Neela Nira Malligai
By Rajeshkumar
()
About this ebook
Read more from Rajeshkumar
Nanthini Nalai Irakkiral! Rating: 3 out of 5 stars3/5Raja Ragasiyam Rating: 0 out of 5 stars0 ratingsIrapathu Nee Irupathu Naan Rating: 5 out of 5 stars5/5Thirumarana Azhaippithazh Rating: 5 out of 5 stars5/5Panchavarna Kili Rating: 0 out of 5 stars0 ratingsDial For Kill Rating: 4 out of 5 stars4/5Kondraal Kondraan Kondren Rating: 5 out of 5 stars5/5Vidathey Vivek! Vidathey Rating: 4 out of 5 stars4/5Sivappu November Rating: 0 out of 5 stars0 ratingsVetri Endraal Vivek Rating: 5 out of 5 stars5/5100-Vathu Pournami Rating: 4 out of 5 stars4/5Mella Mella Ennai Kollathey Rating: 0 out of 5 stars0 ratingsIruttil Parakkum Paravaigal Rating: 0 out of 5 stars0 ratingsKonjum vanjanai! Rating: 5 out of 5 stars5/5Maranathin Thethi March 7 Rating: 0 out of 5 stars0 ratingsRojakkalum Thottakalum Rating: 0 out of 5 stars0 ratingsUyir Eduppaan Thozhan Rating: 5 out of 5 stars5/5Neelam Enbathu Niramalla Rating: 0 out of 5 stars0 ratingsPiriyamaana Kolaikaran Rating: 5 out of 5 stars5/5June, July, Aaa...! Rating: 4 out of 5 stars4/5Kavanam Vivek Rating: 5 out of 5 stars5/5Ore Oru Naal Rating: 5 out of 5 stars5/5Engum Vivek! Ethilum Vivek! Rating: 5 out of 5 stars5/5Uyir Veelchi Rating: 0 out of 5 stars0 ratingsMoondru Vinaadi Mugam Rating: 5 out of 5 stars5/5Thanga Macham Rating: 5 out of 5 stars5/5Naan Nalina Nalliravu Rating: 0 out of 5 stars0 ratingsSaagaavaram Rating: 4 out of 5 stars4/5Karuppu Rattham Rating: 5 out of 5 stars5/5Uchi Nila Rating: 0 out of 5 stars0 ratings
Related to Neela Nira Malligai
Related ebooks
Aduththa Ilakku Rating: 0 out of 5 stars0 ratingsNovember Nalliravu Narmatha Rating: 0 out of 5 stars0 ratingsPesum Rojakkal Rating: 0 out of 5 stars0 ratingsAngey... Inkey... Enkey? Rating: 0 out of 5 stars0 ratingsKarpura Bommaigal Rating: 0 out of 5 stars0 ratingsKodu Thandathey! Rating: 4 out of 5 stars4/5Ethayum Oru Thadavai! Rating: 0 out of 5 stars0 ratingsAthu Ithu Ethu? Rating: 0 out of 5 stars0 ratingsFirst Flight to Paris Rating: 0 out of 5 stars0 ratingsKiliyugam Rating: 0 out of 5 stars0 ratingsOne + One = Zero Rating: 2 out of 5 stars2/5Sivappu Udai Thevathai! Rating: 0 out of 5 stars0 ratingsKaavyaavin Karuppu Thinangal Rating: 0 out of 5 stars0 ratingsCyanide Saamraajjiyam Rating: 5 out of 5 stars5/5Call From Tokyo Rating: 0 out of 5 stars0 ratingssaagavaram Rating: 0 out of 5 stars0 ratingsRani Irandaayiram Rating: 0 out of 5 stars0 ratingsMenmaiyaai Oru Vanmurai Rating: 0 out of 5 stars0 ratingsAntha 69 Naatkal! Rating: 0 out of 5 stars0 ratingsMatravai Nalliravu 1.05ku Rating: 0 out of 5 stars0 ratingsNamruthavin Naal Rating: 5 out of 5 stars5/5Oru Ponmaanaith Thedi Rating: 0 out of 5 stars0 ratingsIppadikku Oru Indian Rating: 0 out of 5 stars0 ratingsNil... Kavani...Kaathiru! Rating: 2 out of 5 stars2/5Ini Nee Irakkalaam Rating: 5 out of 5 stars5/5Nenju Porukkuthillaiye Rating: 0 out of 5 stars0 ratingsOru Thappu Thaalam Oru Sariyaana Raagam Rating: 5 out of 5 stars5/5Indru Irappu Vizha Rating: 0 out of 5 stars0 ratingsAugust 5 Athikalai Rating: 0 out of 5 stars0 ratingsNilavai Kalavu Sei Rating: 0 out of 5 stars0 ratings
Related categories
Reviews for Neela Nira Malligai
0 ratings0 reviews
Book preview
Neela Nira Malligai - Rajeshkumar
ராஜேஷ்குமார்
ஒரு மினி கேள்வியும் - ஒரு மினி பதிலும்:
கேள்வி: 2012 ஆம் ஆண்டில், இந்தியாவின் அரிசித் தேவை எவ்வளவு என்பதை உணவுத்துறை மதிப்பிட்டுள்ளது. அது எவ்வளவு என்று தெரியுமா?
