Uyirukku Appaal
()
About this ebook
‘எடுத்த காரியம் யாவினும் கை கொடுத்து' என்னுடைய பணிகளில் பங்கு பெற்றுவரும் எழுத்தாளர், எஸ். லட்சுமிசுப்பிரமணியம் - எஸ்.எல்.எஸ்.
அவரிடம் ஒரு காரியத்தை ஒப்படைத்து விட்டால் அப்புறம் அதைப் பற்றி மறந்து விடலாம். அந்தப் பணியை அளவாக அழகாக முடிப்பதுடன், குறித்த நேரம் தவறாமலும் கொண்டுவந்து கொடுத்து விடுவார். சிறப்பாக எழுதக்கூடிய பல எழுத்தாளர்களை நான் அறிவேன். ஆனால், 'டைம் டேபிள்' போட்டுக் கொண்டு அதைப் போல எழுதக்கூடிய எழுத்தாளர், எனக்குத் தெரிந்தவரை எஸ்.எல்.எஸ். மட்டும்தான்.
துணுக்குகள் முதல், சிக்கலான மருத்துவக் கட்டுரை வரை, குட்டிக் கதை முதல் - தொடர் நாவல் வரை, அவருடைய எழுத்து, அவை ஒவ்வொன்றிலும் பரிமளிக்கும். அது எங்கே இருந்தாலும் அடையாளம் கண்டுபிடித்து விடலாம். அப்படி ஒரு அலாதியான 'ஸ்டைல்' அவருக்கு உண்டு.
'ஆனந்தவிகடன்' மாவட்ட மலர் பணிகளில் நான் ஈடுபட்டபோது தாமரைமணாளனும், மாயாவும் எனக்குத் துணையாக வந்து செய்திகளைத் தொகுத்தார்கள். எங்களுக்கு இணையாக இன்னொரு காரில் போட்டி போட்டுக் கொண்டு விஷயங்களைத் தொகுத்தார் எஸ்.எல்.எஸ். 'இதயம் பேசுகிறது' பத்திரிகையை ஆரம்பித்தபோது, அதன் பலத்துக்கு அடிப்படையாக அமைந்ததும் இந்த 'டீம்' தான்.
கோலம் போடுவது போல அழகான நடையுடன், உணர்ச்சிகளைக் கவிதை போல வடித்து, மெல்லிய நுட்பமான மனச்சாயல்களைக் காட்டுவது அவருடைய தனிச்சிறப்பு. அவருடைய கதைகளை 'எடிட்' செய்வது ரொம்ப சிரமம். அப்படித் தொடர்ச்சியாக அழகான சங்கிலியாகக் கோத்திருப்பார்.
இன்று கர்நாடக சங்கீதம் தமிழ்நாட்டில் ஒரு சீசனுக்கு மவுசு பெறுகிற விஷயமாக இருக்கிறது. அதைப் பின்னணியாக வைத்துக் கொண்டு, சுவையான இரண்டு நாவல்களைச் சுவை குன்றாமல் எழுதி இருக்கிறார் எஸ்.எல்.எஸ். சம்பிரதாயமான குடும்பம், சகஜமான சூழ்நிலை, பழக்கமான பின்னணி இவற்றை வைத்துக் கொண்டே வித்தியாசமான கதையை உருவாக்கிவிட அவரால் முடியும்.
'இதயம் பேசுகிறது' சிறப்பு மலருக்காக நாங்கள் எல்லாரும் காரில் போய்க் கொண்டிருந்தபோது ஒரு நிகழ்ச்சியை சொல்லிக் கொண்டுவந்தார் அவர். சொல்லி முடிக்கும் போதுதான் அது அவருக்குத் தெரிந்த ஓர் உண்மை நிகழ்ச்சி என்பது தெரிந்தது. “கதையைவிட சுவாரசியமாக இருக்கிறதே? இதையே ஒரு நாவலாக எழுதுங்களேன்!” என்று நான் அவரிடம் சொன்னேன்.
அதுவே நீங்கள் இப்போது படிக்கவிருக்கும் நாவல்...
