Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Silambu Pirantha Kadhai
Silambu Pirantha Kadhai
Silambu Pirantha Kadhai
Ebook103 pages38 minutes

Silambu Pirantha Kadhai

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

ஐம்பெருங் காப்பியங்களில் ஒன்றாகிய சிலப்பதிகாரம் கண்ணகியின் கதையைச் சொல்வது. அதனை இயற்றியவர் இளங்கோவடிகள். காப்பியத்தின் மூன்றாம் பகுதியாகிய வஞ்சிக் காண்டக் கதையில் அவரே வருகிறார். அவர் சிலப்பதிகாரம் இயற்றப் புகுந்த கதையே இனிமையானது.

செங்குட்டுவன் கண்ணகிக்குக் கோயில் கட்டி அந்தப் பத்தினியின் திருவுருவைப் பிரதிட்டை செய்தான். அதனை அடுத்து இளங்கோவடிகள் இந்தக் காவியத்தை இயற்றினார். செங்குட்டுவன் அமைத்த கற்கோயில் இப்போது இருக்கிற இடம் தெரியவில்லை. ஆனால் இளங்கோவடிகள் இயற்றிய சொற் கோயிலாகிய சிலப்பதிகாரக் காப்பியம் இன்றும் மெருகழியாமல், அழகு குலையாமல் தமிழர்களுக்கு இலக்கிய விருந்தாய் நிலவுகிறது.

Languageதமிழ்
Release dateSep 6, 2021
ISBN6580113707334
Silambu Pirantha Kadhai

Read more from Ki.Va.Jagannathan

Related to Silambu Pirantha Kadhai

Related ebooks

Reviews for Silambu Pirantha Kadhai

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Silambu Pirantha Kadhai - Ki.Va.Jagannathan

    https://www.pustaka.co.in

    சிலம்பு பிறந்த கதை

    Silambu Pirantha Kadhai

    Author:

    கி. வா. ஜகந்நாதன்

    Ki.Va. Jagannathan

    For more books

    https://www.pustaka.co.in/home/author/ki-va-jagannathan

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    உலகளாவிய பொதுக் கள உரிமம் (CC0 1.0)

    இது சட்ட ஏற்புடைய உரிமத்தின் சுருக்கம் மட்டுமே. முழு உரையை https://creativecommons.org/publicdomain/zero/1.0/legalcode என்ற முகவரியில் காணலாம்.

    பதிப்புரிமை அற்றது

    இந்த ஆக்கத்துடன் தொடர்புடையவர்கள், உலகளளாவிய பொதுப் பயன்பாட்டுக்கு என பதிப்புரிமைச் சட்டத்துக்கு உட்பட்டு, தங்கள் அனைத்துப் பதிப்புரிமைகளையும் விடுவித்துள்ளனர்.

    நீங்கள் இவ்வாக்கத்தைப் படியெடுக்கலாம்; மேம்படுத்தலாம்; பகிரலாம்; வேறு வடிவமாக மாற்றலாம்; வணிகப் பயன்களும் அடையலாம். இவற்றுக்கு நீங்கள் ஒப்புதல் ஏதும் கோரத் தேவையில்லை.

    ***

    இது, உலகத் தமிழ் விக்கியூடகச் சமூகமும் ( https://ta.wikisource.org ), தமிழ் இணையக் கல்விக் கழகமும் ( http://tamilvu.org ) இணைந்த கூட்டுமுயற்சியில், பதிவேற்றிய நூல்களில் ஒன்று. இக்கூட்டு முயற்சியைப் பற்றி, https://ta.wikisource.org/s/4kx என்ற முகவரியில் விரிவாகக் காணலாம்.

    CC-Zero-badge.svgCC-logo.svg
    Universal (CC0 1.0) Public Domain Dedication

    This is a human readable summary of the legal code found at https://creativecommons.org/publicdomain/zero/1.0/legalcode

    No Copyright

    The person who associated a work with this deed has dedicated the work to the public domain by waiving all of his or her rights to the work worldwide under copyright law including all related and neighboring rights, to the extent allowed by law.

    You can copy, modify, distribute and perform the work even for commercial purposes, all without asking permission.

    ***

    This book is uploaded as part of the collaboration between Global Tamil Wikimedia Community

    (https://ta.wikisource.org ) and Tamil Virtual Academy (http://tamilvu.org ). More details about this collaboration can be found at https://ta.wikisource.org/s/4kx.

