Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Idhayam Unathu Kaanikkai
Idhayam Unathu Kaanikkai
Idhayam Unathu Kaanikkai
Ebook101 pages27 minutes

Idhayam Unathu Kaanikkai

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

சிவானியும் கோபாலும் சிறுவயதிலிருந்தே ஒன்றாக வளர்ந்தவர்கள். இருவரும் ஒருவரை ஒருவர் ஆழமாக காதலிக்கிறார்கள். இவருடைய வீட்டிலும் கல்யாணம் செய்து வைக்கலாம் என்று முடிவு செய்து ஜோசியம் பார்கின்றனர். சிவானியை திருமணம் செய்து கொண்டால் கோபால் இறந்து விடுவான் என்று ஜோசியர் சொல்கிறார். சிவானிக்கு திருமணம் நடந்ததா? கோபாலின் நிலை என்ன? சிவானி-கோபால் சேர்ந்தார்களா? இல்லையா?
Languageதமிழ்
Release dateJan 4, 2021
ISBN6580137106167
Idhayam Unathu Kaanikkai

Read more from R. Sumathi

Related to Idhayam Unathu Kaanikkai

Related ebooks

Reviews for Idhayam Unathu Kaanikkai

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Idhayam Unathu Kaanikkai - R. Sumathi

    http://www.pustaka.co.in

    இதயம் உனது காணிக்கை

    Idhayam Unathu Kaanikkai

    Author:

    ஆர்.சுமதி

    R. Sumathi

    For more books

    http://www.pustaka.co.in/home/author/r-sumathi

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    அத்தியாயம் 1

    அத்தியாயம் 2

    அத்தியாயம் 3

    அத்தியாயம் 4

    அத்தியாயம் 5

    அத்தியாயம் 6

    அத்தியாயம் 7

    அத்தியாயம் 8

    அத்தியாயம் 9

    அத்தியாயம் 10

    அத்தியாயம் 11

    அத்தியாயம் 12

    அத்தியாயம் 13

    1

    சிவப்பும் வெள்ளையுமாய் அல்லியும் தாமரையும் மலர்ந்து கிடந்த குளத்தில் ஆலம் விழுதை பற்றி பறந்து போய் தொபீரென குதித்தான் கோபால்.

    தண்ணீருக்குள் சென்று கைநிறைய மண்ணையள்ளிக் கொண்டு மேலே வந்தவன் ஈரத்துடன் வழிந்து கண்ணை மறைத்த முடிக்கற்றையை இடது கையால் ஒதுக்கியவாறே...

    ஹோ... வென கூச்சலிட்டான்.

    படிக்கட்டில் தன் பாவாடை நனைந்து விடாதபடி உயர்த்தி தொடை மீது வைத்துக் கொண்டு தண்ணீரில் கால்களை விட்டபடி இருகைகளாலும் கன்னங்களை தாங்கி குறுகுறுவென அவனையே பார்த்துக்கொண்டிருந்தாள் சிவானி. அவளுடைய மையிட்ட இருவிழிகளும் ஆச்சரியத்தாலும் பயத்தாலும் மாறிமாறி படபடத்தன.

    அவன் ஆலம் விழுதை பற்றி பாய்ந்து குளத்தில் விழும்போது அவளுடைய விழிகளுக்குள் பரவும் பயம் அவன் கைநிறைய மண்ணை அள்ளிக் கொண்டு மேலே வந்து ஹோவென கூச்சலிடும் போது சந்தோஷமாக மாறி குளத்தில் மலர்ந்திருக்கும் தாமரையாய் முகம் மலர்ந்தது.

    டேய்... போதுண்டா. வாடா வீட்டுக்கு போகலாம். அம்மா தேடுவாங்கடா.

    நான் வரலை. நீ போ. இன்னும் கொஞ்ச நாழி குளிச்சுட்டு தான் வருவேன்

    எனக்கு பயமாயிருக்குடா!

    முகத்தை பாவமாக வைத்துக் கொண்டு சொன்னாள் சிவானி.

    இதபார், நான் ஒண்ணும் உன்னை இங்க உட்கார சொல்லலை. உங்கம்மா அடிப்பாங்கன்னு பயமாயிருந்தா நீ வீட்டை பார்க்க ஓடு அவன் மிரட்டினான்.

    எங்கம்மா அடிப்பாங்கன்னு நான் பயப்படலைடா கோபால். உனக்கு அடிப்பட்டுடுமேன்னு பயமாயிருக்கு. குதிச்சது போதும் வாடா வீட்டுக்கு.

    அவன் தண்ணீரில் பாய்ந்து நீச்சலடித்து ஆர்ப்பாட்டம் பண்ணினான்.

