Pattaya Kilappum Pattai Maruthuvam
()
About this ebook
இயற்கை தாவரங்கள் பூமித்தாயின் குழந்தைகள் எனலாம். மரம், செடி, கொடிகள் அனைத்தும் தாவரங்களே! மரங்கள் பூமியில் தோன்றி 30 கோடி ஆண்டுகளுக்கு மேல் இருக்கலாம் என தாவர வல்லுநர்கள் கருதுகின்றனர். மரங்கள் மழை, காற்று, காய், கனிகள் மட்டும் நமக்கு தரவில்லை. மருந்துணவுகளையும் தருகின்றன. மரங்களின் வேர்களும், பட்டைகளும் தரும் மருத்துவ பலன்கள் தான் மனிதரை வாழ வைக்கின்றன. நோயின்றி இருந்தால்தான் ஆரோக்கியமும், ஆயுளும் கூடும். மரங்கள் அதன் பட்டைகளில் உள்ள அபூர்வ சக்திகள் அறிவியல் பெருக்கத்திற்கு முன்பாகவே சித்தர்களும். ஞானிகளும் கண்டறிந்து தங்களது மொழிப்புரையில் எழுதிவிட்டு போயுள்ளனர். அவர்களது அறிவுச்செல்வம்தான் இந்த இயற்கை மருத்துவம் ஆகும். நீண்ட ஆயுளுடன் வாழ வழிகாட்டும் "பட்டய கிளப்பும் பட்டை மருத்துவம்" என்ற இந்த நூல் மனிதகுலம் தழைத்தோங்க மிகவும் உதவும்.
Read more from V. Tamilalagan
Envizhi Neeyandro! Rating: 0 out of 5 stars0 ratingsKann Varaintha Oviyam Rating: 0 out of 5 stars0 ratingsManasellam Mazhai Megam Rating: 0 out of 5 stars0 ratingsKaadhal Varum Kanney Rating: 0 out of 5 stars0 ratingsPoovukul Uyir Vaasam Rating: 0 out of 5 stars0 ratings100 Oru Pakka Kathaigal Rating: 0 out of 5 stars0 ratings
Related to Pattaya Kilappum Pattai Maruthuvam
Related ebooks
Idhu Oru Mooligai Kaalam Rating: 0 out of 5 stars0 ratingsPalakkadu Iyer Parambariya Samayal Rating: 0 out of 5 stars0 ratingsNamathu Mooligaigal Part - 1 Rating: 0 out of 5 stars0 ratingsVeettil Oru Doctor Rating: 0 out of 5 stars0 ratingsThirukkuralum Vettriyalarkalum Rating: 0 out of 5 stars0 ratingsAasarakovai Rating: 5 out of 5 stars5/5Iyarkai Vaithiyam Rating: 0 out of 5 stars0 ratingsNoyilla Vazhvu Pera Sila Ragasiyangal Rating: 0 out of 5 stars0 ratingsAndrada Vazhvil Mooligaigalin Pangu Rating: 0 out of 5 stars0 ratingsNalam Tharum Thirumuraigal Rating: 0 out of 5 stars0 ratingsதிருக்குறள் கூறும் மருத்துவம் Rating: 0 out of 5 stars0 ratingsவர்ணாவின் மரணம் Rating: 0 out of 5 stars0 ratingsVarnaavin Maranam Rating: 0 out of 5 stars0 ratingsArjunanukkaga Alla Namakke Rating: 0 out of 5 stars0 ratingsMaathar Kula Manikkam Rating: 5 out of 5 stars5/5Silapathigarathil Ara Kotpaadu Rating: 0 out of 5 stars0 ratingsThirikadukam Rating: 0 out of 5 stars0 ratingsThalaivali Rating: 0 out of 5 stars0 ratingsதிருக்குறள் Rating: 0 out of 5 stars0 ratingsSinthanai Sigarangal Rating: 0 out of 5 stars0 ratingsManapenne Unakkaga Rating: 0 out of 5 stars0 ratingsVedaraniyam Chettipula Thirukkoyilkal Uyarvum Ainthozhilor Arunsirappum Rating: 0 out of 5 stars0 ratingsAdayaril Innoru Aalamaram Rating: 0 out of 5 stars0 ratingsAnaivarukkum Aarogyam - Part 3 Rating: 0 out of 5 stars0 ratingsAriya Vendiya Penmanigal Rating: 0 out of 5 stars0 ratingsNooru Vayathu Vaazha Nooru Unavugal Rating: 0 out of 5 stars0 ratingsSirupanjamoolam Rating: 0 out of 5 stars0 ratingsThirukkural Katturaigal Rating: 4 out of 5 stars4/5Aali Rating: 0 out of 5 stars0 ratingsThiruvasaakam Rating: 2 out of 5 stars2/5
Reviews for Pattaya Kilappum Pattai Maruthuvam
0 ratings0 reviews
Book preview
Pattaya Kilappum Pattai Maruthuvam - V. Tamilalagan
https://www.pustaka.co.in
பட்டய கிளப்பும் பட்டை மருத்துவம்
Pattaya Kilappum Pattai Maruthuvam
Author:
வெ. தமிழழகன்
Tamilalagan
For more books
https://www.pustaka.co.in/home/author/v-tamilalagan
Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.
