Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Aathma Thaagam
Aathma Thaagam
Aathma Thaagam
Ebook100 pages37 minutes

Aathma Thaagam

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

ஆத்மா என்பது அழிவற்றது என்ற கருத்தை வேதங்களும் ஆகமங்களும் திரும்பத் திரும்ப வலியுறுத்துகின்றன. ஒரு பிறவியில் நிறைவேறாத ஆசைகள் அடுத்து வரும் பிறவிகளில் நிறைவேறுவதற்கான சூழல்கள் உருவாகின்றன. இந்த ஆசைகளை நிறைவேற்றிக் கொண்ட பிறகே மெய்ஞானம் உதயமாகும். ஆகவே நம்முடைய விருப்பங்கள், அன்பு, கருணை, தியாகம்... ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டிருந்தால் 'ஆத்ம தாகம்' தன் இலக்கினை அடைந்து விடும்.

Languageதமிழ்
Release dateNov 5, 2022
ISBN6580156008925
Aathma Thaagam

Read more from Edaimaruthour Ki Manjula

Related to Aathma Thaagam

Related ebooks

Reviews for Aathma Thaagam

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Aathma Thaagam - Edaimaruthour Ki Manjula

    C:\Users\INTEL\Desktop\Logo New\pustaka_logo-blue_3x.png

    https://www.pustaka.co.in

    ஆத்ம தாகம்

    (குறுநாவல்)

    Aathma Thaagam

    (Kurunovel)

    Author:

    இடைமருதூர் கி. மஞ்சுளா

    Edaimaruthour Ki Manjula

    For more books

    https://www.pustaka.co.in/home/author/edaimaruthour-ki-manjula

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    முன்னுரை

    1. விடியல்

    2. கோட்டை வாயில்

    3. திகைப்பு

    4. திருமண ஒப்பந்தம்

    5. லட்சியம்

    6. நட்பின் பரிசு

    7. மனிதநேயம்

    8. மௌனம் பேசியது

    9. தேடல்

    10. தர்மதேவன்

    முன்னுரை

    சொர்க்கமும், அமிர்தமும் இந்த பூமியில்தான் உள்ளன. அப்பா - பெண் குழந்தையின் சொர்க்கம்; பெண் குழந்தை - அப்பாவுக்குக் கிடைத்த அமிர்தம். பெண் குழந்தை மீது அபரிமிதமான பிரியம், பாசம் வைப்பதும், பெண் குழந்தை ‘அப்பா’ செல்லமாக இருப்பதும் உலகறிந்த உண்மை. உயிரோடு இருக்கும்போது அப்பாவின் அருமை, பெருமை யாருக்குமே தெரிவதில்லை. அவரை ஒரு தொல்லையாகவே நினைப்பவர்களும் உண்டு. ஏனென்றால் அடிக்கடி புத்திமதி சொல்பவரையும், கடிந்து கொள்பவரையும், கண்டிப்பவரையும் யாருக்குத்தான் பிடிக்கும்? ஆனால், அவர் செய்யும் அனைத்தும் நம் நன்மைக்குத்தான் என்பதை நாம் அவரை இழந்து தவிக்கும் தருணங்களில்தான் உணர்கிறோம். இந்த அனுபவம் என் வாழ்விலும் உண்டு.

    இக்குறு நாவலில் வரும் ரத்னாவும் அப்பா செல்லமாக இருந்தவள். தந்தையின் இழப்பும் அவர் விட்டுச்சென்ற ஒவ்வொரு பொருளும் அவளின் மனத்திரையில் ஓடிக்கொண்டிருக்கிறது. என்னதான் புறவாழ்க்கை செம்மையாக இருந்தாலும், அகவாழ்க்கை செம்மைப்படாதவர்களின் வாழ்க்கை தந்தியில்லா வீணையைப் போன்றதுதானே! ரத்னா அகவாழ்க்கையில் தோல்வி கண்டவள். என்றாலும் துவண்டுவிடவில்லை. ஓர் ஆணின் பாதுகாப்பு மட்டுமே ஒரு பெண்ணை வாழ வைத்துவிடாது. அதற்கும் மேலாக அன்பு, நம்பிக்கை, அரவணைப்பு, ஆதரவு இவையெல்லாம் கூட அவசியம் தேவை. இவை எல்லாம் கிடைக்காதபோது ஒரு பெண் என்ன முடிவு எடுப்பாள்?

    தான் காணும் ஒவ்வொரு பொருளிலும் தன் தந்தை நினைவைப் பொருத்திப் பார்க்கும் ரத்னா, நிறைவேறாத ஆசைகளோடு இவ்வுலகை விட்டுச்சென்ற ஆத்மா எவ்வாறு அதைத் தீர்த்துக் கொள்கிறது என்பதை அடையாளம் காண்கிறாள்.

