Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Ahimsai Nayagan Gandhiyadigal
Ahimsai Nayagan Gandhiyadigal
Ahimsai Nayagan Gandhiyadigal
Ebook62 pages20 minutes

Ahimsai Nayagan Gandhiyadigal

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

‘மகாத்மா காந்தி’ என்று அன்புடன் அழைக்கப்படும் “மோகன்தாஸ் கரம்சந்த் காந்தி” இந்திய விடுதலைப் போராட்டத்தைத் தலைமையேற்று நடத்திய மாபெரும் சுதந்திரப் போராட்ட வீரர் ஆவார். ‘சத்தியாகிரகம்’ என்றழைக்கப்பட்ட இவரது அறவழி போராட்டம் இந்திய மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தியது மட்டுமல்லாமல், இந்திய நாடு விடுதலைப் பெறவும் முக்கியக் காரணமாகவும் அமைந்தது. இதனால், இவர் “விடுதலைப் பெற்ற இந்தியாவின் தந்தை” என இந்திய மக்களால் போற்றப்பட்டார். “அகிம்சை” என்னும் வன்முறையற்ற மாபெரும் மந்திரத்தை உலகத்திற்கு வித்திட்ட உன்னத மனிதர். இந்தியாவின் விடுதலைக்காக ஆங்கிலேயரை எதிர்த்து அறவழியில் போராட்டம் நடத்தி, விடுதலைக்குக் காரணமாக இருந்ததால், இவருடைய தியாகத்தை நினைவுகூறும் வகையில் ஒவ்வொரு வருடமும் இவருடைய பிறந்தநாளான அக்டோபர் 02 ஆம் தேதியை “காந்தி ஜெயந்தியாக” உலகம் முழுவதும் கொண்டாடுகிறோம். தன்னுடைய வாழ்நாள் முழுவதையும் பாரத நாட்டிற்காகவே அர்பணித்த மாபெரும் மனிதர் மகாத்மா காந்தியின் வாழ்க்கை வரலாறு மற்றும் தியாகங்களை காண்போம்.

Languageதமிழ்
Release dateMar 19, 2022
ISBN6580122808202
Ahimsai Nayagan Gandhiyadigal

Read more from Kalaimamani Sabitha Joseph

Related authors

Related to Ahimsai Nayagan Gandhiyadigal

Related ebooks

Reviews for Ahimsai Nayagan Gandhiyadigal

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Ahimsai Nayagan Gandhiyadigal - Kalaimamani Sabitha Joseph

    http://www.pustaka.co.in

    அகிம்சை நாயகன் காந்தியடிகள்

    Ahimsai Nayagan Gandhiyadigal

    Author :

    கலைமாமணி சபீதாஜோசப்

    Kalaimamani Sabitha Joseph

    For more books

    https://www.pustaka.co.in/home/author/sabitha-joseph

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    பொய் சொல்லாதே

    தவறை ஒப்புக் கொள்

    வாழ்விக்க வந்த காந்தி

    புத்தகங்களே நண்பர்கள்

    படிப்பும் பாராட்டும்

    மனம் கவர்ந்த நாடகம்

    மதித்து வாழ்வோம்

    அகிம்சை நாயகன்

    குறையில்லாத மனிதன் உண்டா?

    எதிரையைத் தேடிச் சென்றார்

    குல விளக்கு

    பேர் சொல்லும் பிள்ளை

    நல்ல மனம் வாழ்க!

    தமிழும் – காந்தியும்

    காந்தி மூக்கு அறுக்க வந்தவன்

    அழகான கையெழுத்து

    ஒற்றுமையே பலம்

    ஆரோக்கியத்தின் ரகசியம்?

    மனித தெய்வம்

    பெண்களுக்கு மொட்டை போட்டார்

    சமூகப் புரட்சி

    காந்தியின் உடை

    உழைக்காமல் உண்ணாதே...

    பெருகும் விலங்குகள்

    நேரம் தவறாமை

    ஒரு ரோஜாப் பூ சுடப்பட்டது

    பொய் சொல்லாதே

    சபர்மதி நதிக்கரையில் இயற்கை எழில் சூழ்ந்த ஆசிரமம் தன் வாசல் திண்ணையில் எளிமையின் சின்னமாம் காந்தியடிகள் அமர்ந்து புத்தகம் படித்துக்கொண்டிருந்தார்.

    அப்போது ‘பாபுஜீ!’ என்றொரு மழலைக் குரல் கூப்பிட,

    ‘யாரது?’ என்று நிமிர்ந்து பார்க்கிறார். வாசலில் ஒரு சிறுமி அவரையே பார்த்தபடி நின்றிருந்தாள்.

    தமது டிரேட் மார்க் புன்னகையுடன் சிறுமியைப் பார்த்து, அருகில் அழைத்தார். என்ன குழந்தே? என விசாரிக்கிறார்.

    ‘பாபுஜீ பொய் பேசலாமா?’ - சிறுமி கேட்டாள்.

    ‘கூடாது! பொய் பேசுவது மகாபாவம்’ என்கிறார் மகாத்மா.

    அது மகாபாவம் என்பது தங்களுக்கு தெரியும். எனக்கும் கொஞ்சம் தெரியும். ஆனால் அந்தத் தொண்டருக்கு அது தெரியவில்லையே

    எந்தத் தொண்டர் பொய் பேசினார்? அவர் எங்கே இருக்கிறார்?

    பாபுஜீ! அந்தத் தொண்டர் உங்கள் ஆசிரமத்தில்தான் வேலை பார்க்கிறார். கொஞ்ச முன்னாடி அவர் என்னிடம் பொய் பேசி, என்னை ஏமாற்றினார். வாருங்கள் அந்த மனிதரை காட்டுகிறேன் என்று சிறுமி மகாத்மாவின் கையைப் பிடித்து இழுத்தாள்.

    குழந்தே! பிரார்த்தனைக்கு நேரம் நெருங்கிவிட்டது. பின்னர் அந்தத் தொண்டரைப் பார்ப்போம் என்று கூறி பிரார்த்தனை கூடத்திற்கு சென்றுவிட்டார் காந்தியடிகள்.

    மாலையில் பிரார்த்தனை முடிந்ததும் மகாத்மா ஒரு தனிமையான இடத்தில் வந்து அமர்ந்திருந்தார். அப்போது ஒரு இளைஞரை அழைத்துக்கொண்டு அந்தச் சிறுமி வந்தாள்.

    ‘பாபுஜீ! பொய்ச் சொல்லி ஏமாற்றிய தொண்டர் இவர்தான்!’ என்றாள்.

    கருணை வடிவான காந்தியடிகள் அந்தத்

    Enjoying the preview?
    Page 1 of 1