Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Parisil Sankarlal
Parisil Sankarlal
Parisil Sankarlal
Ebook169 pages54 minutes

Parisil Sankarlal

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

ஓய்வு எடுக்க நினைத்த சங்கர்லால் பாரிஸ் செல்வது என தீர்மானிக்கிறார். பாரிஸும் சென்று சேர்கிறார். வெளியே சுற்றிப்பார்க்க கிளம்பி, வரும்போது ஒரு ஓவியனிடம் இருந்து ஒரு படத்தை வாங்கிக்கொள்கிறார். அது ஒரு மார்டன் ஆர்ட். அதன் பிறகு, நதிக்கரையில் ஒரு ஓரமாக நின்று கொண்டிருக்கும் போது ஒரு வித்தியாசமான நிகழ்ச்சி அவருக்கு காணக்கிடைக்கிறது. அதுதான் அவருக்கு பாரிஸில் துப்பறிய வேண்டிய கட்டாயம் ஏற்பட காரணமாகிறது. அவர் என்ன பார்த்தார்? அதன் பிறகு நடந்தவற்றை சுவாரஸ்யத்துடன் தெரிந்து கொள்ளவேண்டுமா?! இந்த நாவலை படித்து தெரிந்து கொள்ளுங்கள்!

Languageதமிழ்
Release dateApr 2, 2021
ISBN6580136605837
Parisil Sankarlal

Read more from Tamilvanan

Related to Parisil Sankarlal

Related ebooks

Related categories

Reviews for Parisil Sankarlal

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Parisil Sankarlal - Tamilvanan

    http://www.pustaka.co.in

    பாரிஸில் சங்கர்லால்

    Parisil Sankarlal

    Author:

    தமிழ்வாணன்

    Tamilvanan

    For more books

    http://www.pustaka.co.in/home/author/tamil/tamilvanan

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    அத்தியாயம் 1

    அத்தியாயம் 2

    அத்தியாயம் 3

    அத்தியாயம் 4

    அத்தியாயம் 5

    அத்தியாயம் 6

    அத்தியாயம் 7

    அத்தியாயம் 8

    அத்தியாயம் 9

    அத்தியாயம் 10

    அத்தியாயம் 11

    அத்தியாயம் 12

    அத்தியாயம் 13

    அத்தியாயம் 14

    அத்தியாயம் 15

    அத்தியாயம் 16

    அத்தியாயம் 17

    அத்தியாயம் 18

    அத்தியாயம் 19

    அத்தியாயம் 20

    அத்தியாயம் 21

    அத்தியாயம் 1

    சிக்கல் மிகுந்த பூனை வழக்கை நியூயார்க்கில் முடித்துக்கொண்டு சங்கர்லால், நேராக டோக்கியோவுக்குப் போகவில்லை. டோக்கியோவுக்குப் போனால் உடனே அவருக்கு வேறு எங்கிருந்தாவது அழைப்பு வரும்! எதிர்பாராமல் ஏதாவது வழக்கு வரும்!

    சங்கர்லாலுக்கு மிகக் குறைந்தது மூன்று நாட்களாவது ஓய்வு தேவைப்பட்டது.

    நியூயார்க் வழக்கில் அவர் பெயரும் புகைப்படமும் எல்லாப் பத்திரிகைகளிலும் வெளிவந்துவிட்டன. டெலிவிஷனில் வேறு அடிக்கடி அவரைக் காட்டிக்கொண்டிருந்தார்கள் பரிந்துரை வழங்கிக் கொண்டிருந்தார்கள். அதனால் அமெரிக்காவில் எங்கே போய் தங்கினாலும் அமைதியுடன் அவரால் இருக்க முடியாது!

    பத்திரிகை நிருபர்கள் ஒரு பக்கம். அவரைப் பார்க்க வேண்டும் என்று துடிப்பவர்கள் ஒரு பக்கம். எல்லாரும் அவரைத் தேடிவருவார்கள். இது சங்கர்லாலுக்குத் தெரியும். ஆகையால், அவர் நியூயார்க்கிலிருந்து அழகு மிகுந்த பாரிஸ் நகரத்துக்குப் போக நினைத்தார். ஓய்வு பெற விழைந்தார்.

    சங்கர்லால், பாரிஸ் நகரத்தில் வந்து இறங்கினார். அமைதி மிகுந்த மௌலின் ரூஜ் ஓட்டலில் தங்கினார். 

    சங்கர்லால் பாரிஸிக்கு வந்தது எவருக்கும் தெரியாது. இந்திராவுக்குக் கூட தெரியாது. அவர் டோக்கியோவுக்குச் செய்தி அனுப்பவில்லை!

