Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Matravai Nalliravu 1.05ku
Matravai Nalliravu 1.05ku
Matravai Nalliravu 1.05ku
Ebook312 pages1 hour

Matravai Nalliravu 1.05ku

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

Rajesh Kumar, an exceptional Tamil novelist, in this service since 1968, written over 1500 novels and 1500 short stories, towards making the Guinness record… Readers who love the subjects Crime, Detective, Police and Science will never miss the creations of this outstanding author… since the author gets into the details of the subject, the readers’ knowledge enhances along with the joy of reading…
Languageதமிழ்
Release dateAug 1, 2016
Matravai Nalliravu 1.05ku

Read more from Rajeshkumar

Related to Matravai Nalliravu 1.05ku

Related ebooks

Related categories

Reviews for Matravai Nalliravu 1.05ku

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Matravai Nalliravu 1.05ku - Rajeshkumar

    எடுக்கப்படும்.

    1

    விடியற்காலை ஐந்து மணி.

    கோவையின் புறநகரில் புதிதாய்ப் பிறந்திருக்கும் ஐஸ்வர்யா காலனி. 'ஏ' டைப் வீடுகளில் 'ஈ' பிளாக்கின் முதல் மாடி. சிவக்கக் காத்திருக்கும் கிழக்குத் திசை. வெளிச்சம் துளியூண்டு வந்தாலும் பறக்கக் காத்திருக்கும் பறவை சமாச்சாரங்கள். வாக்கிங் புறப்பட்டுப் போக, கார்களை வெளியே எடுக்கும் பணக்கார வர்க்கம். இன்றைக்கு ஏதாவது வேலை கிடைத்து, குழந்தைகளுக்கு அரை வயிற்றுக் கஞ்சியாவது வார்க்க முடியுமா என்று கவலைபட்டுக் கொண்டே கண் விழிக்கும் தொழிலாளி வர்க்கம். அவசர அவசரமாய் திருட்டுத்தனமாய் 'நோட்டீஸ் ஒட்டாதே' அறிவிப்பின் மேல் 'தீராத மோகம்' மலையாளப் பட போஸ்டர்களை ஒட்டும் சைக்கிள் பையன்கள். எந்தத் தெரு குழாயடியில் தண்ணீர் பிடித்து, பாலில் ஊற்றலாம் என்று யோசித்துக் கொண்டே சைக்கிள்களை ஓட்டும் பால்காரர்கள். நீளமான கொட்டாவிகளோடு வீட்டிற்குத் தூங்கப் போகும் ராத்திரி நேர வாட்ச்மேன்கள்.

    இவ்வளவு அவஸ்தைகளோடு அந்த வெள்ளிக்கிழமை காலை விடிந்து கொண்டிருக்க, 'ஈ' பிளாக்கின் முதல் மாடியின் பாத்ரூமிலிருந்து சித்ரா ஈரம் சொட்டும் உடம்போடு வெளிப்பட்டாள். பெட்டிக்கோட்டை மார்பு வரைக்கும் ஏற்றி கட்டிக்கொண்டு அருகிலிருந்த ட்ரெஸ்ஸிங் அறைக்குள் நுழைந்து விருட்டென்று கதவைச் சாத்திக் கொண்டாள்.

    இந்த ஒரு பத்து வினாடிக் காலம் உங்களால் பார்க்கப்பட்ட சித்ராவுக்கு வயது இருபத்தைந்து இருக்கலாம். பழுத்த எலுமிச்சை நிறம். பெண்களுக்கு இருக்க வேண்டிய சராசரி உயரம். நடிகை நளினி மாதிரி நீள்வட்ட முகம். கண்கள் இரண்டும் பெரிசு... பெரிசாய்... மை போட்டுக் கொள்கிற நாட்களில் ஏராளமான மின்சாரத்தை உற்பத்தி செய்யும்.

    கல்யாணமாகி இன்றைய தேதிக்கு ஐந்து வருஷம் முடியப் போகிறது. அவளுடைய கழுத்தில் தாலி கட்டிய முரளி, கல்யாணப் பொண்ணை யாரும் பார்க்க மாட்டாங்க... உன்னைத்தான் பார்க்கப் போறாங்க என்றான்.

