Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Aasai
Aasai
Aasai
Ebook129 pages52 minutes

Aasai

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

நாலு இடைவேளை விடும் (பிங்கிள் புரொஜக்டர் 1969) தேவகோட்டை சரஸ்வதி தியேட்டர் முதல், படத்தின் பதினான்கு ரீல்களும் ஒரே ரீலாக இணைக்கப்பட்டு, ஒரு பட்டனை தட்டுவதில் சுழலும் சத்யம் தியேட்டரில் ஓடும் திரைப்படங்கள் வரை சினிமாவை அணு அணுவாக விரும்பிப் பார்க்கும் செல்லுலாய்டு ரசிகன் நான்.

என்னுடைய ரசிக அனுபவம் என்பது என்ன? நான் எதற்காக சினிமா பார்க்கப் போகிறேன்?

குறிப்பிட்ட ஹீரோ நடித்த படம் என்பதற்காக சிலர் போவார்கள். அதில் வரும் கவர்ச்சி காட்சிகளுக்காக சிலர் போவார்கள்.

இசை, நடனம் முதலான பொழுதுபோக்கு அம்சங்களுக்காக சிலர் போவார்கள். சிலர் ரயிலேறும் அவகாசத்தில் டைம் பாஸ் பண்ண சினிமாப் பார்ப்பார்கள். இன்னும் பல காரணங்கள் இருக்கின்றன.

நான், ஒரு படத்தை விரும்பிப் பார்ப்பதற்கான காரணம், பார்க்கிற திரைப்படத்தில் கையாளப்படும் கதையம்சம்.

என்னைப் பெரிதும் கவர்ந்தது, பொழுதுபோக்கு அம்சங்கள் குறைவாகவும், கதையம்சம் அதிகமாகவும் அமைந்த திரைப்படங்களே. இப்போது நினைத்துப் பார்க்கிறபோது, கதை சொல்லப்பட்ட விதம், மற்றும் கதாபாத்திரங்களின் யதார்த்தம் இவையே ஒரு பார்வையாளனாக என்னை குறிப்பிட்ட சில படங்களை துரத்தி துரத்தி காதலிக்க வைத்திருக்கிறது.

கே.பாலசந்தர் பொழுதுபோக்கு அம்சங்களைவிட, கதைக்கு அதிக முக்கியத்துவம் கொடுப்பவர். சொல்கிற கதைகளை வித்தியாசமாக சொல்ல நினைப்பவர். ரசிகர் கூட்டம் மொய்க்கிற நட்சத்திர நடிகர்களைப் போட்டு படம் எடுக்காதவர். தைரியமாக புதுமுகங்களை அறிமுகப்படுத்தியவர். நான் வேலைக்குச் சேர்ந்த இடம் திரைப்படங்களில் எதை நான் விரும்பி ரசித்தேனோ, அதை மேலும் மேம்படுத்துகிற இடமாகவே அமைந்தது. இயக்குனர் கே. பாலசந்தர் திரைப்படங்களில் காணப்படும் புதுமை, அழுத்தம் இவற்றுக்கு மட்டுமல்ல... அதே காலகட்டத்தில் தான் ரசித்தது... இயக்குனர் பாரதிராஜாவின் மண்வாசனை, 'மீடியம்’ மீதான ஆளுமை, இயக்குனர் மகேந்திரனின் யதார்த்தம், இயக்குனர் மணிரத்னத்தின் அழகியல் மற்றும் தொழில் நுட்ப மேன்மை.

இவைகளாலும் நான் பெரிதும் கவரப்பட்டேன். இந்தச் சூழலில் நான் இயக்குனராக அறிமுகமாகிறேன். ஜனரஞ்சக சினிமா வட்டத்திற்குள் இயங்கும் நான், என் சிறுவயது முதல் எதை ரசித்தேனோ, எதை விரும்பினேனோ, எதனால் எல்லாம் பெரிதும் கவரப்பட்டேனோ அவற்றையே என் திரைப்படங்களில் தர முயன்றேன் – முயல்கிறேன்.

பொழுதுபோக்கை விட கதையம்சத்திற்கே முதலிடம். யதார்த்தம், அழகியல், நட்சத்திர நடிகர்கள் இல்லாமல் படமெடுப்பது, புதுமுகங்களை அறிமுகப்படுத்துவது - இந்தக் கலவையே நான்.