    பாரிஸ், நாகரிகத்திற்குப் பெயர் பெற்ற நகரம். வேறு நாடுகளில் உள்ளவர்கள், தங்களுக்கு வேண்டிய நாகரிகம் மிகுந்த உடைகளைப் பாரிஸில் வந்து வாங்குகிறார்கள். உலகத்தின் மிகச் சிறந்த தையற்காரர்கள் பாரிஸ் நகரத்தில்தான் இருக்கிறார்கள். இவர்கள் கண்டுபிடித்து உருவாக்கும் புதுப்புது நாகரிக உடைகளை வாங்க ஹாலிவுட் நடிகர்களும் நடிகைகளும் போட்டி இடுகிறார்கள்!

    சங்கர்லால் பாரிஸில் இறங்கினார். இறங்கியதும் தனக்கு நான்கு சூட்டுகளைத் தைத்துக் கொடுக்கும்படி புகழ்பெற்ற தையற்காரர் ஒருவரிடம் ஏற்பாடு செய்தார். ஏற்பாடு செய்துவிட்டு, இந்திராவுக்குத் தேவையான சில ஒப்பனைப் பொருள்களையும் சென்ட் வகைகளையும் வாங்கினார். பாரிஸ், சென்ட் வகைகளுக்குப் புகழ்பெற்றது. இங்கே வாழும் ஆண்களும், பெண்களும், சென்ட் வகைகளை மிக மிகுதியாகப் பயன்படுத்துகிறார்கள். இதனால் பாரிஸில் எப்போதும் சென்ட் வாசனை இருந்துகொண்டே இருக்கும். இனிய வாசனை மிகுந்த நகரம்!

    பாரிஸில் சங்கர்லாலை எவரும் அடையாளம் கண்டுகொள்ளவில்லை. புத்தம் புதிய மனிதராக அவர், தான் விரும்பியபடி சுற்றிக்கொண்டிருந்தார்!

    அன்று மாலை சங்கர்லால், ஸீன் நதிக்கரையின் ஓரமாக நடந்தார். மெல்ல நடந்து போய்க் கொண்டிருந்தார். கொஞ்சம் குளிர்ந்த காற்று வீசியது. அதனால் கோட்டு அணிந்திருந்தார். என்றாலும் வழக்கம்போலக் கழுத்துப் பட்டையை மட்டும் தளர்த்திக் கொண்டிருந்தார்!

    பாரிஸ் நகரில் ஆரவாரப் பொருள்கள் மிகுதி. எவ்வளவு பணம் கொண்டு வந்தாலும் உடனே அது கரைந்துவிடும். மிகுந்த விலை!

    சங்கர்லாலுக்குப் பணத்தைப் பற்றித் துன்பம் இல்லை. அவர் ஸ்விட்சர்லாந்து பாங்கில் பணம் போட்டு வைத்திருந்தார். ஆகையால், மேல்நாட்டுக்கு எங்கே போனாலும் ஸ்விஸ் பாங்கிலிருந்து அவருக்குத் தேவையான பணத்தை அவரால் உடனே எந்த பாங்கிலும் வாங்கிக் கொள்ள முடியும் ஆனால், அவருக்கு என்ன வாங்குவது என்பது புரியவில்லை! எதுவும் தேவை இல்லாதவர் அவர்! 

    அவர், ஸீன் நதிக்கரையில் நடந்துகொண்டிருந்தார். அவர் மெல்ல நடந்து போய்க் கொண்டிருந்தார். நதிக்கரையில் சில ஓவியர்கள் படம் வரைந்து கொண்டிருந்தார்கள். இயற்கைக் காட்சிகள், அழகிய பெண்கள், எவருக்கும் புரியாத மாடர்ன் ஆர்ட்ஸ். அவர்கள் தங்களுக்குப் பக்கத்திலேயே தாங்கள் வரைந்த படங்களை வைத்திருந்தார்கள். பாரிஸ் நகருக்கு வரும் மற்ற நாட்டவர்கள்தாம் இந்தப் படங்களை வாங்குவார்கள். குறிப்பாக, அமெரிக்கர்கள் வந்தால் படங்களை உடனே வாங்கிக்கொண்டு போய்விடுவார்கள். இதனால், பாரிஸில் பல இளம் ஓவியர்கள் ஸீன் நதிக்கரையிலும் பிளாட்பாரங்களிலும் உட்கார்ந்து படங்களை வரைந்து கொண்டிருந்தார்கள். படங்களை விற்றுக்கொண்டிருந்தார்கள்.

    சங்கர்லால், மார்டன் ஆர்ட் படம் ஏதாவது வாங்க வேண்டும் என்று எண்ணினார். பிக்காஸோ வரைந்த விலை மிகுந்த சில ஓவியங்கள் அவரிடம் இருந்தன. என்றாலும், இனி மலிவான படங்களையே வாங்க வேண்டும் என்று தோன்றியது அவருக்கு!

