Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Manathai Thooimaiyakkum Thuravi Kathaigal
Manathai Thooimaiyakkum Thuravi Kathaigal
Manathai Thooimaiyakkum Thuravi Kathaigal
Ebook126 pages42 minutes

Manathai Thooimaiyakkum Thuravi Kathaigal

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

வணக்கம்.

“மனதைத் தூய்மையாக்கும் துறவிக் கதைகள்” எனும் தலைப்பில் அமைந்த இந்த புத்தகம் நான் பல சந்தர்ப்பங்களில் படித்து கேட்டு ரசித்த கதைகளாகும்.

“மனதை தூய்மையாக்கும் துறவிக் கதைகள்” எனும் இந்த புத்தகத்தில் உள்ள கதைகள் ஒவ்வொன்றும் அற்புதமான கருத்துகளை வெளிப்படுத்தும் விதத்தில் அமைந்துள்ளன. இதில் எழுதப்பட்டுள்ள சில கதைகளை நீங்களும் எங்கேயாவது படித்திருக்கலாம கேட்டிருக்கலாம். ஒவ்வொரு கதையும் படித்து முடித்தவுடன் சிந்திக்க வைக்கும் தன்மை கொண்டதாக விளங்குகிறது. சில கதைகள் ஆச்சரியத்தையும் வியப்பையும் ஏற்படுத்தும் வகையில் அமைந்துள்ளன. இந்த புத்தகம் உங்கள் மனதை மென்மையாக்கி நல்வழிப்படுத்தும் ஒரு ஊக்கசக்தியாக அமையும் என்று உறுதியாக நம்புகிறேன்.

இந்த புத்தகத்தை சிறந்த முறையில் மின்னூலாக வெளியிடும் புஸ்தகா நிறுவனத்திற்கு என் நெஞ்சார்ந்த நன்றிகளை தெரிவித்துக் கொள்ளுகிறேன்.

Languageதமிழ்
Release dateNov 2, 2021
ISBN6580138807654
Manathai Thooimaiyakkum Thuravi Kathaigal

Read more from R.V.Pathy

Related to Manathai Thooimaiyakkum Thuravi Kathaigal

Related ebooks

Reviews for Manathai Thooimaiyakkum Thuravi Kathaigal

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Manathai Thooimaiyakkum Thuravi Kathaigal - R.V.Pathy

    https://www.pustaka.co.in

    மனதைத் தூய்மையாக்கும் துறவிக் கதைகள்

    Manathai Thooimaiyakkum Thuravi Kathaigal

    Author:

    ஆர்.வி. பதி

    R.V. Pathy

    For more books

    https://www.pustaka.co.in/home/author/rv-pathy

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    அன்பான வாசகர்களுக்கு,

    வணக்கம். மனதைத் தூய்மையாக்கும் துறவிக் கதைகள் எனும் தலைப்பில் அமைந்த இந்த புத்தகம் நான் பல சந்தர்ப்பங்களில் படித்து கேட்டு ரசித்த கதைகளாகும்.

    மனதை தூய்மையாக்கும் துறவிக் கதைகள் எனும் இந்த புத்தகத்தில் உள்ள கதைகள் ஒவ்வொன்றும் அற்புதமான கருத்துகளை வெளிப்படுத்தும் விதத்தில் அமைந்துள்ளன. இதில் எழுதப்பட்டுள்ள சில கதைகளை நீங்களும் எங்கேயாவது படித்திருக்கலாம கேட்டிருக்கலாம். ஒவ்வொரு கதையும் படித்து முடித்தவுடன் சிந்திக்க வைக்கும் தன்மை கொண்டதாக விளங்குகிறது. சில கதைகள் ஆச்சரியத்தையும் வியப்பையும் ஏற்படுத்தும் வகையில் அமைந்துள்ளன. இந்த புத்தகம் உங்கள் மனதை மென்மையாக்கி நல்வழிப்படுத்தும் ஒரு ஊக்கசக்தியாக அமையும் என்று உறுதியாக நம்புகிறேன்.

