Noyyalin Kanneer
()
About this ebook
“நொய்யலின் கண்ணீர் “ என்னும் கவிதைத் தொகுப்பு கவிஞர் ஆதித் சக்திவேல் அவர்களுடைய நான்காம் கவிதைத் தொகுப்பாகும். “நொய்யலின் நினைவுகள்”,”தாழப் பறந்த விமானம்” மற்றும் “கங்கையாய் மாறிய கிணறு” ஆகிய மூன்று கவிதைத் தொகுப்புகளை அவர் ஏற்கனவே வெளியிட்டுள்ளார்.உரைநடைக் கவிதை அல்லது வசன கவிதை (Prose Poetry)என்னும் வகையைச் சார்ந்தவை அவரது கவிதைகள். அவர் தன்னுடைய சகல அனுபவங்களை, சமூக அவலங்களை , அறச் சீற்றத்தை, இரசனையோடும் , தத்துவப் பார்வையோடும் பதிவு செய்துள்ள இக்கவிதைகளைத் தமிழ் கூறும் நல்லுலகத்திற்கு அர்ப்பணிக்கிறார்.
சமூகம் மற்றும் நொய்யல் மீது இருக்கும் தீராக் காதல் காரணமாக"நொய்யலின் நினைவுகளை "த் தமிழ் இனத்திற்கு தன் முதல் கவிதைத் தொகுப்பாக வழங்கிய பின், இன்று கொங்கு மண்ணின் அடையாளங்களில் ஒன்றான நொய்யலாற்றின் துயரங்களை “நொய்யலின் கண்ணீர்” எனும் தலைப்பில் கவிதை தந்து, அதையே கவிதைத் தொகுப்பின் பெயராகவும்சூட்டியுள்ளார். நொய்யலிலிருந்து அமெரிக்கா வரை பயணிக்கும் கவிதைகள் ஒவ்வொன்றிலும் விரிவாகவே நிகழ்வுகளைக் காட்சிப் படுத்தியிருக்கிறார்,
மேற்கத்திய நாடுகளில் தலை தூக்கியிருக்கும் அணு ஆயுத கலாச்சாரத்தையும், வன்முறைகளையும், அதனால் பின்வரும் சந்ததியினருக்கு ஏற்படும் பாதிப்புகளையும் அழகாகப் படைத்திருக்கிறார்.சமூக அக்கறையில் இஸ்ரேல் - பாலஸ்தீன போரினை மையப்படுத்திக் கவிதை படைத்திருக்கிறார்.அகற்ற முடியாத திரைகளை விலக்கி வெளிச்சம் போட்டுக் காட்டி, வாழ்க்கையின் மீதி தூரத்தையும் பிடிமானத்தையும் புரியவைக்கிறார்.
போன்சாய்…நிழலும், பலனும் தராத ஒன்று எப்படி மரமாகும்? இது மரமா இல்லை செடியா? என்று பெரும் குழப்பத்திலிருக்கும் வேளையில், போன்சாய் மனங்கள் என்று பெயரிட்டு, அதன் உணர்வையும் வெளிப்படுத்தி, வர்த்தக ரீதியாகவே வாழ்ந்து கொண்டிருக்கும் நவ நாகரீக மானிடர்களின் செயல்களைக் கண்டித்து ,வளர வளரக் கிளைகளை வெட்டி வெட்டிப் பூந்தொட்டியில் வளர்க்கும் போன்சாய் மனிதர்களின் செயல் இயற்கையின் மேல் செலுத்தும் வன்முறை என்கிறார்.
விடலைப் பருவம் என்று சொல்லக்கூடிய பதின்ம பருவத்தில் வரும் எதிர் பாலின ஈர்ப்பு, காதல் அல்ல ; ஓர் ஈர்ப்பு மட்டுமே என்று சொல்வர். அந்த ஈர்ப்பின் ஆழத்தை, அடர்த்தியை செறிவூட்டப்பட்ட கவிதையாகப் படைத்திருக்கிறார். உலகம் உயிர்த்துடிப்புடன் பல்லூழி காலமாக வாழ்ந்து கொண்டிருக்க ஆதார சக்தியாக விளங்கும் காதலைக் கொண்டாடித் தீர்த்திருக்கிறார் தன் கவிதையில்.
ஓர் ஓடையைப் பற்றிப் பேசுகிறார் வேறு ஒரு கவிதையில். அது அவருடைய மனதில் இருந்து நழுவிய ஓடை . அடி நீரில் அமைதித் தவமிருக்கும் கூழாங்கற்கள், சில்லெனும் தண்ணீர், அதிகாலை சூரியனின் அற்புத காட்சிப் புலன்கள், வளைந்து நெளிந்து தன் பாதையைத் தானே தீர்மானித்துக் குதித்துப் பாயும் ஓடை,. சமவெளியில் சல சலக்கும் அதன் நீர்ச்சுழல்கள்…….. என கவிதை விரிகிறது.
