Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Kongu Mandala Chithargal, Pulavargal, Thalangal!
Kongu Mandala Chithargal, Pulavargal, Thalangal!
Kongu Mandala Chithargal, Pulavargal, Thalangal!
Ebook119 pages36 minutes

Kongu Mandala Chithargal, Pulavargal, Thalangal!

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

தமிழகத்தின் தலை சிறந்த மண்டலங்களுள் ஒன்று கொங்கு மண்டலம். தங்கம் நிகர் கொங்குமண்டலத்தின் புகழ் பல நூறு வரலாறுகளைக் கொண்டது. அவற்றில் அருமையான நூறு வரலாறுகளைத் தொகுத்தார், கார்மேகக் கவிஞர் என்னும் பெரும் புலவர்.

மேகம் பொழிவது போல் கவிதை மழை பொழிவதால் இவர் கார்மேகக் கவிஞர் என்று அழைக்கப்பட்டார். இவரது வரலாறு சிறப்பான ஒன்று. இவர் இயற்றிய அரும் நூலே கொங்குமண்டல சதகம்.

கொங்குமண்டல சதகம் என்னும் நூறு பாக்கள் அடங்கிய நூலில் கொங்குமண்டலத்தின் பெருமை அனைத்தும் அடக்கிய இவரது புலமை வியக்க வைக்கும் ஒன்று. கொங்குமண்டலம் பற்றி அறிய விரும்புவோரும் தமிழகத்தின் தலையாய வளர்ச்சியையும் பண்பாட்டையும் அறிய விரும்புவோரும் தமிழ்ச் சுவையைச் சுவைக்க விரும்புவோரும் படிக்க வேண்டிய அரிய நூல் இது.

Languageதமிழ்
Release dateApr 2, 2022
ISBN6580151008285
Kongu Mandala Chithargal, Pulavargal, Thalangal!

Read more from S. Nagarajan

Related to Kongu Mandala Chithargal, Pulavargal, Thalangal!

Related ebooks

Reviews for Kongu Mandala Chithargal, Pulavargal, Thalangal!

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Kongu Mandala Chithargal, Pulavargal, Thalangal! - S. Nagarajan

    https://www.pustaka.co.in

    கொங்கு மண்டல சித்தர்கள், புலவர்கள், தலங்கள்!

    Kongu Mandala Chithargal, Pulavargal, Thalangal!

    Author:

    ச. நாகராஜன்

    S. Nagarajan

    For more books

    https://www.pustaka.co.in/home/author/s-nagarajan

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    என்னுரை

    அத்தியாயங்கள்

    முதல் பகுதி : கொங்குமண்டல சதகம் தரும் சித்தர் வரலாறுகள்

    1. அகத்தியர் சிவலிங்க பூஜை செய்த இடம்!

    2. கருவூர்ச் சித்தர் வரலாறு!

    3. கஞ்சமலைச் சித்தர்!

    4. அதிசயம் அநேகமுற்ற பழனி மலையில் வசித்த போகர்!

    5. செம்பைப் பொன்னாக்கி அனைவருக்கும் தந்த கொங்கண சித்தர்!

    6. இடைஞானியார் வரலாறு!

    இரண்டாம் பகுதி : கொங்குமண்டல சதகம் தரும் புலவர் வரலாறுகள்

    7. சுந்தர மூர்த்தி நாயனாருக்கு சிவபிரான் பொன் கொடுத்த வரலாறு!

    8. கம்பர் தமிழுக்குத் தந்த கலியாண வரி!

    9. ஔவையாருக்குத் தங்க இலையில் அன்னமிட்டவன் யார்?

    10. பவணந்தி மாமுனிவர்!

    11. இது நாகமலை என்றால் நாகம் ஏன் படம் எடுத்து ஆடவில்லை? - பிரதிவாதி பயங்கரனின் இந்தக் கேள்விக்குப் பதில் என்ன?!

    12. கவிதார்க்கிக சிங்கம் வேதாந்த தேசிகர் பரமத பங்கம் எங்கு இயற்றினார்?

    13. கபிலதேவ நாயனார் போற்றிய செங்குன்றூர்!

    14. இராமானுஜரை ஆதரித்த கொங்கு பிராட்டியார்!

    15. பட்ட மரம் தழைக்கக் கவி பாடிய காழிப் புலவன்!

    16. சாமிநாதப் புலவன் நெற்போர்கள் எரியப் பாடிய வசை வெண்பா!

    17. உரிச்சொல் நிகண்டு எனும் வெண்பா நூலை இயற்றியவர்!

    18. அடியார்க்கு நல்லார் பிறந்த ஊர் எது?

    மூன்றாம் பகுதி - கொங்குமண்டல சதகம் தரும் தலங்கள் பற்றிய வரலாறுகள்

    19. அகத்தியரின் கைப்பிடியில் அடங்கிய சிவபெருமான்!

    20. பொன்னுலகம் தரும் வாலிப காசி எந்த ஊர் தெரியுமா?