பதில்: 2012 ஆம் ஆண்டில், இந்தியாவின் அரிசித் தேவை, 12 கோடியே 80 லட்சம் டன்னாக இருக்கும் என்றும், அந்த இலக்கை எட்ட ஹெக்டேர்க்கு 3 ஆயிரம் கிலோ உற்பத்திச் செய்யவேண்டும் என்றும் இந்திய அரசின் உணவுத்துறை தீர்மானித்துள்ளது.
1
சுப்ரஜா நிலைக்கண்ணாடிக்கு முன்னால் நின்று ஸ்டிக்கர் பொட்டை நெற்றியின் மையம் பார்த்துப் பொருத்திக் கொண்டிருந்த போது, அவளுடைய ப்ளாக்பெர்ரி செல்ஃபோன் - பியானோ இசையை ரிங்டோனாக வெளியிட்டது.
எடுத்து, அழைப்பது யார் என்று பார்த்தாள்.
அவளுடைய தோழி மனோரஞ்சிதம். உற்சாகத் துள்ளலோடு குரல் கொடுத்தாள்.
குட் மார்னிங் மனோ...
அதே குட்மார்னிங்... உனக்கும்....
என்ன இவ்வளவு காலையில் ஃபோன்..?
ஏன்... பண்ணக்கூடாதா?
பார்த்தியா... சண்டைக்கு வர்றே...! என்னிக்கும் இல்லாத அதிசமாய் - காலையில் ஏழு மணிக்கெல்லாம் ஃபோன் பண்றியே! அதான் ஏன்னுகேட்டேன்...
காரணம் இல்லாமே ஃபோன் பண்ணுவேனா?
என்ன காரணம்?
காரணத்தை நான் சொல்லமாட்டேன்... நீதான் கண்டுபிடிக்கணும்
இதோ பார் மனோ..! உன்னோட மனசுக்குள்ளே என்ன இருக்குன்னு கண்டுபிடிக்கிற அளவுக்கு நான் ஒண்ணும் அறிவு ஜீவி கிடையாது. ஒரு பேங்க்கில் - கம்ப்யூட்டர்க்கு முன்னாடி, டென்ஷனோடு உட்கார்ந்து வேலை பார்க்கிற ஒரு சாதாரண ஸ்டாஃப். இவ்வளவு காலையில் ஃபோன் பண்ணினதுக்கு என்ன காரணம்ன்னு, நீயே சொல்லிடறது பெட்டர்.
நோ சான்ஸ்..! நான் காரணத்தைச் சொன்னா, அது நம்ம அஞ்சு வருஷ ஃப்ரண்ட்ஷிப்புக்கு மெகா கேவலம்... அதுக்கப்புறம் நீயும் நானும் தோழிகளாய் இருக்கவே லாயக்கில்லை...
என்ன... மனோ... பெரிய பெரிய வார்த்தையெல்லாம் பேசிட்டிருக்கே...? உனக்கு இன்னிக்கு என்னாச்சு..?
எனக்கு ஒண்ணும் ஆகலை... உன்கிட்டேதான் ஏதோ பிரச்னை...! போய் மொதல்ல ஒரு நியூராலிஜிஸ்ட் டாக்டரைப் பாரு... ஒரு சி.டி. ஸ்கேன் எடு. எம்.ஆர்.ஐ. ஸ்கேன் எடு. டாக்டர்கிட்ட குடு. உனக்கு என்ன பிரச்னைன்னு அவர் சொல்வார்.
மறுமுனையில் மனோரஞ்சிதம் பொரிந்து தள்ள, சுப்ரஜா குறுக்கிட்டாள்.
சரி... சரி.. கோபப்படாதே... எனக்கு ஒரு அரைமணி நேரம் டயம் கொடு...
எதுக்கு..?
காரணத்தைக் கண்டுபிடிக்கத்தான்...
அரைமணி நேரத்துக்குள்ள கண்டுபிடிக்க லைன்னா?
