Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Ullam Pesum Kaadhal Mozhi
Ullam Pesum Kaadhal Mozhi
Ullam Pesum Kaadhal Mozhi
Ebook160 pages1 hour

Ullam Pesum Kaadhal Mozhi

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

லட்சுமி சுப்பிரமணியம் அவர்கள் சுமார் முப்பது ஆண்டுகளாகச் சிறுகதைகளும் நாவல்களும் எழுதி உள்ளார். இவர் சுமார் அறுநூறுக்கும் மேல் சிறுகதைகளும், ப நாவல்களும் வெளிவந்துள்ளன,. 'ஆனந்த விகடன்', 'கல்கி ' பத்திரிகைகளின் வெள்ளிவிழாச் சிறுகதைப் போட்டிகளில் பரிசு பெற்றவர். 'துடிப்பின் எல்லை' என்ற இவருடைய நாவல் 'கலைமகள்' பரிசைப் பெற்றது. திரு. லா. ச, ராமாமிருதம், திரு. தி. ஜானகிராமன் இருவரையும் மானசீகக் குரு நாதராகக் கொண்டாடுபவர்.

படைப்பிலக்கியம் தவிர, மருத்துவம், தொழில் நுட்பம், சமயம், மனோதத்துவம், இசை ஆகிய துறைகளிலும் ஏராளமான கட்டுரைகளை எழுதி இருக்கிறார்.

Languageதமிழ்
Release dateSep 13, 2019
ISBN6580127504507
Ullam Pesum Kaadhal Mozhi

Read more from Lakshmi Subramaniam

Related to Ullam Pesum Kaadhal Mozhi

Related ebooks

Reviews for Ullam Pesum Kaadhal Mozhi

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Ullam Pesum Kaadhal Mozhi - Lakshmi Subramaniam

    http://www.pustaka.co.in

    உள்ளம் பேசும் காதல் மொழி

    Ullam Pesum Kaadhal Mozhi

    Author:

    எஸ். லட்சுமி சுப்பிரமணியம்

    S.Lakshmi Subramaniam

    For more books

    http://pustaka.co.in/home/author/lakshmi-subramaniam

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    அத்தியாயம் 1

    அத்தியாயம் 2

    அத்தியாயம் 3

    அத்தியாயம் 4

    அத்தியாயம் 5

    அத்தியாயம் 6

    அத்தியாயம் 7

    அத்தியாயம் 8

    அத்தியாயம் 9

    அத்தியாயம் 10

    அத்தியாயம் 11

    அத்தியாயம் 12

    அத்தியாயம் 13

    அத்தியாயம் 14

    அத்தியாயம் 15

    அத்தியாயம் 16

    1

    விடியற்காலை நேரம். மெழுகுவர்த்தியுடன் சாந்தி அறைக்குள் வந்தாள். முதல் நாளிரவே சாமான்களை எடுத்து வைத்துக் கொண்டது நல்லதாகி விட்டது. நள்ளிரவில் மின்சாரம் தோற்று விட்டது.

    கையில் பிடித்த மெழுகுவர்த்தியின் சுடரில் அவளுடைய முகம் ரோஜாவின் செவ்விதழாய் மெருகேறி நின்றது. செஸ் ஆடுவதுபோல கண்கள் ஒவ்வொரு பொருளையும் உன்னிப்பாகக் கவனித்து, நிதானமாக நகர்த்தின. ரொட்டிபோல தோல் பெட்டியின் மூடி, முழங்காலின் கீழ் மெத்தென்று அமுங்கிற்று.

    ஒவ்வோர் அறையாகப் பூட்டிக்கொண்டு வந்தாள். வாசலில் பெட்டியையும், கைப்பெட்டியையும் கொண்டு வந்து வைத்து, வாசற் கதவை மூடினாள். பூட்டின்மேல் கைவிரல்கள் பத்திரமாகப் பொத்தி இழுத்துப் பார்த்தன. கால் செருப்பை மாட்டிக்கொண்டாள்.

    கிளம்பியாயிற்று. மனத்துக்குள் இனம் புரியாத பரபரப்பு. பிரயாணம் என்றாலே இப்படித்தான்... முதல் நாள் இரவு இமை மூடினாலும் உறக்கம் பிடிபடாது. செடிக்கு செடி, மலருக்கு மலர் இரகசியமாகத் தாவிப் பறக்கும் வண்ணத்துப்பூச்சியைப் போல, மனம் இருப்புக் கொள்ளாமல் தவிக்கும். அதுவும் இது தனியாகச் செல்லும் பயணம்.