    இந்த புத்தகத்தை சிறந்த முறையில் மின்னூலாக வெளியிடும் புஸ்தகா நிறுவனத்திற்கு என் நெஞ்சார்ந்த நன்றிகளை தெரிவித்துக் கொள்ளுகிறேன்.

    நன்றி. மீண்டும் சந்திப்போம்.

    தங்களன்புள்ள,

    ஆர். வி. பதி

    பொருளடக்கம்

    திகைப்பு

    நான்

    சுபாவம்

    பரிட்சை

    ஞானம் பிறந்தது

    அறிவுரை

    இன்பமும் துன்பமும்

    சமயோசிதம்

    வைராக்கியம்

    கல்லடி

    எது மகிழ்ச்சி ?

    குபேர மந்திரம்

    மென்மையானது நிலைக்கும்

    பார்த்து விட்டேன்

    யார் சிறந்த துறவி ?

    மனம் மாறிய திருடன்

    வித்தியாசம்

    மிருக குணம்

    கண் திறந்த துறவி

    துறவியும் நல்லபாம்பும்

    கடவுள் எங்கே இருக்கிறார் ?

    தண்டனை

    குருவின் நிழல்

    கண் திறந்தது

    தண்ணீரைப் பிளந்தவன்

    சொர்க்கம் ஏன் ?

    ஊர் பேச்சு

    சொர்க்கத்திற்கு செல்லும் வழி

    மரணம் நிகழாத வீடு

    சர்வம் பிரம்மமயம்

    ஆன்மா எங்கே போகிறது ?

    அப்போதே மறந்து விட்டேன்

    அப்போதே தேடியிருக்கலாம்

    கடவுள் எங்கே இருக்கிறார் ?

    துறவியின் கட்டளை

    மன்னிப்பு

    கடவுளைத் துறந்தவர்

    நல்ல கிண்ணம்

    அதிசயத் துறவி

    மனமாற்றம்

    சாபவிமோசனம்

    ஒரே வழி

    நன்மையே நாளும் செய்

    பார்வைகள் பலவிதம்

    கோபத்தை விட்டொழி

    சத்தியத்தை மீறாதே

    துறவியும் மூன்று போக்கிரிகளும்

    மந்திரக்கோல்

    எங்கே நிம்மதி ?

    மௌனம்

    திகைப்பு

    ஒரு துறவி யாத்திரையின் ஒரு கட்டமாக அந்த ஊருக்கு விஜயம் செய்திருந்தார். அந்த ஊரில் பழமையான ஒரு வைணவத்தலம் இருந்தது. துறவி அத்தலத்திற்குச் சென்று தரிசித்தார்.

    துறவி தங்கள் ஊருக்கு விஜயம் செய்திருக்கும் செய்தியினை அறிந்த அவ்வூர் மக்கள் அவரைச் சந்தித்து தங்கள் குறைகளைச் சொல்லி பரிகாரம் கேட்டு ஆசிர்வாதம் பெற்றுச் சென்றார்கள். அவ்வூரில் இருந்த இளைஞன் ஒருவனுக்கு துறவியின் ஆற்றலை சோதித்துப் பார்க்க வேண்டும் என்ற விபரீத எண்ணம் எழுந்தது.

    ஒருநாள் அந்த இளைஞன் துறவியை தனிமையில் சந்தித்தான். அவன் தன்னுடன் ஒரு பட்டாம்பூச்சியை பிடித்துக் கொண்டு சென்றான். அந்த பட்டாம்பூச்சியை தனது கை பெருவிரல் மற்றும் ஆள்காட்டி விரலால் அழுத்தி பிடித்துக்கொண்டிருந்தான். அந்த பட்டாம்பூச்சி உயிருடன் இருக்கிறதா இல்லையா என்று தீர்மானிக்க இயலாத அளவிற்கு அவன் அதை பிடித்திருந்தான்.

