Kanaiyazhi - June 2023
By Kanaiyazhi
()
About this ebook
Read more from Kanaiyazhi
Kanaiyazhi - June 2020 Rating: 0 out of 5 stars0 ratingsKanaiyazhi - August 2018 Rating: 0 out of 5 stars0 ratingsKanaiyazhi - May 2019 Rating: 0 out of 5 stars0 ratingsKanaiyazhi - October 2021 Rating: 0 out of 5 stars0 ratingsKanaiyazhi - August 2020 Rating: 0 out of 5 stars0 ratingsKanaiyazhi - April 2023 Rating: 0 out of 5 stars0 ratingsKanaiyazhi - July 2019 Rating: 0 out of 5 stars0 ratingsKanaiyazhi - October 2018 Rating: 0 out of 5 stars0 ratingsKanaiyazhi - March 2023 Rating: 0 out of 5 stars0 ratingsKanaiyazhi - November 2022 Rating: 0 out of 5 stars0 ratingsKanaiyazhi - December 2018 Rating: 0 out of 5 stars0 ratingsKanaiyazhi - April 2020 Rating: 0 out of 5 stars0 ratingsKanaiyazhi - October 2023 Rating: 0 out of 5 stars0 ratingsKanaiyazhi - October 2020 Rating: 0 out of 5 stars0 ratingsKanaiyazhi - March 2021 Rating: 0 out of 5 stars0 ratingsKanaiyazhi - April 2022 Rating: 0 out of 5 stars0 ratingsKanaiyazhi - February 2021 Rating: 0 out of 5 stars0 ratingsKanaiyazhi - March 2018 Rating: 0 out of 5 stars0 ratingsKanaiyazhi - October 2019 Rating: 0 out of 5 stars0 ratingsKanaiyazhi - July 2018 Rating: 0 out of 5 stars0 ratingsKanaiyazhi - November 2019 Rating: 0 out of 5 stars0 ratingsKanaiyazhi - February 2023 Rating: 0 out of 5 stars0 ratingsKanaiyazhi - September 2019 Rating: 0 out of 5 stars0 ratingsKanaiyazhi - September 2023 Rating: 0 out of 5 stars0 ratingsKanaiyazhi - July 2021 Rating: 0 out of 5 stars0 ratingsKanaiyazhi - December 2021 Rating: 0 out of 5 stars0 ratingsKanaiyazhi - December 2020 Rating: 0 out of 5 stars0 ratingsKanaiyazhi - June 2021 Rating: 0 out of 5 stars0 ratingsKanaiyazhi - November 2021 Rating: 0 out of 5 stars0 ratingsKanaiyazhi - December 2023 Rating: 0 out of 5 stars0 ratings
Related to Kanaiyazhi - June 2023
Related ebooks
Udaintha Nilakkal - Part 1 Rating: 4 out of 5 stars4/5Uyiril Kalantha Geetham! Rating: 0 out of 5 stars0 ratingsVizhigalil Ethanai Mozhigal! Rating: 0 out of 5 stars0 ratingsEnnai Kaapatrungal! Rating: 0 out of 5 stars0 ratingsசுதந்திர தேவி: பாரத வரலாற்று குறுங்காவியம் Rating: 0 out of 5 stars0 ratingsOru Koodai Nila Rating: 0 out of 5 stars0 ratingsUdaintha Nilakkal Part 2 Rating: 5 out of 5 stars5/5Vazhkai Thedi Vanambaadigal Rating: 0 out of 5 stars0 ratingsKanaiyazhi - February 2022 Rating: 0 out of 5 stars0 ratingsVaarai... Nee Vaarai Rating: 0 out of 5 stars0 ratingsPennukku Oru