மக்களுக்குப் பிடிக்குமா? நான் எடுக்கிற இந்தக் காட்சி, மக்களுக்கு, களிப்பூட்டுமா? நடிக்கிற நடிகரின் 'இமேஜி’ற்கு ஒத்துவருமா? என்று பார்த்துப் பார்த்து திரைக்கதை அமைப்பதில்லை. மாறாக, காட்சிகள் கதைக்குப் பொருந்துகிறதா, யதார்த்தமாக இருக்கிறதா, நம்பகத்தன்மையுடன் இருக்கிறதா? இவற்றைத்தான் அளவுகோலாக எடுத்துக் கொள்கிறேன். ஆனால், பொழுதுபோக்கு அம்சங்கள் பிரதானமாகவும், கதையம்சம் குறைவாகவும் அமையும் படங்களை தருவதே இப்போதைய 'டிரண்ட்' ஆக இருக்கிறது. எனினும் வரும் காலங்களில் என் திரைப்படங்களில் யதார்த்தத்தின் விகிதாச்சாரத்தை தீவிரப்படுத்தவே திட்டமிட்டிருக்கிறேன்.

உலக கிராமத்தில் வெளியாகும் திரைப்படங்களில் குரோஸாவா முதல் டேவிட் லீன், கோப்போலோ, ஸ்பீல்பெர்க், கீஸ்லா வெஸ்கி, சத்யஜித்ரே, மிருணாள்சென், அடூர், குருதத், ராஜ்கபூர், யாஷ்சோப்ரா, ராம்கோபால் வர்மா, ஸ்ரீதர், கே.பாலசந்தர், பாரதிராஜா, பாலுமகேந்திரா, மகேந்திரன், மணிரத்னம், கமல்ஹாசன், ஷங்கர், விக்ரமன், பார்த்திபன், கே.எஸ்.ரவிக்குமார் வரை நிறைய படைப்பாளிகளில் பெரும்பாலான படங்களை பார்த்திருக்கிறேன் - பார்க்கிறேன்.

இவர்கள் எடுப்பது என்ன? நான் எடுப்பது என்ன? யாருக்காக என்ன திரைப்படம் எடுக்கிறேன் என்பதை ஓரளவு புரிந்தே எடுக்கிறேன். என் திரைப்படங்களில் ஸ்பீல்பெர்க்கின் ஜாலமோ, குரோஸாவாவின் வீச்சோ, குருதத்தின் கவித்துவமான சோகத்தையோ காட்ட நான் முயல்வதில்லை. அதேபோல், ஷங்கரின் பிரும்மாண்டத்தையோ, கே.எஸ்.ரவிக்குமாரின் (அவரே 'தமிழ்திரை' பேட்டியில் குறிப்பிட்டபடி) இயல்பை மீறின கமர்ஷியல் படத்தையோ நான் பண்ணவில்லை என்பதும் அறிவேன்.

ஜனரஞ்சக சினிமா வட்டத்திற்குள் இயங்கும் போது, நான் எதை ரசித்தேனோ, எதற்கு ரசிகனாக இருக்கிறேனோ, அதுமாதிரியான படங்களை எடுக்கவே முயற்சி செய்கிறேன். அதாவது, மனித உறவுகளை அவர்களுடைய நுண்ணிய உணர்வுகளை, சிக்கல்களை, சினிமாவுக்கே உரிய அழகியலுடன் படம் பிடிக்க முயல்கிற ஒரு இயக்குனராகவே என்னை நான் பார்க்கிறேன்.

உங்கள், வஸந்த்

Languageதமிழ்
Release dateAug 12, 2019
ISBN6580124803899
Aasai

Read more from Director Vasanth

Related to Aasai

Related ebooks

Reviews for Aasai

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Aasai - Director Vasanth

    http://www.pustaka.co.in

    ஆசை

    Aasai

    Author:

    இயக்குநர் வஸந்த்

    Director Vasanth

    For more books

    http://www.pustaka.co.in/home/author/director-vasanth

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    வஸந்த்தின் ஒரு திரைக்கதை

