Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Panpai Valarkkum Siruvar Kathaigal
Panpai Valarkkum Siruvar Kathaigal
Panpai Valarkkum Siruvar Kathaigal
Ebook80 pages28 minutes

Panpai Valarkkum Siruvar Kathaigal

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

அன்பு முத்தங்கள். உங்களுக்காக இதுவரை நான் இருபத்து ஐந்துக்கும் மேற்பட்ட நூல்களை எழுதியுள்ளேன். இவற்றில் சுமார் பத்து சிறுகதைத் தொகுப்புகளும் அடங்கும். சமீபத்தில் “பண்பை வளர்க்கும் சிறுவர் கதைகள்” எனும் இந்த நீதிக்கதை நூலை எழுதியுள்ளேன். சிறுவர் சிறுமியர்களாகிய உங்களுக்கு கதை எழுதுவது என்பது எனக்கு மகிழ்ச்சி தரும் ஒரு விஷயம். உங்களுக்காக கதை எழுதும்போது நானும் ஒரு சிறுவனாகிவிடுகிறேன் என்பது உண்மை.

எதிர்கால இந்தியா உங்கள் கைகளில் இருக்கிறது. இத்தகைய நீதிக்கதைகளை நீங்கள் படித்து அவற்றில் உள்ள கருத்துக்களை உங்கள் மனதில் பதித்து எதிர்காலத்தில் நல்ல மனிதர்களாக ஒரு பண்புள்ள வாழ்க்கையை வாழ வேண்டும்.

Languageதமிழ்
Release dateMar 18, 2023
ISBN6580138809633
Panpai Valarkkum Siruvar Kathaigal

Read more from R.V.Pathy

Related to Panpai Valarkkum Siruvar Kathaigal

Related ebooks

Reviews for Panpai Valarkkum Siruvar Kathaigal

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Panpai Valarkkum Siruvar Kathaigal - R.V.Pathy

    A picture containing icon Description automatically generated

    https://www.pustaka.co.in

    பண்பை வளர்க்கும் சிறுவர் கதைகள்

    Panpai Valarkkum Siruvar Kathaigal

    Author:

    ஆர். வி. பதி

    R.V.Pathy

    For more books

    https://www.pustaka.co.in/home/author/rv-pathy

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    1. இரு தவளைகள்

    2. குறுக்குவழி

    3. காட்டுக்குள்ளே திருவிழா

    4. ஒரு தவறு திருத்தப்படுகிறது

    5. நம்பிக்கை

    6. செல்போன் சாகசம்

    7. கண்ணாமூச்சி ரே ரே

    8. மூன்று திருடர்கள்

    9. பாடம் கற்ற திபோ

    10. கர்வம் அகன்றது

    11. ஆசிரியர் தந்த பரிசு

    உங்களோடு ஒரு நிமிடம்

    சுட்டிகளே,

    அன்பு முத்தங்கள். உங்களுக்காக இதுவரை நான் இருபத்து ஐந்துக்கும் மேற்பட்ட நூல்களை எழுதியுள்ளேன். இவற்றில் சுமார் பத்து சிறுகதைத் தொகுப்புகளும் அடங்கும். சமீபத்தில் பண்பை வளர்க்கும் சிறுவர் கதைகள் எனும் இந்த நீதிக்கதை நூலை எழுதியுள்ளேன். சிறுவர் சிறுமியர்களாகிய உங்களுக்கு கதை எழுதுவது என்பது எனக்கு மகிழ்ச்சி தரும் ஒரு விஷயம். உங்களுக்காக கதை எழுதும் போது நானும் ஒரு சிறுவனாகிவிடுகிறேன் என்பது உண்மை.

    எதிர்கால இந்தியா உங்கள் கைகளில் இருக்கிறது. இத்தகைய நீதிக்கதைகளை நீங்கள் படித்து அவற்றில் உள்ள கருத்துக்களை உங்கள் மனதில் பதித்து எதிர்காலத்தில் நல்ல மனிதர்களாக ஒரு பண்புள்ள வாழ்க்கையை வாழ வேண்டும்.