Neethi Rating: 0 out of 5 stars0 ratingsKuzhalaagi Naan… Rating: 0 out of 5 stars0 ratingsOru Ilakkiyavathiyin Kalaiulaga Anubavangal Rating: 4 out of 5 stars4/5Ninaivalaigal Thodarnthu Vanthal... Rating: 0 out of 5 stars0 ratingsKanaiyazhi - November 2021 Rating: 0 out of 5 stars0 ratingsNatchathira Iravu Rating: 0 out of 5 stars0 ratingsAnjali Rating: 0 out of 5 stars0 ratingsPeigal Oivathillai! Rating: 0 out of 5 stars0 ratingsThanimanitha Thiyagam Naattirkum Veettirkum Rating: 0 out of 5 stars0 ratingsKanaiyazhi - August 2022 Rating: 0 out of 5 stars0 ratingsAnaikka... Anaikka... Rating: 0 out of 5 stars0 ratingsபாப விமோசனம் Rating: 0 out of 5 stars0 ratingsKaaviya Kavingnar Vaali Rating: 0 out of 5 stars0 ratingsMeen Kothi! Rating: 0 out of 5 stars0 ratingsMaayam Seithayo Mayava Rating: 0 out of 5 stars0 ratingsKappal Paravai Rating: 0 out of 5 stars0 ratingsKaadhalai Nesikkirean...! Rating: 0 out of 5 stars0 ratingsPennukku Urimai Thareer! Rating: 0 out of 5 stars0 ratingsKavithai Minnalgal! Part - 3 Rating: 0 out of 5 stars0 ratingsMoongil Kaadugale..! Rating: 4 out of 5 stars4/5
Reviews for Kanaiyazhi - June 2023
0 ratings0 reviews
Book preview
Kanaiyazhi - June 2023 - Kanaiyazhi
https://www.pustaka.co.in
கணையாழி ஜூன் 2023
மலர்: 58 இதழ்: 03 ஜூன் 2023
Kanaiyazhi June 2023
Malar: 58 Idhazh:03 June 2023
Author:
ம.ரா
Ma. Raa
Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.
All other copyright © by Author.
All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.
E:\Priya\Book Generation\june kanaiyazhi\1-min.jpgவரலாற்றை விடுதலை செய்தவர் வாழட்டும் தமிழின் வரலாறாக!
முத்தமிழ் அறிஞர் கலைஞருக்கு
நூற்றாண்டு விழா!
முதலமைச்சராக மு.க.ஸ்டாலின்!
பெரியார் நூற்றாண்டில் (1979)
எம்.ஜி.ஆர். முதலமைச்சர்!
பூவிருந்தவல்லி நெடுஞ்சாலைக்குப்
பெரியார் ஈ.வே.ரா. சாலை என்று
பெயர் மாற்றினார்.
என்ன நினைத்தார்களோ தெரியவில்லை
ஏப்ரல் 2021 இல்
Grand Western Trunk Road என்று
பெரியார் பெயரை மாற்றினார்கள்.
நினைவில் நிறுத்துங்கள்
மே மாதத் தேர்தலில் ஆட்சி மாறும் என்றது
தளபதியின் குரல்!
ஆட்சிக்கு வரும் முன்பே
தளபதியின் ஆணையில்
பெரியார் நூற்றாண்டு அடையாள நினைவு
நிலை பெற்றது!
அறிஞர் அண்ணாவின் நூற்றாண்டில் (2009)
முதலமைச்சராக முத்தமிழ் அறிஞர் கலைஞர்!
அண்ணா நூற்றாண்டு நூலகமாக
வரலாற்றில் அண்ணாவை
வாழ வைத்திருக்கிறார்!
இப்போது
கலைஞருக்கு நூற்றாண்டு
முதலமைச்சராக மு.க.ஸ்டாலின்!
சங்கம் வளர்த்த மதுரையில்
சங்கத் தமிழ் படைத்த
கலைஞர் நூற்றாண்டு நூலகம்!
திருவாரூர்த் தேரில்
திருவள்ளுவரை அமர வைத்து
வள்ளுவர் கோட்டம் எழுப்பியவருக்கு
அஞ்சுகம் அம்மையார் நினைவிட ஊரில்
கலைஞர் கோட்டம்!