All other copyright © by Author.
All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.
பொருளடக்கம்
முன்னுரை
1. அத்திப்பட்டை
2. அகத்திப்பட்டை
3. அரச மரப்பட்டை
4. அழிஞ்சில் வேர்ப்பட்டை
5. அதிவிடயம் வேர்ப்பட்டை
6. அவுரிவேர்ப் பட்டை
7. அரளிப்பட்டை
8. அசிலாம்பாலை பட்டை
9. அசோக மரப்பட்டை
10. அக்காரப்பட்டை
11. அக்ரூட் பட்டை
12. அருநெல்லி மர வேர்ப்பட்டை
13. ஆவாரம் பட்டை
14. ஆயில்ய பட்டை
15. ஆலம்பட்டை
16. ஆதொண்டை வேர்ப்பட்டை
17. ஆனைப்புளி பட்டை
18. ஆடாதோடை பட்டை
19. இலுப்பை மரப்பட்டை
20. இலந்தை மரப்பட்டை
21. இலவங்கப்பட்டை
22. இரவேல் சின்னி வேர்ப்பட்டை
23. இலவம்பட்டை
24. இளங்கழிஞ்சிப் பட்டை
25. இம்பூறல் வேர்ப்பட்டை
26. இலைக்கள்ளி வேர்ப்பட்டை
27. உதிரவேங்கைப் பட்டை
28. ஈழத்து அலரிப் பட்டை
29. ஈசுவர மூலி வேர்ப்பட்டை
30. உலவை வேர்ப்பட்டை
31. உசிலமரப்பட்டை
32 உத்தாமணிப் பட்டை
33. உருத்திராட்ச மரப்பட்டை
34. உவாத் தேக்குப்பட்டை
35. ஊழலாற்றிப் பட்டை
36. எருக்கம்வேர் பட்டை
37. எட்டிப் பட்டை
38. ஏழிலை பாலை பட்டை
39. ஒதிய மரப்பட்டை
40. பறங்கிப்பட்டை
41. பலாசு பட்டை
42. பச்சை சித்திரமூலம்
43. பாதிரிவேர் பட்டை
44. பாவட்டை வேர்ப்பட்டை
45. பாரிஜாத பட்டை
46. பிசின்பட்டை
47. புங்கம்பட்டை
48. புளியம் பட்டை
49. புன்னை பட்டை
50. பூவரசன் பட்டை
51. பூத கரப்பான் பட்டை
52. பெருமரப்பட்டை
53. பெல்லடோனா வேர்ப்பட்டை
54. பொரம்பை பட்டை
55. வன்னிமரப்பட்டை
56. வகுளம் பட்டை
57. வாதாம்பட்டை
58. வில்வமரப் பட்டை
59. விடத்தேர் வேர்பட்டை
60. வாயு விளங்கா பட்டை
61. வாகை பட்டை
62. வாழைப் பட்டை
63. விளாமரப்பட்டை
64. வெட்சி வேர்ப்பட்டை
65. வெண்சித்திர மூல வேர்ப்பட்டை
66. துத்திவேர்ப்பட்டை
67. வெட்பாலை பட்டை
68 வெள்ளோத்திரப் பட்டை
69. வெற்றிலைப் பட்டை
70. வெள்வேலம்பட்டை
71. வெள்ளை கடம்பு பட்டை
72. வெள் எருக்கன் பட்டை
73. வேம்பாடம் பட்டை
74. வேப்பம் பட்டை
75. வேங்கைப் பட்டை
76. நறுவிலிப்பட்டை
77. நன்னாரி வேர்ப்பட்டை
78. நரி நாவல் பட்டை
79. நஞ்சுண்டான் பட்டை
80. நிலக் குமிழம் பட்டை
81. நாவல் பட்டை
82. நித்ய கல்யாணி வேர்ப்பட்டை
83. நெல்லிப்பட்டை
84. நெட்டிலிங்கம் பட்டை
85. நாச்சி வேர்ப்பட்டை
86. நூக்க மர பட்டைத் தூள்
87. நெரியாசிப் பால் செடிப்பட்டை
88. கருவேலம் பட்டை
89. கடம்பு பட்டை
90. காட்டுக் கருவாப்பட்டை
91. கிளியூரம் பட்டை
92. குடசப்பாலை பட்டை
93. குரா பட்டை
94. குருந்தொட்டி வேர்ப்பட்டை
95. குங்கிலிய தண்டுப்பட்டை
96. குட்டி வேலம்பட்டை