என்னை எப்படி வேணும்ன்னாலும் திட்டு...
திட்டமாட்டேன்...
பின்னே..?
கட்
கட்டா..?
ம்.... உனக்கும் எனக்கும் இருக்கிற ஃப்ரண்ட்ஷிப் - ரெண்டு துண்டாகி உன் வீட்டு வாசல்ல கிடக்கும்...
ஏண்டி மனோ... இப்படியெல்லாம் பேசறே?
அப்படித்தான் பேசுவேன். சரியா அரைமணிநேரம் கழிச்சு, நீ எனக்கு ஃபோன் பண்ணணும். காரணத்தைச் சொல்லணும்...
சொல்லிடறேன்...!
பார்க்கலாம்...
மனோரஞ்சிதம் இணைப்பைத் துண்டித்துவிட, சுப்ரஜாவும் தன் செல்ஃபோனை அணைத்தாள்.
ஹால் சோபாவில் உட்கார்ந்து பேப்பர் பார்த்துக் கொண்டு இருந்த - சுப்ரஜாவின் அப்பா அருணகிரி - பேப்பரைத் தாழ்த்திக்கொண்டு கேட்டார்.
ஃபோன்ல யாரம்மா... உன்னோட ஃப்ரண்ட் மனோரஞ்சிதமா?
ஆமாப்பா... காலங்கார்த்தால சண்டைக்கு வர்றா.
அருணகிரி சிரித்தார்.
அவ என்னிக்குமே சண்டைக் கோழிதான்... ரொம்பவும் தைரியமான பொண்ணும்மா... இன்னிக்கு பேப்பர்ல அருமையான ஆர்ட்டிக்கிள் ஒண்ணை எழுதியிருக்கா... படிச்சுப் பார்த்தியா..?
இல்லேப்பா...
என்னம்மா... நீ...? உன்னோட ஃப்ரண்ட் மனோரஞ்சிதம், இன்னிக்கு இருக்கிற நிலவரப்படி ‘நெம்பர் ஒன்’ பிரஸ் ரிப்போர்ட்டர். புத்திசாலியான க்ரிட்டிக். இந்தச் சமூகத்தில் நடக்கிற எந்த ஒரு அநியாயத்தையும் தன் பேனாவாலேயே குத்திக் காட்டற தைரியசாலி. அது, அரசியல் அவலமாய் இருந்தாலும் சரி... சினிமா சீரழிவாய் இருந்தாலும் சரி... அந்த சம்பவம் சம்பந்தப்பட்ட எல்லா உண்மைகளையும் வெளிச்சத்துக்குக் கொண்டுவர்ற அதிரடி ஜர்ணலிஸ்ட்... அப்படிப்பட்ட பொண்ணுக்கு ஃப்ரண்டாய் இருக்கிற நீ - அவ எழுதற கட்டுரைகளைப் படிக்க வேண்டாமா?
அப்பா..!
என்ன..?
ஒரு உண்மையைச் சொல்லட்டுமா..?
சொல்லு...
என்னோட ஃப்ரண்ட் மனோரஞ்சிதம் ஒரு க்ரிட்டிக்காகவும் ஜர்ணலிஸ்ட்டாவும் இருக்கிறது எனக்குப் பிடிக்கவேயில்லை. இந்தச் சமுதாயத்தைச் சுத்தப்படுத்தறேன்னு சொல்லி, எல்லாக் குப்பைகளையும் கிளறிக் கிளறிப் பார்த்துட்டிருக்கா. அவ எழுதற எந்த ஆர்ட்டிக்கிளைப் படிச்சாலும் சரி, எனக்கு டென்ஷன் ஏறுது. அன்னிக்கு பூராவும் என்னால பேங்க்ல உட்கார்ந்து வேலை பார்க்க முடிறதே இல்லை.
இப்ப கடைசியாய் ஒரு வார்த்தை சொன்னியே.... இதுதான் மனோவோட பலம்... அவ எழுதற எழுத்தோட வீரியம்... அதுவும் இன்னிக்கு மனோ எழுதியிருக்கிற ஆர்ட்டிக்கள் சூப்பர்... நீ படிச்சுப்பாரேன்...
அய்யோ அப்பா..! இன்னிக்கு பேங்க்ல எனக்கு ஆடிட்டிங். ஒன்பது மணிக்கெல்லாம் சீட்ல இருக்கணும். இல்லேன்னா... மானேஜர் முகத்தை, கண் கொண்டு பார்க்க முடியாது. இப்பவே கிளம்பினாத்தான் ரெண்டு பஸ்களை மிஸ் பண்ணாமே பிடிச்சு - பேங்க் போய்ச் சேர முடியும்... நான் இன்னும் டிஃபன் வேற சாப்பிடலை...