    தனியாகப் பயணம் செய்வது அவளுக்குப் புதிதல்ல... வெளியூர் - வெளிநாடு என்று பலமுறை தனியாகப் பிரயாணம் செய்திருக்கிறாள்.

    விடியற்காலையில் இதைப்போல எழுந்து வேலைக்குப் போவதும், அவளுக்குப் புதிதல்ல. அது அவளுடைய அன்றாடக் கடமை.

    ஏர்ஹோஸ்டெஸ்ஸாகச் சேர்ந்து நான்கு ஆண்டுகளாயிற்று. பிரயாணமும், தனிமையும், உடம்பிலும் ரத்தத்திலும் ஊறிப் போய்விட்டது. எதைச் சொன்னாலும் செய்தாலும் நினைவு சென்றுபோன வருடங்களில், கல் - முள் - மேடு - பள்ளம் என்று பாராமல் விழுந்தடித்துக் கொண்டு ஓடுவது இயல்பாகி விட்டது.

    இருந்தும், இது புதிய அனுபவம்தான்... கல்யாணத்துக்காக சேலத்துக்கு எல்லோரும் முன்னால் புறப்பட்டுப் போய்விட்டார்கள். சேலத்துக்குச் செல்ல கோவை எக்ஸ்பிரஸைப் பிடிக்க, அவள் இப்போது தனியாகக் கிளம்பிக் கொண்டிருக்கிறாள்.

    பெட்டியுடன் சாலையின் கடைசிக்கு வந்தவள், சென்ட்ரல் ரயில் நிலையத்துக்குக் கிளம்பிக் கொண்டிருக்கும் பஸ்ஸைப் பார்த்தாள். கண்கொட்டும் நேரத்தில் அது நழுவிப் போய் விட்டது. வைகறையின் கறை இருளில் அவள் கையசைப்பும், குரல் தவிப்பும் கண்டக்டரை எட்டவில்லை.

    மணிக்கட்டைத் திருப்பிப் பார்த்தாள். மணி ஐந்தாகி விட்டது. ரயிலுக்கு இன்னும் ஒரு மணி நேரம் இருந்தது, அந்த நேரத்தில் டாக்ஸியோ, ஆட்டோ ரிக்ஷாவோ கண்ணில் படவும் இல்லை.

    இந்த தவிப்பும் அவளுக்குப் புதிதல்ல. விடியற்காலை நான்கு மணிக்கே எழுந்து, தன்னை தயார் செய்து கொண்டு, அட்டைபோட்ட புதுப்புத்தகம் போல் நலுங்காமல் அசையாமல் வாசலில் காத்துக்கொண்டிருக்க வேண்டும். விமான நிலையத்துக்குப் போகும் கார் ‘சர்’ ரென்று வந்து, கப்பிமண்ணை ஒரு முறை அரைத்து சறுக்கி நிற்கும். ‘போய்விட்டு வருகிறேன்’ என்று சொல்லிக் கொள்ளக்கூட நேரமில்லாமல், அவசரமாக ஓடிப்போய் காரில் ஏறிக் கொள்வாள்.

    ஒரு சில நாட்களில் கார் வந்துவிட்டுப் போய்விடும். அவள் இப்படித்தான் தவித்துப் போவாள். ஏதேனும் ஒரு பஸ்ஸைப் பிடித்து மெயின் ரோடுக்கு வந்துவிடுவாள். விமான நிலையத்துக்கு அவசரமாகப் போய்க் கொண்டிருக்கும் பிரயாணிகளின் கார்களில் ஏதேனும் ஒன்று, அவள் கட்டை விரல் அடையாளத்தைப் புரிந்து கொண்டு ‘லிப்ட்’ கொடுக்கும். ‘தாங்ஸ்’ என்று சொல்லி ஏறி உட்கார்ந்த பிறகு, அந்தத் தவிப்பின் மனச்சுமையைப் பெருமூச்சில் இறக்கிக் கொள்வாள்.

    இன்றும் அப்படி ஏதாவது ஒரு கார் வந்தால்...?

