Piranthanaal Parisu
By Mayooran
()
About this ebook
ஏடு தூக்கிப் பள்ளியில் இன்று பயிலும் சிறுவர்தான் நாடு காக்கும் தலைவராய் நாளை வரப்போகிறார். என்ற குழந்தைக் கவிஞரின் வாக்குப்படி இன்றைய சிறுவர்கள்தான் நாளைய வீரர்கள், நாளைய மேதைகள் நாளைய தலைவர்கள் ஏட்டுப்படிப்பு அவர்களுக்கு அறிவூட்டினாலும் அவர்களுடைய உள்ளம் விரிவடைய நற்பண்புகளும், நற்குணங்களும் அவர்களிடம் இயற்கையாக அமைய சுவையான கதைகள் அவர்களுக்குத் தேவை. இந்தத் தொகுப்பில் உள்ள 15 சிறுகதைகளும் அவர்களுடைய வளர்ச்சிக்கு உரமாக அமையும் என்று நம்புகிறேன்.
Related to Piranthanaal Parisu
Related ebooks
Parisu Kidaithathu Rating: 0 out of 5 stars0 ratingsEndrum Pen... Rating: 0 out of 5 stars0 ratings47 Natkal Rating: 4 out of 5 stars4/5Oru Kaandhamum Oru Irumbu Thundum Rating: 0 out of 5 stars0 ratingsMounathal Pesathey Rating: 5 out of 5 stars5/5Naalai Vellum Naal Rating: 0 out of 5 stars0 ratingsVaazhvil Vetri Rating: 0 out of 5 stars0 ratingsVaarangal Valartha Nila Kathaigal Rating: 0 out of 5 stars0 ratingsNalamillai... Nalama? Rating: 0 out of 5 stars0 ratingsAutograph Rating: 0 out of 5 stars0 ratingsSaathanai Santhippugal Rating: 0 out of 5 stars0 ratingsYaanaikku Uthaviya Erumbugal Rating: 0 out of 5 stars0 ratingsIvvidam Yaavarum Nalam Rating: 0 out of 5 stars0 ratingsNinaivu Saaviyaal Manathai Thirakkirean Rating: 0 out of 5 stars0 ratingsAngey... Inkey... Enkey? Rating: 0 out of 5 stars0 ratingsMaayap Punnaigai Rating: 0 out of 5 stars0 ratingsஉயிரே உன்னை அழைக்கிறேன்..! Rating: 0 out of 5 stars0 ratingsChinmayanandarin Sirukathaigal Rating: 0 out of 5 stars0 ratingsNinaivugalum Ennangalum Rating: 0 out of 5 stars0 ratingsMaha Periyavaa - Part 6 Rating: 0 out of 5 stars0 ratingsThirumarai Nabimozhi Islamiya Neethikathaigal Thoguthi-7 Rating: 0 out of 5 stars0 ratingsAravinthin Arputha Thiyagam Rating: 0 out of 5 stars0 ratingsNalla Manam Vaazhga Rating: 0 out of 5 stars0 ratingsSaathuryam Rating: 0 out of 5 stars0 ratingsPayirai Meyum Veligal Rating: 5 out of 5 stars5/5Siragai Viri!!... Sigaram Thodu!! Rating: 0 out of 5 stars0 ratingsBrahmanin Panithuli Rating: 5 out of 5 stars5/5Yaar Indha Sundaravalli? Rating: 0 out of 5 stars0 ratingsEngal Veettu Maadiyile Rating: 0 out of 5 stars0 ratingsVetri Kalai Uththigal! Rating: 0 out of 5 stars0 ratings
Reviews for Piranthanaal Parisu
0 ratings0 reviews
Book preview
Piranthanaal Parisu - Mayooran
https://www.pustaka.co.in
பிறந்தநாள் பரிசு
Piranthanaal Parisu
Author:
மாயூரன்
Mayooran
For more books
https://www.pustaka.co.in/home/author/mayooran
Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.
All other copyright © by Author.
All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.
பொருளடக்கம்
முன்னுரை
1. பிறந்தநாள் பரிசு
2. அசட்டுத் துணிச்சல்
3. குறுக்கு வழி
4. புதிய பாடம்
5. பிள்ளையார் சிரித்தார்
6. நேர்மையின் பெருமை
7. மனிதாபிமானம்
8. ஆனந்தக் கண்ணீர்
9. பரிசும் பாராட்டும்!