என்று சொன்ன சுப்ரஜா சமையலறையைப் பார்த்துக் குரல் கொடுத்தாள்.
அம்மா..! டிஃபன் ரெடியா..?
ரெடியோ ரெடி... உப்புமாவைத் தட்டுல போட்டு வெச்சிருக்கேன். சாப்பிடு. நீ சாப்பிட்டு முடிக்கிறதுக்குள்ளே, உன்னோட லஞ்ச் பாக்ஸ் ரெடியாயிடும்.
மத்தியானத்துக்கு என்ன லஞ்ச்..?
தக்காளி சாதம், தயிர் சாதம்...
தயிர் சாதத்துக்குள்ளே மாவடு ஒண்ணை வெச்சுடு...
கூடவே, ஒரு மோர் மிளகாயையும் வெச்சுடறேன். போதுமா?
போதும்... போதும்...
சுப்ரஜா மறுபடியும் நிலைக்கண்ணாடிக்கு முன்பாய் நின்று, சிலும்பிக் கொண்டிருந்த தலைமுடியைச் சீப்பால் சீவி சரிப்படுத்திக்கொண்டு, டைனிங் டேபிளை நோக்கிப் போனாள். பொறுத்துக் கொள்ளக்கூடிய சூட்டோடு உப்புமா காத்திருந்தது. உட்கார்ந்து இரண்டு வாய்ச் சாப்பிட்டிருப்பாள், செல்ஃபோன் மறுபடியும் கூப்பிட்டது.
எடுத்துப் பார்த்தாள்.
மனோரஞ்சிதம்தான்.
காதுக்கு ஒற்றி... பேசினாள்.
ஹாய்... மனோ..!
என்ன ஞாபகம் வந்ததா?
எது..?
காரணம்...!
யோசிச்சுக்கிட்டே இருக்கேன்...
உன்னை இழுத்துப் போட்டு அடிக்கலாம்ன்னு இருக்கு...
இதோ பார் மனோ...! இன்னிக்கு எனக்கு பேங்க்ல ஆடிட்டிங். இப்போ, என்னோட மைண்ட்ல அது மட்டும்தான் இருக்கு.... நீ எதுக்காக எனக்கு ஃபோன் பண்ணினேன்னு யோசனை செய்ய நேரம் இல்லை. நீயே சொல்லிடேன்...!
மாட்டேன்...! நீதான் சொல்லணும்
என்னை ஏண்டி இப்படிப் படுத்தறே..?
அப்படித்தான் படுத்துவேன்..! நீ அரைமணி நேரம் டயம் கேட்டிருக்கே... அதுக்குள்ளே நீ ஃபோன் பண்ணி சொல்லணும். இல்லேன்னா...
இல்லேன்னா... என்ன பண்ணுவே..?
என்ன பண்றேன்னு நீயே பாரு...
காதகி..!
இருந்துட்டுப் போறேன்! அப்புறம்... இன்னிக்கு என்னோட ஆர்ட்டிக்கிளை இடியோசை பத்திரிக்கையில் பார்த்தியா..?
பார்த்தேன்... படிக்கலை... அப்பா படிச்சுட்டு, ‘ரொம்பவும் நல்லாயிருக்கு’ன்னு உன்னை ரொம்பவே பாராட்டினார்.
நீ படிக்கலையா..?
இல்லை...
ஏன்...?
நான்தான் சொன்னேனே... இன்னிக்கு எனக்கு பேங்க்ல ஆடிட்டிங்க்ன்னு...!
சுப்ரஜா..!
ம்...
நீ ரொம்பவும் மாறிட்டே... முன்னேயெல்லாம் என்னோட ஆர்ட்டிக்கிளைப் படிச்சுட்டு, வரிக்கு வரி பாராட்டுவே... இப்பெல்லாம் நீ கண்டுக்கிறதே இல்லை...
எனக்குப் பிடிக்கலை...
என்ன பிடிக்கலை..?
நீ எழுதறது மட்டும் இல்லை... நீ பார்க்கிற அந்த பிரஸ் ரிப்போர்ட்டர் வேலையும் எனக்குப் பிடிக்கலை. பேசாமே அந்த வேலையை ரிசைன் பண்ணிட்டு, பேங்க் வேலைக்கு அப்ளை பண்ணு...
சரி... பாட்டி..!
"மனோ..! உனக்கு எல்லாமே விளையாட்டாய்