    துறவியை சந்தித்த இளைஞன் அவரிடம் ஒரு கேள்வியை கேட்டான்.

    துறவியே. என்னுடைய கேள்விக்கு நீங்கள் சரியாக பதில் சொல்லுங்கள் பார்க்கலாம். என் கையில் இருக்கும் பட்டாம்பூச்சி உயிருடன் இருக்கிறதா இல்லையா ?

    இளைஞன் தன்னை சோதிக்க வந்திருப்பதை புரிந்து கொண்டார் துறவி.

    துறவி பட்டாம்பூச்சி உயிருடன் இருக்கிறது என்று சொன்னால் அதை அழுத்திக் கொன்று விட்டு துறவியின் பதிலை பொய்யாக்கலாம். துறவி பட்டாம்பூச்சி இறந்துபோய் விட்டது என்ற பதிலைச் சொன்னால் கையில் உயிருடன் இருக்கும் பட்டாம்பூச்சியை பறக்கவிட்டு அவருடைய பதிலை பொய்யாக்கலாம் என்று தீர்மானித்து துறவியின் பதிலுக்காக காத்து நின்றான் அந்த இளைஞன்.

    துறவி இப்போது நிதானமாக அந்த இளைஞனை நோக்கிச் சொன்னார்.

    இளைஞனே. பட்டாம்பூச்சி உயிருடன் இருப்பதும் இறந்து போவதும் உன் கையில் தான் இருக்கிறது

    துறவியின் சாதுர்யமான இந்த பதிலைக் கேட்ட இளைஞன் திகைத்துப் போனான். அவரை வணங்கி தனது செயலுக்காக அவரிடம் மன்னிப்பு கேட்டு வீடு திரும்பினான்.

    நான்

    துறவி ஒருவர் புனித யாத்திரை மேற்கொண்டிருந்தார். வழியில் ஒரு நகரத்திற்கு வந்து அங்கிருந்த கோயிலுக்குச் சென்று இறைவனை வழிபட்டார். சிறிது காலம் அந்த நகரத்தில் தங்கியிருக்க வேண்டும் என்ற எண்ணம் அவர் மனத்தில் தோன்றியது.

    தன்னைக் காண வந்த அவ்வூர் மக்கள் சிலரிடம் தாம் இந்த ஊரில் சில காலம் தங்க விரும்புவதாய் எடுத்துரைத்தார். இதைக் கேட்டு மகிழ்ச்சி அடைந்த அவ்வூர் மக்கள் துறவிக்காக ஒரு சிறிய குடிலை அமைத்துக் கொடுத்தார்கள். துறவி அந்த சிறிய குடிலில் வசிக்கத் தொடங்கினார்.

    தங்கள் ஊருக்கு துறவி ஒருவர் வந்திருக்கும் விஷயம் அவ்வூர் மக்களுக்குத் தெரிய அவர்கள் அனைவரும் துறவியைச் சந்தித்து அறிவுரைகளையும் ஆசியையும் பெற்றுச் சென்றனர். அந்த துறவியின் எளிய உபதேசங்கள் மக்களுக்கு மிகவும் பிடித்திருந்தது. இதனால் அந்த துறவியின் புகழ் நாடெங்கும் பரவியது. இச்செய்தி மன்னரின் காதிற்கு எட்டியது.

    மன்னனைத் தானே மக்கள் நாடிச் செல்வது மரபு. மன்னனைத் தானே மக்கள் புகழ வேண்டும். ஒரு துறவிக்கு இவ்வளவு செல்வாக்கா ? என்று நினைத்தார் மன்னர். இதன் காரணமாக துறவி மீது மன்னருக்கு கோபம் உண்டானது.

    துறவியை விட தான் அதிக புகழ் பெற வேண்டும் என்றும் மக்கள் தன்னை மட்டுமே நாடிவர வேண்டும் என்றும் மன்னர் விரும்பினார். இதற்கு ஒரே வழி துறவியிடம்

    Enjoying the preview?
    Page 1 of 1