கலைஞர்!
தமிழ் மொழியின் புத்துயிர்ப்பு!
தமிழர்களின் புத்துணர்ச்சி!
பெரியார், அண்ணா கொள்கை
விழுதுகளில் கிளை விரித்து
தமிழர்களுக்கு வெளிச்சம் ஆனவர்!
வணிக நோக்கு இல்லாமல் இயக்கப் போக்குக்குப்
பாதை போட்டுக் கொண்டே பயணம் செய்தவர்!
தமிழர்கள் பயணிக்கத் தடம் காட்டியவர்!
விழுமிய மரபுகளை நவீனம் ஆக்கியவர்!
கடந்த காலத்தை வெறுமனே கழுவில் ஏற்றாமல்
நிகழ் காலம் கொண்டு
மதிப்பீடுகளை மாற்றியமைத்தவர்!
நாடகம், திரைப்படம், தொலைக்காட்சித் தொடர்
என்று கால மாற்றக் கலை வெளிப்பாட்டுக்குக்
கை கொடுத்தவர்!
கணினி, இணையம், சமூக ஊடகத்
தொழில் நுட்பங்களோடு கை கோர்த்தவர்!
12 வயதில் ‘செல்வ சந்திரா’ புதினம் எழுதியவர்!
14 வயதில்திருவாரூர் வீதிகளில்
தமிழ்க் கொடி ஏந்தி போராடியவர்!
15 வயதில் ‘மாணவ நேசன்’
பத்திரிகை நடத்தியவர்!
18 வயதில் அண்ணாவின்
திராவிட நாட்டில் ‘இளமைப்பலி’எழுதியவர்
18 வயதில் முரசொலி மாத இதழ் தொடங்கியவர்
20 வயதில்
‘சாந்தா அல்லது பழனியப்பன்’
நாடகம் எழுதி நடித்தவர்
21 வயதில்
பெரியாரின் குடியரசில் துணையாசிரியர் ஆனவர்!
25 வயதில் திரைத்தமிழைத் திருத்தத் தொடங்கியவர்!
32 வயதில்
சாக்ரடீசுக்குக் கிரேக்கம் வழங்கிய
தீர்ப்பினைத் திருத்தி ‘கிரேக்கப் பெரியார்’
நாடகம் போட்டவர்!
92 வயதில் இராமானுஜர் பற்றிய
தொலைக்காட்சித் தொடர் தந்தவர்
‘கலைஞர் எழுதுவதுதான் தமிழ்
நாங்கள் எழுதுவதெல்லாம்
தமிழே அல்ல’ என்று
தாய்க் காவியம் வெளியீட்டு விழாவில்
ஞானபீட எழுத்தாளர் ஜெயகாந்தனால்
பாராட்டப்பட்டவர்!
கலைஞரைப் போல் ஒருவர்
அத்தனைப் படைப்புகளையும்
எழுத முயன்றால் அதற்கு
ஒரு பிறவி போதாது’ என்று
கலிபோர்னியா பல்கலைக்கழகப்
பேராசிரியர் ஜார்ஜ் ஹார்ட்டால்
புகழப்பட்டவர்!
நூறு வருடம் கழித்துத்
தமிழ் வரலாற்றைப் படிக்கிறவன்
இப்படி ஓர் ஆள்
நம்ம ஆள் இருந்தாரா! என்று
நினைக்கக் கூடிய அளவுக்குப்
பேராற்றல் பொருந்திய
பெருமகன் கலைஞர்’ என்று
பேராசிரியர் அ.ச. ஞானசம்பந்தனால்
போற்றப்பட்டவர்!
கலைஞர்!
அகத்தியரும் அடி பதித்த -
தேவார மூவராலும் பாடப்பெற்ற -
சேக்கிழார் பாடிய -
பாரதப் பாண்டவர்கள் மட்டுமன்றிப்
பிரம்மனும் திருமாலும் நவக்கிரகங்களும்
வழிபட்ட - புராணக் கதைகள் தளும்பும்
திருக்குவளையில் பிறந்தவர்!
