Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Nooru Vayathu Vaazha Nooru Unavugal
Nooru Vayathu Vaazha Nooru Unavugal
Nooru Vayathu Vaazha Nooru Unavugal
Ebook246 pages1 hour

Nooru Vayathu Vaazha Nooru Unavugal

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

வணக்கம். நூறு வயது வாழ வேண்டும் என்ற எண்ணம் ஒவ்வொரு மனிதனுக்கும் உள்ளது. எவ்வளவு அற்புதமான வாழ்க்கையை வாழ்ந்தாலும் எவ்வளவு கஷ்டமான வாழ்க்கையை வாழ்ந்தாலும் இந்த உலக வாழ்க்கையிலிருந்து விடுபடுவதற்கு எந்த ஒரு மனிதனுமே விரும்புவதில்லை.

நீங்கள் ஒவ்வொருவரும் ஒவ்வொரு நொடிப்பொழுதும் முழு ஆரோக்கியத்தோடும் மகிழ்ச்சியோடும் வாழ வேண்டும் என்ற என்னுடைய நல்லெண்ணத்தின் அடிப்படையில் எழுதப்பட்டதே “நூறு வயது வாழ நூறு உணவுகள்” என்ற இந்த புத்தகம். உடல் நலம் சீர்கெட்டு மருத்துவனைக்குப் போய் நிற்கும் போதுதான் நமக்கெல்லாம் ஆரோக்கியத்தின் அருமையும் மகத்துவமும் புரிகிறது. நமது உடலை முடிந்த வரை பாதுகாத்துக் கொள்ள வேண்டும். அதற்கான முயற்சிகளையாவது நாம் மேற்கொள்ள வேண்டும்.

Languageதமிழ்
Release dateApr 8, 2023
ISBN6580138809723
Nooru Vayathu Vaazha Nooru Unavugal

Read more from R.V.Pathy

Related to Nooru Vayathu Vaazha Nooru Unavugal

Related ebooks

Reviews for Nooru Vayathu Vaazha Nooru Unavugal

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Nooru Vayathu Vaazha Nooru Unavugal - R.V.Pathy

    A picture containing icon Description automatically generated

    https://www.pustaka.co.in

    நூறு வயது வாழ நூறு உணவுகள்

    Nooru Vayathu Vaazha Nooru Unavugal

    Author:

    ஆர். வி. பதி

    R.V.Pathy

    For more books

    https://www.pustaka.co.in/home/author/rv-pathy

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    என்னுரை

    1. உணவின் அவசியம் என்ன?

    2. அறுசுவை உணவு

    3. பழங்களை நாம் ஏன் சாப்பிட வேண்டும்?

    4. கீரைகளை ஏன் சாப்பிட வேண்டும்?

    5. காய்கறிகளை பயன்படுத்துவது எப்படி?