- மணியன்
Read more from Lakshmi Subramaniam
Sri Paramacharya Swamigal Aruliya Arputha Anubavangal Rating: 0 out of 5 stars0 ratingsNaathamenum Kovilile… Rating: 0 out of 5 stars0 ratingsVeettil Oru Doctor Rating: 0 out of 5 stars0 ratingsKadaloora Koyilgal Rating: 0 out of 5 stars0 ratingsNinaivin Karaigal Rating: 0 out of 5 stars0 ratingsAmaithiyana Vazhkaiku Aanmeega Vazhikatti Rating: 5 out of 5 stars5/5Hindu Madham Bathilalikkirathu Rating: 0 out of 5 stars0 ratingsPeraatha Pillai Rating: 0 out of 5 stars0 ratingsThathuva Gnaniyarin Kutti Kathaigal Rating: 0 out of 5 stars0 ratingsOru 'Century'um Oru 'Duck'um Rating: 0 out of 5 stars0 ratingsChinmayanandarin Sirukathaigal Rating: 0 out of 5 stars0 ratingsOru Aathmavin Kathai Rating: 0 out of 5 stars0 ratingsPathu Maatha Bandam Rating: 0 out of 5 stars0 ratingsBhagavan Baba Rating: 0 out of 5 stars0 ratingsIsai Vazhiye Iraiyarul Petravargal Rating: 0 out of 5 stars0 ratingsPonni Nadhi Karaiyil Punitha Aalayangal Part - 1 Rating: 0 out of 5 stars0 ratingsEthiroli Rating: 0 out of 5 stars0 ratingsUnarvin Vizhippu Rating: 0 out of 5 stars0 ratingsPunniya Nathigalidiye Oru Punitha Yaathirai Rating: 0 out of 5 stars0 ratingsPaathai Thelivikkum Pathonbathu Gnanigal! Rating: 0 out of 5 stars0 ratingsManasirai Rating: 0 out of 5 stars0 ratingsKadavulai Kanda Mahangalin Kathai Rating: 0 out of 5 stars0 ratingsVasantham Varum Rating: 0 out of 5 stars0 ratingsPunitham Arulum Puttabarthi Rating: 0 out of 5 stars0 ratingsIthu Engal Bhoomi Rating: 0 out of 5 stars0 ratingsAmma Varuvala? Rating: 0 out of 5 stars0 ratingsMeendum Sankara Vijayam Rating: 0 out of 5 stars0 ratingsHindu Matha Thathuvangalum Vilakkangalum Rating: 0 out of 5 stars0 ratingsVazhvil Vetri Pera Chinmayanatharin Bathilgal! Rating: 0 out of 5 stars0 ratings
Related to Uyirukku Appaal
Related ebooks
Ullam Pesum Kaadhal Mozhi Rating: 0 out of 5 stars0 ratingsMoongil Pookkal Rating: 1 out of 5 stars1/5Kaadhalin Kaaladi Satham Rating: 5 out of 5 stars5/5Vasantham Varum Rating: 0 out of 5 stars0 ratingsNizhal Yutham Rating: 0 out of 5 stars0 ratingsJananam Rating: 4 out of 5 stars4/5Infaa Alociousyin Sirukathaigal Rating: 5 out of 5 stars5/5Thottu Sendra Thendral! Rating: 5 out of 5 stars5/5Aval Varuvala? Rating: 0 out of 5 stars0 ratingsUnnidam Oru Ragasiyam Rating: 0 out of 5 stars0 ratingsPuthiya Vaanam Rating: 3 out of 5 stars3/5Konjam Sirikkalame... Rating: 0 out of 5 stars0 ratingsBhudhan Oru Kolai Seithan Rating: 0 out of 5 stars0 ratingsSuttum Vizhi Sudar Rating: 0 out of 5 stars0 ratingsAnjali Rating: 0 out of 5 stars0 ratingsAnjangal Kaalam Rating: 0 out of 5 stars0 ratingsPuthiya Appa Rating: 0 out of 5 stars0 ratingsKaadhal Pookal Rating: 0 out of 5 stars0 ratingsOru Kaadhalin Climax Rating: 0 out of 5 stars0 ratingsOru Kudumbathil Nadakkirathu! Rating: 0 out of 5 stars0 ratingsPali Malar Rating: 0 out of 5 stars0 ratingsVaanam Vittu Vaa Rating: 5 out of 5 stars5/5Aasai Mugam Maranthu Pochey! Rating: 1 out of 5 stars1/5Karthika Rajkumar Sirukathaigal: Thoguppu 1 Rating: 0 out of 5 stars0 ratingsKaadhal Vennila Rating: 0 out of 5 stars0 ratingsPadi Alakkiran! Rating: 0 out of 5 stars0 ratingsShanthi Nilava Vendum Rating: 0 out of 5 stars0 ratingsVanthaanga Jeichaanga… Rating: 0 out of 5 stars0 ratingsOru Aathmavin Kathai Rating: 0 out of 5 stars0 ratingsUnnai Solli Kutramilai Rating: 0 out of 5 stars0 ratings
Related categories
Reviews for Uyirukku Appaal
0 ratings0 reviews
Book preview
Uyirukku Appaal - Lakshmi Subramaniam
http://www.pustaka.co.in
உயிருக்கு அப்பால்...
