Dhasavadara Kathaigal
By R.V.Pathy
()
About this ebook
அன்பான வாசகர்களுக்கு,
வணக்கம்.
“தசாவதாரக் கதைகள்” எனும் தலைப்பில் அமைந்த இந்த புத்தகம் பல அரிய விஷயங்களை உள்ளடக்கியது. சில நூறாண்டுகளுக்கு முன்னர் கண்டுபிடிக்கப்பட்ட உயிரின தோற்றக் கொள்கையினை பல நூறாண்டுகளுக்கு முன்னரே இந்த உலகிற்குச் சொன்ன அரிய தத்துவங்களை உள்ளடக்கியது தசாவதாரம். சிறுவர் முதல் பெரியவர் என அனைவரும் படித்து ரசிக்கும் விதத்தில் மிக எளிய நடையில் இப்புத்தகம் எழுதப்பட்டுள்ளது.
இந்த புத்தகத்தை சிறந்த முறையில் மின்னூலாக வெளியிடும் புஸ்தகா நிறுவனத்தினருக்கு என் நெஞ்சார்ந்த நன்றியினை தெரிவித்துக் கொள்ளுகிறேன்.
Read more from R.V.Pathy
Arokiya Vazhvirkku Muthiraigal Rating: 0 out of 5 stars0 ratingsMahabharatha Kathaighal Rating: 0 out of 5 stars0 ratingsArockiya Vazhvirku Pranayamam Rating: 0 out of 5 stars0 ratingsSiruvar Ilakkiya Aaraichi Katturaigal Rating: 0 out of 5 stars0 ratingsAanmeega Agarathi Rating: 0 out of 5 stars0 ratingsThe Magical Lamp Rating: 0 out of 5 stars0 ratingsSirappana Vazhvu Tharum Vainava Thalangal Rating: 0 out of 5 stars0 ratingsPalli Manavargalukku Pathu Nimida Medai Naadagangal Rating: 0 out of 5 stars0 ratingsNooru Vayathu Vaazha Nooru Unavugal Rating: 0 out of 5 stars0 ratingsKaagamum Naangu Meengalum Rating: 0 out of 5 stars0 ratingsAanantham Vilaiyadum Veedu Rating: 0 out of 5 stars0 ratingsBal Sahitya Puraskar Viruthum Viruthaalargalum Rating: 0 out of 5 stars0 ratingsParavasamoottum Bakthi Kathaigal Rating: 0 out of 5 stars0 ratingsKannan Vazhi Gandhi Vazhi Rating: 0 out of 5 stars0 ratingsKamarajar - Oru Punithanin Kathai Rating: 0 out of 5 stars0 ratingsRamayana Kathaigal Rating: 0 out of 5 stars0 ratingsValamana Vaazhvu Tharum Vainava Thalangal Rating: 0 out of 5 stars0 ratingsPanpai Valarkkum Siruvar Kathaigal Rating: 0 out of 5 stars0 ratingsArockiya Vazhvu Arulum Malai Koyilgal Rating: 0 out of 5 stars0 ratingsMuthana Maanavargalukku Mulla Kathaigal Rating: 0 out of 5 stars0 ratingsVainavam Thantha Bakthi Kathaigal Rating: 0 out of 5 stars0 ratingsKuzhanthai Ilakkiya Munnodigal Rating: 0 out of 5 stars0 ratingsNatchathira Kutram Rating: 0 out of 5 stars0 ratingsSirappana Vazhuvu Tharum Siva Thalangal Rating: 0 out of 5 stars0 ratingsThigaikka Vaikkum Dindigul Rating: 0 out of 5 stars0 ratingsBheeshmar Oru Punithanin Kathai Rating: 0 out of 5 stars0 ratingsNooru Vayathu Vaazha Nooru Vazhigal Rating: 0 out of 5 stars0 ratingsNooru Varushathu Bommai Rating: 0 out of 5 stars0 ratingsAppuvin Cycle Rating: 0 out of 5 stars0 ratingsManathai Thooimaiyakkum Thuravi Kathaigal Rating: 0 out of 5 stars0 ratings
Related to Dhasavadara Kathaigal
Related ebooks