10. நன்றே செய் இன்றே செய்
11. பாரத நாடு பழம்பெரும் நாடு
12. பெரியவர்களை இகழாதே
13. தாழ்வு மனப்பான்மை
14. நல்ல படிப்பினை
15. ஒரு கை ஓசை
முன்னுரை
‘உலகம்’ என்ற தலைப்பில் 1954 ம் ஆண்டு வெளிவந்த சிறுவர்களுக்கான சிறுகதைதான் அச்சில் வந்த என் முதல் சிறுகதை. டிங்டாங் என்ற பத்திரிகையில் வெளிவந்தது. அதைத் தொடர்ந்து, தமிழகத்தில் உள்ள பெரும்பாலான முன்னணி பத்திரிகைகளில் பெரியவர்களுக்கும், சிறியவர்களுக்குமாக
500க்கும் மேற்பட்ட சிறுகதைகள் எழுதியுள்ளேன். சிறுவர்களுக்காக எழுதுவதில்தான் எனக்கு ஆர்வம் அதிகம். அதற்கு காரணமும் இருக்கிறது. பெரியவர்களுக்காக எழுதுபவர்கள் நிறைய பேர் இருக்கிறார்கள். பெரியவர்களைப் பொறுத்தவரை அவரவர் அனுபவமே அவரவர்களுக்குப் பாடம். ஆனால் சிறுவர்களுக்கு வழிகாட்டுதல் அவசியம் ஆகிறது.
சிறுசெடி, கொடிகளுக்கும், பயிர்களுக்கும்தான் உரம் தேவைப்படுகிறது. பராமரிப்பு தேவைப்படுகிறது. பாதுகாப்புக்கு வேலியும் அவசியம். ‘ஏடு தூக்கிப் பள்ளியில் இன்று பயிலும் சிறுவர்தான் நாடு காக்கும் தலைவராய் நாளை வரப்போகிறார்.’ என்ற குழந்தைக் கவிஞரின் வாக்குப்படி இன்றைய சிறுவர்கள்தான் நாளைய வீரர்கள், நாளைய மேதைகள் நாளைய தலைவர்கள் ஏட்டுப்படிப்பு.
அவர்களுக்கு அறிவூட்டினாலும் அவர்களுடைய உள்ளம் விரிவடைய நற்பண்புகளும், நற்குணங்களும் அவர்களிடம் இயற்கையாக அமைய சுவையான கதைகள் அவர்களுக்குத் தேவை. இந்தத் தொகுப்பில் உள்ள 15 சிறுகதைகளும் அவர்களுடைய வளர்ச்சிக்கு உரமாக அமையும் என்று நம்புகிறேன்.
வாய்ப்பு அமைத்த அனைத்து நல் உள்ளங்களுக்கும் நன்றி.
கி. குருமூர்த்தி (எ) மாயூரன்
1. பிறந்தநாள் பரிசு
குமாருக்கு மகிழ்ச்சியாக இருந்தது தூங்கி எழுந்திருக்கும்போதே தலையணை அருகில் பிறந்தநாள் வாழ்த்து அட்டை! ஒரு புது பேனா! அண்ணா வைத்திருந்தார். அம்மா, அப்பா, தாத்தா, பாட்டி, தங்கை எல்லோரும் அவனுக்கு வாழ்த்து சொன்னார்கள். அம்மா இனிப்பு தயாரித்திருந்தார். அப்பா கேக் வாங்கி வைத்திருந்தார். புத்தாடைகள் வேறு!
பள்ளிக்கூடத்தில் இறைவணக்கம் முடிந்ததும் தலைமை ஆசிரியர் இன்றைய பிறந்தநாள் மாணவன்… குமார்…!
எனக் கூறினார். உடனே அனைத்து மாணவர்களுக்கும் பிறந்தநாள் கீதம் பாடி அவனுக்கு வாழ்த்து தெரிவித்தனர். தலைமை ஆசிரியர் திருக்குறள் புத்தகம் ஒன்றை அவனுக்குப் பரிசாக வழங்கினார்.
மாலையில் கேக் வெட்டும் நிகழ்ச்சி! தனக்கு வந்த பிறந்தநாள் பரிசுகளைப் பிரித்து தாத்தாவிடம் காட்டிக் கொண்டிருந்தான் குமார்!
பயந்து கொண்டிருந்தேன் தாத்தா!… போன வருஷம் என்னால் பிறந்தநாள் கொண்டாட முடியவில்லை. காலையிலேயே கடுமையான வயிற்றுவலி! பள்ளிக்கூடம் போகவில்லை… டாக்டரிடம் போய் கசப்பு மருந்து சாப்பிடும்படியாகி விட்டது!
தாத்தா புன்னகையுடன், குமார், எல்லோருக்கும் பிறந்தநாள் வருகிறது! வாழ்த்துக்கள் பரிமாறிக் கொள்கிறோம்… பரிசுகள் கொடுக்கிறோம்… பிறகு என்ன? பழைய நிலைக்கு திரும்பி விடுகிறோம். அதோடு அது நின்று விடலாமா? இந்த நல்ல நாளில் நாம் ஏதேனும் உறுதி எடுத்துக்கொள்ள வேண்டும். விடாமல் அதை பின்பற்ற வேண்டும்.
உறுதியா?… என்ன உறுதி தாத்தா?
