Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Thuvanthuva Yutham
Thuvanthuva Yutham
Thuvanthuva Yutham
Ebook103 pages39 minutes

Thuvanthuva Yutham

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

கவிஞர் மீரா, எழுத்தாளர் தனுஷ்கோடி ராமசாமி இருவரும் இவரின் கலை இலக்கிய பயணத்தை துவக்கி வைத்தவர்கள். இவரது புத்தகத்தை பாராட்டி கவிஞர் தமிழச்சிதங்கப்பாண்டியன், பூர்ணம் விஸ்வநாதன், கவிஞர் மீரா ஆகியோர் குறிப்பிட்டிருப்பதை வாழ்வின் சிலிர்ப்பான தருணங்கள் என பதிவு செய்கிறார்.

ஏழு குறுநாவல்கள் எழுதியிருக்கிறார். சார்லி சாப்ளின் ஒரு தரிசனம் என்கிற நூலை எழுதியிருக்கிறார். இவரின் தேர்ந்தெடுக்கப்பட்ட சிறுகதைகள் ‘தி. குலசேகர் கதைகள் என்கிற பெயரில் வெளிவந்திருக்கிறது. இவரது கதைகள் வங்கமொழியில் மொழிபெயர்க்கப்பட்டிருக்கிறது. இவரின் சிறுகதைகள்டி.வி.ஆர் நினைவு இலக்கியம், நீலமலை தமிழ்ச்சங்கம், லில்லி தேவசிகாமணி நினைவு இலக்கியம் போன்ற விருதுகள் பெற்றிருக்கிறது. ஜே.சி இயக்கம் ‘ரைசிங் ஸ்டார் என்கிற விருது வழங்கி கௌரவித்திருக்கிறது. புதிய முயற்சியாக உலகின் சிறந்த திரைக்கதைகளை தேர்ந்தெடுத்து இங்கே நாவல் வடிவில் ‘ட்ரான்ஸ் கிரியேட்டிவ்’ வகை இலக்கியமாக்கியிருக்கிறார். நடிகை ரோகினி தொகுத்து வழங்க கேப்டன் தொலைக்காட்சிக்காக ‘உலக சினிமா என்கிற தொடர் நிகழ்ச்சியை எழுதி, இயக்கியிருக்கிறார். சந்தோஷ்சிவனின் மல்லி, டெரரிஸ்ட் படங்களுக்கு எழுத்து வடிவம் தந்து நூலாக்கியிருக்கிறார்.

ரேவதி நடித்து, இயக்கிய டெலிஃபில்ம்களுக்கு திரைக்கதை, வசனம் எழுதி இணை இயக்குநராக பணிபுரிந்திருக்கிறார். சில தொலைக்காட்சி தொடர்களிலும், விளம்பரப்படத்திலும் எப்பிசோட் டைரக்டராக பணியாற்றியிருக்கிறார். கவிஞர் லீலாமணிமேகலையிடம் தமிழக பழங்குடியினர் வாழ்க்கை குறித்த ஆவணப் படத்தில் இணை இயக்குநராக பணிபுரிந்திருக்கிறார். நீ+நீ=நாம் என்கிற குறும் படத்தை எழுதி, இயக்கியிருக்கிறார்.

இயக்குநர்கள் கே.பாக்யராஜ், ராஜன் சர்மா, ரேவதி, வஸந்த் ஆகியோரிடம் துணை இயக்குநராக பணிபுரிந்திருக்கிறார்.

இயக்குநர் ரா.பார்த்திபனிடம் இணை இயக்குநராக பணிபுரிந்திருக்கிறார். திரைமொழியின் மீதுள்ள தீராத காதலினால் உயிர்த்திருக்க முடிந்திருப்பதையே தனக்கான தவமும்வரமும் என்கிறார்.

Languageதமிழ்
Release dateAug 12, 2019
ISBN6580124003491
Thuvanthuva Yutham

Read more from Kulashekar T

Related authors

Related to Thuvanthuva Yutham

Related ebooks

Reviews for Thuvanthuva Yutham

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Thuvanthuva Yutham - Kulashekar T

    http://www.pustaka.co.in

    துவந்துவ யுத்தம்

    Thuvanthuva Yutham

    Author:

    தி. குலசேகர்

    T. Kulashekar

    For more books

    http://www.pustaka.co.in/home/author/kulashekar

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    அத்தியாயம் 1

    அத்தியாயம் 2

    அத்தியாயம் 3

    அத்தியாயம் 4

    அத்தியாயம் 5

    அத்தியாயம் 6

    அத்தியாயம் 7

    அத்தியாயம் 8

    அத்தியாயம் 9

    அத்தியாயம் 10

    அத்தியாயம் 11

    அத்தியாயம் 12

    அத்தியாயம் 13

    அத்தியாயம் 14

    அத்தியாயம் 15

    முன்னுரை

    கவிஞர் மீரா, எழுத்தாளர் தனுஷ்கோடி ராமசாமி இருவரும் இவரின் கலை இலக்கிய பயணத்தை துவக்கி வைத்தவர்கள். இவரது புத்தகத்தை பாராட்டி கவிஞர் தமிழச்சிதங்கப்பாண்டியன், பூர்ணம் விஸ்வநாதன், கவிஞர் மீரா ஆகியோர் குறிப்பிட்டிருப்பதை வாழ்வின் சிலிர்ப்பான தருணங்கள் என பதிவு செய்கிறார்.

    ஏழு குறுநாவல்கள் எழுதியிருக்கிறார். சார்லி சாப்ளின் ஒரு தரிசனம் என்கிற நூலை எழுதியிருக்கிறார். இவரின் தேர்ந்தெடுக்கப்பட்ட சிறுகதைகள் ‘தி. குலசேகர் கதைகள் என்கிற பெயரில் வெளிவந்திருக்கிறது. இவரது கதைகள் வங்கமொழியில் மொழிபெயர்க்கப்பட்டிருக்கிறது. இவரின் சிறுகதைகள்டி.வி.ஆர் நினைவு இலக்கியம், நீலமலை தமிழ்ச்சங்கம், லில்லி தேவசிகாமணி நினைவு இலக்கியம் போன்ற விருதுகள் பெற்றிருக்கிறது. ஜே.சி இயக்கம் ‘ரைசிங் ஸ்டார் என்கிற விருது வழங்கி கௌரவித்திருக்கிறது. புதிய முயற்சியாக உலகின் சிறந்த திரைக்கதைகளை தேர்ந்தெடுத்து இங்கே நாவல் வடிவில் ‘ட்ரான்ஸ் கிரியேட்டிவ்’ வகை இலக்கியமாக்கியிருக்கிறார். நடிகை ரோகினி தொகுத்து வழங்க கேப்டன் தொலைக்காட்சிக்காக ‘உலக சினிமா என்கிற தொடர் நிகழ்ச்சியை எழுதி, இயக்கியிருக்கிறார். சந்தோஷ்சிவனின் மல்லி, டெரரிஸ்ட் படங்களுக்கு எழுத்து வடிவம் தந்து நூலாக்கியிருக்கிறார்.

    ரேவதி நடித்து, இயக்கிய டெலிஃபில்ம்களுக்கு திரைக்கதை, வசனம் எழுதி இணை இயக்குநராக பணிபுரிந்திருக்கிறார். சில தொலைக்காட்சி தொடர்களிலும், விளம்பரப்படத்திலும் எப்பிசோட் டைரக்டராக பணியாற்றியிருக்கிறார். கவிஞர் லீலாமணிமேகலையிடம் தமிழக பழங்குடியினர் வாழ்க்கை குறித்த ஆவணப் படத்தில் இணை இயக்குநராக பணிபுரிந்திருக்கிறார். நீ+நீ=நாம் என்கிற குறும் படத்தை எழுதி, இயக்கியிருக்கிறார்.

    இயக்குநர்கள் கே.பாக்யராஜ், ராஜன் சர்மா, ரேவதி, வஸந்த் ஆகியோரிடம் துணை இயக்குநராக பணிபுரிந்திருக்கிறார்.

    இயக்குநர் ரா.பார்த்திபனிடம் இணை இயக்குநராக பணிபுரிந்திருக்கிறார். திரைமொழியின் மீதுள்ள தீராத காதலினால் உயிர்த்திருக்க முடிந்திருப்பதையே தனக்கான தவமும்வரமும் என்கிறார்

    தான்மை

    ஒரு மனிதனின் ஈகோ, சகமனிதனை என்ன பாடுபடுத்துகிறது, அதை அவன் எப்படி எதிர்கொள்கிறான் என்பதே இந்த நாவலின் அடித்தளம். அதில் ஒரு கதாபாத்திரம் கடைசி வரை மர்மத்தின் குறியீடாய், நேரடியாக வருவதில்லை. கடைசி வரை தன் முகம் காட்டுவதில்லை. ஈகோவிற்கு முகம் இல்லை. அது அரூபமான முகமற்ற முகம் கொண்டது.

