Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Gnanathin Vaayil
Gnanathin Vaayil
Gnanathin Vaayil
Ebook134 pages50 minutes

Gnanathin Vaayil

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

நம் தமிழ் மொழியில் நிறைய பாட்டி கதைகள், கிராமியக் கதைகள், வாய்மொழிக் கதைகள் உள்ளன. அதேபோல் வெளிமாநிலங்களான ராஜஸ்தான், பாலஸ்தீனம், பீகார், புத்தேல்கண்ட், நேபால் முதலிய இடங்களில் அம்மக்களால் வாய்மொழியாகக் கூறப்பட்டு வந்த கதைகளை மொழி பெயர்த்துத் தந்திருப்பது சிறப்பானது. இதன் மூலம் அந்த மாநிலங்களில் வாழும் மக்களின் சமுதாய வாழ்க்கையையும், அறநெறிகளையும் அறிந்துகொள்ள முடிகிறது. அதுமட்டுமல்ல, நகைச்சுவை ஊட்டி, மனதை மகிழ்விக்கும் கதைகளும் படித்து இன்புறத்தக்கவை.

உணர்ச்சியின் உச்சிக்கே கொண்டு செல்லும் ஜுன்ஜுனா, கிளி, மைனா கதை போன்றவையும், ஒன்றுக்கு இரண்டு, முட்டை கதை, சேட் கதை போன்றவை நகைச்சுவையாகவும் உள்ளது குறிப்பிடத்தக்கவை. நான்கு திருடர்கள், இரண்டு ஏமாற்றுக்காரர்கள், எமனின் முடிவு போன்ற அறநெறிக் கதையும் மிகவும் சிறப்பாக உள்ளன. இப்படி இதில் உள்ள கதைகளைக் கூறிக்கொண்டே போகலாம். இவை பல நீதிகளை விளக்குகின்றன. இவைகளை வடமொழியில் ‘ஜாதக்’ கதைகள் என்பர். இவைகளிலிருந்து வேற்றுமையில் ஒற்றுமை காணும் நம் நாடு பற்றியும் நீதியை உணர்ந்தவர்கள் யாரும் பின் தங்கியவர்கள் இல்லை என்றும் புரிந்து கொள்ள முடிகிறது. இவையெல்லாம் நமது பொக்கிஷங்கள். வேற்று மொழியில் இருந்து நம் மொழியில் மொழிபெயர்க்க நடுநிலையாக நாம் ஒரு மொழியைக் கற்க வேண்டியது அவசியமாகிறது. இந்தப் பணியை நூலாசிரியர் மேற்கொண்டுள்ளார். இதில் உள்ள கதைகள் சிந்தனைக்கு விருந்தளிக்கின்றன. இதை பெரியவர் மட்டுமல்ல குழந்தைகளும் படித்து இன்புற வேண்டும்.

Languageதமிழ்
Release dateJul 23, 2022
ISBN6580156008621
Gnanathin Vaayil

Read more from Edaimaruthour Ki Manjula

Related to Gnanathin Vaayil

Related ebooks

Reviews for Gnanathin Vaayil

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Gnanathin Vaayil - Edaimaruthour Ki Manjula

    C:\Users\INTEL\Desktop\Logo New\pustaka_logo-blue_3x.png

    https://www.pustaka.co.in

    ஞானத்தின் வாயில்

    (வடமாநில நாடோடிச் சிறுகதைகள்)

    Gnanathin Vaayil

    (Vada Maanila Nadodi Sirukathaigal)

    Author:

    இடைமருதூர் கி. மஞ்சுளா

    Edaimaruthour Ki Manjula

    For more books

    https://www.pustaka.co.in/home/author/edaimaruthour-ki-manjula

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    குரு காணிக்கை!

    முன்னுரை

    அணிந்துரை

    1. உண்மையான ஜோதிடர்

    2. இரு ஏமாற்றுக்காரர்கள்

    3. கதவு

    4. புத்தியின்பலம்

    5. திருமண நிபந்தனை

    6. ஒன்றுக்கு இரண்டு

    7. புத்திசாலி மருமகள்

    8. தகுதியான மகன்

    9. வனதேவி ஃயூம்லி

    10. எமதர்மனின் தீர்ப்பு

    11. நீ மட்டும் தான்

    12. உண்மையான மனிதன்

    13. வினோத பரிசு

    14. உண்மையான பிரதி உபகாரி

    15. ஞானத்தின் வாயில்

    16. பொன் - பூமிக்கு அடியில்

    17. ராஜாவும் சந்யாசியும்

    18. பேராசையின் விளைவு

    19. சேட்டும் வேலைக்காரனும்

    20. நல்ல அன்னம்

    21. ருசியான உணவு

    22. நான்கு சகோதரிகள்

    23. மைனா கூறிய கதை

    24. நெடுங்கதை

    25. அன்பின் அம்பு

    26. பேச்சுத்திறன்

    27. தங்க எலி

    28. போதை அழிவின் ஆணிவேர்

    29. ஜுன்ஜுனா

    30. ஆறு நண்பர்கள்

    குரு காணிக்கை!