    அந்த நினைப்பே ஒரு தவமோ? கைமேல் கிடைத்த வரம் போல் அந்தக் கார் வந்து அருகே நின்றது. அவளை, பிறகு அந்தப் பெட்டியை, மீண்டும் ஒளி விழுந்த சாலையை அவள் காணக்கண்ணோட்டம் விட்டான், உள்ளே சக்கரத்தைப் பிடித்து அமர்ந்திருந்த வாலிபன்.

    எங்கே போக வேண்டும் மேடம்?

    சென்ட்ரல் ஸ்டேஷனுக்கு... பஸ்ஸைத் தவற விட்டு விட்டேன்.

    ஓ! அதனால் பயணம் கெடவில்லை. காரில் ஏறிக் கொள்ளுங்கள். நான் சென்ட்ரலுக்குத்தான் போகிறேன். பெங்களூரிலிருந்து வருபவரைச் சந்தித்து அழைத்துக் கொண்டு வர வேண்டும்...

    நான் திரும்பி வரப்போவதில்லை.

    தெரிகிறது. உங்கள் கைப்பெட்டி நீங்கள் வெளியூர் செல்லப் போகிறீர்கள் என்ற கதையைச் சொல்கிறது. கெட் இன் மேடம்!

    இடது கையை நீட்டி முன்புறம் கதவைத் திறந்து விட்டான். சாந்தி ஏறி உட்கார்ந்து கொண்டாள். தனக்கும் அந்த வாலிபனுக்கும் நடுவில் கைப்பெட்டியை நிற்க வைத்துக் கொண்டாள்.

    என் பெயர் சசிகுமார்... கைப்பெட்டியைக் கீழே அல்லது பின்புறம் வைக்கிறீர்களா? சுவருக்குப் பின்புறம் இருந்து பேசுவதைப்போல எட்டிப் பார்த்துப் பேச வேண்டியிருக்கிறது...

    அவளுடைய சிரிப்பு குன்றிமணியை இறைத்ததுபோல் உதிர்ந்தது. சித்திரத்துக்குக் கண் திறந்ததுபோல குறு குறுப்பான பார்வையுடன், ஒருகணம் மெளனமாக உட்கார்ந்திருந்தாள். கார் புறப்பட்டு சீறி, முகடேறித் தணிந்து நிதானமாய் ஓடத் தொடங்கிற்று.

    என் பெயர் சாந்தி...

    அப்பாடா! எங்கே பேச வராதோ என்று எண்ணிக் கலங்கிப் போய் விட்டேன். உங்கள் குரலும், முகமும் எனக்குப் பரிச்சயம் ஆனது போலத் தோன்றுகின்றன. ஆனாலும் நான் உங்களைச் சந்தித்ததில்லை. ஆயினும், பழக்கமானது போன்ற ஒரு உணர்வு தெரிகிறது.

    உங்கள் ஊகம் சரியானதுதான். விமானப் பயணங்களில் என்னைப் பார்த்திருக்கலாம். நான் இந்தியன் ஏர்லைன்ஸில் விமானப் பணிப்பெண்ணாகப் பணியாற்றுகிறேன். இது போல விடியற்காலை நேரத்தில் விமான நிலையத்துக்குப் புறப்பட்டுப் போய்க்கொண்டிருப்பேன்.

    இப்போது புரிகிறது. நான் அடிக்கடி டில்லி செல்ல வேண்டி இருப்பதுண்டு. விமானத்தில் உங்களைப் பார்த்திருக்கிறேன். இந்த வேடிக்கையைக் கவனித்தீர்களா? விமானப் பயணத்தில் பலமுறை பார்த்திருந்தாலும் அதை நாம் ஒரு சந்திப்பாகக் கணக்கு எடுத்துக் கொள்வதில்லை. பார்த்த ஞாபகமும் அடையாளமாக இருப்பதில்லை. அந்தப் பயணத்தில் ஒரு அங்கமாக அவர்களை நினைக்கிறோம். அப்புறம் மறந்து விடுகிறோம். பயணத்துடன் அதுவும் முடிந்து விடுகிறது. ஆனால், அலுவலகத்தில் இரண்டு தடவைகள் நம்மிடம் காரியமாக வரும் ஒருவரை அப்புறம் நாம் லேசில் மறப்பதில்லை. அந்த ‘பைலை’ எடுக்கும் போதெல்லாம் அவர்களுடைய ஞாபகமும் வருகிறது...