    6. தாய்ப்பால்

    7. கைக்குத்தல் அரிசி

    8. சிறுதானியங்கள்

    9. கேழ்வரகு

    10. கோதுமை

    11. ஓட்ஸ்

    12. பார்லி

    13. சோளம்

    14. பாசிப்பயறு

    15. கொள்ளு

    16. முளைப்பயறு

    17. திரிபலா

    18. திரிகடுகம்

    19. வெங்காயம்

    20. தக்காளி

    21. அவரைக்காய்

    22. பீர்க்கங்காய்

    23. கோவைக்காய்

    24. குடைமிளகாய்

    25. சுரைக்காய்

    26. பீட்ரூட்

    27. பாகற்காய்

    28. புடலங்காய்

    29. முட்டைகோஸ்

    30. காலிஃப்ளவர்

    31. ப்ரோக்கோலி

    32. வெண்டைக்காய்

    33. கத்தரிக்காய்

    34. வாழை

    35. காரட்

    36. சோயா பீன்ஸ்

    37. வெள்ளரி

    38. பூசணிக்காய்

    39. டர்னிப்

    40. வெள்ளை முள்ளங்கி

    41. சுண்டைக்காய்

    42. முருங்கை

    43. குளோரெல்லா

    44. இஞ்சி

    45. பூண்டு

    46. கறிவேப்பிலை

    47. கொத்துமல்லி

    48. புதினா

    49. பசலைக் கீரை

    50. அகத்திக்கீரை

    51. புளிச்ச கீரை

    52. பருப்புக்கீரை

    53. பொன்னாங்கண்ணி

    54. அருகம்புல்

    55. தேங்காய்

    56. தேன்

    57. வேம்பு

    58. அக்ரூட்

    59. பாதாம்

    60. பேரீச்சை

    61. பப்பாளி

    62. நெல்லிக்காய்

    63. அவோகடா

    64. மங்குஸ்தான்

    65. கொய்யா

    66. எலுமிச்சை

    67. நட்சத்திரப் பழம்

    68. மாம்பழம்

    69. சீத்தாப்பழம்

    70. திராட்சை

    71. நாவல் பழம்

    72. மாதுளை

    73. ஆப்பிள்

    74. நுங்கு

    75. ஆரஞ்சுப்பழம்

    76. அத்திப்பழம்

    77. பலாப்பழம்

    78. அன்னாசிப்பழம்

    79. சாத்துக்குடி

    80. செவ்வாழை

    81. விளாம்பழம்

    82. பேரிக்காய்

    83. செர்ரி பழம்

    84. தர்பூசணி

    85. கிவி பழம்

    86. ஆப்ரிகாட்

    87. வெந்தயம்

    88. ஏலக்காய்

    89. சோம்பு

    90. பட்டை

    91. கிராம்பு

    92. பனீர் & டோஃபு

    93. காளான்

    94. கிரீன் டீ

    95. லெமன் டீ

    96. இளநீர்

    97. மோர்

    98. வெந்நீர்

    99. வேர்க்கடலை

    100. கடலை எண்ணெய்

    101. நல்லெண்ணெய்

    102. விளக்கெண்ணெய்

    103. கடுகு எண்ணெய்

    104. வெல்லம்

    105. மீன்

    106. உணவே மருந்து

    என்னுரை

    வணக்கம். நூறு வயது வாழ வேண்டும் என்ற எண்ணம் ஒவ்வொரு மனிதனுக்கும் உள்ளது. எவ்வளவு அற்புதமான வாழ்க்கையை வாழ்ந்தாலும் எவ்வளவு கஷ்டமான வாழ்க்கையை வாழ்ந்தாலும் இந்த உலக வாழ்க்கையிலிருந்து விடுபடுவதற்கு எந்த ஒரு மனிதனுமே விரும்புவதில்லை. நூறாண்டுகள் நோய் நொடி இல்லாமல் முழு ஆரோக்கியத்தோடு வாழ்வது என்பது சாத்தியமில்லை. நாம் இந்த பூமியில் வாழும் ஒவ்வொரு நொடியும் ஆரோக்கியமாக வாழ வேண்டும். அதுவே மிகவும் முக்கியம். பிறர் துணையோடு வாழும் வாழ்க்கை கஷ்டமானது துயரங்கள் நிறைந்தது என்பதை நாம் உணர்ந்து கொள்ள முயற்சிக்க வேண்டும்.

    நீங்கள் ஒவ்வொருவரும் ஒவ்வொரு நொடிப்பொழுதும் முழு ஆரோக்கியத்தோடும் மகிழ்ச்சியோடும் வாழ வேண்டும் என்ற என்னுடைய நல்லெண்ணத்தின் அடிப்படையில் எழுதப்பட்டதே நூறு வயது வாழ நூறு உணவுகள் என்ற இந்த புத்தகம். உடல் நலம் சீர்கெட்டு மருத்துவமனைக்குப் போய் நிற்கும் போதுதான் நமக்கெல்லாம் ஆரோக்கியத்தின் அருமையும் மகத்துவமும் புரிகிறது. நமது உடலை முடிந்தவரை பாதுகாத்துக் கொள்ள வேண்டும். அதற்கான முயற்சிகளையாவது நாம் மேற்கொள்ள வேண்டும்.

