Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Ramayanam Ayodhya Kandam – Kambar – Part 3
Ramayanam Ayodhya Kandam – Kambar – Part 3
Ramayanam Ayodhya Kandam – Kambar – Part 3
Ebook130 pages48 minutes

Ramayanam Ayodhya Kandam – Kambar – Part 3

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

பழம்பெரும் இதிஹாஸமான ராமாயணம் பற்றி தனது காவியத்தில் கம்பன் பொதிந்து வைத்துள்ள பல்லாயிரக்கணக்கான முத்துக்களை அறிய ஆவல் கொண்டுள்ளோர் படிக்க ஏற்ற நூல் இது. இராமாயணம் பற்றிய தொடர் வரிசையில், பால காண்டம் ஒரு பார்வை, வால்மீகியின் அயோத்யா காண்டம் - இரு பாகங்கள், கம்பரின் அயோத்தியா காண்டம் முதல் மற்றும் இரண்டாம் பாகம் ஆகியவற்றைத் தொடர்ந்து இந்த கம்பரின் அயோத்தியா காண்டம் மூன்றாம் பாகம் வெளி வருகிறது. இந்த மூன்றாம் பாகத்தில் ஆறு செல் படலம், கங்கை காண் படலம், திருவடி சூட்டு படலம் ஆகிய மூன்று படலங்கள் இடம் பெறுகின்றன.

இராமனைக் காண பரதன் விரைந்து செல்வதும், குகன் பரதனை எதிர் கொள்வதும், இராமன் பரதன் சந்திப்பும், இராமனது பாதுகைகளை பரதன் ஏற்றுத் தலையில் சுமப்பதும் உள்ளிட்ட சுவையான விவரங்கள் இதில் இடம் பெறுகின்றன. நாலாயிர திவ்யபிரபந்தம் முதல் இராமநாடக கீர்த்தனை ஈறாக பல நூல்களிலிருந்து சரளமாக எடுத்துத் தரப்பட்டுள்ள மேற்கோள்களை இந்த நூலில் படித்து மகிழலாம். குடும்பத்தினர் படித்து மகிழ்வதோடு அனைவருக்கும் பரிசாகவும் அளிக்க உகந்த நூல் இது.

Languageதமிழ்
Release dateSep 23, 2023
ISBN6580166709876
Ramayanam Ayodhya Kandam – Kambar – Part 3

Read more from R. Seshadrinathan

Related to Ramayanam Ayodhya Kandam – Kambar – Part 3

Related ebooks

Reviews for Ramayanam Ayodhya Kandam – Kambar – Part 3

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Ramayanam Ayodhya Kandam – Kambar – Part 3 - R. Seshadrinathan

    C:\Users\INTEL\Desktop\Logo New\pustaka_logo-blue_3x.png

    https://www.pustaka.co.in

    இராமாயணம் அயோத்தியா காண்டம் - கம்பர் - பாகம் 3

    Ramayanam Ayodhya Kandam – Kambar – Part 3

    Author:

    ஆர். சேஷாத்ரிநாதன்

    R. Seshadrinathan

    For more books

    https://www.pustaka.co.in/home/author/r-seshadrinathan

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    என்னுரை

    அணிந்துரை

    1. ஆறுசெல் படலம்

    2. கங்கை காண் படலம்

    3. திருவடி சூட்டு படலம்

    பிற்சேர்க்கை

    என்னுரை

    வணக்கம்.

    மனித குலம் நன்றாக இருக்க வேண்டுமென்று பல்லாயிரம் வருடங்களாக நமது முனிவர்களும் ரிஷிகளும் பாடுபட்டு வந்திருக்கின்றனர்.

    இதற்குப் பரம்பொருள் வகுத்து, பிரபஞ்சத்தில் ஒலி அலைகளாக உலா வந்த கோட்பாடுகளுக்கு வடிவம் கொடுத்து, வேதங்களாகவும், உபநிஷத்களாகவும் உருவாக்கியவர் வேதவியாசர். அத்தோடு நில்லாமல் அவைகள் சாதாரண மனிதனைச் சென்றடைய அவர் பல முயற்சிகள் எடுத்தார்.

    எந்த விதமான போதனைகளும் கதை வடிவிலும் பாடல் வடிவிலும் இருந்தால் அவை எளிதாக எல்லோரையும் சென்றடையும். வேதங்கள், மனித குலம் எதைச் செய்யலாம்? எதைச் செய்யக்கூடாது? என்பதைத் தானே தெரிவிக்கின்றன. அதைக் கதை வடிவில் எவ்வாறு சொல்வது? அதற்காக உருவான காவியங்கள் தான் இராமாயணம் மற்றும் மகாபாரதம். மனித குலம் எதைச் செய்ய வேண்டும் என்பதைச் சொல்வது வால்மீகி எழுதிய இராமாயணம். எதைச் செய்யக்கூடாது என்பதைச் சொல்வது வேத வியாசர் எழுதிய மகாபாரதம். மீண்டும் மொழிப் பிரச்னையால் இந்தப் போதனைகள் சாதாரண மனிதனை அடைவதில் பல சிரமங்கள் இருந்தன.

