Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Anjuthal Anjamai
Anjuthal Anjamai
Anjuthal Anjamai
Ebook95 pages36 minutes

Anjuthal Anjamai

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

அமானுஷ்யம் என்ற இருட்டிற்கு அப்பால் தர்மம் என்ற ஒளி கட்டாயம் இருக்கும். அதைத் தோற்றுவித்த சத்தியம் எனும் சூரியனும் இருக்கும். அறத்திற்கு அஞ்சுதலும் அமானுஷ்யத்திற்கு அஞ்சாமையும் வேண்டும். அமானுஷ்யத்திற்கு அப்பாலுள்ள சத்தியத்தைத் தேடும் கதைகள் இந்த நூலில். நான்கு கதைகள் உள்ள தொகுப்பு இது.

Languageதமிழ்
Release dateNov 17, 2021
ISBN6580111407738
Anjuthal Anjamai

Read more from Sairenu

Related to Anjuthal Anjamai

Related ebooks

Related categories

Reviews for Anjuthal Anjamai

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Anjuthal Anjamai - Sairenu

    https://www.pustaka.co.in

    அஞ்சுதல் அஞ்சாமை

    Anjuthal Anjamai

    Author:

    சாய்ரேணு

    Sairenu

    For more books

    https://www.pustaka.co.in/home/author/sairenu-novels

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    க(கொ)லையின் விலை!

    யாரது?

    தவறிப்போய் ஒரு கொலை

    ஆவிவந்த ஃப்ளாட்!

    நூலைப் பற்றி

    அமானுஷ்யம் என்ற இருட்டிற்கு அப்பால் தர்மம் என்ற ஒளி கட்டாயம் இருக்கும். அதைத் தோற்றுவித்த சத்தியம் எனும் சூரியனும் இருக்கும். அறத்திற்கு அஞ்சுதலும் அமானுஷ்யத்திற்கு அஞ்சாமையும் வேண்டும். அமானுஷ்யத்திற்கு அப்பாலுள்ள சத்தியத்தைத் தேடும் கதைகள் இந்த நூலில். நான்கு கதைகள் உள்ள தொகுப்பு இது.

    க(கொ)லையின் விலை!

    விக்னேஷ் வானத்தில் மிதந்துகொண்டிருந்தான். அவன் கார் ஈ சி ஆர் ரோட்டில் இறகு போல மிதந்தது. மகிழ்ச்சி பொங்கப் பொங்கக் காரை விரட்டினான்.

    என்ன சுத்தமான, அழகான ஒரு கொலை! என்ன அற்புதமாகச் செய்திருக்கிறேன்!

    அவன் கலைஞன். கொலை செய்தால்கூட, கச்சிதமாக, அழகாக, கலைநயத்தோடு செய்ய வேண்டும் என்று விரும்புபவன்.

    முதல் வேலையாக, தான் பாண்டிச்சேரி போவதாக அக்கம்பக்கத்தில் எல்லோரையும் நம்ப வைத்தாயிற்று. அடுத்துத் தன் கம்பெனி காரில் கிளம்பி அதை ஒரு ஆளில்லாத தோப்பில் நிறுத்தியாயிற்று. பிறகு அவனுடையது என்று யாருமே அறியாத ஒரு காரில் திரும்பி வந்தாயிற்று. இதற்காகத்தானே ஒரு பழைய காரைச் சுந்தரின் பெயரில் வாங்கியிருக்கிறான்!

    தன் சாவியைக் கொண்டு சப்தமின்றிப் பின்கதவைத் திறந்தான். அவள் வழக்கப்படி, தாரா ஹாலில் நைட் லாம்ப் கண்சிமிட்ட அமர்ந்து டீ வி பார்த்துக் கொண்டிருந்தாள். அவளைக் கூப்பிடவோ, வேறு எந்த முறையிலும் அவள் கவனத்தைக் கவரவோ இல்லை விக்னேஷ். பட்டென்று மயக்கமருந்து தடவிய கைக்குட்டையை அவள் மூக்கில் வைத்து அழுத்தினான். அவள் மயங்கிச் சரிந்ததும் ஒரு கோணிச் சாக்கில் போட்டுக் கட்டி, அதை ஊருக்கு வெளியே ஒரு சேற்றுக் குழியில் எறிந்து தாராவிற்கு ஜல சமாதி கட்டிவிட்டான். ஏற்கெனவே ஒரு கைப்பெட்டியில் அவள் உடைகளை எடுத்து வைத்திருந்தான். அதையும் சேற்றுக் குழியில் எறிந்தான்.