    தற்போதைய நவீன உலகத்தில் சர்க்கரை வியாதி, இரத்த அழுத்த வியாதி, இதய நோய், புற்றுநோய் ஆகிய நான்கு நோய்களும் மிக முக்கியமானவை. சுமார் ஐம்பது சதவிகித மக்களுக்கு மேல் இதில் ஏதாவது ஒரு நோயால் பாதிக்கப்பட்டு அவதியுறுபவர்களாக இருக்கிறார்கள். இந்த புத்தகத்தில் குறிப்பிட்டுள்ள உணவுகள் இந்த நான்கு நோய்களையும் வராமல் தடுக்கவும் வந்த பின்னால் உடலை சீராக வைத்துக் கொள்ளவும் பெரிதும் துணை செய்யும்.

    இந்த புத்தகத்தில் குறிப்பிட்டுள்ள உணவுகளை சாப்பிட்டால் நூறு வயது வாழலாம் என்று நீங்கள் நினைத்தால் அது முற்றிலும் தவறு. உலக ஆடுகளத்தில் மனிதர்களாகிய நாம் வாழ்க்கை எனும் ஒரு விளையாட்டில் ஈடுபட்டிருக்கிறோம். இந்த விளையாட்டு சிலருக்கு வெற்றிகரமாக அமைந்து விடுகிறது. பலருக்கு தோல்வியே பரிசாகக் கிடைக்கிறது.

    எல்லோரும் ஆரோக்கியமாக மகிழ்ச்சியோடு வாழ வேண்டும் என்ற என்னுடைய எண்ணத்தின் பிரதிபலிப்பே ‘நூறு வயது வாழ நூறு உணவுகள்’ என்ற இந்த புத்தகம். நிதானமாகப் படியுங்கள். முடிந்தவரை இந்த புத்தகத்தில் குறிப்பிட்டுள்ள உணவுகளை பயன்படுத்துங்கள்.

    நூறு வயது வாழ நூறு உணவுகள் என்ற இந்த மின்நூலை வெளியிடும் புஸ்தகா டிஜிட்டல் மீடியா நிறுவனத்திற்கு என் நெஞ்சார்ந்த நன்றிகள்.

    அன்புடன்

    ஆர்.வி. பதி

    1. உணவின் அவசியம் என்ன?

    நாம் சைக்கிளை ஓட்ட வேண்டும் என்றால் அதற்கு ஒரு ஆற்றல் தேவை. அதுபோலவே காரை ஓட்ட வேண்டும் என்றால் அதற்கு ஒரு ஆற்றல் தேவைப்படுகிறது. அது போலவே நமது உடல் நன்றாக இயங்க வேண்டுமென்றால் அதற்கும் ஆற்றல் தேவை. நமது உடல் சிறப்பாக இயங்கத் தேவையான ஆற்றலானது உணவிலிருந்தே பெறப்படுகிறது. நமது உடல் சிறப்பாக இயங்க கீழ்காணும் ஐந்து வகையான சத்துக்கள் அவசியம் தேவைப்படுகிறது.

    1. புரதச்சத்து (Proteins)

    2. மாவுச்சத்து (Carbohydrates)

    3. கொழுப்புச்சத்து (Fat)

    4. தாதுச்சத்து (Minerals)

    5. உயிர்ச்சத்து (Vitamins)

    மேற்காணும் சத்துக்கள் அனைத்தும் தேவையான அளவிற்கு உடலில் இருந்தால் மட்டுமே உடல் ஆரோக்கியமாக செயல்படும்.

