Selva Kalanjiyame - Part 2
()
About this ebook
எனது பெயர் ரஞ்சனி நாராயணன். திருமணத்திற்கு முன் ஒரு ஸ்டெனோ-டைப்பிஸ்ட். திருமணம் ஆன பின் முழு நேர இல்லத்தரசி. பல வருடங்கள் கழித்து ஆங்கிலம் பேசச்சொல்லிக் கொடுக்கும் பயிற்சியாளர் ஆக ஒரு வாய்ப்பு கிடைக்கவே அதையும் ஏற்று செம்மையாக செய்தேன். திறந்தவெளிப் பல்கலைகழகத்தில் படித்த சமூகவியல் முதுகலைப் பட்டதாரி நான்.
ஸ்ரீரங்கத்தில் பிறந்து, சென்னையில் வளர்ந்து திருமணம் ஆகி, இப்போது இருப்பது பெங்களூரில். முதலில் இல்லத்தரசி என்று சொல்லிக் கொள்வதை விரும்பினாலும் எழுத்தாளர் என்ற அடையாளம் என்னை ரொம்பவும் மகிழ்ச்சி அடைய வைக்கிறது. பல வருடங்களாக பத்திரிகைகளில் அவ்வப்போது எழுதி வந்தாலும் இணையத்தில் சில ஆண்டுகளாகத்தான் தீவிரமாக இயங்க ஆரம்பித்திருக்கிறேன். இணையத்தில் எனக்கென ஒரு இடம் பிடித்திருப்பது சந்தோஷமான விஷயம். இணையத்தில் என் எழுத்துக்களைப் படித்துவிட்டு தங்கள் தளத்தில் எழுதும்படி சில இணைய இதழ்கள் கேட்டுக்கொண்டதும் நான் எழுத்தினை தீவிரமாகத் தொடரக் காரணம்.
புத்தகங்கள் வாசிப்பது எனது அம்மாவிடமிருந்து நான் (நாங்கள்) கற்றது. 89 வயதிலும் அம்மா இன்னமும் புத்தகமும் கையுமாகத்தான் இருக்கிறாள். நாங்கள் பள்ளிப்புத்தகமும் கையுமாக இருந்த காலத்தில் அம்மாவும் எங்களுடன் புத்தகமும் கையுமாக அமர்ந்திருப்பாள். படிப்பதுடன் கோர்வையாக எழுதுவதும் அம்மாவிற்கு கைவந்த கலை. எனது எழுத்து, வாசிப்பு இரண்டிற்கும் நான் என் அம்மாவிற்குத்தான் நன்றி சொல்லவேண்டும். இந்தக் காரணங்களாலேயே எனது முதல் புத்தகத்தை (விவேகானந்தர்) என் அம்மாவிற்கு சமர்ப்பணம் செய்துள்ளேன்.
‘சுவாமி விவேகானந்தர்’ என்ற இந்தப் புத்தகம் எளிமையான முறையில் தமிழ் வாசகர்களுக்கு சுவாமிஜியை அறிமுகப்படுத்தும் என்று நம்புகிறேன். ஒரு மகானைப் பற்றிய புத்தகத்துடன் எனது அச்சுப்புத்தகப் பயணம் தொடங்கி இருப்பதில் மன நிறைவு கொள்ளுகிறேன்.
டிஜிட்டல் வடிவிலும் இந்தப் புத்தகத்தைப் படித்து உங்கள் கருத்துக்களை என்னுடன் பகிர்ந்து கொள்வீர்கள் என்று எதிர்பார்க்கிறேன். தொடர்ந்து உங்கள் ஊக்கத்தையும், உற்சாகத்தையும் அளிக்கவேண்டும் என்று கேட்டுக்கொள்ளுகிறேன்
என் எழுத்தைப் படித்துப் பாராட்டும் எல்லோருக்கும் எனது மனமார்ந்த நன்றி.