    அவள் அந்த ராஸ்கல் சுந்தரோடு ஓடிப் போய்விட்டதாய்த் தான் செட்டப் செய்த லெட்டரை வீட்டில் வைத்துவிட்டுத்தான் வந்திருக்கிறான். சுந்தர் தாராவின் மாமா பையன்தான், இருக்கட்டும், அதற்காக என்ன இழைசல் வேண்டிக் கிடக்கிறது? எதற்காக வாரம் ஒரு முறை வீட்டுக்கு வருகிறான்? அவனுக்கும் ஒரு வெடி வைத்ததாக இருக்கட்டும்.

    தாரா எழுதியதாக அவன் தயாரித்த கடிதம்! அது ஒரு தலைசிறந்த கலைப் படைப்பு என்பதே விக்னேஷின் அபிப்ராயம். அது தான் எழுதியதல்ல என்று சொல்லத் தாராவே தயங்குவாள். வெறும் கையெழுத்து ஒற்றுமையை மட்டும் சொல்லவில்லை, அதில் தாராவின் குணாதிசயங்கள் கலந்திருந்தன. அவள் அன்றாடம் பயன்படுத்தும் சொற்கள் சாமர்த்தியமாய்ச் சேர்க்கப்பட்டிருந்தன.

    தான் திரும்ப வரப்போவதில்லை என்றும், இந்தக் கடிதத்தை விக்னேஷ் ஒரு விடுதலைப் பத்திரமாகவே பாவிக்கலாம் என்றும், அவன் யாரை வேண்டுமானாலும் மறுமணம் செய்துகொள்ளலாம், அதற்குத் தாரா தடையாக இருக்க மாட்டாள் என்றும் மிகக் கவனமாகவும் தெளிவாகவும் அந்தக் கடிதத்தில் கண்டிருந்தது.

    கார் மூட்டையோடு மூழ்குவதை ஒரு குரூர திருப்தியோடு பார்த்துக் கொண்டிருந்தவன், அருகிலுள்ள தோப்பிலிருந்து கம்பெனிக் காரை எடுத்துக் கொண்டான். ஆனந்தமாகப் பாண்டிச்சேரி சென்று தங்கினான். ஒரு நாள் முழுக்க ஓய்வு எடுத்துக் கொண்டான். அன்று அவன் செய்த ஒரே ஒரு காரியம், தன் மனைவியின் கைபேசிக்குப் பல மிஸ்ட் கால் அழைப்புகளை அனுப்பியது தான்.

    அந்த அழைப்புகளை யார் எடுப்பார்கள்? தாராதான் இப்போது உயிரோடு இல்லையே! வேலைக்காரி, அக்கம்பக்கத்தவர் யாரேனும் கவனிக்கலாம் என்கிறீர்களா? அதுவும் நடக்காது, அந்தக் கைபேசியைத்தான் விக்னேஷ் கையோடு எடுத்து வந்துவிட்டானே!

    மறுநாளும் பலமுறை தன் மனைவியின் எண்ணுக்கு அழைத்தான் சிரித்துக் கொண்டே. மாலை ஏழு மணி ஆகியிருந்தபோது, அந்த எண்ணிலிருந்து தன் எண்ணுக்கு ஒரு குறுஞ்செய்தி அனுப்பினான்.

    அன்புக் கணவருக்கு, வீட்டைவிட்டுப் போகிறேன், சுந்தரோடு சுகமாக வாழ. இப்படிக்கு - அன்பில்லாத தாரா.

    எப்படி? அருமையாக இல்லை வரிகள்?

    இனி அவன் செய்ய வேண்டியதெல்லாம் இந்தக் கைபேசியை உடைத்துச் சாக்கடையில் எறிந்துவிட்டுச் சென்னை கிளம்ப வேண்டியது. வீட்டுக்குப் போய் தாராவைக் காணாமல் தவித்து, அவள் எழுதிவைத்த கடிதத்தைக் கண்டெடுத்து, அக்கம்பக்கத்தாரையெல்லாம் அழைத்து அமர்க்களம் பண்ணி, கடிதத்தையும் குறுஞ்செய்தியையும் காண்பித்து…

    அதெல்லாம் ஜமாய்த்துவிடுவான் விக்னேஷ். அவன் பிறவிக் கலைஞன்.

    அப்புறம்…

    அப்புறம்… ஒரு மாதங்கழிந்ததும்… அமளி அடங்கியதும்… சுபத்ரா!

    சுபத்ரா… தாராவின் உயிர்த் தோழி! அவள் உயிர் நீங்கக் காரணமான தோழி!

    அவளின் மேனியழகை நினைக்க நினைக்க விக்னேஷின் நரம்புகள் சுண்டியிழுத்தன. அவள் நிறத்தில், உடையலங்காரத்தில், கண்களில், புன்னகையில் டன் டன்னாய்க் காந்தம்.

    அன்று என்ன சொன்னாள் அவள்? "விக்கி, தாரா மட்டும்

    Enjoying the preview?
    Page 1 of 1