    எண்பதுகளில் அமுதசுரபி, தினமணி கதிர், சாவி, திசைகள் பத்திரிகைகளில் பங்களிக்கத் துவங்கி பின் கே.பாலசந்தரின் குருகுல வாசத்தில் தேர்ந்து தொண்ணூறுகளின் துவக்கத்தில் கேளடி கண்மணி மூலம் அறிமுகமான இயக்குனர் வஸந்த் இதுவரை இயக்கிய படங்கள் எட்டு. தன் விருப்பத்திற்கான ஒரு பூவைத்தேடி தத்தளிக்கும் பட்டாம்பூச்சியாய் வித்யாசங்களைத் தேடி அலையும் வஸந்த் ஒரு அழகியல்வாதி, சிம்ரன், ஜோதிகா, சூர்யா என்று வஸந்த் அறிமுகப்படுத்தியவர்கள் இன்றைய பிரபல நட்சத்திரங்கள், இயக்குனர்களால் அறியப்படும் படங்களைத் தந்துகொண்டிருக்கும் இவரிடம் பயிற்சி பெற்ற பலர் தமிழ் சினிமாவில் இன்று இயக்குனர்களாய் பரிணமித்திருக்கிறார்கள் என்பது வஸந்த்தின் கலைத் தீவிரத்தைக் காட்டுகிறது. எவ்வளவு பெரிய வாய்ப்பையும் நிராகரிக்கும் துணிவும், புதிய புதிய விஷயங்களைத் தேடிப்போகும் ஆர்வமும் வஸந்த்தை இன்றும் உயிர்ப்போடு வைத்திருக்கின்றன. வஸந்த்திடம் உள்ள வசீகரம் அவர் படம் முழுவதும் விரவியிருக்கிறது. தமிழில் எடுக்கப்பட்ட, எடுக்கப்பட இருக்கும் நல்ல சினிமாக்களை இயக்குபவர்களில் வஸந்த்தும் ஒருவராக இருக்கிறார். அதற்கானத் தேடல் இருக்கிறது அவர் கண்களில்.

    நன்றி

    ஆலயம் திரு. எஸ். ஸ்ரீராம்

    திரு. மணிரத்னம்

    நானும் என் சினிமாவும்

    நாலு இடைவேளை விடும் (பிங்கிள் புரொஜக்டர் 1969) தேவகோட்டை சரஸ்வதி தியேட்டர் முதல், படத்தின் பதினான்கு ரீல்களும் ஒரே ரீலாக இணைக்கப்பட்டு, ஒரு பட்டனை தட்டுவதில் சுழலும் சத்யம் தியேட்டரில் ஓடும் திரைப்படங்கள் வரை சினிமாவை அணு அணுவாக விரும்பிப் பார்க்கும் செல்லுலாய்டு ரசிகன் நான்.

    என்னுடைய ரசிக அனுபவம் என்பது என்ன?

    நான் எதற்காக சினிமா பார்க்கப் போகிறேன்?

    குறிப்பிட்ட ஹீரோ நடித்த படம் என்பதற்காக சிலர் போவார்கள். அதில் வரும் கவர்ச்சி காட்சிகளுக்காக சிலர் போவார்கள்.

    இசை, நடனம் முதலான பொழுதுபோக்கு அம்சங்களுக்காக சிலர் போவார்கள். சிலர் ரயிலேறும் அவகாசத்தில் டைம் பாஸ் பண்ண சினிமாப் பார்ப்பார்கள். இன்னும் பல காரணங்கள் இருக்கின்றன.

    நான், ஒரு படத்தை விரும்பிப் பார்ப்பதற்கான காரணம், பார்க்கிற திரைப்படத்தில் கையாளப்படும் கதையம்சம்.

    என்னைப் பெரிதும் கவர்ந்தது, பொழுதுபோக்கு அம்சங்கள் குறைவாகவும், கதையம்சம் அதிகமாகவும் அமைந்த திரைப்படங்களே.

    இப்போது நினைத்துப் பார்க்கிறபோது, கதை சொல்லப்பட்ட விதம், மற்றும் கதாபாத்திரங்களின் யதார்த்தம் இவையே ஒரு பார்வையாளனாக என்னை குறிப்பிட்ட சில படங்களை துரத்தி துரத்தி காதலிக்க வைத்திருக்கிறது.

    நான் பார்வையாளனிலிருந்து திரைப்படங்களில் பணியாற்றுபவனாக ஆனேன்.