Read more from Ranjani Narayanan
Swamy Vivekanandar Rating: 5 out of 5 stars5/5Malala Rating: 0 out of 5 stars0 ratingsSelva Kalanjiyame - Part 1 Rating: 0 out of 5 stars0 ratings
Related to Selva Kalanjiyame - Part 2
Related ebooks
Petrorgale Kavaniyungal Part 1 Rating: 0 out of 5 stars0 ratingsThathu Arinthathum Ariyathathum Rating: 0 out of 5 stars0 ratingsYethu Aanmai? Rating: 5 out of 5 stars5/5Magaperu Magathuvam Rating: 0 out of 5 stars0 ratingsPyramidgalum Avai Patriya Athisayangalum Rating: 0 out of 5 stars0 ratingsDeivam Thantha Poove Rating: 0 out of 5 stars0 ratingsSittha Jaalam Rating: 0 out of 5 stars0 ratingsManitha Vazhkkai Rating: 0 out of 5 stars0 ratingsNeela Nira Malligai Rating: 0 out of 5 stars0 ratingsPenmozhi Rating: 0 out of 5 stars0 ratingsArinthum Ariyamalum Rating: 5 out of 5 stars5/5Vinothamanavaley - Part 2 Rating: 0 out of 5 stars0 ratingsNee Pathi... Naan Pathi...! Rating: 4 out of 5 stars4/5Puthiya Siragukal Rating: 0 out of 5 stars0 ratingsMadamaiyai Koluthuvom Rating: 0 out of 5 stars0 ratingsMaathummai... Rating: 5 out of 5 stars5/5Buddharin Bothanaigalum Zen Kutty Kathaigalum Rating: 0 out of 5 stars0 ratingsMannil Theriyuthu Vanam Rating: 0 out of 5 stars0 ratingsMalarum Ullam Part 2 Rating: 0 out of 5 stars0 ratingsIndru Mudhal Happy Rating: 0 out of 5 stars0 ratingsUrchagam Ungal Kaiyil Rating: 0 out of 5 stars0 ratingsChocolate Saavigal Rating: 0 out of 5 stars0 ratingsOttangal Rating: 0 out of 5 stars0 ratingsPathu Maatha Bandam Rating: 0 out of 5 stars0 ratingsAasarakovai Rating: 5 out of 5 stars5/5Saarana Iyakka Thanthai Baden Powell Rating: 0 out of 5 stars0 ratingsMazhalai Ulagu Rating: 0 out of 5 stars0 ratingsPuthiya Kadavul Rating: 0 out of 5 stars0 ratingsIdhu Pothum Rating: 0 out of 5 stars0 ratingsSamskirutha Selvam Part - 2 Rating: 0 out of 5 stars0 ratings
Reviews for Selva Kalanjiyame - Part 2
0 ratings0 reviews
Book preview
Selva Kalanjiyame - Part 2 - Ranjani Narayanan
http://www.pustaka.co.in
செல்வ களஞ்சியமே – பாகம் 2
Selva Kalanjiyame - Part 2
Author:
ரஞ்சனி நாராயணன்
Ranjani Narayanan
For more books
http://www.pustaka.co.in/home/author/ranjani-narayanan-novels
Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.
All other copyright © by Author.
All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.
