும் மனசு விட்டுப் பேசிக்கொள்வதென்பது அரிதிலும் அரிதரிது.

ஒரு வகையில் இது என்னுடைய சுருக்கி எழுதப்பட்ட சுயசரிதத்தின் முதல் பாகம் என்று கூட சொல்ல முடிகிற அளவிற்கு இந்த கட்டுரைத் தொகுப்பு கல் எறி வட்டங்களாய் விரிந்திருக்கிறது. அது என்னையும் மீறித் தன்னிச்சையாய் வழுக்கிக் கொண்டு வந்து உடன் சேர்ந்து கொண்டவை. எழுத எழுத உள்ளிருந்து தோண்டி எடுக்க வேண்டிய நினைவுகளின் புதையல் கூடிக்கொண்டே போவது ஒரு அதிசயம்.

விடலைப் பருவம் என்கிற துளிர் இளம்பருவத்திலிருக்கும் இளைய மகன் வருணிடம் பொது அறிவு மற்றும் பரஸ்பர அனுபவப் பகிர்தலின் மூலம் புரிதலை மேம்படுத்திக் கொள்வதற்காக ஒரு திட்டத்தைப் புகுத்தினேன். கணினியில் எது வேண்டுமானாலும் பிடித்ததை எழுதுவேன். அதில் பல சின்னச் சின்ன கேள்விகள், தகவல்கள், எண்ணங்கள், கருத்துக்கள், ஆலோசனைகள், வேண்டுகோள்கள், அபிப்பிராயங்கள், நடந்தவை, பிடித்தவை, உணர்ந்தவை என்று பல விசயங்கள் இருக்கும்.

அதற்கு இன்னொரு நாள் அதை வாசிக்கிற வேளையில் அவன் பதிலளிப்பதோடு, அவனுக்குத் தோன்றியவைகள் எது வேண்டுமானாலும் அதில் எழுதலாம். அவைகள் பதில்களாகவோ, வேறு கோணத்திலான கேள்விகளாகவோ விரியும். இப்படி நீட்டித்த விசயத்தின் நீட்சியாகவே இந்தப் பதிவுளைக் கொண்டுவர எண்ணம் துணிந்தது. இதை ஒரு முறையாக வைத்துப் பாலியல் கல்வி குறித்த சிந்தனை உட்பட இந்தத் தொடரைப் பல கோணங்களில் நீட்டலாம் என செயல்படத் தொடங்கினேன். அதற்காக மலரின் பாலியல் வழிமுறை யிலிருந்து துவங்கி மானுடத்தின் உடலியல் மற்றும் பாலியல் கல்வி வரை எளிமையாய், நுண்மையாய் இயல்பாய் உணர்த்த முயன்றிருக்கிறேன்.

நட்புடன், தி. குலசேகர்

Languageதமிழ்
Release dateAug 12, 2019
ISBN6580124003729
Thulli Thiriyum Ninaivalaigal - Part 3

Read more from Kulashekar T

Related authors

Related to Thulli Thiriyum Ninaivalaigal - Part 3

Related ebooks

Reviews for Thulli Thiriyum Ninaivalaigal - Part 3

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Thulli Thiriyum Ninaivalaigal - Part 3 - Kulashekar T

    http://www.pustaka.co.in

    துள்ளித் திரியும் நினைவலைகள் - பாகம் - 3

    Thulli Thiriyum Ninaivalaigal - Part 3

    Author:

    தி. குலசேகர்

    T. Kulashekar

    For more books

    http://www.pustaka.co.in/home/author/kulashekar

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    1. ஃபிராய்ட்

    2. நெரித்தல்

    3. சின்னச்சின்ன விளையாட்டுகள்

    4. நிகழ்காலம்

    5. புத்தர் வள்ளுவர் வள்ளலார்

    6. காரல் மார்க்ஸ் ஃபிராய்ட்

    7. பிறர்நலமே நல்ல சுயநலம்

    8. வாத்தியார்கள்

    9. குழந்தைப் பொய்கள்

    10. சில கதைகள்

    11. நம்மை ஆளுதல்

    12. தோட்டம்

    13. கடந்த காலம்

    14. ஜே. கே

    15. என்னைப் பற்றிக் கொஞ்சம்

    16. சில அனுபவங்கள்

    17. சமநிலைச் சமண்பாடு

    18. விழுந்து விழுந்து சிரித்த அனுபவம்

    19. அப்பா

    20. அம்மா

    21. பிரிவு

    22. புன்னகை வைத்த முகமாய்

    23. மன்னிக்க வேண்டுகிறேன்

    24. மாய வன்முறை

    25. ரம்யத்துகள்கள் நிறைந்த ஆல்பம்

    26. முப்பரிமாணப் பார்வை

    27. நிறைவுரை இப்போதைக்கு

    28. நேர்காணல்

    1. ஃபிராய்ட்

    சிக்மண்ட் ஃபிராய்ட் மனதத்துவத்தின் தந்தை என்று அழைக்கப்படுகிறவர். அவருக்குப் பிறகு மனோதத்துவவியல் வேகமாகவும், அதிஉயரத்திற்கும் வளர்ந்து விட்டிருக்கிற போதிலும் அதன் வலிமையான துவக்கம் என்று இவரைத் தாராளமாய்ச் சொல்லலாம். அவர் மனதை மேல்தள மனது, ஆழ் மனது என இரண்டாகப் பிரிக்கிறார். ஆங்கிலத்தில் சொல்வதென்றால். மனதின் நிலைகளை மேலும் நான்கு நிலைகளாகப் பிரிக்கிறார்கள். சராசரியாக இருக்கிற மனதின் நிலை. கனவு நிலை. மனக்குவிப்பின் மூலம் மனதின் இச்சைகளைக் கட்டுப்படுத்தி மனதில் ஆளுமை நிறுவும் நிலை, பிரக்ஞையற்ற நிலை இப்படி நான்கு நிலைகளுக்கும் மனது நொடிப்பதற்குள் சென்று திரும்பும் ஆற்றல் கொண்டது என்று எடுத்துக் கொண்டு பார்த்தால் இந்த மேற்படி நிலைகளைப் புரிந்து கொள்வது சுலபம்.

    இந்தச் சமுதாயத்தின் பொருட்டு நம்முள் அடக்கி வைக்கப்படுகிற காமம், பழமையோடிப் போன சமூக நடைமுறைகளை ஏற்றுக்கொள்ள முடியாமலும் அந்த முரணிலிருந்து வெளிவந்து, விரும்புகிற புதிய உலகத்தை நிர்மாணிக்கப் பழமை விரும்பிகளால் அனுமதிக்கப்படாததால் ஏற்படுகிற அழுத்தத்தாலும் என, வெளிப்படுத்த முடியாத பலதரப்பட்ட விசயங்கள் நம் ஆழ்மனதிற்குள் அழுத்தி அழுத்தி வைக்கப் பட்டு ஏதோ ஒரு சமயத்தில் அழுத்தம் அதிகரித்து சீல் பிடித்துச் சிக்கலான வடிவத்தில் நெருப்புக் குழம்புகள் கக்கும் வல்கனோவாய்ச் சீறி விட நேரிடுகிறது என்கிறார்.

    மனநோய் என்கிற விசயமே ஃபிராய்டிற்குப் பிறகு தான். அதற்கு முன்னால் மனநோய் என்றால் உடனே நமது ஆட்கள் பேய் ஓட்டப் புறப்பட்டு விடுவார்கள்.

    நம் பாரதியும் ரௌத்ரம் பழகு என்றிருக்கிறார். அதே சமயம் இந்த மேலாதிக்க வர்க்கம் கோபத்தை அடக்கு என்கிறது. அதனால் ஏற்படுகிற மனஅழுத்தத்திலிருந்து விடுபட யோகாவோ, தியானமோ செய்து கொள் என்கிறது. பாரதி தியானம் என்பதை நாம் செய்ய இருக்கிற காரியத்தினை முழுத்திறனுடன், ஈடுபாட்டுடன் வெளிப்படுத்துவதற்கான அந்த விசயத்தின் மீது கொள்கிற மனகுவிப்பிற்காக அதை நினைக்கச் சொல்கிறார்.