    தன் மேல் தெறித்த தண்ணீரால் உடல் சிலிர்த்தாள் சிவானி, நீச்சலடிப்பதை நிறுத்தி அவள் மீது இருகைகளாலும் தண்ணீரை வாரி இறைத்தான்.

    பயந்தாங்கொள்ளி, சரியான பயந்தாங்கொள்ளி, வா... நீயும் வந்து குளி...

    கரைக்கு வந்து அவளுடைய கையை பற்றி இழுத்து தண்ணீரில் தள்ளினான்.

    தண்ணீரில் விழுந்து முழுவதுமாக நனைந்துவிட்ட சிவானி பெரிதாக குரலெடுத்து அழத்தொடங்கினாள்.

    அதைப்பார்த்து பெரிதாக சிரித்த அவன் அவளுடைய இரு ஜடையையும் பற்றி ஆட்டினான்.

    போடா... உன் கூட இனிமே பேசமாட்டேன். டூ. என கரையேற முயன்றாள்.

    ஓடு. ஓடு. வீட்டுக்கு ஓடு. ஸ்கூல் விட்டு வீட்டுக்கு வராம குளத்துல ஆட்டம் போட்டுட்டு வர்றியான்னு உங்கம்மா உன்னை சக்கையா நொறுக்கப் போறாங்க.

    இருடா! உங்கம்மாக்கிட்ட உன்னை மாட்ட வைக்கிறேன். என கரையேறி ஓடினாள்.

    அழுதுக் கொண்டே தன் புத்தகப் பையை தூக்கிக் கொண்டாள். அவன் பின்னாலேயே ஓடி வந்தான். அவளை தாண்டிக் கொண்டு ஓடி கால்களில் மண் பதிய மீண்டும் ஆலம் விழுதை பற்றினான். அவன் மேலிருந்த கோபம் அழுகை அத்தனையும் நிமிடத்தில் நின்றது சிவானிக்கு.

    அவன் விழுதை பற்றிக் கொண்டு ‘ஓய்ங்...’ என சத்தத்துடன் தண்ணீரில் பாயும் அந்த காட்சியை பார்க்கும் ஆவலுடன் திரும்பினாள்.

    அவன் முனிவரின் ஜடாமுடியைப்போல் தொங்கிக் கொண்டிருந்த விழுதினைப் பற்றி மாபெரும் சர்க்கஸ் வீரனைப்போல் தண்ணீரில் பாய்ந்தான்.

    தொபீரென்ற ஓசையுடன் உள்ளே போனான்.

    பரவசத்தோடு பார்த்துக்கொண்டிருந்தாள். அவன் மண்ணையள்ளிக் கொண்டு மாபெரும் வெற்றி பெருமிதத்துடன் தண்ணீருக்கு வெளியே தலையைக் காட்டப் போகும் நிமிடத்திற்காக கண்களை இமைக்காமல் பார்த்துக் கொண்டிருந்தாள்.

    அவள் பார்க்க பார்க்க வரவேயில்லை.

    ஐந்து பத்து பதினைந்து... நிமிடங்கள் கூடிக் கொண்டே போக சிவானியின் முகம் மாறியது. வெளிறியது. கண்களில் பயம் பரவ கோபால்... என அந்த சூழ்நிலையே கிடுகிடுக்க அலறினாள் சிவானி.

    தூக்கிவாரிப் போட எழுந்தாள் மகேஸ்வரி. அவசரமாக பக்கத்தில் பார்த்தாள்.

    சிவானி தூக்கத்தில் ‘கோபால் கோபால்’ என அலறிக் கொண்டிருந்தாள்.

    ஏய்... சிவானி. சிவானி! மகேஸ்வரி உலுக்க திடுக்கிட்டு அவசரமாக எழுந்து அமர்ந்தாள் சிவானி.

    அவளுடைய கைகள் வெடவெடவென நடுங்கின. அம்மாவின் கைகளைப்பற்றிக் கொண்டாள்.

    அம்மா... கோபால்... கோபாலுக்கு ஒண்ணும் ஆகலையே!

    அவனுக்கு ஒண்ணும் ஆகலை. அவன் இந்நேரம் அடிச்சு போட்ட மாதிரி தூங்கிக்கிட்டிருப்பான். என்ன... கனவு ஏதாவது கண்டியா?

    தான் கண்டது கனவு என நிமிடத்தில் புரிந்ததும் நெஞ்சுக்குள் சிறுநிம்மதி பரவியது.

    அவிழ்ந்து முன்னே தொங்கிய கூந்தலை ஒதுக்கியவாறே "ஆமாம்மா. கனவுதான். ஜாலியா ஆரம்பிச்சு ஆபத்தா முடிஞ்ச கனவு. கோபாலும் நானும் ஸ்கூல்ல

    Enjoying the preview?
    Page 1 of 1