Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Arockiya Vazhvirku Soorya Namaskaram
Arockiya Vazhvirku Soorya Namaskaram
Arockiya Vazhvirku Soorya Namaskaram
Ebook101 pages31 minutes

Arockiya Vazhvirku Soorya Namaskaram

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

வாசகர்களுக்கு வணக்கம்.

“ஆரோக்கிய வாழ்விற்கு சூரிய நமஸ்காரம்” எனும் தலைப்பில் இந்த புத்தகத்தை எழுதியதில் நான் மிக்க மகிழ்ச்சி அடைகிறேன். ஏற்கெனவே “ஆரோக்கிய வாழ்விற்கு ப்ராணயாமம்”, “ஆரோக்கிய வாழ்விற்கு முத்திரைகள்” எனும் நூல்களை எழுதியுள்ளேன. இது போன்ற புத்தகங்கள் உங்கள் மனத்தையும் உடலையும் தூய்மையாக்கி ஆரோக்கியமானை வாழ்க்கைக்கு உங்களை அழைத்துச் செல்லும். இந்த நூலில் குறிப்பிட்டுள்ள விஷயங்களை அறிந்த தினமும் அரைமணிநேரம் ஒதுக்கி சூரியபகவானை வணங்கி நல்லதொரு வாழ்க்கை முறையை உருவாக்கிக் கொள்ளுங்கள்.

இந்த புத்தகத்தை மிகச்சிறப்பான முறையில் மின்னூலாக வெளியிட்டிருக்கும் புஸ்தகா நிறுவனத்திற்கு என் மனப்பூர்வமான நன்றியை தெரிவித்துக் கொள்ளுகிறேன்.

மீண்டும் சந்திப்போம்

அன்புடன்
ஆர்.வி. பதி

Languageதமிழ்
Release dateJul 17, 2021
ISBN6580138807284
Arockiya Vazhvirku Soorya Namaskaram

Read more from R.V.Pathy

Related to Arockiya Vazhvirku Soorya Namaskaram

Related ebooks

Reviews for Arockiya Vazhvirku Soorya Namaskaram

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Arockiya Vazhvirku Soorya Namaskaram - R.V.Pathy

    https://www.pustaka.co.in

    ஆரோக்கிய வாழ்விற்கு சூரிய நமஸ்காரம்

    Arockiya Vazhvirku Soorya Namaskaram

    Author:

    ஆர்.வி. பதி

    R.V. Pathy

    For more books

    https://www.pustaka.co.in/home/author/rv-pathy

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    வாழ்க்கையின் மூல ஆதாரம்

    கோபம் தணிந்தது

    சாம்பன்

    நாரத விஜயம்

    சூரியபகவான் தரிசனம்

    ஆலயம் உருவானது

    முனிவரின் கோபம்

    அனுமன்

    யாக்ஞ வல்கியரும் யஜீர் வேதமும்

    சுகர் முனிவர்

    சூரியபகவான் அளித்த வரம்

    ஸ்யமந்தக மாலை

    தர்மத்தில் சிறந்த தர்மம்

    நளாயினி

    மகாபாரதத்தில் சூரியபகவான்

    சூரியபகவான் கோயில்கள்

    சூரியன் ஓர் அறிவியல் பார்வை

    சூரிய பூஜை

    வைணவத் தலத்தில் சூரியபூஜை

    மகரசங்கராந்தி

    சூரிய நமஸ்காரம் செய்யும் முறைகள்

    எல்லோரும் சூரிய நமஸ்காரத்தைச் செய்யலாமா ?

    சூரிய நமஸ்காரம் செய்வதால் ஏற்படும் பலன்கள்

    வாசகர்களுக்கு வணக்கம்.

    ஆரோக்கிய வாழ்விற்கு சூரிய நமஸ்காரம் எனும் தலைப்பில் இந்த புத்தகத்தை எழுதியதில் நான் மிக்க மகிழ்ச்சி அடைகிறேன். ஏற்கெனவே ஆரோக்கிய வாழ்விற்கு ப்ராணயாமம், ஆரோக்கிய வாழ்விற்கு முத்திரைகள் எனும் நூல்களை எழுதியுள்ளேன. இது போன்ற புத்தகங்கள் உங்கள் மனத்தையும் உடலையும் தூய்மையாக்கி ஆரோக்கியமானை வாழ்க்கைக்கு உங்களை அழைத்துச் செல்லும். இந்த நூலில் குறிப்பிட்டுள்ள விஷயங்களை அறிந்த தினமும் அரைமணிநேரம் ஒதுக்கி சூரியபகவானை வணங்கி நல்லதொரு வாழ்க்கை முறையை உருவாக்கிக் கொள்ளுங்கள்.

    இந்த புத்தகத்தை மிகச்சிறப்பான முறையில் மின்னூலாக வெளியிட்டிருக்கும் புஸ்தகா நிறுவனத்திற்கு என் மனப்பூர்வமான நன்றியை தெரிவித்துக் கொள்ளுகிறேன்.