    அன்று

    இன்று

    அன்று

    ரத்தத்தைப் பாலாக்கித் தந்தாய்!

    இன்று

    பாலையே ரத்தமாக்கித் தந்தேன்!

    நீ

    அறுவை சிகிச்சை அறையில்...

    கண்மூடி

    பிரார்த்தித்தபடி

    நான்

    வரவேற்பறையில்...

    தாயாகவும், குருவாகவும் இருந்து இந்நூலுக்கு அணிந்துரை வழங்கியுள்ள திருமதி எஸ். கல்யாணி அம்மாள் அவர்களின் புலமைக்கு இந்த நூலை குரு காணிக்கையாக்குகிறேன்!

    முன்னுரை

    என் தாய் மொழியும் (தமிழ்); என் தாய் கற்றுத் தந்த மொழியும் (இந்தி) தான் இந்த நூல் உருவாகக் காரணம்.

    பள்ளிப் பருவத்திலிருந்தே தமிழோடு இந்தி மொழியும் எனக்கு ஊட்டினாள் அன்னை, அப்போதெல்லாம் அந்த மொழியின் அருமை தெரியாமல் இருந்த நான், அதை ஆழ்ந்து கற்காமல் அலட்சியப்படுத்தினேன். என் தாயிடம் இந்தி பயின்ற பலர், பல உயர் பதவிகளை வகிப்பதைக் கண்டு பெருமிதம் கொள்ளும் அந்தத் தாய்க்கு, அப்போது நான் எந்தப் பெருமையும் சேர்க்கவில்லை. இது குறித்து பல நாட்கள் வருத்தப்பட்டதுண்டு.

    திருமணமாகி, சென்னை வந்த பின்புதான் இந்தியின் அருமையை உணர்ந்தேன். பிறகு தாயின் தூண்டுதலால் நானாக படித்து, கொஞ்சம் கொஞ்சமாக மேல்நிலை படிப்புவரை வந்தேன். அப்போதுகூட என் தாய்தான் குடந்தையில் இருந்தபடி எனக்குக் குருவாய் இருந்து என்னை வழிகாட்டி உயர்த்தினாள்.

    தான் கற்ற கல்வி எழு பிறப்புக்கும் பயன்படும் என்பதை உண்மையாக்குவதுபோல, பல ஆண்டுகளுக்குப் பின் பத்திரிகைத் துறையில் (தினமலா) முதன் முதலாக அடியெடுத்து வைத்தபோது இந்திமொழி எனக்குப் பெரிதும் உதவியது. மொழி பெயர்ப்பாளர் என்ற அடையாளத்தை எனக்குக் கொடுத்த தினமலர் நாளிதழுக்கும். சில மொழிபெயர்ப்புக் கதைகளை தினமணி - சிறுவர்மணியில் வெளியிட்டுச் சிறப்பித்த தினமணிக்கும் நான் என்றென்றும் கடமைப்பட்டுள்ளேன். அவர்களுக்கு என் மனமார்ந்த நன்றி உரித்தாகட்டும்.

    மொழிபெயர்ப்பு ஒன்றும் சாதாரண விஷயமல்ல. பொதுவாக ஒரு மொழியிலுள்ள செய்தியை வேறொரு மொழியில் பொருள் வேறுபாடின்றி, சுவையும் தன்மையும் குன்றாமல் அப்படியே மாற்றுவதை மொழி பெயர்ப்பு என்று கூறுவர். இவ்வாறு ஒரு மொழியிலுள்ள கருத்தை வேறொரு மொழிக்கு மாற்றும் மொழி பெயர்ப்பில் சொல்லுக்குச் சொல் பெயர்த்தடுக்குவது மொழி பெயர்ப்பு ஆகாது; பெயர்க்கப்பட வேண்டியது பொருளே. பொருளை விடுத்து சொல்லுக்குச் சொல் மொழி பெயர்ப்பது என்பது ஆன்மாவை விடுத்துச் செத்த உடலை மொழி பெயர்ப்பதற்குச் சமமானது என்று கூறுமளவுக்கு மொழி பெயர்ப்பில் ‘பொருளில்’ முக்கியத்துவம் வற்புறுத்தப்படுகிறது.

    எந்தச் சொல்லையும் நன்கு புரிந்து கொள்வதற்கு அகராதி அறிவைவிடப் பொருளறிவே பெரிதும் உதவுகிறது என்று கூறுவர். இருமொழிப் புலமை சார்ந்த நிலையில் மட்டுமே. ஒரு மொழிபெயர்ப்பாளர் மூலமொழிக்கு உண்மையோடும் அதே நேரத்தில் பெயர்க்கப்படும் மொழியின் மரபைக் காக்கும் நோக்கோடும் செயல்பட முடியும். இவ்வகையில் இருமொழிப் புலமை என்பது மொழி பெயர்ப்பாளருக்கு இன்றியமையாத ஒன்றாகக் கருதப்படுகிறது.

