Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Thappithal Pothum
Thappithal Pothum
Thappithal Pothum
Ebook96 pages31 minutes

Thappithal Pothum

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

இது ஒரு விறுவிறுப்பான க்ரைம் நாவல். ஒரு தவறைச் செய்தால் அதிலிருந்து தப்பிக்க எவ்வளவு சிரமப்பட வேண்டியுள்ளது என்பதை விவரிக்கும் நாவல் “தப்பித்தால் போதும்”.

தவறைச் செய்து விட்டு மனஉளைச்சலில் சிக்கித் தவிப்பதைவிட தவறே செய்யாமல் இருப்பது நல்லதல்லவா?

Languageதமிழ்
Release dateDec 6, 2021
ISBN6580138807855
Thappithal Pothum

Read more from R.V.Pathy

Related to Thappithal Pothum

Related ebooks

Related categories

Reviews for Thappithal Pothum

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Thappithal Pothum - R.V.Pathy

    https://www.pustaka.co.in

    தப்பித்தால் போதும்

    Thappithal Pothum

    Author:

    ஆர். வி. பதி

    R.V. Pathy

    For more books

    https://www.pustaka.co.in/home/author/rv-pathy

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    அத்தியாயம் 1

    அத்தியாயம் 2

    அத்தியாயம் 3

    அத்தியாயம் 4

    அத்தியாயம் 5

    அத்தியாயம் 6

    அத்தியாயம் 7

    அத்தியாயம் 8

    அத்தியாயம் 9

    அத்தியாயம் 10

    அத்தியாயம் 11

    அத்தியாயம் 12

    அத்தியாயம் 13

    அத்தியாயம் 14

    அத்தியாயம் 15

    அத்தியாயம் 16

    உள்ளே நுழையும் முன்

    வாசகர்களே. வணக்கம்.

    இது ஒரு விறுவிறுப்பான க்ரைம் நாவல். ஒரு தவறைச் செய்தால் அதிலிருந்து தப்பிக்க எவ்வளவு சிரமப்பட வேண்டியுள்ளது என்பதை விவரிக்கும் நாவல் தப்பித்தால் போதும்.

    தவறைச் செய்து விட்டு மனஉளைச்சலில் சிக்கித் தவிப்பதைவிட தவறே செய்யாமல் இருப்பது நல்லதல்லவா?

    1

    என்னை உங்களுக்குப் பிடிக்குமாங்க?

    விஜயாவைப் பார்த்துச் சிரித்தான் ரகு

    பைத்தியம். இந்த உலகத்திலே எல்லாத்தையும்விட எனக்கு உன்னைத்தான் ரொம்பப் பிடிக்கும்

    இதைச் சொன்னபோது தாரிகா ஒரு கணம் அவன் மனதில் தோன்றி மறைந்தாள்.

    உங்க மேல நான் ரொம்ப ஆசையும் நம்பிக்கையும் வெச்சிருக்கேங்க. உங்களை மாதிரி ஒரு நல்ல கணவர் வேற எந்தப் பொண்ணுக்கும் கிடைச்சிருக்க முடியாதுங்க. நான் அதிர்ஷ்டசாலிங்க

    சட்டென ரகுவின் மனதில் தாரிகா தோன்றினாள். சிரமப்பட்டு அவளை மனதிலிருந்து துரத்தினான் ரகு.

    ச்சீ. நீ உளர்றே. என்னைவிட ரொம் நல்ல மனசுள்ளவங்கல்லாம் இந்த உலகத்திலே நிறைய பேர் இருக்காங்க. என்மேல இருக்கிற ஆசையாலே இப்படியெல்லாம் பேசறே

    இல்லீங்க. பெரிய பணக்காரரா இருந்தும் சொந்தம் விட்டுப் போகக் கூடாதுன்றதுக்காக ஏழையான எங்க வீட்டுக்கு வந்து என்னைக் கல்யாணம் பண்ணிக்கிட்டீங்க. இந்த நல்ல மனசு வேற யாருக்கு வரும்?