    சித்ரா புன்னகைத்தபடியே, கண்ணாடியை விட்டு நகர்ந்த அதே வினாடி அபார்ட்மெண்ட் வாசலில் ஆட்டோ ஒன்று படபடத்து நிற்கும் சத்தம் கேட்டது. சித்ரா வேக வேகமாய்ப் போய் ஜன்னல் வழியே கீழே எட்டிப் பார்த்தாள்.

    பரவியிருந்த விடிகாலை இருட்டில், ஆட்டோ ஒன்று நின்றிருக்க அதிலிருந்து ரமேஷ் - அவளுடைய தம்பி - கையில் வைத்திருந்த சூட்கேசோடு கீழே இறங்கிக் கொண்டிருந்தான். முதுகுக்குப் பின்னால் முரளியின் குரல் கேட்டது.

    ஆட்டோவில் யார் சித்ரா?

    என்னோட தம்பி.

    ரமேஷா...? என்ன திடீர்னு புறப்பட்டு வந்திருக்கான்...

    தெரியலையே...

    உடம்பைச் சுற்றியிருந்த போர்வையை உதறிவிட்டு லுங்கியோடு எழுந்து நின்றான் முரளி. படியேறி வரும் ரமேஷைச் சந்திக்கத் தயாரானான்.

    அரை நிமிஷ அவகாசத்திற்குப் பிறகு -

    ரமேஷ் உள்ளே வந்தான். இருபத்திரண்டு வயது. அசப்பில் சித்ராவின் முகஜாடை. நிறத்தை மட்டும் வாங்க தவறிப் போய், புண்ணாக்கு நிறத்தில் இருந்தான். கண்களுக்கு அந்த நேரத்திலும் குளிர் கண்ணாடி கொடுத்திருந்தான். கரிக்கட்டையால் கோடிழுத்த மாதிரி அடர்த்தியான மீசை. பற்களில் பான் கறை. ஸ்டோன் வாஷ் சர்ட்டிலும், பேண்ட்டிலும் பிரயாணக் களைப்புத் தெரிய உள்ளே வந்து கொண்டிருந்தான்.

    வாடா ரமேஷ்... சித்ரா வரவேற்றாள்.

    என்ன ரமேஷ்... திடீர்னு..." முரளி ஆச்சரியமாய்க் கேட்டுக் கொண்டே அவனை நெருங்கினான்.

    ரமேஷ் கையிலிருந்த சூட்கேஸைக் கீழே வைத்துக் கொண்டே சொன்னான். அத்தான்... ஒரு மாசம் உங்க வீட்லதான் டேரா போடப் போறேன்... எனக்கு உங்க ஊர் மில்லுல அப்ரண்டீஸ் வேலை கிடைச்சிருக்கு...

    கங்கிராட்ஸ், எந்த மில்லுல...?

    சூலூர் ஸ்பின்னர்ஸ்...

    ட்ரெயினிங் பீரியட் எவ்வளவு மாசம்...? சித்ரா கேட்டாள்.

    ஒரு மாசம்...

    அப்புறம்...?

    அப்புறம் நம்ம ஊர் ராஜபாளையத்திலேயே ஜெயஜோதி மில்ஸ்ல ஏ.எஸ்.எம். போஸ்ட்ல வேலை... சம்பளம் ஆரம்பத்திலேயே ஆயிரம் ரூபாயைத் தாண்டும்.

    ராஜபாளையத்திலிருந்து ராத்திரி எத்தனை மணிக்குப் புறப்பட்டே?

    ஒன்பது மணிக்கு...

    வீட்ல அம்மாவும், அப்பாவும் சவுக்கியமா?

    ம்... நல்லாத்தான் இருக்காங்க...

    அப்பாவுக்கு இன்னும் அந்த நெஞ்சுவலி வருதா?

    எப்பவாவது வரும். மாத்திரை சாப்பிட்டா சரியாயிடும்... ஆமா, நீ எங்கேக்கா கிளம்பிட்ட... இந்த நேரத்திலே...? கோயிலுக்கா...?

    இல்ல, ஒரு கல்யாணத்துக்கு. ரொம்பவும் நெருங்கின சிநேகிதியோட கல்யாணம். கல்யாண வீட்டில் சில மணி நேரமாவது இருக்கணும். அங்கே இருந்துட்டு அப்படியே ஆபீஸ் போறேன்... சாயந்தரம்தான் வீட்டுக்குத் திரும்பி வருவேன். நீ கொஞ்ச நேரம் ரெஸ்ட் எடுத்துட்டு குளி. அத்தான் கூடவே ஓட்டலுக்குப் போய் சாப்பிட்டுட்டு மில்லுக்குப் போயிடு.