Uyirukku Appaal…
Author:
லட்சுமி சுப்பிரமணியம்
Lakshmi Subramaniam
For more books
http://www.pustaka.co.in/home/author/lakshmi-subramaniam
Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.
All other copyright © by Author.
All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.
பொருளடக்கம்
அத்தியாயம் 1
அத்தியாயம் 2
அத்தியாயம் 3
அத்தியாயம் 4
அத்தியாயம் 5
அத்தியாயம் 6
அத்தியாயம் 7
அத்தியாயம் 8
அத்தியாயம் 9
முன்னுரை
‘எடுத்த காரியம் யாவினும் கை கொடுத்து' என்னுடைய பணிகளில் பங்கு பெற்றுவரும் எழுத்தாளர், எஸ். லட்சுமிசுப்பிரமணியம் - எஸ்.எல்.எஸ்.
அவரிடம் ஒரு காரியத்தை ஒப்படைத்து விட்டால் அப்புறம் அதைப் பற்றி மறந்து விடலாம். அந்தப் பணியை அளவாக அழகாக முடிப்பதுடன், குறித்த நேரம் தவறாமலும் கொண்டுவந்து கொடுத்து விடுவார். சிறப்பாக எழுதக்கூடிய பல எழுத்தாளர்களை நான் அறிவேன். ஆனால், 'டைம் டேபிள்' போட்டுக் கொண்டு அதைப் போல எழுதக்கூடிய எழுத்தாளர், எனக்குத் தெரிந்தவரை எஸ்.எல்.எஸ். மட்டும்தான்.
துணுக்குகள் முதல், சிக்கலான மருத்துவக் கட்டுரை வரை, குட்டிக் கதை முதல் - தொடர் நாவல் வரை, அவருடைய எழுத்து, அவை ஒவ்வொன்றிலும் பரிமளிக்கும். அது எங்கே இருந்தாலும் அடையாளம் கண்டுபிடித்து விடலாம். அப்படி ஒரு அலாதியான 'ஸ்டைல்' அவருக்கு உண்டு.
'ஆனந்தவிகடன்' மாவட்ட மலர் பணிகளில் நான் ஈடுபட்டபோது தாமரைமணாளனும், மாயாவும் எனக்குத் துணையாக வந்து செய்திகளைத் தொகுத்தார்கள். எங்களுக்கு இணையாக இன்னொரு காரில் போட்டி போட்டுக் கொண்டு விஷயங்களைத் தொகுத்தார் எஸ்.எல்.எஸ். 'இதயம் பேசுகிறது' பத்திரிகையை ஆரம்பித்தபோது, அதன் பலத்துக்கு அடிப்படையாக அமைந்ததும் இந்த 'டீம்' தான்.
கோலம் போடுவது போல அழகான நடையுடன், உணர்ச்சிகளைக் கவிதை போல வடித்து, மெல்லிய நுட்பமான மனச்சாயல்களைக் காட்டுவது அவருடைய தனிச்சிறப்பு. அவருடைய கதைகளை 'எடிட்' செய்வது ரொம்ப சிரமம். அப்படித் தொடர்ச்சியாக அழகான சங்கிலியாகக் கோத்திருப்பார்.
இன்று கர்நாடக சங்கீதம் தமிழ்நாட்டில் ஒரு சீசனுக்கு மவுசு பெறுகிற விஷயமாக இருக்கிறது. அதைப் பின்னணியாக வைத்துக் கொண்டு, சுவையான இரண்டு நாவல்களைச் சுவை குன்றாமல் எழுதி இருக்கிறார் எஸ்.எல்.எஸ். சம்பிரதாயமான குடும்பம், சகஜமான சூழ்நிலை, பழக்கமான பின்னணி இவற்றை வைத்துக் கொண்டே வித்தியாசமான கதையை உருவாக்கிவிட அவரால் முடியும்.