    நதிக்கரை ஓரமாகத் தாடி வைத்துக்கொண்டு கண்ணும் கருத்துமாக ஓவியம் வரைந்து கொண்டிருந்த இளைஞன் ஒருவன் அவரைக் கவர்ந்தான். அவன் கண்கள் நீலநிறமாக இருந்தன. அளவுடன் வெட்டப்பட்ட கிராப்பு. அழகிய மீசை. அவன் மாடர்ன் ஆர்ட் படங்களையே வரைந்து வைத்திருந்தான்.

    சங்கர்லால், அவன் பக்கத்தில் போனார். போய் நின்றார். நின்று அவன் வரையும் படத்தைப் பார்த்தார். அவன் ஸீன் நதிக்கரையையே படமாக வரைந்து கொண்டிருந்தான். மாடர்ன் ஆர்ட் தெரிந்தவர்களுக்குத்தான் அது புரியும். சங்கர்லால், தனக்குப் பக்கத்தில் வந்து நின்றதை அவன் கவனிக்கவில்லை. படம் வரைவதிலேயே கண்ணும் கருத்துமாக இருந்தான்.

    சங்கர்லால், அவன் தனக்குப் பக்கத்தில் வைத்திருந்த வேறு சில படங்களைப் பார்த்தார். ஓர் ஆணும் ஒரு பெண்ணும் காரில் உட்கார்ந்து முத்தமிடுவதை ஒரு படம் சித்தரித்தது. ஆனால் அதையும் கூர்ந்து பார்த்தால்தான் புரியும்!

    நிர்வாணமாகக் குளிக்கும் ஒரு பெண்ணின் படம், கூர்ந்து பார்த்தபோதுதான் அதுவும் தெரிந்தது!   

    ஒரு படத்தில் பல வட்டங்கள் தெரிந்தன. வேறு ஒன்றும் தெரியவில்லை. சங்கர்லால், அந்தப் படம் என்ன என்று நீண்ட நேரம் கூர்ந்து பார்த்தார். புரியவில்லை அவருக்கே புரியவில்லை. மாடர்ன் ஆர்ட்ஸ்!

    சங்கர்லால், மெல்ல அந்த ஓவியனின் முதுகில் தட்டினார். தட்டி, இந்தப் படம் என்ன விலை? என்று ஆங்கிலத்தில் கேட்டார்.

    ஓவியன், சங்கர்லால் பேசியதை மிகவும் துன்பம் கொண்டு புரிந்து கொண்டான். பிறகு பிரெஞ்சு மொழியில் மெல்லச் சிரித்தபடி பேசினான்.

    சங்கர்லாலுக்குப் பிரெஞ்சு மொழி தெரியும். அவன் பேசியதை அவர் புரிந்து கொண்டார்.

    இது என்ன படம் என்று எனக்கே தெரியவில்லை ஏதோ என் மனம் போன போக்கில் வரைந்தேன் என்றான் அவன்.

    அவன் உண்மையைப் பேசியபோது சங்கர்லாலுக்கு மிகப் பிடித்திருந்தது. அதனால் அந்தப் படத்தை வாங்கிவிடுவது என்று அவர் முடிவு கொண்டார்.

    இந்த படம் என்ன விலை?

    மிகவும் குறைந்த விலைதான். ஐந்நூறு டாலர்.

    அவரிடம் அமெரிக்க டாலர் நோட்டுக்கள் இருந்தன. உடனே அவர் ஐந்நூறு டாலரை எடுத்து நீட்டி, படத்தைக் கட்டிக் கொடு என்றார்.

    கொஞ்சங் கூட விலை குறைக்காமல் அவன் கேட்ட பணத்தை அவர் கொடுத்துவிட்டாரே என்ற வியப்புடன் பார்த்தான் ஓவியன் பிறகு, பணத்தைத் தன் கால்சட்டை பைக்குள்ளே திணித்துக்கொண்டு படத்தை ஒரு காகிதத்தில் கட்டினான். கொடுத்தான்.

    சங்கர்லால் அதை வாங்கிக்கொண்டார். நடந்தார். மெல்ல நடந்தார்.

    கொஞ்சம் கொஞ்சமாக இருள் சேர்ந்தது. ஸீன் நதி ஓரமாகக் காதல் இணைகள் ஒருவரை ஒருவர் அணைத்தபடி அடிக்கடி முத்தம் கொடுத்தபடி நடந்தார்கள்! 

    மேல்நாடுகளில் பொது இடங்களில் கூடக் காதலர்கள் ஒருவரை ஒருவர் முத்தமிடுவது எளிய காட்சி. மிக எளிய காட்சி!

    சங்கர்லால், கொஞ்சம் விரைந்து நடந்தார். தனிமையான ஓர் இடத்தில் அவர் நடக்க எண்ணினார்.

    மேலும் கொஞ்சத் தொலைவு வந்ததும் ஆட்கள் நடமாட்டமே இல்லை. அவர் மட்டும் தனியாக

    Enjoying the preview?
    Page 1 of 1