Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Aazhkadal Nesam
Aazhkadal Nesam
Aazhkadal Nesam
Ebook98 pages57 minutes

Aazhkadal Nesam

Rating: 5 out of 5 stars

5/5

()

Read preview

About this ebook

GA Prabha is a prolific writer of Tamil, and has written about 100 novels, 120+ short stories, 5 novelettes covering in family and romance category. Her works are published in various magazines. She has also won many prizes conducted by various magazines like Kalki and Anandha Vikatan.


Currently she lives in Gopichetty Palayam, Tamil Nadu.
Languageதமிழ்
Release dateAug 12, 2019
ISBN9789352851102
Aazhkadal Nesam

Read more from Ga Prabha

Related to Aazhkadal Nesam

Related ebooks

Reviews for Aazhkadal Nesam

Rating: 5 out of 5 stars
5/5

1 rating0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Aazhkadal Nesam - GA Prabha

    http://www.pustaka.co.in

    ஆழ்கடல் நேசம்

    Aazhkadal Nesam

    Author:

    ஜி.ஏ.பிரபா

    G.A.Prabha

    For more books

    http://www.pustaka.co.in/home/author/ga-prabha

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    அத்தியாயம் 1

    அத்தியாயம் 2

    அத்தியாயம் 3

    அத்தியாயம் 4

    அத்தியாயம் 5

    அத்தியாயம் 6

    அத்தியாயம் 7

    அத்தியாயம் 8

    அத்தியாயம் 9

    அத்தியாயம் 10

    அத்தியாயம் 11

    அத்தியாயம் 12

    1

    "கலியுகத் தெய்வமே கந்தனுக்கு மூத்தோனே

    மூசஷிக வாகனனே மூலப் பொருளோனே"

    காதில் விழுந்து இறங்கியது. வெண்கலக் குரல். நழுவி நழுவி உருகிய நினைவுகளை இழுத்து நிறுத்தி விழிக்க வைத்தது.

    தீபா புரண்டு படுத்தாள். இரு கைகளை தேய்த்து கண்ணில் பதித்துக்கொண்டு அப்படியே படுத்திருந்தாள்.

    "ஸ்கந்தகுரு கவசத்தை கலிதோஷம் நீங்கிடவே

    தருவடியில் திருவருளால் செப்புகிறேன் காத்திடுவாய்"

    மனம் கூடவே பாடியது. உதடு கந்தா சரணம் கந்தா சரணம் என்று முணுமுணுத்தது.

    நினைவுகளை முழுதும் துடைத்து எறிந்து விட்டு, வெள்ளை துணியாய் அழுக்கு படாத மனமாய் விடிகாலையில்தான் இருக்க முடிகிறது. நேரம் நகர, நகர வெள்ளை கறுப்பாகிவிடுகிறது.

    தீபா எழுந்திருக்கப் பிடிக்காமல் அப்படியே கிடந்தாள். நேரம் நகராமல் இப்படியே நின்றால் எவ்வளவு நன்றாக இருக்கும்? வருத்தம் தரும் சம்பவங்கள் வராமலேயே போய்விடும்.

    சாம்பிராணி மணமும், புகையும் அவளை எழுந்து உட்கார வைத்தது. இனி படுக்க முடியாது. எத்தனை ஆசைகள் மனதில் இருந்தாலும், நடக்க வேண்டியது வந்து கொண்டேதான் இருக்கப் போகிறது.

    உதிக்காதே என்று சூரியனைத் தடுக்க அவள் நளாயினி அல்லவே!

    ஒத்துவராத புருஷனைவிட்டு விலகி, அடுத்த திருமணத்திற்கு தயாராகப் போகிறாள். இன்றுதான் டைவர்ஸ் தீர்ப்பு. பத்துமணிக்கு கோர்ட்டில் இருக்க வேண்டும்.

    நினைவுகளை உதறி எழுந்திருக்க முயன்றாள். முடியவில்லை.

    மனபூதம் ஒரு பேரிறைச்சலோடு அவளை ஆக்கிரமித்தது. நடந்தவைகளை ஒரு வலியோடு நினைத்தபடி படுத்திருந்தாள்.

    தீபா– அம்மாவின் குரல் கதவருகில் கேட்டது.

    என்னம்மா?

    முழிச்சிட்டியா! எழுந்து குளிச்சிரேன்

    ஒரு பத்து நிமிஷம்மா

    எட்டு மணிக்கு கார் வந்துரும் தீபா. வக்கீல் வீட்டுக்குப் போயிட்டு கோர்ட்டுப் போகணும். கிளம்பறதுக்கு முன்னாடி இங்க கோவிலுக்கு போயிட்டு வந்துரலாம்.