    அவர் ஈகோ, ஆல்டர் ஈகோ, இத் (வீபீ) போன்ற பதங்களையும் மனத்தின் நிலைகள் குறிக்க ஃபிராய்ட் பயன்படுத்துகிறார்.

    எளிமையாகச் சொல்வதென்றால் மனித இனம் தோன்றி வளர்ந்து வனங்களில் விலங்கினங்களோடும், பறவையினங்களோடும் ஒரு அங்கமாய் வாழ்ந்து வந்தார்கள். அப்போது அவர்களுக்குள் எந்தவித கட்டுப்பாடுகளும் விதிக்கப்படவில்லை. அவர்கள் குழுக்குழுவாக இயங்கி வந்தார்கள்.

    அவர்களிடம் இயற்கை தன் பரிணாம வளர்ச்சியின் மூலம் விதைத்திருந்த தகவல்கள் இருத்தலுக்கான சாமர்த்தியங்கள் கற்றுக் கொள்வதும், இருக்க இடம், உண்ண உணவு, சீதோசனநிலைபாடுகளிலிருந்து தங்களை காத்துக் கொள்வதற்குத் தேவையான உடை போன்றவற்றை பெற்றுக் கொள்வது குறித்த சிந்தனையே பிரதானமாய் அவர்களின் எண்ணங்களில் பிரதாபித்திருந்தது.

    இரண்டாவதாகத் தங்களின் அடையாளங்களான அடுத்த தலைமுறைகளை உருவாக்கிச் செல்ல இயற்கை தன் பரிணாம வளர்ச்சியால் பாதுகாப்பாய் இருபாலினர்களை உருவாக்கி அவர்கள் மூலம் வம்சவிருத்தி செய்வதற்கான பாலியல் உணர்வாய்க் காமம் குறித்த சிந்தனைகளை கற்று வைத்திருந்தது.

    இந்த இரண்டு விசயத்திற்காக மட்டுமே மனித இனம் தங்களின் நேரங்களைப் பொழுதுகளை செலவிட்டுக்கொண்டிருந்தது. அப்போது அவர்களுக்குள் அடக்கி வைக்கப்பட்ட உணர்வுகள் என்பது பெரும்பாலும் இல்லை. அப்படியரு உணர்வுகளை கட்டுப்படுத்திக் கொள்ளாமல் வாழ்ந்த மனதுகளின் செயல்பாட்டையே இத் என்கிறார்.

    அந்நாளில் இருந்தது தாய்வழிச் சமுதாயம். அதாவது மனித இனம் ஒவ்வொரு குழுவாய் இணைந்து வாழ்ந்த காலம் அது. அதில் ஒரு பெண் மட்டுமே தலைமை. மற்றவர்கள் எல்லாரும் அவருக்குக் கீழே தான். அந்தக் குழுவில் உள்ள அனைத்து ஆண் நபர்களும் அந்தத் தலைமைப் பெண்ணுடன் புணர்வு கொண்டு இனவிருத்தி புரிவார்கள். அவர்கள் அனைவருக்கும் அந்தக் குழுவில் தாய் மட்டுமே இருப்பார்.

    தந்தை யார் என்பது தெரியாது. அவர்களைப் பொறுத்தமட்டில் அந்த உறவு கிடையவும்கிடையாது. சக்தி படைத்த ஒரு பெண்ணே அந்தக் குழுவினை கட்டிக்காக்கக்கூடிய, வம்ச விருத்தி செய்து மனித இனத் தைப் பெருக்கக்கூடிய சக்தியாக இருந்திருக்கிறாள். அவள் அந்தக் குழுவைச் சேர்ந்த அனைவரையும் உயிரைக் கொடுத்துக் காப்பாற்றி வந்திருக்கிறாள்.

    இந்தப் பெண் இறந்த பிறகு, அதன் அடுத்த தலைமுறைகளில் மீண்டும் ஒரு சக்தி வாய்ந்த தன் வேட்டையாடும், இயற்கையின் சீற்றத்தத்தைச் சமாளித்துப் போராடும் திறத்தின்மூலம் தேர்ந்தெடுக்கப்பட்டு புதிய தலைமைப் பொறுப்பிற்கு வருவாள்.