பொருளடக்கம்
அத்தியாயம் 1
அத்தியாயம் 2
அத்தியாயம் 3
அத்தியாயம் 4
அத்தியாயம் 5
அத்தியாயம் 6
அத்தியாயம் 7
அத்தியாயம் 8
அத்தியாயம் 9
அத்தியாயம் 10
அத்தியாயம் 11
அத்தியாயம் 12
அத்தியாயம் 13
அத்தியாயம் 14
அத்தியாயம் 15
அத்தியாயம் 16
அத்தியாயம் 17
அத்தியாயம் 18
அத்தியாயம் 19
அத்தியாயம் 20
அத்தியாயம் 21
அத்தியாயம் 22
அத்தியாயம் 23
அத்தியாயம் 24
அத்தியாயம் 25
அத்தியாயம் 26
அத்தியாயம் 27
அத்தியாயம் 28
அத்தியாயம் 29
அத்தியாயம் 30
அத்தியாயம் 31
அத்தியாயம் 32
அத்தியாயம் 33
அத்தியாயம் 34
அத்தியாயம் 35
அத்தியாயம் 36
அத்தியாயம் 37
அத்தியாயம் 38
அத்தியாயம் 39
அத்தியாயம் 40
அத்தியாயம் 41
அத்தியாயம் 42
அத்தியாயம் 43
அத்தியாயம் 44
அத்தியாயம் 45
அத்தியாயம் 46
அத்தியாயம் 47
அத்தியாயம் 48
அத்தியாயம் 49
அத்தியாயம் 50
செல்வ களஞ்சியமே
பாகம் 2
அத்தியாயம் 1
இரட்டைக் குழந்தைகள்
‘சலசலசலசல ரெட்டைக்கிளவி, தகதகதகதக ரெட்டைகிளவி
உண்டல்லோ தமிழில் உண்டல்லோ
பிரித்து வைப்பது நியாயம் இல்லை, பிரித்துப் பார்த்தால் பொருளும் இல்லை
ரெண்டல்லோ ரெண்டும் ஒன்றல்லோ’
தமிழ் படங்களுக்கு கதைகளை வாரி வழங்கும் வள்ளல்கள் இவர்கள். எத்தனை எத்தனை படங்கள்! ‘எங்கவீட்டுப் பிள்ளை’ படம் எல்லோருக்கும் நினைவு இருக்கும். இரண்டு எம்ஜிஆர்கள். ஒருவர் பரமசாது; ஒருவர் முரடர். உத்தமபுத்திரன் சிவாஜி? ஒருவர் ஆட்டம்பாட்டம் என்றிருக்க, ஒருவர் இழந்த நாட்டை மீட்க (நடுவில் பத்மினியுடன் ‘முல்லை மலர் மேலே’ என்று பாடிக்கொண்டு) வீரமாக வில்லன்களுடன் போரிட்டுக் கொண்டிருப்பார். எங்கவீட்டுப் பிள்ளை எல்லா மொழிகளிலும் எடுக்கப்பட்டு வெற்றிகரமாக ஓடிய படம். Baby’s Day out படத்தை யாராலும் அவ்வளவு சுலபத்தில் மறக்கமுடியாது. இந்தக் கதையில் ஒரு குழந்தையைத்தான் கடத்துவார்கள். ஆனால் நடித்தது இரட்டையர். எப்போதும் சிரிக்கும் ஒரு பாப்பா; அவ்வப்போது ‘மூடி’ ஆகும் இன்னொரு பாப்பா!
இவ்வளவு முன்னுரை போதுமென்று நினைக்கிறேன். இதற்குள் நான் எதைப்பற்றி பேச விரும்புகிறேன் என்று புரிந்திருக்கும். இரட்டைக் குழந்தைகள் பற்றி இந்த வாரம் பேசலாம்.
இரட்டைக் குழந்தைகள் எப்படி உருவாகிறார்கள்? ஒரு சினைமுட்டை கருவுற்ற சில நாட்களில் இரண்டாகப் பிரிந்து இரண்டு குழந்தைகள் உருவாகலாம். இப்படி பிறக்கும் குழந்தைகள் இரண்டு ஆண் அல்லது இரண்டு பெண் (identical twins) என்று இருக்கும். அல்லது இரண்டு முட்டைகள் தனித்தனியாக உருவாகி தனித்தனி விந்துக்களுடன் சேர்ந்து இரண்டும் சினைமுட்டைகளாக மாறலாம். இதனால் ஆண் ஒன்று, பெண் ஒன்று என்று இரட்டையர்கள் (fraternal twins) தோன்றுவது உண்டு. சில சமயம் ஒரு சினைமுட்டை இரண்டாகப் பிரியும்போது முழுவதும் பிரிந்து போகாமல், கொஞ்சம் ஒட்டிக்கொண்டு அப்படியே கர்ப்பப்பையில் வளர்ந்து குழந்தைகள் ஒருவரோடு ஒருவர் ஓட்டிப் பிறப்பார்கள் (conjoined twins). இப்படிப் பிறக்கும் குழந்தைகளை சியாமிஸ் இரட்டையர் என்றும் சொல்லுவது உண்டு.