சிறந்த வித்துவானும்
கவிதை புனையும் ஆற்றலும்
வடமொழியில் புலமையும்
புராணக் கதைசொல்லியுமான
பெரியவர் முத்துவேலரைத்
தந்தையாகப் பெற்றவர்!
இந்தியா முழுதும் திராவிட மாடலை
எதிர்பார்க்க வைக்கும்
முதல்வர் மு.க.ஸ்டாலினை
மகனாகப் பெற்றவர்!
தன்னைத் தானே செதுக்கிக்கொண்ட
சிற்பியும் சிலையும் ஆனவர்!
நீச மொழி என்று
ஒதுக்கிவைக்கப்பட்ட தமிழைச்
செம்மொழி என்று அறிவிக்கச் செய்து
தமிழ் மொழிக்கு விடுதலை தந்தவர்!
செங்கோல் கொண்டு வரலாற்றைத் திருத்தாமல்
எழுதுகோல் கொண்டு தமிழ் வரலாற்றை
விடுதலை செய்தவர்!
ஆம்!
வரலாறு விடுதலை செய்யும் என்று
காத்திராமல்
வரலாற்றை விடுதலை செய்தவர்
வாழட்டும் தமிழின் வரலாறாக!
பொருளடக்கம்
சிறுகதை - கலைஞர் மு.கருணாநிதி
கவிதை - ரகுநாத் வ
சிறுகதை – ஸிந்துஜா
கவிதை கிறிஸ்டினா ரோசெட்டி, - தமிழில்: வ. ஜெயதேவன்
கட்டுரை - சா.தேவதாஸ்
கவிதை - பாபு கனிமகன்
சிறுகதை - ஆயிஷா இரா.நடராசன்
கவிதை - காசாவயல் கண்ணன்
கட்டுரை - கவிதைக்காரன் இளங்கோ
கவிதை - கி.சரஸ்வதி
சிறுகதை - வாசுதேவன் அருணாசலம்
கட்டுரை - மு.இராமசுவாமி
கட்டுரை - ஸ்ரீவில்லிபுத்தூர் எஸ். ரமேஷ்
கவிதை - உடுமலை கி. ராம்கணேஷ்
கவிதை - இரா.மதிராஜ்
கட்டுரை - சிவகுமார் முத்தய்யா
கடைசிப் பக்கம் – இ.பா
சிறுகதை - கலைஞர் மு.கருணாநிதி
நளாயினி
பாரத சூதாட்டத்தைப் பாரதியார் பாஞ்சாலி சபதம் ஆக்கினார்; இராமாயண அகலிகையைப் புதுமைப்பித்தன் சாபவிமோசனம் என்று சிறுகதையாக்கினார். இப்படிக் கடந்தகாலக் கதைகளைச் சமகாலச் சிந்தனையோடு எழுதிய படைப்புகள் தமிழில் உண்டு. அந்த வகையில் கலைஞர் மு.கருணாநிதியின் படைப்புகள் சில அமைந்துள்ளன. அவற்றில் ஒன்று நளாயினி சிறுகதை. நளாயினி பாரதக் கதையில் வரும் ஒரு பெண். நள அரசனின் மகள். பெருநோய்க்கு ஆளான தன் கணவனை அவன் விருப்பத்திற்கேற்ப தாசியிடம் கொண்டு சேர்க்கும் தொண்டினைச் செய்வதால் புராணத்தில் பாராட்டப்படுகிறாள். கலைஞர் மு.கருணாநிதி அவர்கள் ‘நளாயினி’யை உணர்வும் உணர்ச்சியும் நிரம்பிய பெண்ணாகத் தமது சிறுகதையில் சமகாலச் சிந்தனையோடு படைத்துக் காட்டியிருக்கிறார். இதோ அவரது கதை:
***
அழகான பெண். ஒளிமுகம் படைத்த உருக்குலையா மங்கை. வெள்ளை உடையால் அவள் அன்ன நடைக்கு அழகு சேர்க்கிறாள். சிவந்த கழுத்திலே ஒரு கறுப்பு மணி மாலை. அந்தக் கோதி முடித்த கூந்தலையுடைய கோதை தலையிலே ஒரு கூடையுடன் தெருவிலே போகிறாள். அப்பழுக்கற்ற யௌவனத்தின் தனித்தன்மை வாய்ந்த அழகு ஊர்வலம்! இருள் படிந்த தெருவிலே அவள் நடந்து செல்வது வையத்து மண்ணுக்கு வர விழைந்த வானத்துத் தாரகைதான் வந்துற்றதோ என எண்ணத் தோன்றியது!