    ம்...

    நான் கிளம்பறேன்...

    ஏன்க்கா, நீ தனியாவா போறே?

    என்னடா பயம்...? பொழுதுதான் விடிஞ்சாச்சே. ஒரு ஆட்டோ பிடிச்சா நேரா கல்யாண மண்டபத்துக்குப் போயிடப் போறேன்...

    சொல்லிக் கொண்டே, வாசல் கதவைத் தாண்டினாள் சித்ரா.

    கல்யாண வீட்டில் ஒன்பது மணி வரைக்கும் இருந்துவிட்டு, ஆபீஸ் புறப்பட்டுப் போக பஸ் ஸ்டாப்புக்கு வந்தாள் சித்ரா. பஸ் ஸ்டாப்பில் கூட்டம் கசகசத்தது. எல்லோருமே ஆபீஸ் புறப்பட்டுப் போகிறவர்கள். கையிலிருந்த வாட்ச்சையும் பஸ் வரும் திசையையும் மாறி மாறிப் பார்த்துக் கொண்டிருந்தார்கள்.

    வந்த ஒரு பஸ்ஸிலும் ஜனங்கள் சாய்ந்து தொங்க - அந்த பஸ், ஸ்டாப்பிங்கில் நிற்காமல், தள்ளிப் போய் நின்றது. சித்ரா பஸ்ஸைப் பிடிக்க ஓடினாள். தபதபவென்று ஓடி பஸ்ஸை நெருங்கிய சமயம், அந்த பஸ் பீறிட்டு வேகம் பிடித்தது.

    சித்ரா ஏமாற்றமாய்த் திகைத்து நின்ற நேரம் -

    அருகில் அந்த மாருதி கார் உரசிக் கொண்டு வந்து நின்றது!

    திரும்பினாள்.

    காரின் கண்ணாடி கதவைக் கீழே இறக்கியபடி - டிரைவிங் சீட்டிலிருந்த இளைஞன் எட்டிப் பார்த்தான். அழகாய் இருந்தான். அவனுடைய சுருண்ட கிராப் காற்றில் அலைந்தது. சித்ராவைப் பார்த்து மெல்லிய குரலில் கேட்டான்.

    நீங்க மிஸஸ் சித்ரா முரளிதானே...?

    குழப்பத்தை முகத்தில் தேக்கினபடி சித்ரா அவனைப் பார்த்தாள். ஆமா... என்றாள்.

    அந்த இளைஞன் புன்னகைத்தான். நான் முரளியோட ஃப்ரெண்ட். ஒரு கன்சர்ன்ல சார்ட்டட் அக்கவுண்டண்டா இருக்கேன்... என்னோட பேரு கவுரிசங்கர். என்னைப்பத்தி முரளி உங்ககிட்டே சொல்லியிருக்கலாம்...

    சித்ராவுக்குச் சட்டென்று ஞாபகம் வந்தது. 'என்னோட ஃப்ரெண்ட் கவுரிசங்கர் தன்னோட வீட்டுக்கு வாப்பான்னு ரொம்ப நாளா கூப்பிட்டுக்கிட்டே இருந்தான்... எனக்குத்தான் அவனோட வீட்டுக்குப் போறதுக்கு என்னமோ மாதிரி இருக்கு... அவன் ஆகாயத்துல ஜம்போ ஜெட்டிலும், தரையில மாருதியிலும் பயணம் செய்யற ஆசாமி... அவன் ஏதோ பேச்சுக்காகக் கூப்பிடறான்... அதுக்காக ஓடிப் போயிட முடியுமா...?'

    அந்த கவுரிசங்கரா இவன்...?

    சித்ரா சுதாரித்துச் சொன்னாள். ஆமா, உங்களைப் பத்தி சொல்லியிருக்கார்...

    நீங்க எங்கே போகணும்...?

    ஆபீசுக்கு...

    உங்க ஆபீஸ் எங்கே இருக்கு...?

    ரேஸ்கோர்ஸ்ல ரோட்ல...

    உங்களுக்கு ஆட்சேபனை இல்லேன்னா என்னோட கார்லேயே வரலாம்... ப்ளீஸ் கெட் இன்... நான் அந்த வழியாதான் போறேன்...

    வேண்டாம்... எனக்கு பஸ் வந்துடும்...