    கே.பாலசந்தர் பொழுதுபோக்கு அம்சங்களைவிட, கதைக்கு அதிக முக்கியத்துவம் கொடுப்பவர். சொல்கிற கதைகளை வித்தியாசமாக சொல்ல நினைப்பவர். ரசிகர் கூட்டம் மொய்க்கிற நட்சத்திர நடிகர்களைப் போட்டு படம் எடுக்காதவர். தைரியமாக புதுமுகங்களை அறிமுகப்படுத்தியவர். நான் வேலைக்குச் சேர்ந்த இடம் திரைப்படங்களில் எதை நான் விரும்பி ரசித்தேனோ, அதை மேலும் மேம்படுத்துகிற இடமாகவே அமைந்தது.

    இயக்குனர் கே. பாலசந்தர் திரைப்படங்களில் காணப்படும் புதுமை, அழுத்தம் இவற்றுக்கு மட்டுமல்ல... அதே காலகட்டத்தில் தான் ரசித்தது... இயக்குனர் பாரதிராஜாவின் மண்வாசனை, 'மீடியம்’ மீதான ஆளுமை, இயக்குனர் மகேந்திரனின் யதார்த்தம், இயக்குனர் மணிரத்னத்தின் அழகியல் மற்றும் தொழில் நுட்ப மேன்மை.

    இவைகளாலும் நான் பெரிதும் கவரப்பட்டேன். இந்தச் சூழலில் நான் இயக்குனராக அறிமுகமாகிறேன்.

    ஜனரஞ்சக சினிமா வட்டத்திற்குள் இயங்கும் நான், என் சிறுவயது முதல் எதை ரசித்தேனோ, எதை விரும்பினேனோ, எதனால் எல்லாம் பெரிதும் கவரப்பட்டேனோ அவற்றையே என் திரைப்படங்களில் தர முயன்றேன் – முயல்கிறேன்.

    பொழுதுபோக்கை விட கதையம்சத்திற்கே முதலிடம். யதார்த்தம், அழகியல், நட்சத்திர நடிகர்கள் இல்லாமல் படமெடுப்பது, புதுமுகங்களை அறிமுகப்படுத்துவது - இந்தக் கலவையே நான்.

    மேலே குறிப்பிட்ட நோக்கத்தை மீறி நானும் சில படங்களை எடுத்திருக்கிறேன். எல்லாப் படைப்பாளிகளைப் போலவே, எனக்கும் சமரசங்களும், சறுக்கல்களும் நிகழ்ந்திருக்கின்றன.

    ஆனாலும் நான் எடுக்க விரும்புகிற திரைப்படம் பற்றிய பார்வை நான் மேலே சொன்னதுதான்.

    மக்களுக்குப் பிடிக்குமா? நான் எடுக்கிற இந்தக் காட்சி, மக்களுக்கு, களிப்பூட்டுமா? நடிக்கிற நடிகரின் 'இமேஜி’ற்கு ஒத்துவருமா? என்று பார்த்துப் பார்த்து திரைக்கதை அமைப்பதில்லை. மாறாக, காட்சிகள் கதைக்குப் பொருந்துகிறதா, யதார்த்தமாக இருக்கிறதா, நம்பகத்தன்மையுடன் இருக்கிறதா? இவற்றைத்தான் அளவுகோலாக எடுத்துக் கொள்கிறேன். ஆனால், பொழுதுபோக்கு அம்சங்கள் பிரதானமாகவும், கதையம்சம் குறைவாகவும் அமையும் படங்களை தருவதே இப்போதைய 'டிரண்ட்' ஆக இருக்கிறது. எனினும் வரும் காலங்களில் என் திரைப்படங்களில் யதார்த்தத்தின் விகிதாச்சாரத்தை தீவிரப்படுத்தவே திட்டமிட்டிருக்கிறேன்.

    ***

    உலக கிராமத்தில் வெளியாகும் திரைப்படங்களில் குரோஸாவா முதல் டேவிட் லீன், கோப்போலோ, ஸ்பீல்பெர்க், கீஸ்லா வெஸ்கி, சத்யஜித்ரே, மிருணாள்சென், அடூர், குருதத், ராஜ்கபூர், யாஷ்சோப்ரா, ராம்கோபால் வர்மா, ஸ்ரீதர், கே.பாலசந்தர், பாரதிராஜா, பாலுமகேந்திரா, மகேந்திரன், மணிரத்னம், கமல்ஹாசன், ஷங்கர், விக்ரமன், பார்த்திபன், கே.எஸ்.ரவிக்குமார் வரை நிறைய படைப்பாளிகளில் பெரும்பாலான படங்களை பார்த்திருக்கிறேன் - பார்க்கிறேன்.