    வால்மீகி மற்றும் வேதவியாசர் விட்ட பணியைத் துவங்கியவர்கள் காளிதாசர், கம்பர், துளசிதாசர் போன்ற மகான்கள். இவர்கள் அந்தக் காவியங்களை எல்லோரும் புரிந்து கொள்வதற்காக அவரவர் மொழிகளில் மொழிபெயர்த்து மனித குலத்திற்கான தங்கள் சேவையைத் தொடர்ந்தனர்.

    அந்த இராமாயணத்தையும் மகாபாரதத்தையும் இன்னும் எளிதாக்கி மக்களிடையே கொண்டு செல்ல பல உபன்யாசகர்கள், சான்றோர்கள், சொற்பொழிவாளர்கள் அயராது பாடுபடுகின்றனர்.

    இந்த வரிசையில் என்னுடைய சிறு முயற்சியாக பால காண்டத்தையும் வால்மீகியின் அயோத்யா காண்டத்தையும் தொகுத்து வழங்கி உள்ளேன். அடுத்து கம்பரின் அயோத்தியா காண்டத்தைத் தொகுத்து இப்போது வழங்கியுள்ளதில் இந்த மூன்றாம் பாகம் மலர்கிறது.

    கம்பர் ஒரு மகா சமுத்திரம். அதன் கரையில் கூழாங்கற்களோடு விளையாடிக் கொண்டிருக்கும் சிறுவன் நான். அந்த சமுத்திரத்தில் இறங்கி எளிதாக முத்தெடுக்க முடியாது. அதற்கு அனுபவம் நிறைந்தோர் உதவி தேவை. அந்த வரிசையில் நாமக்கல் கவிஞர். ஐயா கம்பவாரிதி ஜெயராஜ், பேராசிரியர்கள் இராதாகிருஷ்ணன், அ.ச. ஞானசம்பந்தன், சுந்தரசண்முகனார் கணபதிப் பிள்ளை போன்ற சான்றோர்களின் உதவியோடும் நலுங்கு மெட்டு இராமாயணம், வீரபத்திர இராமாயணக் கும்மி, இராமாயண அம்மானை, அருணாச்சலக் கவிராயரின் இராம நாடகக் கீர்த்தனைகள் போன்ற நூல்களின் துணையோடும் கம்பன் என்னும் கடலில் மூழ்கி முத்து எடுக்க முயற்சி செய்துள்ளேன். அவர்கள் எல்லோருக்கும் எமது வணக்கங்களையும், நன்றிகளையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

    எனது தொகுப்புகளை எல்லாம் நூல் வடிவில் கொண்டு வர முயற்சி மேற்கொண்டு பேருதவி செய்து வரும் எனது குருநாதர் திரு ச. நாகராஜன் அவர்களுக்கு எனது வணக்கத்தையும் நன்றியையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

    எனக்கு உறுதுணையாக இருந்த உறவினர்கள், நண்பர்கள் எல்லோருக்கும் எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

    இந்தக் கட்டுரைகள் இணையதளத்தில் வெளி வந்த நாட்களில் உடனுக்குடன் அதைப் பாராட்டி என்னை ஊக்குவித்த வாசகப் பெருமக்களுக்கு எனது நன்றி உரித்தாகுக.

    இந்த நூலை டிஜிடல் வடிவிலும், அச்சுப் பதிப்பாகவும் கொண்டு வர முன்வந்துள்ள பெங்களூர் நிறுவனமான PUSTAKA DIGITAL MEDIAவின் உரிமையாளர் திரு ராஜேஷ் தேவராஜ் அவர்களுக்கு எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

    அனைவருக்கும் ஶ்ரீ ராமச்சந்திரமூர்த்தி, அன்னை சீதாதேவியாரின் அருள் பரிபூரணமாக சித்திக்க ஶ்ரீ ராமரையும் அன்னை சீதாதேவியையும் வேண்டுகிறேன்.

    நன்றி.

    அன்புடன்

    ஆர். சேஷாத்ரிநாதன்

    சென்னை

    14-5-23

    அணிந்துரை

    உலகில் தோன்றிய ஆகப்பெரும் கவிஞர்களில் முன்னணியில் உள்ளோரில் முதல் வரிசையில் இடம் பெறுபவன் கவிச்சக்கரவர்த்தி கம்பன்.