இரட்டையர் பிறப்பதற்கு காரணங்கள் இருக்கின்றனவா?
• சில இனங்களில் இயற்கையாகவே இரட்டையர் பிறக்கின்றனர். நைஜீரியர்களில் இரட்டையர் அதிகம். ஜப்பானியர்களில் குறைவு.
• அம்மா வழியில் இரட்டையர் இருந்தால் மகளுக்கும் இரட்டையர் பிறக்க வாய்ப்பு அதிகம். இரட்டையர் பிறப்பில் அப்பாவின் பங்கு குறைச்சல் தான்.
• முப்பது வயதுக்கு மேல் குழந்தை பெற்றுக்கொள்ளும் பெண்களுக்கு இரட்டையர் பிறப்பதாக புள்ளிவிவரங்கள் கூறுகின்றன.
• ஏற்கனவே குழந்தை இருக்கிறவர்களுக்கு அடுத்து இரட்டையர் பிறக்க வாய்ப்புகள் அதிகம்.
ஒரு சினைமுட்டை ஏன் இரண்டாகப் பிரிய வேண்டும் என்பதற்கெல்லாம் சரியான மருத்துவக் காரணங்கள் இல்லை. ஆனால் தற்போது குழந்தை பிறக்க வேண்டும் என்று சில பெண்களுக்கு அதிக அளவில் முட்டைகள் உருவாக கொடுக்கப்படும் மருந்துகளினால் சினைமுட்டை இரண்டாகப் பிரியக் கூடும் என்று மருத்துவர்கள் சொல்லுகிறார்கள்.
நம் ஊரில் இரட்டையாக ஒட்டியிருக்கும் பழங்களை, காய்களை சாப்பிட்டால் இரட்டை குழந்தை பிறக்கும் என்று சொல்லி என் அம்மா எங்களை (என் அக்காவையும், என்னையும்) இவற்றை தொடக்கூட விடமாட்டாள்.
ஒரு குழந்தையைப் பார்த்துக் கொள்வதே போதும் போதுமென்று இருக்கிறது, இதில் இரட்டையா? என்று தோன்றும். என்னைக் கேட்டால் ஒரே தடவை கருத்தரித்து, இரண்டு குழந்தைகள் என்றால் பரவாயில்லை என்று சொல்லுவேன். ஒரு குழந்தை பிறந்து சில, பல வருடங்கள் கழித்து, திரும்பவும் மசக்கை, வாந்தி....வேண்டாமடா சாமி! இரட்டைக் குழந்தை பிறந்தால் ‘இன்னொரு குழந்தை எப்போ? ஒன்றுடன் நிறுத்திக் கொண்டு விட்டாயா?’ என்ற கேள்விகள் வராது. அக்கா, அண்ணா, தம்பி, தங்கை இல்லையா என்று நம் குழந்தைகளைப் பார்த்து யாரும் கேட்கவும் மாட்டார்கள்!