அந்த ஜோதி மழை பொழியும் சொர்ணச் சிலையின் தலையிலே கூடை: கூடையிலோ துர்வாடை! ஆமாம், அழகியின் தலையில் ஓர் அழுகிய உருவம். கூடையின் அடிப்புறத்தைத் தாங்கியிருக்கும் அவள் இளங் கரங்கள் சுமை தாங்காமல் நடுங்கிக் கொண்டிருக்கின்றன. ஆனாலும் அந்தச் சுந்தரவல்லி போய்க் கொண்டுதான் இருக்கிறாள். சோகத்திலும் ஒரு சோபிதம் இருக்கிறது என்பதை அவளது எழில் வதனம் கவிஞர்கட்குக் காட்சியாக்கிக் கொண்டிருக்கிறது. கூடையிலே அமர்ந்துள்ள அழுகிய உருவமோ புன்னகை புரிந்த வண்ணமிருக்கிறது. அந்தப் புன்னகை எதையோ ஓர் இன்பத்தை எதிர்பார்த்து மலரும் புன்னகை. புன்னகையில் விசாரத்தைக் காண வேண்டுமா? ஆசைப்படுவோர் அந்த உருவத்தின் இளிப்பைப் பார்த்துக்கொள்ளலாம். கூடையிலே இருந்த அந்த உருவம் ஆண். தனக்கென உரிய உடலில் கால் பாகத்துக்கு மேல் இழந்துவிட்ட மனிதன்: மகரிஷி! மௌத்கல்யர் என்னும் பெயருடைய மகான்.
‘பெரிய’ மனுஷன், ‘பெரிய’ ஆள், ‘பெரிய’ செல்வந்தன், ‘பெரிய’ பண்ணையார் என்பது போலப் ‘பெரிய’ வியாதி என்று ஒன்று உண்டே! அந்தப் பெருவியாதியால் பீடிக்கப்பட்டவர் அந்தப் பெரிய மகான், அவர்தான் தன்னுடைய அழகான மனைவியின் தலையில் ஏறிக்கொண்டு தெருவில் போகிறார்.
போடி, வேகமாக!
போய்க்கொண்டுதானே இருக்கிறேன், பிராணபதி!
நளாயினி! நட வேகமாக! அதற்காக என்னைக் கீழே போட்டுவிடாதே! நீ விழுந்தாலும் பரவாயில்லை!
என் தெய்வமே! என்னை ஏன் இப்படிச் சோதிக்கிறீர்கள்? என் கூடுவிட்டு ஆவி போனாலும் கூடையைக் கீழே போடமாட்டேன். கூடையிலென்ன வியாபாரப் பொருளா இருக்கிறது? வீட்டுச் சாமானா தூக்கிச் செல்கிறேன்? விலை மதிக்கவொண்ணா என் ரத்தினமல்லவா தாங்கள்! தங்களையா கீழே போட்டு விடுவேன்? அபச்சாரம்! அபச்சாரம்!
குஷ்டரோகக் கணவனைக் கூடையிலே சுமந்து -