    டோன்ட் ஹெசிட்டேட்... ட்ரீட் மீ ஆஸ் யுவர் பிரதர்... பஸ் ஸ்டாப்புல கூட்டத்தைப் பார்த்தீங்களா? நீங்க ரெண்டு மணி நேரம் இங்கே நின்னாலும் உங்களுக்கு பஸ் கிடைக்காது...

    பஸ் ஸ்டாப்பைத் திரும்பிப் பார்த்தாள் சித்ரா. கூட்டம் முன்னைக்கு இப்போது அதிகமாயிருந்தது. பெரும்பாலும் ஆண்கள்.

    என்ன யோசனை பண்றீங்க... மிஸஸ் சித்ரா...? ப்ளீஸ் ஏறுங்க... அவன் மறுபடியும் வற்புறுத்தவே காருக்குள் ஏறிக்கொண்டாள் சித்ரா.

    கார் நகர்ந்தது. சிறிது நேர நகரலுக்குப் பின் அவன் கேட்டான்.

    நீங்க எந்தக் கம்பெனியில வேலை பார்க்கறீங்க?

    ஜெய்சன் அண்ட் ஜான்சன்...

    டெசிக்னேஷன்?

    டைப்பிஸ்ட்...

    நீங்களும் வேலைக்குப் போற விஷயம் ஆறுதலா இருக்கு. முரளியோட சஸ்பெண்ட் ஆர்டரை எப்போ ரத்து செய்யப் போறாங்களாம்...?

    திக்கென்று நிமிர்ந்தாள் சித்ரா.

    சஸ்பெண்ட் ஆர்டரா...? என்ன சொல்றீங்க...?"

    இப்போது கவுரிசங்கர் ஆச்சரியப்பட்டான்.

    உங்க ஹஸ்பெண்ட் முரளி சஸ்பெண்ட் ஆனா விஷயமே உங்களுக்குத் தெரியாதா...? போன வாரத்துல ஒரு நாள் அவனைப் பார்க்கிறதுக்காக அவனோட கம்பேனிக்குப் போனேன்... அங்கேயிருந்த ரிஸப்ஷனிஸ்ட்தான் சொன்னாள். முரளியை நிர்வாகம் சஸ்பெண்ட் பண்ணி வெச்சிருக்கிற விஷயத்தையும்... அவன் மேல இருக்கிற என்கொயரியையும் சொன்னாள். முரளி உங்ககிட்ட விஷயத்தைச் சொல்லவேயில்லையா...?

    விக்கித்துப் போய் உட்கார்ந்திருந்தாள் சித்ரா.

    2

    சித்ராவின் இருதயம் ஏராளமான துடிப்பில் இருந்தது. முகத்திலும், கழுத்திலும், கழுத்தின் பின்பகுதியிலும் குபீரென்று வியர்த்துப் போனாள். அவளுடைய முக பாவத்தைச் சட்டென்று படித்துவிட்ட கவுரிசங்கர் பதட்டக் குரலில் சொன்னான்.

    ஸாரி... உங்களுக்கு விஷயமே தெரியாதுன்னு நினைக்கிறன். உங்க மனசு கஷ்டப்படுமேன்னு முரளி சொல்லாம இருந்திருக்கலாம்...

    அதிர்ச்சியை ஒரு விஷம் மாதிரி விழுங்கிக் கொண்டு, மெல்லிய குரலில் சித்ரா கேட்டாள். அவரை என்னிக்கு சஸ்பெண்ட் பண்ணினாங்கன்னு உங்களுக்குத் தெரியுமா...?

    எனக்குச் சரியா தெரியலை...

    என்ன காரணத்துக்காக சஸ்பெண்ட் பண்ணியிருக்காங்கன்னு கேட்டீங்களா...?

    கேட்டேன்.

    என்ன சொன்னாங்க?

    கம்பெனி சம்பந்தப்பட்ட விஷயத்தை வெளியாட்கள் யாருக்கும் சொல்ல முடியாதுன்னு சொல்லிட்டாங்க. அதுக்கு மேலே கேக்கிறது நாகரீகமில்லன்னு திரும்பிட்டேன்.

    அதுக்கப்புறம் என்னோட கணவரை நீங்க எங்கேயாவது சந்திச்சுப் பேசினீங்களா?

    அதுக்கப்புறம் நான் பாம்பே போயிட்டு நேத்தைக்கு காலையிலதான் திரும்பி வந்தேன்... இன்னும் அவனைப் பார்க்கலை.