    மீண்டும் சந்திப்போம்

    அன்புடன்

    ஆர்.வி. பதி

    சூரிய வணக்கம்

    காசினி இருளை நீக்கும் கதிரொளியாகி எங்கும்

    பூசுர உலகோர் போற்றப் பொசிப்புடன் சுகத்தை நல்கும்

    வாசியே ழுடைய தேர்மேல் மகாகிரி வலமாய் வந்த

    தேசிகா என்னைரட் சிப்பாய் செங்கதிரவனே போன்றி

    வாழ்க்கையின் மூல ஆதாரம்

    உலகில் முதன்முதலில் தோன்றிய குடும்பம் சூரியக்குடும்பம் என்றால் அது மிகையாகாது. நவக்கிரக நாயகர்களுள் முதன்மையானவர் சூரியன். நடுவில் இருந்து ஆட்சி புரிபவர். உலகத்தில் உள்ள உயிர்கள் அனைத்திற்கும் மூல ஆதாரம் சூரியபகவானே. பூமியில் வாழும் உயிர்களை தன்னுடைய சக்தி மிக்க கதிர்களால் காப்பாற்றுபவர் சூரியபகவான்.

    நம் முன்னோர்கள் சூரிய நமஸ்காரத்திற்கு மிகவும் முக்கியத்துவம் கொடுத்து வந்திருக்கிறார்கள். காரணம் சூரியக் கதிர்களிலுள்ள ஜீவசக்தியானது ஆரோக்கியத்தையும் நீண்ட ஆயுளையும் தரும் என்ற உண்மையை அவர்கள் ஆதிகாலத்திலேயே கண்டுபிடித்தார்கள். அதிகாலை எழுந்து குளிர்ந்த நீரில் நீராடி முடித்து சூரிய உதயத்தின் போது சூரியனுக்கு முன்னால் நின்று முறைப்படி நாற்பத்தி எட்டு நாட்கள் சூரிய நமஸ்காரம் செய்தால் உடலிலிருந்து நோய்கள் நீங்கி உடல் ஆரோக்கியம் பெறும் என்பது நம் முன்னோர் கண்டறிந்து நமக்குச் சொல்லிவிட்டுச் சென்றிருக்கும் உண்மை.

    சூரிய ஒளியானது நமது அன்றாட வாழ்க்கைத் தேவையான ஜீவசக்தியை அளிக்கிறது. நமது வாழ்க்கைக்கு அடிப்படையான சக்திகளைத் தருவதன் காரணமாக ஆதிகாலத்திலிருந்தே உலகம் முழுவதும் சூரியனை கடவுளாகவே பாவித்து வழிபடும் வழக்கம் இருந்து வருகிறது.

    இன்றைய மனிதர்களுக்கு பலவிதமான புதுப்புது வியாதிகள் ஏற்படுகின்றன. இதற்கு அடிப்படையான காரணங்கள் என்ன என்று ஆராய்ந்து பார்த்தால் ஓர் உண்மை புலப்படும். இன்றைய நவீன உலகத்தில் வாழும் மனிதர்கள் தேவையான அளவிற்குச் சூரிய ஒளியைப் பெறுவதில்லை. சுத்தமான காற்றை அவர்கள் சுவாசிப்பதில்லை. போதிய அளவு நல்ல நீரைக் குடிப்பதில்லை. இத்தகைய செயல்களே அவர்களுக்கு பலவிதமான நோய்கள் வருவதற்குக் காரணமாக அமைந்து விடுகின்றன.

    நமது பாரதநாட்டில் மட்டுமின்றி உலகம் முழுவதும் சூரியனை கடவுளாக வணங்கி வழிபடுவது வழக்கமாக உள்ளது. சுமார் மூன்றாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே எகிப்து நாட்டில் சூரிய வழிபாடு வழக்கத்தில் இருந்துள்ளது. எகிப்து நாட்டை ஆண்ட பாரோ எனும் வம்சாவழியினர் தங்களை சூரியனுடைய வம்சாவழியினர் என்று கூறிக் கொண்டார்கள். ரோமானியர்கள் சூரியனை ஹைபீரியன் என்று அழைத்து வழிபட்டார்கள். கிரேக்க நாட்டவர்கள் சூரியனை அபொல்லோ என்ற பெயரில் வழிபட்டு வந்தார்கள்.

    வடஅமெரிக்காவிலும் மெக்சிகோ நாட்டிலும் சூரிய வழிபாடு நடைபெற்றதற்கான ஆதாரங்கள் உள்ளன. இதுமட்டுமின்றி ஐரோப்பா, சீனா, கிரீஸ் போன்ற நாடுகளில் எல்லாம் சூரிய வழிபாடு வழக்கத்தில்

    Enjoying the preview?
    Page 1 of 1