    இதை மஹாகவி பாரதியார்,

    "யாமறிந்த புலவரிலே கம்பனைப் போல்

    வள்ளுவர் போல், இளங்கோவைப் போல்

    பூமிதனில் யாங்கணுமே பிறந்ததில்லை

    உண்மை, வெறும் புகழ்ச்சி யில்லை" என்று கூறுகிறார்.

    மஹாகவியின் வார்த்தைக்கு மறுப்பேது?

    கம்பனைப் பல்வேறு இடங்களில் பாராட்டி வியக்கும் மஹாகவி அதற்கான காரணத்தையும் தமிழச்சாதி என்ற கவிதையில் அருமையாகக் கூறிவிடுகிறார்:

    ‘எல்லையொன்றின்மை’ எனும் பொருள் அதனைக் கம்பன் குறிகளால் காட்டிட முயலும் முயற்சியைக் கருதியும், தமிழச் சாதியை அமரத் தன்மை வாய்ந்தது என்று உறுதி கொண்டிருப்பதாகத் தெரிவிக்கிறார்.

    பல்வேறு அறிஞர்களும் கம்பனைக் கற்க முயன்று அவனது ‘எல்லையொன்றின்மை’ (Infinity) என்ற மாபெரும் தன்மையால் தம் ஆயுள் முழுவதும் கற்றுக்கொண்டே இருக்கின்றனர்.

    "மொழிவளம் மொழிகு வேனோ! மொழிகதைத் தருண முன்னிப்

    பொழிவளம் புகலு கேனோ! பொருள்வளம் புடைத்து விம்மிக்

    கழிவளங் கழறு கேனோ! காவியக் கழனி யோங்கிச்

    செழிவளஞ் சிரித்து முத்தந் தெரித்தொளி சிதறும் பாவில்!"

    என்று இவ்வாறு ‘கம்பராமாயண கௌஸ்துப மணி மாலை’யில் கம்ப பக்தர் பேராசிரியர் கே.என். சிவராஜ பிள்ளை (தோற்றம் 1879 - மறைவு 1941) வியந்து கம்பனைப் பாராட்டுகிறார்.

    ஆனால் இந்த வேக யுகத்தில் நமக்கு கம்பனை இனம் காட்ட ஒருவர் வேண்டுமே!

    இந்த வகையில்தான், இராமாயணக் கடலில் கம்பன் பொதிந்து வைத்துள்ள பல்லாயிரக்கணக்கான முத்துக்களை அறிய ஆவல் கொண்டு ஆராய்ந்து அதில் உள்ள பல நல் முத்துக்களைக் கண்டு, அவற்றை உலகினருக்கும் தரவல்ல ஒருவராகத் திகழ்கிறார்.

    இராமாயணம் பற்றிய அவரது தொடர் நூல்களில், பால காண்டம் ஒரு பார்வை, வால்மீகியின் அயோத்யா காண்டம் (இரு பாகங்கள்) கம்பரின் அயோத்தியா காண்டம் முதல் இரு பாகங்கள் ஆகியவற்றைத் தொடர்ந்து, இந்த அயோத்தியா காண்டம் மூன்றாம் பாகம் வெளி வருகிறது.

    இந்த மூன்றாம் பாகத்தில் ஆறு செல் படலம், கங்கை காண் படலம், திருவடி சூட்டு படலம் ஆகிய மூன்று படலங்கள் இடம் பெறுகின்றன.

    இராமனைக் காண பரதன் விரைந்து செல்வதும், குகன் பரதனை எதிர்கொள்வதும், இராமன் பரதன் சந்திப்பும், இராமனது பாதுகைகளை பரதன் ஏற்றுத் தலையில் சுமப்பதும் உள்ளிட்ட சுவையான விவரங்களில் வேறெங்கும் காண முடியாத பல நுட்பமான விஷயங்களை நூலாசிரியர் விளக்குகிறார். இவற்றை ஒருங்கு சேர ஒரே இடத்தில் படித்து மகிழும்படி இந்த மூன்றாம் பாகம் அமைந்திருப்பது பாராட்டுக்குரியது.

    நாலாயிர திவ்யபிரபந்தம் முதல் இராமநாடக கீர்த்தனை ஈறாக பல நூல்களிலிருந்து மேற்கோள்களை சரளமாக நூலாசிரியர் எடுத்துத் தருகிறார். வியக்கிறோம், மகிழ்கிறோம்.

    அவரது இராமாயண ஈடுபாடும் ஆய்வும் பாராட்டுக்கு உரியது.

    இந்த நூலை

    Enjoying the preview?
    Page 1 of 1