    அவன் பேசிய விதம் அவளுக்குப் பிடித்திருந்தது. வெறுமனே அறிமுக வார்த்தைகளாக இரண்டொன்றை சொல்லி நிறுத்தியிருக்கலாம். ஆனால் அதையே அவன் ரசனையுடன் சொன்ன விதத்தில் ஒரு சொல் ருசி இருந்தது. பேசிக் கொண்டே மிக அமைதியாகக் காரை ஓட்டிக்கொண்டே அவளை அவன் கவனித்த விதமும் தனியாகவே இருந்தது. அது திருட்டுப் பார்வையல்ல; ரகசியமாக ரசிக்கும் கடைக்கண் பார்வையும் அல்ல. ஆனால், அவன் பார்ப்பதை அவளால் புரிந்து கொள்ள முடிந்தது.

    ஸோ! நீங்கள் ஒரு ஏர்ஹோஸ்டஸ். இந்தியன் ஏர்லைன்ஸில் வேலை பார்க்கிறீர்கள்... என்னைப் பற்றி நீங்கள் கேட்க வில்லையே? விமானத்தில் தட்டுடன் வந்து குனிந்து, புன்முறுவலுடன் கேட்பீர்களே? அந்த அன்பைக் கூட இங்கே காணோமே? என்றான் சசிகுமார்.

    சொல்லுங்களேன்... என்று பட்டத்துக்கு நூலை விடுவது போல பேச்சைத் தளரவிட்டாள் சாந்தி.

    நான் கம்ப்யூட்டர் பிஸினஸில் இருக்கிறேன். உயர் படிப்பு படித்து இந்தத் துறையில் இறங்கி எட்டு ஆண்டுகள் ஆகின்றன. சென்னையில் எனக்கு நிறைய நண்பர்கள் உண்டு. பெங்களூரில் பல உறவினர்களும் உண்டு. இப்போது நான் பெங்களூர் ரயிலில் வந்துசேரும் ஒரு பெண்மணியைச் சந்தித்து அழைத்துக் கொண்டுவரத்தான் போகிறேன்.

    பிஸினஸ் விஷயமா இதுவும்?

    இல்லை... இல்லை. என்னுடைய சொந்தக்கார பெண்... மிக நெருங்கிய சொந்தம்.

    க்விஸ் கேள்விக்குப் பதில் சொல்லுவதைப் போல சொல்கிறேன். அது உங்கள் மனைவியா?

    இல்லை... இல்லை. எனக்கு இன்னும் கல்யாணம் ஆகவே இல்லை. இது என்னுடைய மாமனின் பெண். இரவு நேரப் பயணம். காலை நேரத்தில் டாக்ஸியில் தனியே வருவது சிரமம். அதனால் கார் கொண்டுவர முடியுமா? என்று கேட்டாள். எனக்கு மறுக்க மனம் இல்லை. அந்தப் பெண்மணிக்கு உதவப்போய் இங்கே இன்னொரு பெண்மணிக்கும் உதவி செய்தாகி விட்டது!

    சொல்லி வைத்தது போல இருவரும் ஒன்றாகச் சிரித்தார்கள். நூல் ஜரிகை மாலைமேல் சுற்றியதுபோல அந்த நயமான பேச்சுக்கு அந்த மென்சிரிப்பு மெருகாய் அமைந்தது.

    விடியத் தொடங்கி விட்டது. வானத்தில் மேகத்துணுக்குகளின் பவனி. கூடையிலிருந்து குழந்தை எடுத்துப் போட்டு இறைத்த வண்ண வண்ணப் பொம்மைகள்போல, வெள்ளையும் - சிவப்பும் - மஞ்சளுமாக மேகத்துணுக்குகள்.... விதம்விதமான பறவைகள் பின்னணியில் பொட்டு வைப்பதுபோல் சிதறிப் பறந்தன. கண்ணுக்கும் - மனத்துக்கும் அந்தக் காட்சி ரம்மியமாக இருந்தது.

    சென்ட்ரல் ரயில் நிலையம் வந்து விட்டது.

    கார் நின்றதும் அவள் இறங்கினாள். ரயிலுக்கு இன்னும் இருபது நிமிடங்கள் இருந்தன. அவசரப்பட தேவையில்லை. அவன் அவசர அவசரமாக இறங்கினான். இந்நேரம்

    Enjoying the preview?
    Page 1 of 1