    இந்த உலகில் தியாகத்தைவிட உயர்ந்த செயல் எதுவும் கிடையாது! அதைத்தான் இந்நாவல் கூறுகிறது.

    சுமார் 8 ஆண்டுகளுக்கு முன் அதாவது, கி.வா. ஜகந்நாதன் நூற்றாண்டு விழா குறுநாவல் போட்டிக்காக ஒரே இரவில் எழுதப்பட்ட குறுநாவல் இது.

    போட்டியில் தேர்வாகவில்லையே என வருத்தப்படவில்லை. அந்தப் போட்டி மூலம் இக்கதையில் வரும் பலரை இவ்வுலகுக்கு அடையாளப்படுத்த முடிந்ததே என நினைத்து மகிழ்கிறேன்! எந்தவொரு (தமிழ்) எழுத்துக்கும், எண்ணத்துக்கும் என்றைக்குமே - எப்போதுமே தோல்வி கிடையாது. அது ஒரு நாள் அல்ல ஒருநாள் தன்னை வெளிப்படுத்தியே தீரும்.

    அந்த வகையில், இந்தக் குறுநாவலின் மூலம் ரத்னாவின் தாகம் மட்டுமல்ல அவளுடைய தந்தையின் தாகமும் தீர்ந்திருக்கும்.

    என் முதல் ரசிகை என் தாய்தான். என்னுடைய பல படைப்புகளைப் படித்துவிட்டு பிரமித்தவள். அந்த வகையில் என் தந்தை இருந்து பார்த்து ரசிக்க வேண்டியதை தாய் பாத்து ரசித்தது இரட்டிப்பு மகிழ்ச்சியைத் தந்தது. என்றாலும், தந்தையின் இடத்தை நிரப்ப யாரால் முடியும் மனத்தில் எங்கோ ஒரு மூலையில் அந்த ஏக்கம் இருந்து கொண்டு அக்குக்குருவிபோல அவ்வப்போது ஏங்கித் தவிப்பது இறைவனுக்கு மட்டுமே தெரிந்த உண்மை.

    இதில் ஆச்சரியம் என்னவென்றால், 8 ஆண்டுகளுக்கு முன்பு இந்த கதைக்கான கரு தோன்றிய இடத்திற்கு கற்பனையில் பயணித்த நான் சிறிது நாட்களுக்கு முன்பு அந்த இடத்திற்கு நிஜமாக பயணித்தபோது அடைந்த வியப்பு, அதிர்ச்சியிலிருந்து இன்னமும் மீளவே இல்லை.

    இறைவனின் எந்தவொரு காரியத்திற்கும் ஒரு காரணம் உண்டு என்பதை அடிக்கடி இறைவன் நினைவுபடுத்திக்கொண்டே இருக்கிறான்.

    இக்குறு நாவல், என்னை நிரந்தரமாக ஏக்கத்தில் ஆழ்த்திய என் ஓவியத் தந்தைக்கு...

    இடைமருதூர் கி. மஞ்சுளா

    1

    விடியல்

    க்ரீச்... க்ரீச்... என்ற பறவைகளின் ஒலி. கூடவே அருகில் உள்ள விநாயகர் கோவில் மணியின் ஒலி. இவை இரண்டும் சேர்ந்து செவிகளில் இனிமை செய்ய மெதுவாய் புரண்டு படுத்தாள் ரத்னா.

    விடிவெள்ளி தோன்றிய வைகறைப் பொழுது.

    எழுந்திருக்க நினைத்தாள். ஆனால், சிறிது நேரத்திற்குமுன் கண்ட கனவு கண்ணை விட்டு அகலாமல் சுழன்று சுழன்று எழுந்திருக்கவிடாமல் அடம்பிடித்தது.

    வைகறையில் வரும் சில்லென்ற காற்றை நேசிக்காதவர்கள் யார்? மனதிற்குப் புத்துணர்ச்சி தந்து, மேலும் நன்றாக இழுத்துப் போர்த்திக்கொண்டு தூங்க வைக்கும்.

    விடியற்பொழுது சிலருக்கு சுகமாகவும், பலருக்கு சோகமாகவும் வருகிறது.

    கவிஞர்கள், கலைஞர்கள், எழுத்தாளர்கள் என்று இவர்கள் விரும்பி ரசிப்பது இல்லையா? ஏனென்றால் இவர்களுக்கு விடியற்பொழுதுதான் பல புதிய புதிய படைப்புக்களை அள்ளித் தரும் அட்சயப்பாத்திரம். ஆனால்...

    எட்டு மணிக்கெல்லாம் அரக்கப்பரக்க வெந்ததைத்தின்று வேலைக்குச் செல்லும் பெண்மணிகளுக்கும், தேர்வுக்கு படிக்கும் பிள்ளைகளுக்கும்

    Enjoying the preview?
    Page 1 of 1