    ஒரு குழுவிலிருந்து புதிய குழுவும் தோன்றித் தனித்து இயங்குவதும் நடக்கும்.

    ஒரு கட்டத்தில் மனிதர்கள் விவசாயத்தை கற்றுக் கொள்வதிலிருந்து நிலவுடமைச் சமுதாயம்

    தோன்றுகிறது. இதில் தான் ஆண்கள் பெண்களை தங்களின் சொத்துக்களாக ஒரு பொருளாக பார்க்கிற தன்மை தோன்றுகிறது. அந்நாட்களில் தான் பெண்கள் தாலி, கற்பு போன்ற புதிய கட்டுப்பாடுகளின் மூலம் கட்டுப்படுத்தப்பட்டு வீட்டிற்குள் ஒடுக்கப்படுகிறார்கள். இதனையே ஆணாதிக்க சமுதாயம் என்றும் சொல்லலாம்.

    ஆணாதிக்கப் பண்பை ஆண் மட்டும் இந்நாளில் கொண்டிருப்பதல்ல, பழக்கதோசத்தின் காரணமாய் இதற்குப் பல பெண்களும் கொடி பிடிக்கிற நிலை அறியாமையினாலும், பழக்கதோசத் தினாலும் இந்நாளிலும் நிலவுகிறது.

    நிலவுடமைச்சமுதாயத்தின் அடுத்தகட்டப் பரிணாமத் தோற்றம் தொழில் புரட்சியினால் ஏற்பட்ட முதலாளித்துவ சமுதாயம். தாய்வழிச் சமுதாயம், தந்தைவழிச் சமுதாயம் என்று இவைகளைப் பிரிக்கலாம். இரண்டிலும் சில நன்மைகள், சில தீமைகள் இருக்கின்றன. சமத்துவச் சமுதாயம் பற்றித் தான் பாரதி, பெரியார் போன்றவர்கள் யோசித்தார்கள். அதன் சாத்தியம் எதிர்காலங்களில் தெரிய வரும்.

    இந்தத் தந்தை வழிச் சமுதாயத்தில் தான் பண்பாட்டுணர்ச்சி அவர்கள் கொண்டு வந்த சமூகக் கட்டுப்பாட்டின் காரணமாய்த் தோன்றி வளரத் தொடங்கியிருக்கிறது. இந்தப் பண்பாட்டுணர்ச்சி என்பது நமதான சமூக வாழ்க்கை முறைக்காகத் தமதான தனி மனித விருப்புவெறுப்புகளை அடக்கி ஒடுக்கி வைப்பது என்பதுவே. இந்த ஒழுங்கிற்குப் பெயர் தான் பண்பாட்டுணர்ச்சி அல்லது ஈகோ.

    இதன் மூலம் நம் மனதிற்குள் நிறைந்திருந்த கட்டுப்பாடற்ற சுதந்திரமான கட்டற்ற விலங்கினவுணர்ச்சி அதீதமாய்க் கட்டுப்படுத்தப்படுகிறது. இதற்கு மதம் பெரிதும் துணை நிற்கிறது. இதன் தீமைகளில் ஒன்று என்னவென்றால் இந்நிலைபாட்டிற்குப் பிறகு தான் மனநோய் என்கிற ஒரு புதிய விசயமே தோற்றம் கொள்கிறது.

    விலங்குகளுக்கோ, பறவைகளுக்கோ மனநோய் என்பது கிடையாது. ஃபிராய்ட் போன்ற மனோ தத்துவ மேதைகளும் அவர்களுக்குத் தேவைப்படவில்லை. யோசிக்க வேண்டிய விசயம்.

    சூப்பர் ஈகோ அல்லது அதிபண்பாட்டுணர்ச்சி என்று இந்த மூன்றாவது நிலையைச் சொல்லலாம். இதைத் தான் மனசாட்சி என்கிறோம். இது மேலே சொன்ன இரண்டு உணர்ச்சிக்கும் நடுவே நின்று மத்தியஸ்தம் செய்து ஒவ்வொரு விசயத்திலும் ஒரு நடுவுநிலைமையான தீர்வினை உணர்த்த முற்படுகிறது.