இதைச் செய்வேன் அல்லது இதைச் செய்யமாட்டேன் என்று உறுதி எடுத்துக்கொள்ளலாம் உதாரணமாக, நம்மிடம் உள்ள, மற்றவர்களுக்குப் பிடிக்காத அல்லது விரும்பதகாத பழக்கங்களை விட்டுவிடலாம்… நல்ல, பயன் தரக்கூடிய பழக்கங்களை பின்பற்றலாம்!… நம்மிடம் உள்ள தனித்திறனை வளர்த்துக் கொள்ளலாம்!
நீங்க அப்படி ஏதேனும் உறுதி எடுத்துக்கொண்டு இருக்கிறீர்களா?
நிறைய!… குரலை உயர்த்தி, இரைந்து பேசுவது இல்லை… மற்றவர் மனம் புண்படும்படி பேசுவதில்லை… ஐஸ் வாட்டர், ஐஸ்கிரீம் போன்றவற்றை தவிர்த்துவிட்டேன். நாம் உபயோகப்படுத்திய தட்டு. தம்ளர் போன்றவற்றை நாமே கழுவி வைப்பது… இல்லை என்று கேட்டு வருபவர்களுக்கு இயன்றவரை உதவுவது… நான் பத்திரிகைகளுக்கு கதை, கட்டுரை எழுதுவேன் அல்லவா? வருஷத்திற்கு ஒரு புத்தகமாவது எழுத வேண்டும் என்று முடிவு எடுத்துக்கொண்டேன்… இன்று ஐம்பது புத்தகங்களுக்கு ஆசிரியர்.
என்று முடித்தார் தாத்தா.
யு ஆர் கிரேட் தாத்தா!… ஆனால் நான் எதை விடுவது எதைப் பின்பற்றுவது என்னிடம் என்ன திறமை இருக்கிறது?
நகம் கடிக்கும் கெட்ட பழக்கம் உன்னிடம் இருக்கிறது… போன ஆண்டு அதனால்தான் உனக்கு வயிற்று வலி! பிறந்தநாள் கொண்டாட முடியவில்லை! பெரியவர்களிடம் திட்டு! சிலரின் கிண்டல் வேறு! நகம் கடிக்கும் பழக்கத்தை விட்டுவிடுவது என்று உறுதி எடுத்துக்கொண்டு முயற்சி செய்!… வீடியோ கேம் மற்றும் தொலைக்காட்சியில் அதிக நேரம் செலவழிக்கிறாய்! அதை குறைக்க உறுதி எடுத்துக்கொள்!
ஓ.கே. தாத்தா!… சரி எனக்கென்ன தனித்திறமை இருக்கிறது?
எதைப் படித்தாலும் அப்படியே மனதில் பதிய வைத்துக்கொள்ளும் ஆற்றல் உன்னிடம் இருக்கிறது! அதை உபயோகமாக பயன்படுத்திக்கொள்ள முயற்சி செய்!
எப்படி?
அந்த புத்தகத்தை எடு!
என்று தலைமை ஆசிரியர் கொடுத்திருந்த திருக்குறள் புத்தகத்தை சுட்டிக்காட்டினார் தாத்தா.
குமார் எடுத்துக் கொடுத்தான்.
இதில் எத்தனை குறட்பாக்கள் இருக்கின்றன? தெரியுமா?
அறம், பொருள், இன்பம், என்ற மூன்று பிரிவுகளில் 133 அதிகாரங்கள்… ஒரு அதிகாரத்திற்கு பத்து குறள் வீதம் 1330 குறட்பாக்கள் இருக்கின்றன தாத்தா
இதில் தினம் ஐந்து குறட்பாக்களை உன்னால் மனப்பாடம் செய்ய முடியுமா?
நிச்சயம் முடியும் தாத்தா!
எப்படித் தெரியுமா?… முதல்நாள் ஐந்து குறட்பாக்கள் மனப்பாடம் செய்தால் மறுநாள் அந்த ஐந்தையும் சேர்த்து பத்துக் குறட்பாக்கள் மனப்பாடம் செய்ய வேண்டும். அதற்கு அடுத்த நாள் முதலில் படித்த பத்து பாடல்களையும் சேர்த்து பதினைந்து திருக்குறள் மனப்பாடம் செய்ய வேண்டும். அப்படி செய்தால் ஒன்பது அல்லது பத்து மாதங்களில் 1330 திருக்குறளையும் தடங்கல் இல்லாமல் மனப்பாடம் செய்து விடலாம்!
இன்றைக்கு ஆரம்பித்து விடுகிறேன்…
என்று கூறிய குமார், அதன்படியே உற்சாகத்துடன் படிக்க தொடங்கினான். தாத்தா அவ்வப்போது பொருள் விளக்கங்ளையும் கூறி சில பயிற்சி முறைகளையும் கற்பித்தார்.