    இவர்கள் எடுப்பது என்ன? நான் எடுப்பது என்ன? யாருக்காக என்ன திரைப்படம் எடுக்கிறேன் என்பதை ஓரளவு புரிந்தே எடுக்கிறேன்.

    என் திரைப்படங்களில் ஸ்பீல்பெர்க்கின் ஜாலமோ, குரோஸாவாவின் வீச்சோ, குருதத்தின் கவித்துவமான சோகத்தையோ காட்ட நான் முயல்வதில்லை. அதேபோல், ஷங்கரின் பிரும்மாண்டத்தையோ, கே.எஸ்.ரவிக்குமாரின் (அவரே 'தமிழ்திரை' பேட்டியில் குறிப்பிட்டபடி) இயல்பை மீறின கமர்ஷியல் படத்தையோ நான் பண்ணவில்லை என்பதும் அறிவேன்.

    ஆலன் பார்க்கரின் 'பார்டி', ஃப்ராங்க் டாராபான்ட்-ன் 'சொசாங் ரிட்டம்ஷன்', மைக் ஃபிக்கிஸ்-ன் 'லீவிங்லாஸ் வேகஸ்', ஜார்ஜ் மில்லரின் 'லாரன்ஸோஸ் ஆயில்', சத்யஜித்ரேயின் ‘பதேர் பாஞ்சாலி', 'சாருலதா', மிருணாள்சென்னின் 'ஏக் தின் பிரதிதின்' கோவிந்த் நிகலாளியின் 'ஆக்ரோஷ்', ராம்கோபால் வர்மாவின் 'சத்யா', 'கம்பெனி', கே.பாலசந்தரின் 'அவள் ஒரு தொடர்கதை', 'அவர்கள்', ‘அபூர்வ ராகங்கள்', பீம்சிங்கின் 'சில நேரங்களில் சில மனிதர்கள்', மகேந்திரனின் 'உதிரிப் பூக்கள்', பாரதிராஜாவின் 'பதினாறு வயதினிலே', ‘சிகப்பு ரோஜாக்கள்', ருத்ரையாவின் 'அவள் அப்படித்தான்', பாலுமகேந்திராவின் 'வீடு', மணிரத்னத்தின் ‘நாயகன்', 'அஞ்சலி', 'இருவர்'... இந்தப் படங்களையெல்லாம் பார்த்து, பிரமித்த ரசிகன் நான்.

    ஜனரஞ்சக சினிமா வட்டத்திற்குள் இயங்கும் போது, நான் எதை ரசித்தேனோ, எதற்கு ரசிகனாக இருக்கிறேனோ, அதுமாதிரியான படங்களை எடுக்கவே முயற்சி செய்கிறேன். அதாவது, மனித உறவுகளை அவர்களுடைய நுண்ணிய உணர்வுகளை, சிக்கல்களை, சினிமாவுக்கே உரிய அழகியலுடன் படம் பிடிக்க முயல்கிற ஒரு இயக்குனராகவே என்னை நான் பார்க்கிறேன்.

    ***

    சினிமா தோன்றிய காலம் முதல் நல்ல கதையம்சம் உள்ள படங்களை ஆதரித்துவரும் ரசிகர்கள்... புத்தகமாக வெளிவரும் இந்த ஆசை திரைக்கதையையும் ஆதரிப்பீர்கள் என்ற நம்பிக்கையுடன்

    உங்கள்,

    வஸந்த்

    காற்றில் கர்நாடக இசை மிதக்கும்

    டிசம்பர் மாதத்தின் இனிய மாலை...

    *****

    திரையில் எழுத்துக்கள் துவங்குகிறது.

    ஒரு தெருக்கூத்து ஆரம்பிப்பதற்கான ஒலி கேட்கிறது.

    கூத்துக் கலைஞனின் குரல்:

    பெரியோர்களே! தாய்மார்களே! உங்கள் அனைவருக்கும் பணிவான வணக்கத்தைத் தெரிவித்துக் கொள்கிறோம். இந்தத் தெருக்கூத்தைக் காண வந்திருக்கும் சென்னை தாம்பரம்

    Enjoying the preview?
    Page 1 of 1