    21. திருத்தலங்களில் வேடுபறி நிகழ்ச்சி நடக்கக் காரணம் என்ன?

    22. பேரூர் நந்தியின் முகம் வெட்டப்பட்டு பின் மீண்டும் வளர்ந்தது ஏன்?

    23. பழம் நீ அப்பா!

    24. இடும்பாசுரன் காவடியாகத் தூக்கி வந்த மலைகள்!

    25. மொக்கணீசுரர் என்ற திருநாமம் சிவனுக்கு ஏன் உண்டாயிற்று?

    26. இறந்த யானை எழுந்த கதை!

    27. சிதம்பரம் கோவிலுக்குப் பொன் வேய்ந்தது எப்படி?

    28. இளங்கோவடிகள் சொல்லி அருளிய வேலனின் தலம் எது?

    29. சித்தன் வாழ்வைப் புகழ்ந்து பாடிய ஔவை!

    30. வயோதிகன் குமரன் ஆன விந்தைச் சம்பவம்!

    31. கற்பணிக் கோவிலும் எண்கோணமான குளமும் அமைத்த கட்டி முதலி!

    32. மலையைக் குடைந்து அரங்கநாதன் ஆலயம் அமைத்த அதியன்!

    பாடல் முதல் குறிப்பும், பாடல் எண்ணும், வரலாறும்

    என்னுரை

    தமிழகத்தின் தலை சிறந்த மண்டலங்களுள் ஒன்று கொங்கு மண்டலம்.

    தங்கம் நிகர் கொங்குமண்டலத்தின் புகழ் பல நூறு வரலாறுகளைக் கொண்டது.

    அவற்றில் அருமையான நூறு வரலாறுகளைத் தொகுத்தார் கார்மேகக் கவிஞர் என்னும் பெரும் புலவர்.

    கொங்குமண்டலத்தில் குறும்பு நாட்டில் விஜயமங்கலம் என்னும் ஊரில் ஸ்ரீ வத்ஸ கோத்திரத்தில் ஔபாக்கிய சூத்திரம் விருத்தானிய யோகசாகை காசிபப் பிரவரணம் ஜைன பிராமண குலத்தில் பத்மநாப ஐயர் என்பாருக்கு இவர் மகனாகப் பிறந்தார். மேகம் பொழிவது போல் கவிதை மழை பொழிவதால் இவர் கார்மேகக் கவிஞர் என்று அழைக்கப்பட்டார். இவரது வரலாறு சிறப்பான ஒன்று. இவர் இயற்றிய அரும் நூலே கொங்குமண்டல சதகம்.

    கொங்குமண்டல சதகம் என்னும் நூறு பாக்கள் அடங்கிய நூலில் கொங்குமண்டலத்தின் பெருமை அனைத்தும் அடக்கிய இவரது புலமை வியக்க வைக்கும் ஒன்று. கொங்குமண்டலம் பற்றி அறிய விரும்புவோரும் தமிழகத்தின் தலையாய வளர்ச்சியையும் பண்பாட்டையும் அறிய விரும்புவோரும் தமிழ்ச் சுவையைச் சுவைக்க விரும்புவோரும் படிக்க வேண்டிய அரிய நூல் இது.

    இதில் கூறும் வரலாறுகளைக் கட்டுரைகளாகத் தொகுத்தேன்.

    இந்தக் கட்டுரைகள் www.tamilandvedas.com-ல் அவ்வப்பொழுது வெளியிடப்பட்டு வந்தன.

    இந்த வரலாறுகளில் 32 வரலாறுகள் முதல் பாகமாக இப்போது வெளியிடப் படுகிறது.

    இதைத் தொடராக வெளியிட்ட லண்டன் திரு ச. சுவாமிநாதன் அவர்களுக்கு எனது நன்றி.

    இந்த நூலை டிஜிடல் வடிவமாக வெளியிட முன் வந்த பெங்களூர் நிறுவனமான PUSTAKA DIGITAL MEDIAவின் உரிமையாளர் திரு ராஜேஷ் தேவராஜ் அவர்களுக்கு எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

    தமிழ் மீது ஆர்வம் கொண்ட அனைத்து மக்களும் இதைப் படித்து உத்வேகம் பெற்றுத் தமிழைப் போற்றி வளர்ப்பார்கள் என்ற நம்பிக்கையுடன் இதைத் தமிழ் அன்பர்களுக்குச் சமர்ப்பிக்கிறேன். அனைவருக்கும் எனது நன்றி.

    பங்களூர்

    10-3-2022

    ச.நாகராஜன்

    முதல் பகுதி - கொங்குமண்டல சதகம் தரும் சித்தர் வரலாறுகள்!

    1. அகத்தியர் சிவலிங்க பூஜை செய்த இடம்!

    அகத்திய முனிவரின் வரலாறு மிக நீண்டது; சுவையான

    Enjoying the preview?
    Page 1 of 1