Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Bigg Boss 2 - Episode 8
Bigg Boss 2 - Episode 8
Bigg Boss 2 - Episode 8
Ebook70 pages24 minutes

Bigg Boss 2 - Episode 8

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

இதுவரை சிறுகதை, நாவல், கவிதை, கட்டுரை, திரைக்கதைகளின் நாவல் வடிவம் என 50 – க்கும் மேற்பட்ட நூல்கள் எழுதியிருக்கிறார்.

டி.வி.ஆர் நினைவு சிறுகதை போட்டி, புதிய பாதை – நீலமலை தமிழ்ச்சங்கம் சிறுகதை போட்டி, லில்லி தேவசிகாமணி இலக்கிய விருது பெற்றிருக்கிறார். இவரது சிறுகதைகள் வங்கமொழியில் மொழிபெயர்க்கப்பட்டு ‘பிரேமாந்தர்’ இதழில் வெளியிடப் பட்டிருக்கிறது.

குமுதம் டாட் காமில் நிகழ்ச்சி தயாரிப்பாளராக இருந்திருக்கிறார். தினமலரில் ஸ்பெஷல் கரஸ்பாண்டன்ட் ஆக பகுதிநேர பணியில் இருக்கிறார்.

திரைப்படத்துறையில் இணைஇயக்குநர். இயக்குநர் கே.பாக்யராஜ், ராஜன் சர்மா டி.எஃப்.டி, ரேவதி, வஸந்த், இராதாகிருஷ்ணன் பார்த்திபன் போன்றவர்களிடம் பணிபுரிந்திருக்கிறார். உலக சினிமா பற்றியும், வாழ்வியல் பற்றியும் நிறைய கட்டுரைகள் எழுதி வருகிறார்.

Languageதமிழ்
Release dateAug 12, 2019
ISBN6580124003388
Bigg Boss 2 - Episode 8

Read more from Kulashekar T

Related authors

Related to Bigg Boss 2 - Episode 8

Related ebooks

Reviews for Bigg Boss 2 - Episode 8

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Bigg Boss 2 - Episode 8 - Kulashekar T

    http://www.pustaka.co.in

    பிக்பாஸ் - சீஸன் 2

    எபிசோட் 8

    Bigg Boss - Season 2

    Episode 8

    Author:

    குலசேகர். தி

    Kulashekar. T

    For more books

    http://www.pustaka.co.in/home/author/kulashekar

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    கூடா நட்பு கேடாய் முடியவும் கூடும்

    பின்

    அனுபவமாகி வளர்த்தெடுக்கவும் கூடும்

    இன்னும் ஐந்து வாரங்கள் மட்டுமே எஞ்சி இருக்கிறது. அதற்குள் என்னென்ன ஆட்டங்கள் அரங்கேற இருக்கிறது என்று நிதானமாய் அவதானிக்கலாம். முதலில் ஒன்றை நாம் புரிந்து வைத்துக் கொண்டு, இது குறித்த அலசல்களில் வெளியில் இருந்து உற்று நோக்குவது என்கிற உத்தியே உசிதம்.

    காரணம், இது ஸ்டார் விஜய் என்கிற அமெரிக்க தொலைக்காட்சியால் நடத்தப்படுகிற ஒரு பொழுதுபோக்கு நிகழ்ச்சி. வளர்ந்த நாடுகளில் இதுபோல பல விளையாட்டுகளை உருவாக்கி, அங்குள்ள மனிதர்களுக்கு விதவிதமான பொழுதுபோக்குகளை தந்து கொண்டிருக்கிறார்கள். அங்கே ஆதார கல்வி, வேலை வாய்ப்பு, வருமானம் போன்றவற்றிற்கு பெரும்பாலும் எந்த பிரச்னைகளும் இருப்பதில்லை. அதனால் அவர்கள் பொழுதுபோக்கை பிரதானப்படுத்துகிறார்கள். அவர்களுக்கு என்ன தேவையோ, அதை பிரதானப்படுத்து என்பது அங்கே அவர்களுக்கு யதார்த்தமே.

    வளரும் நாடுகளில், ஏழை நாடுகளில் அதை சற்றும் மாற்றமே இல்லாமல் அப்படியே கொண்டு வருகிறதென்பது, வெறும் வியாபார உத்தியாக மட்டுமே பார்க்க முடியும். அதை தாண்டிய அக்கறை என்றால், கமல் இங்கே அதை எடுத்து தன் பாணியில் நடத்துவது மட்டும் தான்.

    இது அனைத்து மாகாணங்களிலும் இங்கே ஒரே மாதிரி நடத்தப்படுகிறது. மனிதர்களின் போட்டி மனப்பான்மையை மென்மேலும் தூண்டி விடுகிற காரியத்தை இது செய்யாமல் இல்லை. எப்படி வேண்டுமானாலும் ஜெயித்தால் போதும்.. காசு பார்த்தால் போதும் என்று உலகின் பொதுபுத்தி முதலாளித்துவ போர்வையில் தொடர்ந்து பூடகமாய் வலியுறுத்திக் கொண்டே இருக்கிறது. இந்த நிலையில் இந்த நிகழ்ச்சியில் நியாயமாக, நேர்மையாக, அறம் சார்ந்து, முழுஈடுபாட்டோடு யார்யார் விளையாடுகிறார்கள் என்றெல்லாம் ஆய்ந்தறிந்து இந்த வெறும் பொழுதுபோக்கு நிகழ்ச்சியையும் நமக்கு பயனுள்ளதாக ஆக்கிக் கொள்வதென்பது நமது சாமர்த்தியம். அப்படியான ஒரு செயலையே இந்த கட்டுரைகள் முடிந்த வரை சுவாரஸ்யத்துடன், நடுவுநிலமையுடன் உங்கள் முன் வைக்க முனைகிறது.

    இதில் பல திருப்பங்களை ரகசியமாக பிக்பாஸ் குழுமமே பங்கேற்பாளர்களுள் திணிக்கக்கூடும் என்பதை ஞாபகத்தில் வைத்துக்கொண்டு இந்த நிகழ்வை அவதானியுங்கள்.

    மேலும் இது ஒரு ஷோ கேம். இதில் பங்கெடுப்பவர்கள் சமூக ஆர்வலர்களோ, சமூக சேவர்களோ, சமூக மாற்றத்தில் மிகுந்த ஈடுபாடு கொண்டவர்களோ அல்ல. பெரும்பாலும் தொலைக்காட்சி, சினிமாவில் வந்து இப்போது போதுமான வாய்ப்பு இல்லாமல் இருக்கிறவர்கள் தான். ஆகவே இப்படியான சாதாரண மனிதர்களுக்குள் எப்படியான குணாம்சங்கள் அந்தந்த சந்தர்ப்பங்களில் பொங்கி எழுகின்றன.

    பிரச்னைகளை தீர்க்க

    Enjoying the preview?
    Page 1 of 1