Vainavam Thantha Bakthi Kathaigal Rating: 0 out of 5 stars0 ratingsKanthan Varuvaan Rating: 0 out of 5 stars0 ratingsDasavathaaram Rating: 0 out of 5 stars0 ratingsTamil Kanda Puratchi Thuravi Ramanusa Maamuni Rating: 0 out of 5 stars0 ratingsஸ்ரீ கந்த புராணம் Rating: 0 out of 5 stars0 ratingsAalayam Arivom! Part - 2 Rating: 0 out of 5 stars0 ratingsThiruppugal Kathaigal Rating: 0 out of 5 stars0 ratingsSanga Ilakkiyathil Anthanarum Vedhamum! Rating: 0 out of 5 stars0 ratingsThalam Thorum Thalaivan Rating: 0 out of 5 stars0 ratingsMahabharatham Rating: 0 out of 5 stars0 ratingsIrave Uru(ra)vanaval Rating: 2 out of 5 stars2/5Vainava Amutha Thuligal Rating: 0 out of 5 stars0 ratingsParanjothi Munivar Aruliya Thiruvilaiyadal Puranam Rating: 0 out of 5 stars0 ratingsKadavul Thondriya Kathai Rating: 0 out of 5 stars0 ratingsRamayana Kathaigal Rating: 0 out of 5 stars0 ratingsVaradha Varam Thaa Rating: 0 out of 5 stars0 ratingsParavasam Thantha Nava Tirupathiyum, Nava Kailasamum Rating: 0 out of 5 stars0 ratingsThalangalin Tharisanam Rating: 0 out of 5 stars0 ratingsMahangalin Vaazhvil... Rating: 0 out of 5 stars0 ratingsBharatha Natiya Kathaigalum Pazhamozhi Kathaigalum Rating: 0 out of 5 stars0 ratingsGopalan Vaibhavam Rating: 0 out of 5 stars0 ratingsNavagiragangal - Kalai Kalanjiyam Rating: 0 out of 5 stars0 ratingsதெய்வத்தின் குரலமுதம் Rating: 0 out of 5 stars0 ratingsMaanikka Manimaalai Rating: 2 out of 5 stars2/5Paravasamoottum Bakthi Kathaigal Rating: 0 out of 5 stars0 ratingsVainavam Valartha Mahaangal Rating: 0 out of 5 stars0 ratingsAravinda Amudham Rating: 0 out of 5 stars0 ratingsKongu Mandala Chithargal, Pulavargal, Thalangal! Rating: 0 out of 5 stars0 ratingsதசாவதாரம் Rating: 0 out of 5 stars0 ratingsSirappana Vazhuvu Tharum Siva Thalangal Rating: 0 out of 5 stars0 ratings
Reviews for Dhasavadara Kathaigal
0 ratings0 reviews
Book preview
Dhasavadara Kathaigal - R.V.Pathy
https://www.pustaka.co.in
தசாவதாரக் கதைகள்
Dhasavadara Kathaigal
Author:
ஆர்.வி. பதி
R.V. Pathy
For more books
https://www.pustaka.co.in/home/author/rv-pathy
Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.
All other copyright © by Author.
All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.
பொருளடக்கம்
மச்ச அவதாரம்
கூர்ம அவதாரம்
வராக அவதாரம்
நரசிம்ம அவதாரம்
வாமன அவதாரம்
பரசுராம அவதாரம்
இராம அவதாரம்
கிருஷ்ணாவதாரம்
பலராம அவதாரம்
கல்கி அவதாரம்
அன்பான வாசகர்களுக்கு,
வணக்கம். தசாவதாரக் கதைகள்
எனும் தலைப்பில் அமைந்த இந்த புத்தகம் பல அரிய விஷயங்களை உள்ளடக்கியது. சில நூறாண்டுகளுக்கு முன்னர் கண்டுபிடிக்கப்பட்ட உயிரின தோற்றக் கொள்கையினை பல நூறாண்டுகளுக்கு முன்னரே இந்த உலகிற்குச் சொன்ன அரிய தத்துவங்களை உள்ளடக்கியது தசாவதாரம். சிறுவர் முதல் பெரியவர் என அனைவரும் படித்து ரசிக்கும் விதத்தில் மிக எளிய நடையில் இப்புத்தகம் எழுதப்பட்டுள்ளது.
இந்த புத்தகத்தை சிறந்த முறையில் மின்னூலாக வெளியிடும் புஸ்தகா நிறுவனத்தினருக்கு என் நெஞ்சார்ந்த நன்றியினை தெரிவித்துக் கொள்ளுகிறேன்.
நன்றி. மீண்டும் சந்திப்போம்.
தங்களன்புள்ள
ஆர். வி. பதி
தோற்றுவாய்
ஸ்ரீமந்நாராயணன் பூலோக மக்களைக் காத்து வந்தார். நாராயணனின் அருளால் மக்கள் சுபிக்க்ஷமாக வாழ்ந்து வந்தார்கள். ஒரு கட்டத்தில் அசுரர்களின் ஆதிக்கம் மேலோங்கியது. இதன் காரணமாக தேவர்களும் மக்களும் அவதியுற்றார்கள். அசுரர்களை அழித்து தேவர்களையும் தன் பக்தர்களையும் காக்க நாராயணன் திருவுளம் கொண்டார். இதனால் அவரே அவதாரபுருஷனாக இந்த பூலேகத்தில் அவ்வப்போது அவதரித்தார்.