    உடல் இயக்கத்திற்கு அவசியமான தேவை புரதச்சத்து. புரதச்சத்து உடலில் இறந்த செல்களை புதுப்பிக்கப் பயன்படுகிறது. ஆனால் இந்த சத்தானது சிறிதளவு கிடைத்தால் போதுமானது. புரதச்சத்தானது இறைச்சி மற்றும் மீன் உணவுகளில் இருக்கிறது. மேலும் முட்டை மற்றும் பாலாடைக்கட்டி போன்ற உணவு வகைகளில் இந்த புரதம் அதிக அளவில் உள்ளது. உடல் இயக்கத்திற்குத் தேவையான ஒன்பது அவசியமான அமினோ அமிலங்களை உருவாக்குவதிலும் பெரும் பங்கு வகிக்கிறது. புரதத்தில் ஏராளமான நுண்கூறுகள் உள்ளன. இத்தகைய நுண்கூறுகள் மிகமிக நுண்ணிய நுண்கூறுகளால் உருவாக்கப்பட்டவை. இத்தகைய நுண்கூறுகள் அமினோ அமிலங்கள் என்று அழைக்கப்படுகின்றன. இத்தகைய அமினோ அமிலங்கள் கலோரியை எரிக்க உதவுகின்றன. காய்கறிகள் மற்றும் பழங்களில் காணப்படும் கார்போஹைட்ரேட்டுகள் புரதத்துடன் இணைந்து அமினோ அமிலங்களை உண்டாக்குகின்றன. மாட்டிறைச்சி, கோழி இறைச்சி, நண்டு, முட்டை வெள்ளைக்கரு போன்றவற்றில் புரதச்சத்து அதிக அளவில் நிறைந்துள்ளது.

    நமது உடலில் நோய் எதிர்ப்பு ஆற்றலை சிறப்பாக இயங்க வைத்தல், இரத்தம் உறைதல், உடல் வளர்ச்சி போன்றவை சிறப்பாக இயங்க மாவுச்சத்தானது உதவிசெய்கிறது. இந்த சத்தை அளவிற்கு அதிகமாக சாப்பிட்டால் உடல் பருமன் ஆகும். இதனால் பலவிதமாக பிரச்சினைகள் தோன்றும். கார்போஹைட்ரேட் எனப்படும் மாவுச்சத்து உடலில் உள்ள ஒவ்வொரு செல்லுக்கும் சக்தியை அளிக்கிறது. சர்க்கரை, உலர்ந்த பழவகைகள், கேக், கோதுமை, அரிசி, உருளைக்கிழங்கு போன்ற உணவு வகைகளில் கார்போஹைட்ரேட் சத்து அதிகம் உள்ளது.

    கொழுப்புச் சத்தை அதிக அளவிலும் எடுத்துக் கொள்ளக்கூடாது. ஆனால் எடுத்துக் கொள்ளாமல் இருக்கவும் கூடாது. உடலின் பல பாகங்களில் கொழுப்புச்சத்து எப்போதும் இருந்து கொண்டே இருக்கும்.

    தாதுச்சத்து அனைத்து வகையான உணவுகளிலிருந்தும் அதாவது இறைச்சி முதல் காய்கறிவரை பெறப்படுகிறது.

    உயிர்ச்சத்து எனப்படும் வைட்டமின்கள் உடலில் ஆற்றலை உருவாக்கப் பயன்படுவதில்லை. ஆனால் இவை ஒரு பொருளை மற்றொரு பொருளாக மாற்றுவதற்கு அவசியம் தேவைப்படுகின்றன. வைட்டமின்கள் உடல் இயக்கத்திற்குத் தேவையான சக்தியை அளிப்பதில்லை. ஆனால் உடல் வளர்ச்சிக்கும் தொடர்ந்த உடல் பராமரிப்பிற்கும் வைட்டமின்கள் இன்றியமையாதவை. இத்தகைய செயல்களுக்காக வைட்டமின்கள் மிகக்குறைந்த அளவே தேவைப்படுகின்றன. மேலும் நாம் உட்கொள்ளும் உணவிலிருந்து சக்தியை உருவாக்குவதற்கும் உடலில் வளர்சிதை மாற்றங்களை ஒழுங்குபடுத்துவதற்காகவும் வைட்டமின்கள் அவசியமாகின்றன.