'இதயம் பேசுகிறது' சிறப்பு மலருக்காக நாங்கள் எல்லாரும் காரில் போய்க் கொண்டிருந்தபோது ஒரு நிகழ்ச்சியை சொல்லிக் கொண்டுவந்தார் அவர். சொல்லி முடிக்கும் போதுதான் அது அவருக்குத் தெரிந்த ஓர் உண்மை நிகழ்ச்சி என்பது தெரிந்தது. கதையைவிட சுவாரசியமாக இருக்கிறதே? இதையே ஒரு நாவலாக எழுதுங்களேன்!
என்று நான் அவரிடம் சொன்னேன்.
அதுவே நீங்கள் இப்போது படிக்கவிருக்கும் நாவல்...
மணியன்
*****
கதைகளில் வரும் பெயர்களும் நிகழ்ச்சிகளும் கற்பனையே என்று முன் ஜாக்கிரதையாகக் குறிப்பிடுவதுண்டு. இது ஒரு வித்தியாசமான கதை.
இதில் வரும் பாத்திரங்களும், நிகழ்ச்சிகளும் மெய்யாகவே அமைந்தவை. இது ஓர் உண்மைக் கதை. அதை இங்கே எழுதிய விதமும் நடையும் மட்டுமே என் கற்பனைக்கு ஒரு பரீட்சை.
*****
1
அன்று கார்த்திகைத் திருநாள். திருவண்ணாமலை தீபம். பௌர்ணமி நிலவின் ஒளி தெருவில் மஞ்சளும் வெண்மையும் கலந்த ஒளிப்பரப்பாக விழுந்திருந்தது. கலகலவென்ற பேச்சும் சிரிப்புமாகக் குழந்தைகள் மத்தாப்பூ மழைக்கு நடுவே நின்று கொண்டிருந்தார்கள். பட்டுப் புடவையில் மேனி எழில் மினுமினுக்க இளம் பெண்கள், வரிசை வரிசையாக அகல் விளக்குகளை ஏற்றிக் கொண்டிருந்தார்கள்.
காயத்ரியும் மத்தாப்புக் கொளுத்திக் கொண்டிருந்தாள். நீலமும் மஞ்சளுமாக ஒளிப் பொறிகள் தவழ்ந்து விழுந்து கொண்டிருந்தன. மாம்பழக் கலர் பட்டுப் பாவாடை. சிவப்பு ஸாட்டின் சட்டை. இளமையின் பூரிப்பு இன்னும் தொடங்காத பருவம். ஆனால் அதன் முன்னோடியாக ஒரு வளர்ச்சி அந்த உடலில் ததும்பிக் கொண்டிருந்தது. கால் விரலைக்கூட மறைத்துத் தொங்கிக் கொண்டிருக்கும். ஜிலுஜிலுவென்ற பாவாடையில் சற்றுக் கூடித் தெரிந்த உயரம். அதை அவள் தூக்கி வைத்துக் கொலுசு சத்தம் தெரிய நடக்கும்போது இடையின் கீழ்க் கடைந்து மின்னி மறையும் அழகு. ஓடி மறையும்போது துள்ளும் பின்னழகு.
கம்பி மத்தாப்பு ஒன்றை எடுத்துக் கொண்டு தெருவில் ஓடிப்போய் பூச்சட்டி வாணம் ஒன்றைக் கொளுத்திவிட்டு அவசரமாகத் திரும்பினாள் காயத்ரி. யார் மீதோ மோதிக் கொண்டாள். பார்க்கலே
என்று மன்னிப்புக் கேட்பது போலச் சொல்லி விட்டுத் திரும்பினாள். அந்த வாலிபன் சிரித்துக் கொண்டான். அவளுடைய கண்ணிலும் கன்னத்திலும் புஜத்திலும் பூசிய இளமை மெருகை ஒருகணம் கண்கொட்டாமல் பார்த்துக் கொண்டே நின்றான்.
பூவாணம் கொட்டறது ஸார்; தள்ளிப்போங்க!