திருமாலின் திருஅவதாரங்கள் பத்து. இதில் ஒன்பது அவதாரங்கள் நிகழ்ந்து விட்டன. பத்தாவது அவதாரமான கல்கி அவதாரம் எப்பொழுது நிகழப் போகிறதென்று யாருக்கும் தெரியாது. திருமால் நிகழ்த்திய முதல் அவதாரம் மச்ச அவதாரம். அதாவது மீன் அவதாரம். அடுத்ததாக அவன் நிகழ்த்திய அவதாரம் கூர்ம அவதாரம். அதாவது ஆமை அவதாரம். மூன்றாவது அவதாரம் வராகம் அல்லது பன்றி அவதாரம். நான்காவது மிக உக்கிரமான அவதாரம் நரசிம்ம அவதாரம். மனிதன் பாதி மிருகம் பாதி என இரண்டு உருவங்களும் கலந்து அவதரித்த இந்த அவதாரம் பல்வேறு சிறப்புகளைக் கொண்டது. ஐந்தாவது அவதாரம் வாமன அவதாரம். குள்ள உருவத்தில் அவதரித்த நாராயணன் அண்டசராசரங்களையும் தன் காலால் அளந்த விநோத அவதாரம். ஆறாவதாக பரசுராம அவதாரம். ஏழாவது உத்தமபுருஷன் இராமபிரானாக அவதாரம் செய்தார். எட்டாவது அவதாரம் கிருஷ்ணாவதாரம். ஓன்பதாவதாக பலராம அவதாரம். கிருஷ்ணனின் அண்ணன் பலராமன். இவர் ஆதிசேஷனின் அம்சமாய் அவதரித்தவர். பத்தாவதாக நிகழப் போகிற கல்கி அவதாரம்.
ஆன்மிகமும் அறிவியலும் வெவ்வேறானவை அல்ல என்பதை உணர்த்தும் சிறப்புடையது இந்த தசாவதாரம். இந்த உலகம் எவ்வாறு தோன்றியிருக்கும். அதில் வாழும் உயிரினங்கள் எப்படி படிப்படியாகத் தோன்றியிருக்கும் என்ற உண்மைகளை சில நூறு வருடங்களுக்கு முன்னர்தான் நமது விஞ்ஞானிகள் ஆராய்ந்து வெளியிட்டுள்ளார்கள். ஆனால் தசாவதாரம் பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்டது என்பது நாம் அனைவரும் அறிந்த உண்மை.
உலகில் முதலில் தோன்றிய உயிரினம் நீரில் வாழும் உயிரினம். அடுத்தபடியாக நீரிலும் நிலத்திலும் வாழும் உயிரினம் தோன்றியது. இதனைத் தொடர்ந்து நிலத்தில் மட்டுமே தோன்றியது. நான்காவதாக விலங்கிலிருந்து மனிதன் பிறந்தான் என்னும் தத்துவம். அடுத்தபடியாக குள்ளமான மனிதர்கள். பின்னர் கள்ளம் கபடமற்ற தூய்மையான மனிதன். இதைத்தொடர்ந்து புத்திசாலித்தனமும் வஞ்சக எண்ணமும் கொண்ட மனிதன் என படிப்படியாக இந்த உலகம் விரிவடைந்தது. இத்தகைய சமீபகால அறிவியல் கண்டுபிடிப்புகளை தசாவதாரம் பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே நமக்கு தௌ்ளத்தெளிவாக எடுத்துரைத்துவிட்டது.
மச்ச அவதாரம்
வேதங்களை ஹயக்கிரீவன் என்ற அசுரனிடமிருந்து மீட்க ஸ்ரீமந்நாராயணன் எடுத்த முதல் அவதாரம் மச்ச அவதாரமாகும்.
ஒரு சமயம் பிரம்மதேவன் நித்திரையில் ஆழ்ந்திருந்தார். பிரம்மதேவன் நித்திரையில் ஆழ்ந்திருந்த சமயத்தில் அவருடைய நாசியிலிருந்து நான்கு வேதங்கள் வெளிப்பட்டன. இந்த சந்தர்ப்பத்தை எதிர்நோக்கிக் காத்துக் கொண்டிருந்த ஹயக்கிரீவன் என்றொரு அரக்கன் நான்கு வேதங்களையும் அபகரித்துக் கொண்டு கடலுக்குள் ஒளிந்து கொண்டான்.
வைகுண்டத்தில் மகாவிஷ்ணு லஷ்மிதேவியோடு அமர்ந்து உலக இயக்கங்களை பார்வையிட்டுக் கொண்டிருந்தார். ஹயக்கிரீவன் பிரம்மதேவனிடமிருந்து வேதங்களை அபகரித்துக் கொண்டு ஓடி ஒளிந்ததையும் பார்த்தார். வேதங்களை அசுரனிடமிருந்து மீட்கப் புறப்பட்டார்.