    ‘மொழிபெயாப்பு என்பது பொன்னைச் செம்பாக்கும் ஓர் அரிய ரசவாதக் கலை’ என்பார் சர் வால்ட்டர் ஸ்காட். ஒரு மொழியிலுள்ள செல்வத்தை மற்றொரு மொழிக்குக் கொண்டுவந்து சேர்ப்பதே மொழி பெயர்ப்பாளரின் தலையாய பணியாகும். என்னைக் கேட்டால், இது ஊசி முனையில் நடப்பதற்குச் சமம் என்பேன்.

    இதிலுள்ள பல கதைகள் என்னை பாதித்தவை காய், பழுத்தால்தான் சுவை தரும். அதுபோல முதுமைதான் மனிதப்பிறவியின் அழகே! முதுமையை இரு கரம் நீட்டி வரவேற்பவர்கள் இக்காலத்தில் யாரும் இல்லை. இதை விளக்கும் ஓர் அற்புதமான கதை, எமதர்மனின் முடிவு. அனைவரும் அறிந்துகொள்ள வேண்டிய செய்தி. இது எனது முதல் மொழிபெயாப்பு நூல். இது ஒரு கன்னி முயற்சி. படித்து, சுவைத்து, ரசித்து விமர்சிக்க வேண்டியது நீங்கள்தான்!

    நாடோடிக் கதைகள் நம் முன்னோர்கள் (பாட்டி) செவிவழிக் கதையாக வழிவழியாகச் சொல்லி வந்தவை. இப்போது இதுபோன்ற கதைகளை யாரும் தன் பேரன் பேத்திகளுக்குச் சொல்வதுமில்லை; அதற்கு அவர்களுக்கு நேரம் கிடைப்பதுமில்லை, நூல்கள் மூலமாகத்தான் படித்தறிய வேண்டி உள்ளது என்பது காலத்தின் கட்டாயமாகிவிட்டது. இக்கதைகள் அனைத்தும் வடமாநிலங்களில் பரவலாகச் சொல்லப்பட்டு வந்தவை. வடமொழிச் செல்வத்தை தமிழுலகிற்கு வழங்கியதில் வெற்றி எனக்கா? படிக்கும் உங்களுக்கா? நம் தமிழ் அன்னைக்கா? பொறுத்திருப்பேன் உங்கள் விமர்சனங்களுக்காக...

    இதில் உள்ளவை, சென்னையிலிருந்து வெளிவரும் ‘ராஜஸ்தான் பத்திரிகா’ என்ற இந்தி நாளிதழிலிருந்து மொழி பெயர்க்கப்பட்ட கதைகள் அந்நாளிதழுக்கும், ஆசிரியருக்கும் எனது மனமார்ந்த நன்றி.

    இந்நூலுக்கு ராமரின் அணில்போல சிறு சிறு உதவிகள் செய்த இளைய சகோதரி மகளான லட்சுமிக்கும், எனது மகள் ஸ்ரீவித்யாவிற்கும் அன்பு கலந்த நன்றி. சிறுவர் இலக்கியத்திற்கு இந்நூலின் பங்கும் சிறிது சேர்ந்திருப்பதில் என்னைவிட, என் தாய்க்கும், என் தாய் மொழிக்கும்தான் பெருமை மிகமிக அதிகம்!

    இந்த நூல் முதன்முறையாக... இ புத்தகமாக... புஸ்தகா டாட் காமில் வெளிவருவதில் பெரும் மகிழ்ச்சி. புத்தகா டாட் காம் குழுவினருக்கு என் மனமார்ந்த நன்றி.

    இடைமருதூர் கி. மஞ்சுளா

    அணிந்துரை

    நம் பாரதத் திருநாட்டில் ஆட்சி பீடத்தில் அமர்ந்திருக்கும் மொழிகளில் முக்கியமானவை பதிநான்கு. நம் தாய் மொழியாகிய தமிழ் மொழியை, செம்மொழி என்ற அந்தஸ்தில் உயர்த்தி இருக்கிறோம். நம் செந்தமிழ், பழந்தமிழில் இல்லாத இலக்கியங்களே இல்லை என்று கூறலாம். படித்து, சுவைத்து அறிய வேண்டிய கோடானுகோடி இலக்கிய நூல்கள் பலமொழிகளில் மொழி பெயர்க்கப்பட்டுள்ளன. அவை எண்ணில் அடங்காதவை. இருப்பினும்

    Enjoying the preview?
    Page 1 of 1