    பனிப்பாறைகளால் திரையிடப்பட்டு உள்ளே உறைந்தும் உறையாமலும் உறங்கிக் கிடக்கிற நதியைப் போல, நம்முடைய மேல்மட்ட மனதும், ஆழ்மனதும் இருக்கிறது. மேல்மட்ட மனதை நம்மால் பார்க்க முடிகிறது. எப்போதும்.

    ஆனால் பனிப் பாறைக்குள் ஒளிந்திருக்கும் நதியைப் பார்க்க முடிவதில்லை. ஆழ்மனதும் அது மாதிரித் தான். நம்மால் பார்க்கமுடியாதவண்ணம் தன்னைத் தனக்குள்ளேயே சமூக நிர்பந்தத்தினாலோ, சமூகமுரணிலிருந்து தப்பித்துக் கொள்வதற்காகவோ ஒளித்து வைத்துக் கொண்டிருக்கிறது.

    ஒரு வகையில் மனித சமுதாயத்தின் மையப்பிரச்னை மனதிலிருந்து தான் துவங்குகிறது. மனித

    சமுதாயத்தின் அத்தனை பிரச்னைகளையும் தீர்க்க ஒரே வழி, அத்தனை மனதுகளும் ஒரே நேரத்தில் தன்னகத்தே செழுத்தப்பட்டு வந்திருக்கும் சமூக அழுத்தங்களிலிருந்து அனைத்து உயிர்களுக்கும், நியாயமான முறையில் விடுதலை கொடுக்கப்பட வேண்டும் என்பதே.

    2. நெரித்தல்

    நகரம் மனிதரின் மனதை மிகவும் சுருங்கிப் போகச் செய்து விடுகிறது. அவன் மிகப் பெரிய நகரத்தில் இருந்தாலும் அவனின் உலகம் மிகவும் குறுகியதாகிப் போயிருக்கிறது. அவனின் உலகத்தில் அக்கம்பக்கம் அதாவது அவன் வசிக்கும் அடுக்குமாடிக் குடியிருப்புகளில் உள்ளவர்களைக்கூட தெரிந்து கொள்ளாதவனாக இருக்கிறான். பின் எப்படித் தன் தெரு, பக்கத்துத் தெரு பற்றியெல்லாம் தெரிந்து கொள்ள இயலும்..? எல்லாமே அவனுக்குச் சுருங்கிக் கொண்டே போகிறது.

    சாலையில் எங்கும் போக்குவரத்துத் தடை. யார் முதலில் போவதென்கிற சுயநலச் சிந்தனையில் ஒரு சாலைக்குள் அனைவரும் ஒரே நேரத்தில் முண்டிக்கொண்டு அதே இடத்தில் நின்று கொண்டு, தன்னைத் தவிர மற்றனைவரையும் கோபித்துக்கொண்டிருக்கிறார்கள். எங்கெங்கெல்லாமோ காட்ட முடியாத முகம் தெரியாத கோபங்களை இங்கே கொட்டுகிறார்கள்.

    ஒருவர் விட்டுக் கொடுத்தால் சாலை அனைவரும் செல்லும்விதத்தில் சீராகக் கூடும். யார் முதலில் விட்டுக்கொடுப்பது என்பது இங்கே பெரிய கேள்வி.

    சிறுபிராயத்தில் நம் கிராமத்தில் டூரிங் டாக்கீஸில் பத்து பேர் நிற்பார்கள். அவர்கள் அனைவரும் டிக்கெட் கொடுக்கத் துவங்கியதும் ஒரே நேரத்தில் அந்தப் பொந்திற்குள் கை விடுவார்கள். சிறிது நேரம் தள்ளு முள்ளு, முண்டியடித்தலுக்குப்பின் ஒருவர் தன்னுடைய உடையெல்லாம் கசங்கி, சிகை அலங்காரம் அலங்கோலமாகி நீட்டிக் கொண்டிருக்கிற நிலையில் கையில் நைந்த போன டிக்கெட்டுடனும், சாதனை நாயகன் விருது பெற்று விட்ட புன்னகையுடனும் அந்தப் பொந்தை விட்டு விலகுவார்கள். அது தான் இங்கு தினமும் சாலையில் நடக்கிற விளையாட்டைப் பார்க்கையில் தோன்றுகிறது.