    நீங்க எனக்கொரு உதவி பண்ண முடியுமா? சித்ரா தவிப்பான குரலில் கேட்கவும், வேகமாய் போய்க் கொண்டிருந்த காரின் வேகத்தைக் குறைத்த கவுரிசங்கர் பக்கவாட்டில் திரும்பிப் பார்த்தான்.

    என்ன ஹெல்ப்? சொல்லுங்க...

    அவரோட கம்பெனியில என்னை ட்ராப் பண்ணிடுங்க.

    எதுக்கு...?

    அவரை எதுக்காக சஸ்பெண்ட் பண்ணினாங்கன்னு விசாரிக்கணும். வெளியாட்கள் போனாத்தான் சொல்லமாட்டாங்க... நான் அவரோட மனைவி... எனக்குமா சொல்லமாட்டாங்க?

    மிஸஸ் சித்ரா... நான் ஒண்ணு சொல்லலாமா?

    சொல்லுங்க...

    நீங்க கம்பெனியில் போய் விசாரிக்கிறதைக் காட்டிலும் வீட்டுக்குப் போய் முரளியை விசாரிக்கலாமே...?

    கசப்பாய்ப் புன்னகைத்தாள் சித்ரா. இந்நேரத்துக்கு அவர் வீட்ல இருக்க மாட்டார். சஸ்பெண்ட் பண்ணின விஷயத்தை என்கிட்டயே மறைச்சு வெச்சு... தினமும் ஆபீஸ் போற மாதிரி பாவ்லா காட்டியிருக்கார்... மூஞ்சியில துளியத்தனை வருத்தமோ, வாட்டமோ இல்லாமே என்கிட்டே நாடகமாடியிருக்கார். ஆபீஸ் போக பஸ் சார்ஜ் கேப்பார்... மத்தியானம் சாப்பிட சாதம் கட்டிக்கிட்டுப் போயிடுவார்... அவர்கிட்டே போய் உங்களை ஏன் சஸ்பெண்ட் பண்ணினாங்கன்னு கேட்டா... ஏதாவது ஒரு பொய்யைத்தான் சொல்லுவார். அவரோட கம்பெனிக்குப் போனாத்தான் உண்மையே தெரியும். ப்ளீஸ் ட்ராப் மீ அட் நாத் பெர்டிலைசர்ஸ்...

    சரியென்று தலையாட்டிய கவுரிசங்கர், காரை ப்ரூக் பாண்ட் ரோட்டில் நுழைந்து ராம் நகரை நோக்கிப் போனான்.

    ஐந்தே நிமிஷம்!

    முரளி வேலை பார்க்கும் நாத் பெர்டிலைசர்ஸ் வந்தது. காரை நிறுத்திக் கொண்டே கவுரிசங்கர் சொன்னான்.

    காலை நேரத்துல வீணா உங்களுக்கு மனக் கஷ்டத்தைக் குடுத்துட்டேன். வெரி... வெரி ஸாரி. முரளி உங்ககிட்டே சஸ்பெண்ட் விஷயத்தைச் சொல்லி இருப்பார்னு நினைச்சேன்.

    ஸோ வாட்? அவர் எப்பவுமே பொய் பேசற ஜாதிதான்...! என்னைக் கல்யாணம் பண்ணிக்கிறதுக்காக தன்னோட சம்பளத்தையே மூவாயிரம்னு சொன்னவர். ஊர்ல சொந்த வீடும், நிலமும் இருக்கிறதா சொன்னார். ஆனா, அந்த ரெண்டும் கடன்ல மூழ்கிப்போன விஷயத்தை சொல்லவேயில்லை! சொல்லிக் கொண்டே காரினின்றும் இறங்கிக் கை குவித்தாள் சித்ரா. ரொம்பவும் நன்றிங்க...

    கார் நகர்ந்தது.

    'நாத் பெர்டிலைசர்ஸ்'க்குள்ளே போனாள் சித்ரா. கட்டடத்தின் பின் பக்கத்திலிருந்து மிதந்து வந்த காற்றில் யூரியாவும், சல்பேட்டும் காரமாய் மூக்குக்குள் மணத்தது. கண்ணாடிக் கதவைத் திறந்து கொண்டு ரிஸப்ஷனிஸ்ட்டை நெருங்கினாள்.

    "ஐ வாண்ட்

    Enjoying the preview?
    Page 1 of 1