அவன் புறம் நிமிர்ந்த விழிகள் பயத்தில் சுழன்றன. வர்ணங்கள் சரசரவென்று பொங்கி உதிர்ந்த அழகைக்கூட அவள் பார்க்கவில்லை. அவன்மேல் நெருப்புப் பொறி சிதறி விடாமல் இருக்க வேண்டுமே என்றுதான் கவலைப்பட்டுக் கொண்டிருந்தாள். அவனும் அந்தப் பூமழையின் ஜோதியைப் பார்க்கவில்லை. புருவத்தின் அகல் வளைவில் கீறிய சாந்திலிருந்து குபீரெனச் சுடராய் எழுந்த சிவப்புச் சாந்து, கத்தியின் அலகுபோல ஒளிவீசும் கண்கள் - இவற்றைத்தான் பார்த்துக் கொண்டிருந்தான்.
அவள் ஓடிப்போய்ப் படியேறி விட்டாள். அந்த வேகத்தில் அவள் மார்பு லேசாய் மிதந்தது. விழிகள் சஞ்சலித்தன. தன்னை இன்னும் வைத்தகண் வாங்காமல் பார்க்கும் அந்த வாலிபனை மறுபடி பார்க்க பயம். அவன் நகர்ந்து அப்பாற் போய்விட்டான். அவன் நினைப்பில் இன்னும் அந்தக் காட்சிப் பூமழை கொட்டிக் கொண்டிருந்தது.
உன் கிளாஸ்மேட் சகுந்தலாவின் அண்ணன் பாலு தான்! தெரியலியா? லீவுக்குக் காலேஜிலிருந்து வந்திருக்கான்!
- மணிக்கதவு அசைவதுபோலச் சிரிக்கும் குரல். அவளாகத்தான் இருக்க வேண்டும்; திரும்பினான். அந்த வீட்டு வாசலில் இன்னொரு பெண் நின்று அவளிடம் சொல்லிக் கொண்டிருந்தாள். அகல் விளக்கின் ஒளியில் அந்த இரு பெண்களின் உருவமும் ஒருபுறம் ஒளியும், மறுபுறம் நிழலுமாகச் சிற்பங்களைப் போலத் தெரிந்தன.
சகுந்தலாவுடன் படிக்கும் பெண்ணா? அப்போது வயது பதின்மூன்றுக்கு மேல் இராது. ஆனால் விடிவதற்கு முன் அழகாகச் சிவக்கும் வானம்போல, வரப்போகும் இளமையின் முன்னோட்டம் தெரிகிறது. மேலிருந்து வர்ணக்குடை இறங்கிய வேளையில், நட்சத்திரம் ஒவ்வொன்றாகச் சிதறி விழுவதுபோல அவள் பார்த்த பார்வை!
வீட்டு வாசலில் சகுந்தலா காத்துக் கொண்டிருந்தாள். பொறுமை இழந்த முகச்சுளிப்பில் கண்கள் நகநகத்தன. சீக்கிரம் வா அண்ணா! நமஸ்காரம் பண்ணிட்டுக் கோவிலுக்குப் போகணும். சொக்கப்பானை பார்க்கணும். எங்கே போயிட்டே நீ?
என்று அவன் கையைப் பற்றி இழுத்தாள்.
அதான் வந்தாச்சே? எனக்குப் பொரி உருண்டைக் கொடுத்துட்டு நீ கிளம்பிப் போகலாம். அவ்வளவுதானே?
என்று அவள் முதுகில் தட்டிக் கொடுத்தான் பாலச்சந்தர். அவன் கேட்க நினைத்த கேள்வி நாவின் நுனிவரை வந்து கீழே விழாமல் தொங்கி நின்றது. பொரி உருண்டையுடன் தட்டைக் கொண்டுவந்து அவன் கையில் கொடுத்துவிட்டு, நமஸ்காரம் செய்து நிமிர்ந்து நின்றாள் சகுந்தலா.
கோவிலுக்குத் தனியாவா போகப்போறே?
என்று கேட்டான் பாலு. அவன் கண்கள் அவள் பதிலை எதிர்பார்த்து ஆடாமல் அசையாமல் நின்றன.
சந்நிதித் தெருவுக்குப் போய் காயத்ரியையும் அழைச்சிண்டுதான் போகணும். அவள் எனக்காகக் காத்துக் கொண்டிருப்பாள்!
யார் அது காயத்ரி? புதுசா செய்துண்ட சிநேகமா? உனக்கு எப்படித் தெரியும்?
என்று அவளிடம் பதிலைக் கிளறுவது போலக் கேட்டான் பாலு.
"அவ தாத்தா இஞ்சினீயர்! புதுசா ஊருக்கு