நகைச்சுவை போதும், விஷயத்திற்கு வருவோம். இரட்டையர் ஒரே மாதிரி உடை அணிந்துகொண்டு ஒரே சாயலில் இருப்பது மற்றவர்களுக்கு சந்தோஷத்தைக் கொடுக்கலாம். ஆனால் இளம் தாய்க்கு இது ஒரு மிகப்பெரிய சவால். இரட்டைக் குழந்தைகள் என்று தெரிந்துவிட்டால், முதலிலிருந்தே எல்லாவற்றையும் திட்டமிடுங்கள். ஒரு குழந்தையானாலும் திட்டமிடுதல் அவசியம். இரண்டு குழந்தைகள் என்றால் இந்த அவசியம் இரண்டு மடங்காகிறது. இரட்டைக் குழந்தைகளினால் சந்தோஷம் இரட்டிப்பானால், வேலையும் இரு மடங்காகிறது. அதற்கும் நீங்கள் தயாராக வேண்டும்.
இரட்டை கர்ப்பம் தரித்தவர்களுக்கு மருத்துவரின் தொடர் பரிசோதனைகள் மிகவும் அவசியம். கருத்தரித்தவுடனே சிலர் சொல்லுவார்கள் அறிவுரை என்ற பெயரில் இரண்டு பேருக்காக சாப்பிட வேண்டுமென்று. தேவையில்லாத அறிவுரை இது. போஷாக்கான உணவை சாப்பிடுங்கள். அதிக அளவு வேண்டாம். அனாவசியமாக உடல் பருத்துவிடும்.
ஏற்கனவே இரட்டை பெற்றுக் கொண்டிருப்பவரிடம் ஆலோசனை கேட்கலாம். முதல் தேவை குழந்தைகளைப் பார்த்துக் கொள்ள ஒருவர். உங்கள் அம்மாவோ, மாமியாரோ அல்லது உங்களுக்கு மிகவும் தெரிந்த பெண்மணியாகவோ இருக்கலாம். நீங்கள் ஒரு குழந்தையைப் பார்த்துக் கொண்டிருக்கும்போது அவர் இன்னொரு குழந்தையைப் பார்த்துக் கொள்ளலாம்.
வேலைப்பளு இருமடங்கு, உங்கள் கவனிப்பு இருமடங்கு தேவை என்று இருந்தாலும் ஒரு விஷயத்திற்கு நீங்கள் கொஞ்சம் ஆசுவாசப்பட்டுக் கொள்ளலாம்: குழந்தைகள் ஒருவருக்கொருவர் துணையாக இருப்பார்கள். விளையாட்டுத் துணை தேடி அலையவேண்டாம்!
தொடர்ந்து பார்க்கலாம்.....
அத்தியாயம் 2
இரட்டையர்கள் – சில தகவல்கள்
சென்ற வருடம் (2013) ஜனவரி 11 ஆம் தேதி இந்தத் தொடர் ஆரம்பித்தேன். இந்தவாரத்துடன் ஒரு வருடம் ஆகிறது. எனக்கே ஆச்சரியமான விஷயம் இது. இதை எழுத எனக்கு உறுதுணையாக இருந்து, உற்சாகமூட்டி, முழு சுதந்திரம் கொடுக்கும் ‘நான்குபெண்கள்’ தளத்திற்கு எனது வணக்கமும், நன்றியும். இந்தத் தொடரை தொடர்ந்து படித்து கருத்துரை தந்து ஊக்கமளிக்கும் வாசக அன்பர்களுக்கும் எனது நன்றி கலந்த வணக்கங்கள்.
எப்போதும் இல்லாத அளவிற்கு இப்போது இரட்டைக் குழந்தைகள் அமெரிக்காவில் பிறக்கிறார்கள் என்று ஒரு ஆய்வு கூறுகிறது. கடந்த 30 ஆண்டுகளில் இரட்டை குழந்தைகளின் பிறப்பு விகிதம் சுமார் 70% அதிகரித்திருக்கிறதாம். 2009 ஆம் ஆண்டில் 30 குழந்தைகளுக்கு ஒரு இரட்டையர் இருந்தனர்; 1980 இல் இது 53 குழந்தைகளுக்கு ஓர் இரட்டையர் என்ற கணக்கில் இருந்ததாம். இது எதனால்?
