Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

August 5 Athikalai
August 5 Athikalai
August 5 Athikalai
Ebook176 pages40 minutes

August 5 Athikalai

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

Rajesh Kumar, an exceptional Tamil novelist, in this service since 1968, written over 1500 novels and 1500 short stories, towards making the Guinness record… Readers who love the subjects Crime, Detective, Police and Science will never miss the creations of this outstanding author… since the author gets into the details of the subject, the readers’ knowledge enhances along with the joy of reading…
Languageதமிழ்
Release dateAug 1, 2016
August 5 Athikalai

Read more from Rajeshkumar

Related to August 5 Athikalai

Related ebooks

Related categories

Reviews for August 5 Athikalai

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    August 5 Athikalai - Rajeshkumar

    25

    1

    "உன்னால நிச்சயமா முடியுமா சிபி?"

    முடியும்.

    பின்னாடி ஸாரி'ன்னு சொல்லக் கூடாது.

    நான் இதுவரைக்கும் யார்க்கும் 'ஸாரி'யை சொல்லி தலையை சொறிஞ்சது கிடையாது. அது உனக்குத் தெரியுமா?

    நீ நினைக்கிற மாதிரி அது சாதாரண காரியம் கிடையாது சிபி!

    தெரியும்! நல்லாவே தெரியும். ரொம்ப ரொம்ப கஷ்டமான காரியம்தான்!

    பின்னே எப்படி உன்னால முடியும்ன்னு சொல்றே?

    காரணம்! எனக்கு கிடைக்கப் போகிற பணம். நீ சொன்ன மாதிரி ஒரு கோடி ரூபாய் வாங்கிக் கொடுத்துடுவே இல்லையா?

    கண்டிப்பா!

    அப்படின்னா வேலையை செஞ்சு முடிக்க நானும் தயார்.

    சரி! கார்ல ஏறு. பார்ட்டிகிட்ட போய்ப் பேசலாம்.

    அந்த இருபத்தைந்து வயது சிபி அந்த ராத்திரியான 9.05 மணியளவில் அந்த வழுக்கைத்தலை நபரோடு புறப்பட்டான்.

    க்ரே க்ளாஸிக் காண்டஸா கார். உள்ளே ஏர்க்கண்டிஷனர் 'ஹம்ம்ம்.' பண்ணியது. வழுக்கைத்தலை காரை ட்ரைவ் பண்ண ஹைவேஸ் ரோட்டில் ஹெட்லைட் வெளிச்சத்தில் அது எண்பது கிலோ மீட்டர் வேகத்தில் நீந்தியது.

    சிபி கேட்டான்.

    இப்பவாவது சொல்லு... பார்ட்டி யாரு?

    போன பின்னாடி நீயே தெரிஞ்சுக்குவே.

    நான்தான் ஒத்துக்கிட்டேனே. இனியும் என்ன மூடு மந்திரம்?

    வழுக்கைத்தலை சிரித்தது.

    உன்கிட்ட நான் எல்லாத்தையும் பேசிட முடியாது சிபி. என்னோட லிமிட்டைத் தாண்டி நான் எதுவும் பேசக் கூடாது. பார்ட்டி சொன்ன அந்த வேலையைச் செய்ய உன் ஒருத்தனால முடியும்ங்கிற ஒரேயொரு காரணத்துக்காகத் தான் உன்னைத் தேடி வந்தேன்.

    சிபி ஒரு சிகரெட்டைப் பற்ற வைத்துக் கொண்டு சிரித்தான். இதுவரைக்கும் நான் இவ்வளவு பெரிய தொகைக்கு பேரம் பேசினதே இல்லை. ஒரு கோடி ரூபாய் பிசினஸ். பார்ட்டி நிச்சயமா ஒரு ஊழல் அரசியல்வாதியாகத்தான் இருக்கணும்னு நான் நினைக்கிறேன். சரியா?

    எனக்குத் தெரியாது.

    நீ யார்கிட்டேயும் இவ்வளவு விசுவாசமா இருந்து நான் பார்த்தது இல்லை. பார்ட்டி நிச்சயம் பவர்ஃபுல்தான்.

    வழுக்கைத்தலை பதில் பேசாமல் காரின் வேகத்தை அதிகப்படுத்தி ஹைவேஸ் ரோட்டில் மேலும் பத்து கிலோ மீட்டர்களை விழுங்கிவிட்டு - மரங்கள் அடைந்த ஒரு பகுதிக்குள் நுழைந்தான்.

    இது எந்த எரியா?

    டாகூர் அவென்யூ... இது ஒரு ரிசார்ட் ப்ளேஸ்.

    கார் மரங்களுக்கு மத்தியில் நிதான வேகத்தில் ஓடி காட்டேஜ் மாதிரியான ஓரிரு வீடுகளைக் கடந்து பின் இயக்கத்தை நிறுத்திக் கொண்டு ஒரு வீட்டுக்கு முன்னாள் மௌனமாயிற்று.

    சிபி எட்டிப் பார்த்தான்.

    இருட்டில் வெளிச்சச் சிதறல்களோடு அந்த பங்களா பெரிய காம்பௌண்ட் சுவரோடு தெரிந்தது.

    வழுக்கைத்தலை கார் ஹார்னை சிக்கனமாய் கொடுக்க - காம்பௌண்ட் கேட் ஏதோ திரை விலகுவது போல் விலகி நிற்க கார் உள்ளே போய் போர்டிகோவில் ஒதுங்கி நின்றன.

    சிபி கீழே இறங்கினான்.