    பணத்தைவிட குணத்தை மதிக்கிறவன் நான். சரி மணி பத்தரையாகுது. தூங்கலாமா?

    என்னங்க ஒரு முக்கியமான விஷயம் சொல்லணும். நம்ம வீட்டுலே வேலை செய்யற மீனாட்சியோட புருஷன் குடிச்சிட்டு வந்து அவளை என் முன்னாடியே பணம் கேட்டு அடிச்சாங்க. தடுக்கப்போன என்னையும் மரியாதையில்லாம பேசிட்டான். பாவங்க மீனாட்சி. அவளுக்கு ஏதாவது ஒரு வழி செய்யுங்க

    சரி காலையிலே இதைப் பத்தி பேசிக்கலாம். இப்ப தூங்கலாம்

    விளக்கு அணைக்கப்பட்டது.

    ரகுவிற்கு தூக்கம் வரவில்லை. தாரிகாவின் முகம் நிழலாடியது. நாளை காலை அவளை சந்திக்க வேண்டும் என்று நினைத்துக் கொண்டான்.

    தூங்கும் விஜயாவை பார்த்தான். பாவமாயிருந்த்து. என்மீது எத்தனை நம்பிக்கை வைத்திருக்கிறாள். நம்பிக்கைத் துரோகி நான். காமத்தின் முன் நான் மண்டியிட்டு விட்டேன். தாரிகாவின் அழகிற்கு நான் அடிமையாகிவிட்டேன்.

    அடுத்த நாள் காலை மீனாட்சியின் கணவன் குடித்துவிட்டு பங்களாவிற்கு வந்தான். மீனாட்சியை அசிங்கமாய் வெளியே நின்று திட்டினான்.

    ரகு எழுந்து வெளியே போனான். அவனை நெருங்கியதும் சாராய வாடை வீசியதை உணர்ந்தான். அவன் சட்டையைப் பிடித்து கன்னத்தில் பளாரென்று அறைந்தான்.

    எதிர்பாராத தாக்குதல். விஜயா ரகுவை நெருங்கினாள்.

    என்னங்க. அவனை அடிக்காதீங்க. செத்து கித்துத் தொலையப் போறான். வம்வாயிடும்

    முத்து

    டிரைவர் முத்து வந்தான்.

    என்னங்கைய்யா?

    இவனை ஸ்டேஷனுக்கு இழுத்துகிட்டுப் போய் நம்ம பங்களாவிலே திருட வந்தான்னு ஒரு கம்ப்ளையிண்ட் குடு. நான் இன்ஸ்பெக்டர்கிட்டே மீதியைப் பேசிக்கிறேன்

    மீனாட்சி அழ ஆரம்பித்தாள்.

    அய்யா. வேணாய்யா. போலீசுக்கெல்லாம் போக வேணாங்கைய்யா. மன்னிச்சி விட்டுடுங்கைய்யா

    ரகுவிடம் கெஞ்சினாள் மீனாட்சி.

    யோவ். அய்யாகிட்ட மன்னிப்பு கேளுய்யா

    ரகு கணவனை அதட்டினாள்.

    ரகுவின் அறையில் கலங்கிப் போய் நின்றிருந்தாள்.

    டேய். இனி குடிச்சிட்டு மீனாட்சியை அடிக்கிறதா கேள்விப்பட்டேன் அப்புறம் நீ ஜெயில்லேதான் இருக்கணும். என் கம்பெனியிலே ஒரு வேலை போட்டுத் தர்றேன். ஒழுங்கா வேலை செய். என்னடா பேசிகிட்டிருக்கேன். நீ பாட்டுக்குத் தெனாவட்டா நின்னுகிட்டிருக்கே. ஜெயிலுக்குப் போறியா? வேலை செய்யறியா?

    ரகுவின் செல்வாக்கு அவனுக்குத் தெரியும்.

    வேலைக்கு வருவதாக பயத்துடன்

    Enjoying the preview?
    Page 1 of 1