    வைட்டமின் (Vitamine) என்ற சொல் வைட்ட என்ற இலத்தீன் சொல்லிலிருந்து பிறந்ததாகும். இதற்கு உயிர் என்று பொருள். அமோனியாவிலிருந்து உருவாக்கப்பட்ட பொருள் என்பதைக் குறிக்க அமின் என்ற சொல் இணைக்கப்பட்டது. வைட்டமின் என்ற பொருளானது அமோனியாவிலிருந்து தயாரிக்கப்பட்ட முக்கியமான பொருள் என்று தொடக்கத்தில் கருதப்பட்டது. இதைக் கருத்தில் கொண்டே 1912 ஆம் ஆண்டில் ஃபங்க் என்பவர் இந்த பெயரைச் சூட்டினார். 1912 ஆம் ஆண்டிற்குப் பின்னர் பலவிதமான புதிய வைட்டமின்கள் கண்டுபிடிக்கப்பட்டன. இவற்றை ஆராய்ந்ததில் அமோனியாவிலிருந்து உருவாக்கப்பட்ட உபபொருட்கள் எல்லா வைட்டமின்களிலும் இல்லை என்பது கண்டுபிடிக்கப்பட்டது. எனவே அமின் (Amine) என்ற சொல்லிலிருந்து e என்ற எழுத்து அகற்றப்பட்டு Vitamin என்ற பெயரே நிலைத்து நின்றது.

    வைட்டமின்கள் மிகக்குறைந்த அளவே தேவைப்படுகின்றன என்றாலும் அந்த அளவு குறையும் போது பலவிதமான நோய்கள் உண்டாகக் காரணமாக அமைந்து விடுகின்றன. கீரைகள் காய்கறிகளை தினமும் நமது உணவில் சேர்த்துக் கொள்ளுவதன் மூலம் வைட்டமின் பற்றாக்குறை நிவர்த்தியாகிறது. இதனால் பலவிதமான வைட்டமின் குறைபாடு வியாதிகளும் வராமல் தடுக்கப்படுகிறது.

    2. அறுசுவை உணவு

    உடலுக்குள் உள்ள உறுப்புகள் அனைத்தும் சிறந்த முறையில் இயங்க பல வகையான சத்துக்கள் நிறைந்த உணவுகள் தேவைப்படுகின்றன. உணவுகளில் பலவிதமான சுவைகள் நிறைந்துள்ளன. ஒவ்வொரு சுவையும் ஒரு சிறப்பான பணியைச் செய்யும் திறன் படைத்தது. நமது முன்னோர்கள் தங்கள் தினசரி வாழ்க்கையில் அறுசுவை உணவுகளுக்கு முக்கியத்துவம் கொடுத்து அவற்றை சேர்த்துக் கொண்டார்கள். ஆனால் தற்கால இளைஞர்கள் நாவின் சுவைக்கு அடிமையாகி இனிப்பும் சுவையும் மிக்க உணவுகளை மிக அதிக அளவில் சாப்பிடுகிறார்கள். இதனால் உடல் சீக்கிரமாகவே மூப்புத் தன்மையை அடைந்துவிடுகிறது. இதன் காரணமாகவே தற்கால இளைஞர்கள் சிறுவயதிலேயே வயதான தோற்றத்தை அடைந்து விடுகிறார்கள். முப்பது வயதிற்குள்ளாகவே முடி கொட்டத் தொடங்கிவிடுகிறது.

    இந்திய ஆயுர்வேத மருத்துவம் சுவைகளை ஆறாகப் பகுத்து வகைப்படுத்தியுள்ளது. துவர்ப்பு, இனிப்பு, புளிப்பு, கார்ப்பு, கசப்பு, உவர்ப்பு என பல்வேறு சுவைகளை பகுத்து வகைப்படுத்தியுள்ளது. இவை அனைத்தும் சேர்ந்து அறுசுவை உணவு என அழைக்கப்படுகிறது. இந்த ஆறு வகையான உணவுகளை சரிசம விகிதத்தில் நாம் உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும். எதையும் நன்மை பயக்கும் என்று கருதி அதிக அளவில் சாப்பிடக் கூடாது. குறிப்பாக இனிப்பான உணவுகளை அளவோடு சாப்பிடப் பழக வேண்டும்.

    இனிப்புச் சுவையானது கரும்பு, சர்க்கரை, வெல்லம், கற்கண்டு போன்றவற்றில் நிறைந்துள்ளது. மேலும் பலவகையான பழங்கள் இனிப்புச்சத்தைக் கொண்டுள்ளன. கரும்புச் சாறு உடலுக்கு மிகவும் நல்லது. கரும்புச்சாறு இரத்தத்தை

    Enjoying the preview?
    Page 1 of 1