    யார் அந்தச் சுயநலச்சிந்தனை வட்டத்தை உடைத்துக்கொண்டு முதல் வழி விடப்போகிறார்கள்..? அது யாராக வேண்டுமானாலும் இருக்கலாம். நம்புவோம் அது நடக்கும் என்று. நேர்மறை நம்பிக்கைகளும், அணுகுமுறைகளும் மட்டுமே நம்மிடம் மிஞ்சியிருக்கிற ஒரே சக்தி.

    3. சின்னச்சின்ன விளையாட்டுகள்

    இங்கே குறிப்பிட்டிருக்கிற விளையாட்டு என்கிற வார்த்தை, கேலி, கலாட்டா என்கிற அர்த்தத்திற்குரியது. நீ எப்போதும் உனக்கென ஒரு தனி உலகை சிருட்டித்துக் கொண்டு அதில் குதூகலிப்புடன் துள்ளித் திரிவதை உன் அனுமதியில்லாமலே அவ்வப்போது கவனித்து வந்திருக்கிறேன்.

    நீ தனியாளாய் இருந்து கொண்டு கேரம் விளையாடுவாய். செஸ் விளையாடுவாய். அந்தச் சமயங்களில் இரண்டு பேராகவும் நீ மாறிமாறி உன்னை உருவகித்துக் கொண்டு விளையாடுவாய். அதே போல் நீ ஒரு ஆளாகவே தினமும் கிரிக்கெட் விளையாடுவாய். சுவரில் பந்தை பிட்ச் பண்ண வைத்து அதை

    லாவகமாக கையில் வைத்திருக்கும் மட்டையால் தடுத்துப் பயிற்சி செய்வாய். இந்த விளையாட்டு உனக்கு எப்போதும் அலுக்காது.

    சமயங்களில் சின்னச் சின்ன பொம்மைகளை வைத்துக் கொண்டு பைக் போட்டி நடத்துவாய். அந்தப் பொம்மை கதாபாத்திரங்களோடு கதாபாத்திரமாக மாறி அவைகளோடு இல்லை அவர்களோடு உரையாடி உறவாடி நீ உனக்குள் புன்னதைத்துக் கொள்வதை ஓரக்கண்ணால் ரசிக்கும் வேளையில், அந்த அற்புத உலகத்தின் அத்தனைக்கான காட்சி பிம்பங்களும் என் மனதிற்குள் நிழற்படமாய் விரியும். அந்த நொடியில் மனதில் வியாபித்திருந்த கவலை தரும் எண்ணங்கள் பிளாட்டிங் பேப்பரில் ஒற்றி எடுக்கப்பட்டதுபோல மனதை விட்டு அகலும். ஒரு தென்றலின் ஸ்பரிஷிப்பாய் குதூகலம் ஒரு புள்ளியாய் ஜனித்து விரிந்து கொண்டே செல்லும்.

    நீ படுக்கையில் உன் தலையணையோடு நடத்தும் சண்டைக்காட்சி எனக்குத் தேர்ந்த அகிரோ குரசேவா படத்தின் யுத்தக்காட்சியை நினைவு படுத்தும் வகையில் நேர்த்தியுடன் இருப்பதைப் பார்த்து மனது சொக்கியிருக்கையில் உதடுகள் தன்னிச்சையாய் புன்னகைக்கும்.

    உனக்கு சாகசங்களில் ஈடுபாடு. அதனால் மெத்தை மீது அடிக்கிற பல்டி எனக்குள் தொலைந்திருந்த அத்தனை மழலை நினைவுகளையும் திருப்பி ஓடச் செய்து நிகழ்காலத்திற்குள் எடுத்து வந்து காட்டும்.

    உன்னோடு சண்டை போடுகிற

    Enjoying the preview?
    Page 1 of 1