    ஆள் நடமாட்டமில்லாத அந்த ஆளரவமற்ற வனாந்தர நெடுஞ்சாலையில் தனுஷுற்கு, வழித்துணையாக வந்து சேரும் தேஜஸ்வினியுடன் சேர்ந்து ஒரு வித்யாசமான சிக்கலில் மாட்டிக் கொள்கிறான். அது அத்தனை சுலபத்தில் மீண்டு விட முடியாத சிக்கல் என்பது போகப் போக அவர்களுக்கு புரிகிறது. அந்த புரிதல் அவர்களின் போர்க் குணத்தை அவர்களுக்கு அடையாளம் காட்டுகிறது.

    நம்மை எத்தனை தான் பாதுகாப்பாக வைத்துக் கொள்ள நினைத்தாலும், வாழ்க்கை நம்மை எதிர்பாராத தருணத்தில், எதிர்பாராத விதத்தில் அந்த பாதுகாப்பு வளையத்தை விட்டு வெளியே எடுத்து விடத் தான் செய்கிறது. அந்த மாய விளையாட்டு எப்படியாவது நிகழ்ந்து விடத் தான் செய்கிறது. நிகழாமல் இருக்க எத்தனை தான் பிரயத்தனப்பட்டாலும், இந்த சமூக முரண்பாடுகளின் ஏதோ ஒரு காரணியால் அது நிகழ்த்தப்பட்டுக் கொண்டே தான் இருக்கிறது. இறப்பிடம் இருந்து பாதுகாத்துக் கொள்ள நினைப்பது எத்தனை அசாத்தியமானதோ அத்தனை அசாத்திய மானதே இந்த முரண்பட்ட சமூக விதியின் சிக்கலில் இருந்து முற்றிலுமாய் விடுபட்டு, பாதுகாப்பான சூழலை அமைத்துக் கொள்ள நினைப்பதும் கூட,

    அசம்பாவிதங்கள் நடக்காமல் பார்த்துக் கொள்கிறதெல்லாம் சரி தான். அதையும் மீறி அப்படியான விசயங்கள் நடக்கிற போது அதை தரத்தோடு எதிர்கொள்வதை தவிர வேறு மார்க்கமில்லை. அந்த ரிஸ்க்கை எடுத்துத் தான் ஆக வேண்டும். ரிஸ்க் இங்கே தவிர்க்க முடியாதது. அப்படி எடுக்கிற ரிஸ்க்கை எத்தனை சமயோசிதத்தோடும், பதட்டமின்றியும் எதிர்கொள்கிறோம் என்பதில் தான் வாழ்க்கை பாதுகாப்பானதா, பாதுகாப்பற்றதா என்பது தீர்மானிக்கப்படுகிறது. ஆக, வாழ்க்கையை பாதுகாப்பு வளையத்திற்குள் மீட்டுக்கொண்டு வருவதென்பது, எதிர்படும் எதிர்பாராத சிக்கலை எப்படி எதிர்கொள்கிறோம் என்பதில் தான் இருக்கிறது.

    அந்தச் சூழல் தனுஷை நொடியில் தன்னுடைய பாதுகாப்பு வளையத்தை விட்டு வெளியே பிடுங்கிக் கொண்டு வந்து வைக்கிறது. தற்காத்துக் கொள்ளுதல் என்கிற விசயம் அந்த உயிர் பயத்தில் எப்படியெல்லாம் அவனைச் செயல் படவைக்கிறது என்பதை விறுவிறுப்பாய் இந்த நாவல் பதிவு செய்கிறது.

    எதிர்பாராத தருணத்தில் அவனோடு இணைந்து கொள்கிற தேஜஸ்வினி அந்த விளையாட்டில் எப்படி தன்னையும் பங்கெடுத்துக் கொள்ளும்படி செய்கிறாள் என்பது இந்த நாவலை மேலும் மோகனமான திருப்பங்களுக்குள் இட்டுச் செல்கிறது.

    எத்தனையோ முரண்பாடுகள் நிறைந்திருக்கிற இந்த வாழ்க்கைச் சூழலில் நம்மைச் சுற்றி கண்ணுக்குப் புலபபடாத எத்தனையோ பிரச்னைகள் புதுங்கிக் கொண்டு இருக்கின்றன. அவை எப்போது வேண்டுமானாலும் வெளிப்பட்டு நம்முன் வந்து நிற்கலாம். நினைத்தே கூட பாக்க முடியாத கோணத்திலிருந்து, எந்த நொடி வேண்டுமானாலும், அப்படிப்பட்ட சிக்கலை

    Enjoying the preview?
    Page 1 of 1