    மெலிதாய் பொழிந்த ப்ளட்லைட் வெளிச்சத்தில் கொரியன் க்ராஸ் லான் கரும்பச்சையாய் பார்வைக்கு கிடைத்தது. லானுக்கு கொஞ்சம் தள்ளி தொட்டிகளில் க்ரோட்டன்ஸ் இலைகள் நிறம் நிறமாய் சிரித்தான்.

    வா சிபி! வேடிக்கை பார்த்தது போதும் தோளில் கை வைத்து உள்ளே கூட்டிப் போனான் வழுக்கைத்தலை.

    சிபி நடந்தான். பார்வைக்கு யாரும் கிடைக்கவில்லை.

    ஹாலைக் கடந்தார்கள். ஜீரோ வாட்ஸ் வெளிச்சத்தோடு ஒரு பெரிய அறை வர அறையின் மையத்தில் ஆங்கில 'எல்' வடிவத்தில் ஒரு சோபா இருந்தது.

    "அந்த சோபாவில் நடை போட்டுக் கொண்டு போய் சோபாவுக்கு சாய்ந்தான்.

    வழுக்கைத்தலை மறைந்தான்.

    சிபி சற்றும் முற்றும் பார்த்துக் கொண்டு ஒரு ஐந்து நிமிஷங்களைக் கரைந்திருந்த போது அறையின் மூலையில் இருந்த ரோஸ்வுட் கதவைத் திறந்து கொண்டு பர்தா அணிந்த ஒரு பெண் வெளிப்பட்டு சிபியை நோக்கி வந்தாள்.

    வெல்கம் சிபி!

    சிபி அவளையே பார்த்தான்.

    ஒரு இளம் பெண்ணுக்குரிய குரல். பர்தாவின் கறுப்புத் துணி அவளை முளுமையாய் மறைத்திருக்க, கண்களும், கை விரல்களும் மட்டுமே பார்வைக்குக் கிடைத்தன.

    சிபிக்கு நேராய் வந்து உட்கார்ந்தாள். ஒரு சின்ன சிரிப்பு குரலில் தொற்றியிருக்கப் பேசினாள்.

    சில முக்கியமான விஷயங்களை பேசும் போது இந்த பர்தாவுக்குள்ளேதான் இருப்பேன். நான் முஸ்லீம் பெண் கிடையாது.

    நான் இதை எதிர்பார்க்கலை.

    எதை?

    இப்படியொரு பர்தா சந்திப்பை.

    சிபி எழுந்தான். அவள் பதட்டமாய்க் கேட்டாள். என்ன எந்திரிச்சுட்டிங்க?"

    நான் பெண்கள்கிட்ட பிசினஸ் பேசறது கிடையாது. அதுவும் முகத்தைக் காட்டாமே பிசினஸ் பேசினா எனக்குப் பிடிக்காது. நீ வேற ஆளைப் பார்த்துக்கலாம் நான் வர்றேன்.

    சொல்லிக் கொண்டே நகர முயன்றவனை தன் வலது கையை உயர்த்தி நிறுத்தினாள்.

    நில்லுங்க சிபி!

    அவன் நின்றான். அவன் பேசினாள். நீங்க வித்தியாசமானவர்ன்னு எனக்குத் தெரியும். ஆனா இவ்வளவு வித்தியாசமா இருப்பீங்கன்னு நான் நினைக்கலை. ப்ளீஸ்... உட்கார்ங்க.

    நான் உட்கார்ந்து பிசினஸ் பேசணும்னா உன் உடம்புல பர்தா இருக்கக் கூடாது. முகத்தைக் காட்டணும். எதையும் ஒளிவு மறைவு இல்லமே பேசணும். இந்த ரெண்டு கண்டிஷன்களுக்கு நீ ஒத்துக்கறதாயிருந்தா நான் உட்கார்றேன். இல்லேன்னா நான் போயிட்டேயிருக்கேன். ஒரு ரூபாய் பிசினஸாயிருந்தாலும் சரி, ஒரு கோடி போய் பிசினஸாயிருந்தாலும் சரி எனக்கு ஒளிவுமறைவு இருக்கக் கூடாது.

    சரி! பர்தாவை ரிமூவ் பண்ணிடறேன். உட்காருங்க... சொல்லிக் கொண்டே அவள் பர்தாவைக் களைத்து முகத்தைக் காட்டினாள்.

    அழகான முகம் பென்சில் புருவங்கள். லேசாய் லிப்ஸ்டிக் பூச்சு.

    சிபி உட்கார்ந்தான்.

    அவள் புன்னகைத்தாள்.

    இப்போ பேசலாமா?"

    மொதல்ல உன்னோட பேர்.

    பார்கவி!

    உண்மையான பேர்தானே?

    ஆமா!

    இந்த வீட்ல உன்னைத் தவிர வேற யார் யாரெல்லாம் இருக்காங்க?

    நான் மட்டும்தான்.

    சிபி சில விநாடிகள் மௌனித்து விட்டு மெல்லிய குரலில் கேட்டான்.

    நான் செய்யப் போகிற வேலைக்கு ஒரு கோடி ரூபாய் கொடுக்க சம்மதிச்சு ஆளை அனுப்பியிருக்கே. உன்னால அந்தத் தொகையை எப்படிக் கொடுக்க முடியும்னு எனக்குத் தெரியலை.

    உங்களுக்கு சந்தேகமா இருக்கா?

    மிகப்பெரிய சந்தேகம்.

    பார்கவி திரும்பிப் பார்த்து கோவிந்த் என்று குரல் கொடுக்க அந்த வழுக்கைத்தலை ஆள் சில விநாடிகள் கழித்து அறையின் இன்னொரு கதவைத்

    Enjoying the preview?
    Page 1 of 1