குழந்தை பெற்றுக் கொள்ளும் தாயின் வயது ஒரு காரணம் என்கிறது ஒரு ஆய்வு. தங்களது 30 வது வயதில் தாயாகும் பெண்ணிற்கு இரட்டையர் பிறக்கிறது. இயற்கையாக கருவுறும் பெண்களை விட கருவுறுதலுக்கு சிகிச்சை மேற்கொள்ளும் பெண்களுக்கு இரட்டை குழந்தைகள் பிறப்பது அதிகம்.
நம்மை வியக்க வைக்கும் இன்னொரு செய்தி: இரட்டையர் என்றால் ஒரே பிரசவத்தில் பிறக்கும் இரண்டு குழந்தைகள் என்பதுதான் நமக்குத் தெரியும். அப்படியில்லை என்கிறது இந்தச் செய்தி. இயற்கைமுறையில் குழந்தை பெற்றுக் கொள்ள முடியாமல் ஒரு தம்பதி செயற்கைமுறை கருத்தரிப்பு செய்துகொள்ள முடிவு செய்தனர். பெண்ணின் முட்டையும் விந்துவும் வெளியில் சோதனைச்சாலையில் இணைக்கப்பட்டு பிறகு பெண்ணின் கருப்பையில் இரண்டு சினைமுட்டைகள் வைக்கப்பட்டன. ஒன்று ஆண் குழந்தையாக உருவானது. இவர்களுடைய மற்ற மூன்று சினைமுட்டைகள் பதப்படுத்தி பத்திரமாக வைக்கப்பட்டன. சில வருடங்கள் கழித்து இந்த முட்டைகளில் ஒன்றை அந்தப் பெண்ணின் கருப்பையில் வைத்து இந்த முறை ஒரு பெண் குழந்தை உருவானது. என்கிறார்கள் மருத்துவர்கள். ஒரே நேரத்தில் உருவான சினைமுட்டையிலிருந்து பிறந்ததால் இவர்களும் இரட்டையர் என்று சொல்லலாம் என்கிறார்கள் மருத்துவர்கள்.
இன்னும் வியப்பான செய்தி: இத்தாலி நாட்டிலுள்ள ஒரு பல்கலைகழகத்தில் கருப்பையில் வளர்ந்து வரும் இரட்டையரை 3D ஸ்கான் செய்து பார்த்திருக்கிறார்கள். 14 வாரங்கள் ஆனபோது சிசுக்கள் இரண்டும் ஒன்றையொன்று நெருங்கி வந்து தலை, கை முதலானவற்றை தொட்டுப் பார்த்துக் கொண்டனவாம். 18 வாரங்களில் இரண்டும் ஒன்றையொன்று தடவிக் கொண்டனவாம். சுமார் 30% நேரம் இதைபோல உடல்தொடர்புடன் இருந்தனவாம். இதில் மேலும் வியப்படைய வைக்கும் நிகழ்வு என்னவென்றால் கண் பகுதியை ரொம்பவும் மென்மையாக தொட்டுக் கொண்டனவாம்.
பிரேசில் நாட்டில் இருக்கும் சாவோ பெட்ரோ இரட்டைக் குழந்தைகள் அதிகம் பிறக்கும் இடம் என்று சொல்லலாம். இங்கு பிறக்கும் குழந்தைகளில் 8% இரட்டையர்களே. என்ன காரணமாக இருக்கும்? இந்த ஊரின் தண்ணீர் அப்படி என்கிறார்கள் இந்த ஊர் மக்கள். இதை ஒத்துக்கொள்ள மறுத்த ஆராய்ச்சியாளர்கள் ஒரு ஆய்வு ஒன்றை இங்கு நடத்தினர். அதான் மூலம் இந்த நகரத்தில் வசிக்கும் மக்களிடைய நெருங்கிய உறவுக்குள் மணம் செய்து கொள்ளும் பழக்கத்தினால் இப்படி இரட்டையர் பிறக்கின்றனர் என்று கண்டுபிடித்துள்ளனர்.