அலை வாங்கித் தட்டுகள் பேசுவதைக் கேட்டு வேதனையுற்ற பூக்களுக்கு அவர் தருகின்ற ஆறுதல் மொழிகள், மலர்களையெல்லாம் வருடிக் கொடுத்த பாங்கு, நாமும் ஒரு மலராய் இல்லாமல் போனோமே என்கிற தாக்கத்தையும் ஏக்கத்தையும், கவிஞர் தன் நிலையிலிருந்து இறங்கித் தாயாய் தளிர்த்தெழுவதையும் .படிப்போர் நெஞ்சில் பதிய வைக்கிறது.
இப்படி ஒவ்வொரு கவிதையாக விவரித்துக் கொண்டே செல்லலாம்
சாமனியனின் ஏக்கங்கள், இயலாமைகள், அதிகாரத்தின் அத்துமீறல், காதல் என இன்னும் பலவற்றை தன் உணர்வுகளோடு அவற்றின் உணர்வுகளையும் கவிதைகளில்வெளிப்படுத்தி, எல்லோர் மனங்களையும் சிறைப் படுத்தியிருக்கிறார்கவிஞர்.சில கவிதைகள் சூரியனிலிருந்து வெளிப்படும் அக்னிப் பிளம்பாகவும் சுடுகின்றன.வார்த்தைகளைத் தேடிப் பிடித்து ஒன்றிணைத்து வெகு சிறப்பான வரிகளால் கவிதைகளைப் படைத்து இருக்கிறார் கவிஞர் ஆதித் சக்திவேல்.
Read more from Adith Sakthivel
Thaala Parantha Vimanam Rating: 0 out of 5 stars0 ratingsGangaiyai Maariya Kinaru Rating: 0 out of 5 stars0 ratingsNoyyalin Ninaivugal Rating: 0 out of 5 stars0 ratingsKaalam Ennum Kaattaru Rating: 0 out of 5 stars0 ratingsVerai Thedi Vantha Vizhuthugal Rating: 0 out of 5 stars0 ratingsEngey En Mazhai Kaadugal? Rating: 0 out of 5 stars0 ratings
Related to Noyyalin Kanneer
Related ebooks
Kavithai Muran Rating: 0 out of 5 stars0 ratingsYaathumaagiye… Rating: 0 out of 5 stars0 ratingsKaiyoppam Rating: 4 out of 5 stars4/5Manam Enum Vanam Rating: 0 out of 5 stars0 ratingsValaiyil Vandhe Alaiyil Midhakkum Kavithaigal Rating: 0 out of 5 stars0 ratingsIravin Katharal Rating: 0 out of 5 stars0 ratingsKallil Kasintha Thulikal! Rating: 0 out of 5 stars0 ratingsImai Nadanam Rating: 0 out of 5 stars0 ratingsKaadhal Muthaleedu Rating: 0 out of 5 stars0 ratingsMella Thirantha Mathakugal Rating: 0 out of 5 stars0 ratingsNaragathin Uppu Kaattru Rating: 0 out of 5 stars0 ratingsEngey Sendrullathu Andha Pattampoochi...? Rating: 0 out of 5 stars0 ratingsManam Maratha Kathamba Malargal Rating: 0 out of 5 stars0 ratingsNilavai Kothum Paravai Rating: 0 out of 5 stars0 ratingsVerin Vizhuthugal Rating: 0 out of 5 stars0 ratingsNinaivugal Nizhaladum Magizhampoo Marathadi Rating: 0 out of 5 stars0 ratingsKilai Nila Rating: 0 out of 5 stars0 ratingsPenn Kavikkuralgal Rating: 0 out of 5 stars0 ratingsKaaviya Kavingnar Vaali Rating: 0 out of 5 stars0 ratingsKaaladheethathin Suzhal Rating: 0 out of 5 stars0 ratingsMoongilisai Rating: 0 out of 5 stars0 ratingsKattu Nerinji Rating: 0 out of 5 stars0 ratingsVirpanai Pookal Part - 1 Rating: 0 out of 5 stars0 ratingsAmmavin Naaikutty Rating: 0 out of 5 stars0 ratingsPeyar Theriya Poovin Vaasam Rating: 0 out of 5 stars0 ratingsPesum Kadithangal Rating: 0 out of 5 stars0 ratingsManaiviyanen Magaley! Rating: 0 out of 5 stars0 ratingsKuzhalaagi Naan… Rating: 0 out of 5 stars0 ratingsAvalukkum Nilavukkum 6 Vidhyasangal Rating: 0 out of 5 stars0 ratingsPuthu Kavithaigal Puthu Karuthukkal Rating: 0 out of 5 stars0 ratings
Reviews for Noyyalin Kanneer
0 ratings0 reviews