    முன்னுரை

    ஐம்பெருங் காப்பியங்களில் ஒன்றாகிய சிலப்பதிகாரம் கண்ணகியின் கதையைச் சொல்வது. அதனை இயற்றியவர் இளங்கோவடிகள். காப்பியத்தின் மூன்றாம் பகுதியாகிய வஞ்சிக் காண்டக் கதையில் அவரே வருகிறார். அவர் சிலப்பதிகாரம் இயற்றப் புகுந்த கதையே இனிமையானது.

    செங்குட்டுவன் கண்ணகிக்குக் கோயில் கட்டி அந்தப் பத்தினியின் திருவுருவைப் பிரதிட்டை செய்தான். அதனை அடுத்து இளங்கோவடிகள் இந்தக் காவியத்தை இயற்றினார். செங்குட்டுவன் அமைத்த கற்கோயில் இப்போது இருக்கிற இடம் தெரியவில்லை. ஆனால் இளங்கோவடிகள் இயற்றிய சொற் கோயிலாகிய சிலப்பதிகாரக் காப்பியம் இன்றும் மெருகழியாமல், அழகு குலையாமல் தமிழர்களுக்கு இலக்கிய விருந்தாய் நிலவுகிறது.

    செங்குட்டுவன் கற்கோயில் அமைத்த கதையும் இளங்கோவடிகள் சொற்கோயில் அமைத்த கதையும் தொடர்புடையவை. அந்த இரண்டையும் இணைத்து இந்தச் சிலம்பு பிறந்த கதையை எழுதினேன். சிலப்பதிகாரத்தில் பதிகத்திலும் கட்டுரை காதையிலும் உள்ள செய்திகளும், வஞ்சிக்காண்டம் முழுவதிலும் காணப்படும் வரலாறும், அடியார்க்கு நல்லார் உரையில் உள்ள சில குறிப்புகளும் இதை எழுத ஆதாரமாக இருந்தன.

    காந்தமலை

    சென்னை - 28

    கி. வா. ஜகந்நாதன்

    27-10-61 

    பொருளடக்கம்

    1. இளங்கோவின் பயணம்

    2. துறவரசர்

    3. இரு பெரும் புலவர்கள்

    4. மலை வளம்

    5. சேரமான் தீர்மானம்

    6. மூன்று உண்மைகள்

    7. சேர மன்னன் புறப்பாடு

    8. இமயத்துச் சிலை

    9. கங்கைக் கரையில்

    10. பெரு வேள்வி

    11. பத்தினி கோயில்

    12. சிலம்பின் உதயம்

    1. இளங்கோவின் பயணம்

    பழைய காலத்தில் தமிழ்நாடு மூன்று பிரிவாகப் பிரிந்திருந்தது. அவற்றைச் சோழ நாடு, பாண்டி நாடு, சேரநாடு என்று சொன்னார்கள். சோழ நாட்டின் தலைநகராகிய உறையூரில் இருந்து சோழ மன்னர்கள் ஆட்சி புரிந்தார்கள். பாண்டிநாட்டின் தலைநகராகிய மதுரையில் பாண்டிய மன்னர்கள் செங்கோல் செலுத்திவந்தார்கள். சேரநாட்டுக்குத் தலைநகர் வஞ்சிமாநகர். அதைத் தம்முடைய இடமாகக்கொண்டு சேரமன்னர்கள் அரசாட்சிபுரிந்தார்கள். இந்த மூன்று மன்னர்களின் பரம்பரையும் மிக மிகப் பழைய காலம் முதற்கொண்டே இந்த நாட்டில் இருந்துவருகின்றன.

    சோழ நாட்டுக்குச் சிறப்புத் தருவது காவிரி ஆறு. பாண்டிநாட்டுக்குப் பெருமை தருபவை வையை, தாமிரபர்ணி என்னும் ஆறுகள். சேர நாட்டில் ஓடுவது பேராறு. ஒவ்வொரு நாட்டிலும் கடற்கரையைச் சேர்ந்த இடங்கள் இருந்தன. அதனால் மன்னர்கள் கடற்கரையிலும் சில நகரங்களை அமைத்துக் கொண்டார்கள். சோழநாட்டில் காவிரி கடலோடு கலக்கும் இடத்தில் இருப்பது காவிரிப்பூம்பட்டினம். அதைப் புகார் என்றும் சொல்வார்கள். அது பெரிய கடற்கரை நகரமாக விளங்கியது. பாண்டிநாட்டில் கொற்கை பெரிய கடற்கரைப் பட்டினம். சேரநாட்டின் தலைநகராகிய வஞ்சியே கடற்கரைப் பட்டினந்தான்; முசிறி என்ற பட்டினம் வேறு இருந்தது.

    இந்த மூன்று நாடுகளில் சேரநாடு மேற்குக் கடற்கரை ஓரமாக இருப்பது;

    Enjoying the preview?
    Page 1 of 1