சத்தியவிரதன் என்றொரு மன்னன் வாழ்ந்து வந்தான். அவன் ஒரு தலைசிறந்த திருமால் பக்தன். திருமாலை வணங்கி மகிழவே பிறவி எடுத்தாற் போல வாழ்ந்து வந்தான். அவனிடத்தில் திருமால் மிகவும் பிரியம் வைத்திருந்தார். அவனுக்கு கருணை காட்ட மகாவிஷ்ணு விரும்பினார்.
ஒருநாள் வழக்கம் போல ஆற்றின் அருகே திருமால் வழிபாடு செய்து கொண்டிருந்தான். அப்போது ஜலதர்ப்பணம் செய்ய ஆற்று நீரை இரு கைகளாலும் அள்ளினான். எதேச்சையாக அவன் தன் கைகளில் இருந்த நீருக்குள் ஒரு மீன் இருப்பதைக் கண்டான். அம்மீன் மற்ற மீன்களைப் போல அல்லாமல் மிகவும் அழகு வாய்ந்ததாகவும் தெய்வத்தன்மை பொருந்தியுள்ளதாகவும் அவன் உணர்ந்தான்.
அம்மீன் அவன் கண்ணெதிரிலேயே வளர்வதையும் கண்டான். இதைக் கண்ட அம்மன்னன் வியப்புடன் அம்மீனை ஒரு சிறிய பாத்திரத்தில் இட்டான். அதற்குள்ளும் அம்மீன் வளர்ந்து கொண்டே இருந்தது. உடனே சத்தியவிரதன் அம்மீனை வேறொரு பெரிய பாத்திரத்தில் இட்டான். அதற்குள்ளும் அம்மீன் தொடர்ந்து வளர்ந்து கொண்டே இருந்தது. எனவே அம்மீனை அருகில் இருந்த ஒரு குளத்திற்கு எடுத்துச் சென்றான். மிகவிரைவிலேயே அந்த அதிசய மீன் குளத்தின் அளவிற்கு பெரியதாக வளர்ந்து விட்டது. தொடர்ந்து ஏரியிலும் அதனைத் தொடர்ந்து கடலிலும் அம்மீனை விட்டான் சத்தியவிரதன்.
கடலுக்குள் சென்ற அம்மீன் ஒரு வட்டமடித்து அவன் எதிரே எழும்பி நின்று பேச ஆரம்பித்தது. வியப்பு தாளாமல் அம்மீன் பேசுவதைக் கேட்க ஆரம்பித்தான்.
சத்தியவிரதனே. இன்றிலிருந்து ஏழாவது நாள் இவ்வுலகில் மிகப்பெரிய பிரளயம் ஒன்று நிகழ்ந்து உலகம் அழியவிருக்கிறது. உலகில் உள்ள அனைத்து ஜீவராசிகளும் அழிந்து போகும். அச்சமயத்தில் ஒரு படகு வெள்ளத்தில் மிதந்து வரும். நீ அதில் ஏறி அமர்ந்து கொள். அப்போது புயல் ஒன்று தோன்றி உன் படகை அசைக்கும். அச்சமயத்தில் நீ ஒரு கயிற்றை என் தலைமீது உள்ள கொம்பில் மாட்டிவிடு. அதன் பின்னர் உனது ஐயங்களை நான் போக்குவேன். அப்போது நான் யார் என்பதை நீ தெரிந்து கொள்ளலாம்
அந்த மீன் சொன்னது போலவே சரியாக ஏழாவது நாள் ஒரு மிகப்பெரிய பிரளயம் உண்டானது. நீரில் தனது படகில் தத்தளித்துக் கொண்டிருந்த போது ஒரு புயல் தாக்கியது. உடனே அம்மீன் மிகப்பிரம்மாண்டமாய் அவன் முன்னே தோன்றியது. அது சொன்னது போலவே ஒரு கயிற்றால் அம்மீனின் தலையிலிருந்து கொம்புடன் படகை இணைத்தான். மீன் அப்படகை இழுத்துச் சென்றது. அப்போது சத்தியவிரதன் கேட்ட கேள்விகளுக்கான விடையை அம்மீன் சொல்லத் தொடங்கியது.
மகாவிஷ்ணு தன் பக்தன் சத்தியவிரதனுக்கு சாங்கிய யோகம் கர்மயோகம் முதலானவற்றை போதித்து அருளினார். பெரும் பிரளயம் ஒரு கட்டத்தில் முடிவிற்கு வந்தது.
நித்திரை கலைந்து எழுந்த பிரம்மதேவன் வேதங்கள் திருடு போய்விட்டதை உணர்ந்து பெரிதும் வருந்தினார். வேதங்களைத் தொலைத்த காரணத்தினால் அவர் சக்தியற்றவராகி விட்டார். படைப்புத்தொழிலைச்