இரட்டையர் ஆணாகவோ பெண்ணாகவோ இருந்துவிட்டால் ஒரே மாதிரி உடை அணிவிப்பார்கள். பெண் குழந்தைகள் என்றால் ஒரே மாதிரியான உடை, வளையல்கள், ரிப்பன்கள், காதணிகள், செருப்புகள் என்று அணிகலன்கள் கூட இரட்டையாகவே இருக்கும். இவை வெளியில் காணப்படும் ஒற்றுமைகள். ஆனால் குணத்தில், அறிவில் இருவரும் ஒன்றே போல இருப்பார்களா? இந்த விஷயத்தை ஆராய்ச்சி செய்ய ஆய்வாளர்களுக்கு வாய்ப்பு கொடுத்தவர்கள் இரட்டையரான மெரிடித் கிரேஸ், மெரிடித் எல்லன். சீன நாட்டில் பிறந்த இந்த இரட்டையர் பிறந்தவுடனேயே அமெரிக்காவிலுள்ள வேறு வேறு தம்பதிகளால் தத்து எடுத்துக் கொள்ளப்பட்டனர். 2003 ஆம் ஆண்டு இவர்களை தத்து எடுத்துக்கொண்ட பெற்றோர்களுக்கு இவர்கள் இரட்டையர் என்ற விஷயம் தெரியாது. எல்லன் இரண்டு வயதில் தன் பெற்றோர்களிடம் ‘எனக்கு ஒரு சகோதரி இருந்தால் நன்றாக இருக்கும்’ என்று கூறியிருக்கிறாள். கிரேஸ் ‘நான் பெரியவள் ஆனால்....?’ என்ற கேள்விக்கு சகோதரி ஆவேன் என்று பதில் கூறியிருக்கிறாள். கிரேஸ்ஸின் தந்தை இணையத்தில் தன்னைப்போலவே தத்து எடுத்துக் கொண்டுள்ள பெற்றோர்களைப் பற்றி படித்துக் கொண்டிருந்தபோது தன் மகளைப் போலவே இன்னொரு பெண்ணைப் பார்த்திருக்கிறார். இவர் தத்து எடுத்துக்கொண்ட ஏஜென்சி மூலமே இந்தப் பெண்ணும் தத்து எடுத்துக்கொள்ளப் பட்டிருக்கிறாள். இரட்டையர்கள் இருவரும் முதன்முதலில் சந்தித்தபோது எல்லன் கூறினாள் கிரேஸிடம்: நாம் இருவரும் ஒன்றாகப் பிறந்திருப்போம் என்று நினைக்கிறேன்’ என்று!
இரட்டையராகப் பிறந்து ஒன்றாக வளரும் குழந்தைகளுக்கும், இரட்டையாரகப் பிறந்து பிரிக்கப் பட்டு வேறு வேறு இடங்களில் வளரும் குழந்தைகளுக்கும் இடையில் எந்தவிதமான அறிவுத் திறன், ஆளுமை ஆகியவற்றில் இருக்கும் வேற்றுமை ஒற்றுமைகளை என்று இப்போது ஆராய்ச்சி செய்யத் தொடங்கியிருகிறார்கள்.
நாம் நினைப்பது போல இரண்டு ஆண்குழந்தைகள், இரண்டு பெண்குழந்தைகள் என்று பிறக்கும் இரட்டையரில் அச்சு அசலாக ஒற்றுமைகள் இருப்பதில்லை என்று ஆராய்ச்சியாளர்கள் சொல்லுகிறார்கள். பிறந்தவுடன் பார்ப்பதற்கு ஒரே மாதிரி இருந்தாலும் வளர வளர மாறிவிடுகிறார்களாம்.
தொடர்ந்து பார்க்கலாம்.....!
அத்தியாயம் 3
இரட்டையர்களை சமாளிப்பது எப்படி?