    சரிம்மா

    அம்மா அருகில் வந்து தலையை தடவிவிட்டாள்.

    ஏன் தீபா! வேதனையா இருக்கா?

    கொஞ்சம்

    அதான் கொஞ்சம் பொறுத்துப் போன்னு சொன்னேன். அப்பாவும், பொண்ணும் கேக்கலை. எல்லாம் முடியற நேரத்துல வேதனைப் பட்டு என்ன பிரயோஜனம்?

    மனசு ஏத்துப் போகாதப்போ, எப்படிம்மா பொறுத்துப் போறது? இப்படி ஆயிருச்சேன்னு வேதனைதானே தவிர பிரியறதுல வருத்தம் இல்லை

    என்னவோ போ. நாகரீகம்கற பேர்ல உறவுகளோட ஒத்துப் போகாம, பிரிஞ்சு வாழறீங்க. நான் என்ன சொல்றது? நீ வேதனைப் படறதைப் பார்த்தா என் வயிறு கலங்குது -அம்மா புலம்பியபடியே வெளியேறினாள்.

    இதற்குப் பயந்தே தீபா தன்னை உற்சாகமாக காட்டிக்கொள்வாள். என்றாலும் சில நிமிடங்கள், அவளையும் மீறி ஆதிக்கம் செலுத்தி விடுகின்றன.

    தீபா அவசரமாய் எழுந்து குளித்தாள். கோவிலுக்குப் போய்விட்டு வந்து, டிபன் சாப்பிட்டு, கார் வந்ததும் ஏறி உட்கார்ந்ததும் ‘ஜிவ்’வென்று வயிற்றுக்குள் பட்டாம்பூச்சி பறந்தது.

    ரவியைப் பார்ப்போமா?

    கிண்டலும், நக்கலும் நிறைந்த பார்வை.

    அவமானப்படுத்தி, அலட்சியப்படுத்தும் பார்வை.

    எப்போதும் ஒரு உச்சிக் கொம்பில் அமர்ந்து: ‘நான்’ என்ற அகம்பாவமும்,ஈகோவும நிறைந்த பார்வை, மனைவியிடம் இதமோ, பரிவோ காட்டத்தெரியாமல் கடமையாய், தான் யாராலும் நெருங்க முடியாத கடவுள் என்பது போல் ஒரு தொலைவில் இருக்கிறவன். ஈகோ, ஆணவம், அகம்பாவம். ஒரு வருஷ வாழ்க்கை நரகமாக இருந்துவிட்டது.

    என்று விரிசல் ஆரம்பித்தது?

    திருமண நாளன்று பெரியவர்கள் பார்த்து நிச்சயித்த திருமணம், நிச்சயம் முடிந்தபிறகு, ஒருநாள் தீபாவை வெளியில் கூட்டிப் போக வந்தான். ‘எங்க குடும்பத்தில் வழக்கமில்லைங்க’ என்று அப்பா மறுத்துவிட்டார். அதுவே உறுத்தலாகி அவன் ஈகோவை உசுப்பிவிட்டது.

    ரிசப்ஷன் சமயத்தில், ஆரவாரமாய், தமிழே தெரியாமல், ஆங்கிலத்தில் பிதற்றி, அலட்டி, தறிகெட்ட நாகரீகத்தில் அலைந்த அவன் நண்பர்கள், பெண் தோழிகள் சிறிது மிரட்சியைத் தந்தார்கள்.

    அன்பாய், அடக்கமாய், நம் குடும்ப கௌரவம், பண்பாடு, கலாச்சாரம் என்ற சூழலில் வளர்ந்தவள் தீபா. மிரட்சியும், பயமும் அவளை ரவியிடம் நெருங்க தடுத்தது.

    மேல்நாட்டு நாகரீகம் ரவியிது. சென்னையில் ஸாஃப்ட்வேர் இஞ்சினியர். எம்.காம்.முடித்துவிட்டு, குடும்ப பழக்கவழக்கம், கௌரவம், நாகரீகம் என்பது நல்ல செயல்களிலும், மனிதநேயத்திலும்தான் உள்ளது என்று வளர்க்கப்பட்டவள் தீபா.

    அதிர்ந்து பேசத்தெரியாது. அமைதியானவள். மனது நிரம்பி வழிய அன்பைக் குவித்து வைத்து ரவியின் அலட்டலில் அதை வெளிப்படுத்தத் தெரியாமல் திணறியவள். பயந்து

    Enjoying the preview?
    Page 1 of 1