    தற்காலத்தில் வல்லவனாக இருப்பது அவசியம். மேலும் நல்லவனாக இருப்பது அதைவிட அவசியம். பண்பை வளர்க்கும் சிறுவர் கதைகள் எனும் இந்த நூலை மின்னூலாக வெளியிடும் புஸ்தகா நிறுவனத்திற்கு என் நன்றி.

    வாழ்த்துக்களுடன்

    ஆர்.வி. பதி.

    1. இரு தவளைகள்

    ஒரு ஊரில் இரண்டு தவளைகள் வாழ்ந்து வந்தன. ஒரு தவளையின் பெயர் ஷீபா. மற்றொரு தவளையின் பெயர் ரியா. இரண்டு தவளைகளும் சிறந்த நண்பர்களாக இருந்து வந்தன. எங்கே சென்றாலும் இரண்டும் ஒன்றாகவே செல்லும் வழக்கத்தை வைத்திருந்தன. எல்லா விஷயங்களிலும் இரு தவளைகளும் ஒன்றுக்கொன்று உதவியாக வாழ்ந்து வந்தன. கிடைக்கும் உணவை இரண்டும் பங்கு போட்டு சாப்பிடும் சிறந்த வழக்கத்தை வைத்திருந்தன.

    இயற்கையாகவே ஷீபா பயந்த சுபாவம் உடையதாக இருந்தது. எதற்கெடுத்தாலும் அதற்கு பயம். மேலும் எதிலும் அதற்கு நம்பிக்கையே கிடையாது. ஆனால் ரியாவோ இதற்கு நேர் எதிர் குணம் மிக்கதாக விளங்கியது. ரியாவிற்கு தைரியம் அதிகம். தன்னால் எதையும் சாதிக்க முடியும் என்ற நம்பிக்கை அதற்கு இருந்தது.

    ஒருநாள் இரண்டு தவளைகளும் உணவைத் தேடி ஒரு இடத்திற்குச் சென்றன. உணவைத் தேடும் கவனத்தில் இரண்டும் வெவ்வேறு பகுதிகளுக்குச் சென்று விட்டன. சற்று நேரம் கழித்து ரியா ஷீபாவைத் தேடி வந்தது. அப்போது ஷீபா ஒரு பெரிய ஆபத்தில் சிக்கிக்கொள்ள இருந்தது.

    ஷீபா. வேகமா ஓடி வா. என்ன ஏதுன்னு கேட்காதே

    இதைக் கேட்ட ஷீபா மிரண்டு போனது.

    ரியா சொன்னது போலவே தன்னால் முடிந்த மட்டும் முன்னேறி வேகமாக தத்தித்தத்தி ஓடி வந்தது.

    சீக்கிரம் வா. நாம ஓடிடுவோம்.

    ரியா இப்படிச் சொல்ல ஷீபா அதனுடன் வேகமாக ஓடி வந்தது.

    சற்று தூரம் சென்றதும் திரும்பிப் பார்த்த ரியா சற்று நிம்மதிப் பெருமூச்சு விட்டது.

    அப்பாடா. நல்லவேளையா தப்பிச்சே.

    என்ன விஷயம் ரியா?

    நீ கவனிக்காம உட்கார்ந்துகிட்டிருந்தே. அப்ப உனக்கு பின்பக்கமா கொஞ்ச தொலைவிலே ஒரு பாம்பு வந்துகிட்டிருந்தது. கொஞ்ச நேரம் அங்கேயே நீ இருந்திருந்தா அந்த பாம்பு உன்னைப் பிடிச்சி விழுங்கியிருக்கும்.

    ரொம்ப நன்றி ரியா. என்னை நீ காப்பாத்திட்டே.

    "எதுக்கு

    Enjoying the preview?
    Page 1 of 1