உலகத்தின் மிகவும் வயதான இரட்டையர் தங்களது பிறந்தநாளை ஜனவரி நான்காம் தேதி கொண்டாடினார்கள். இங்கிலாந்தில் இருக்கும் ஈனா பக் மற்றும் லில்லி மில்வார்ட் இருவருக்கும் இப்போது 104 வயது! இதன் காரணமாக உலகின் மிக மூத்த இரட்டையர் என்ற பெயரில் கின்னஸ் புக் ஆப் வேர்ல்ட் ரெகார்டில் இடம் பெற்றிருக்கிறார்கள். இந்த விருது கிடைத்ததில் இருவருக்கும் மிக மிக மகிழ்ச்சி. எப்போதும் போல இருவரும் தங்களது பிறந்தநாளன்று ஒன்றாக இருந்தனர். இப்போது இந்த இரட்டையரில் ஒருவரான லில்லிக்கு இடுப்பு எலும்பு முறிவு காரணமாக மருத்துவ மனையில் இருக்க நேர்ந்த போதிலும் இருவரும் ஒரே குரலில் சொல்லுவது ‘நாங்கள் இருவரும் மிகவும் அதிர்ஷ்டம் செய்தவர்கள்; எங்கள் இருவரின் ஆரோக்கியமும் நன்றாகவே இருக்கிறது’ தங்களது ஆரோக்கியத்தின் ரகசியமாக இருவரும் சொல்லுவது: எப்போதும் சிரிப்பு, அதற்கு ஒரு நல்ல ஜோக்!
இரட்டைக் குழந்தைகளை பார்த்துக் கொள்வது எப்படி? முதலில் இரட்டையர்களைச் சுமக்கும் போதும், பிரசவம் ஆன பின்பும் என்னென்ன செய்யலாம்?
• நீங்கள்தான் குழந்தைகளைப் பார்த்துக்கொள்ளப் போகிறீர்கள். அதனால் உங்கள் மனநலம், உடல்நலம் நல்ல நிலையில் இருப்பது மிகவும் முக்கியம்.
• வீட்டுவேலைகள், கணவரின் தேவைகள் எத்தனை முக்கியமோ அத்தனை ஏன், இவற்றைவிட என்று கூடச் சொல்லலாம் – உங்களை நீங்கள் கவனித்துக் கொள்வது.
• மனதில் எப்போதும் ஒரு உற்சாகம் இருக்கட்டும். பாசிடிவ் எண்ணங்களையே நினையுங்கள்.
• மற்றவர்களிடமிருந்து உதவியை பெறுவதில் தயக்கம் வேண்டாம்.
• எல்லாவற்றையும் நீங்களே செய்யவேண்டும் என்பது மன அழுத்தத்தை அதிகரிக்கும். சாதாரண வேலைகள் கூட கடினமாகத் தோன்றும் இதனால்.
• மனதிற்கும் உடலுக்கும் தேவையான ஓய்வு கொடுங்கள். இதனால் அடுத்தடுத்த வேலைகளை சுலபமாகச் செய்யலாம்.
• ஒரு வேலையை செய்து முடிக்கவில்லை அல்லது அதிக நேரம் தூங்கிவிட்டால் குற்ற உணர்ச்சி வேண்டாம்.
• இரட்டைக் குழந்தைகள் என்பதால் உங்களுக்குப் பிடித்தவற்றையெல்லாம் விட்டுவிடவேண்டும் என்று இல்லை.
• குழந்தை வளர்ப்பு என்பது அவரவர்கள் செய்து பார்த்து கற்றுக் கொள்வது. இப்படித்தான் இரட்டைக் குழந்தைகளை வளர்க்க வேண்டும் என்று எந்தவித விதிமுறைகளோ கட்டுப்பாடுகளோ இல்லை.
• அதேபோல ‘சூப்பர் மாம்’ என்கிற மாயாஜால வார்த்தையைப் பார்த்து