97. கொய்னா பட்டை
98. கொய்யா பட்டை
99 கொடிவேலிப் பட்டை
100. கொழுக்கட்டை மரப்பட்டை
101. கொன்னைப்பட்டை எண்ணெய்
102. கோங்கிலவன் பட்டை
103. கொழுஞ்சிப் பட்டை
104. மருத மரப்பட்டை
105. மதுக்காரை பட்டை
106. மரக்காளம்பட்டை
107. மல்லிகை வேர்ப்பட்டை
108. மந்தாரைப் பட்டை
109. மருதாணிப் பட்டை
110. மஞ்சணத்திப்பட்டை
111. மணத்தக்காளி (வேர்ப்பட்டை)
112. மலை வேம்பு தண்டு வேர்ப்பட்டை
113. மணியுங்கு பட்டை
114 மாவிலங்கம் பட்டை
115. மாதுளை தண்டு வேர்பட்டை
116. மாமரப்பட்டை
117. மாசிக்காய் பட்டை
118. மாசிமரப்பட்டை
119. மாந்தப்பட்டை
120. மிளகரணை வேர்ப்பட்டை
121. மருங்கைப் பட்டை
122. முள் இலவு பட்டை
123. முந்திரி மரப்பட்டை
124. முன்னைமரப் பட்டை
125 முள்ளுவேங்கை பட்டை
126. முக்காவேளை பட்டை
127. ஜின் செங் வேர்ப்பட்டை
128. கடலிரஞ்சிப் பட்டை
129. கவாகவ வேர்ப்பட்டை
130. கருங்காலி பட்டை
131. கருவேப்பிலை வேர்பட்டை
132. கல்யாணமுருங்கை பட்டை
133. கருவாகைப் பட்டை
134. கருநொச்சிப்பட்டை
135. களிப்பிரண்டை வேர்ப்பட்டை
136. கமுகு வேர்ப்பட்டை
137. கருநல்லிப்பட்டை
138. காட்டு வாகைப் பட்டை
139. கசப்பேறிய பட்டை
140. கச்சக்கட்டை மரப்பட்டை
141. கண்டல் செடிப் பட்டை
142. கருங்கட்டான் வேர்ப்பட்டை
143. காக்கணம் வேர்பட்டை
144. காட்டு ஆமணக்கு பட்டை
145. காட்டு அக்ரூட் பட்டை
146. காசா பட்டை
147. காட்டத்திப் பட்டை
148. கையப்புடை பட்டை
149. சங்கன் வேர்ப்பட்டை
150. சரக் கொன்றை வேர்ப்பட்டை
151. சமுத்திரப்பாலை வேர்ப்பட்டை
152. சந்தன மரப்பட்டை
153. சதுரக்கள்ளிப் பட்டை
154. சவுக்கு மரப்பட்டை
155. சிறுகண்பீளை வேர்ப்பட்டை
156. சிறு பேயத்திப்பட்டை
157. பேயத்திப்பட்டை
158. சிவப்பு மந்தாரைப் பட்டை
159. சீமை தேவதாரிப்பட்டை
160. சிம்சுபா விருட்சப் பட்டை
161. சிறுகொன்றை மரப்பட்டை
162. சுண்டை வேர்ப்பட்டை
163. சுரப்பாலை பட்டை
164. சுரப்பட்டை சத்து
165. சூரைப்பட்டை
166. சூலரை பட்டை
167. செங்கத்தாரிப் பட்டை
168. செம்ருத்தி வேர்ப்பட்டை
169. செம்மணத்தி பட்டை
170. செம்பை மரப்பட்டை
171. செந்நாயுருவி வேர்ப்பட்டை
172. சோதிவிருட்ச வேர்ப்பட்டை
173. திருகுக்கள்ளி வேர்ப்பட்டை
174. திருவாச்சியூ பட்டை
175. தும்பிலிப்பட்டை
176. துளசிவேர்ப் பட்டை
177. தூண்மரப் பட்டை
178. தென்னை அடிமரப்பட்டை
179. தேவதாரு பட்டை
180. லோதி பட்டை
181. டூன்மரப் பட்டை
182. ரோகிடா மரப்பட்டை
183. பொரம்பைப் பட்டை
184. பெருநாவல் பட்டை
186. வெள்ளை மருது பட்டை
187. பெரு நாவல் பட்டை
188. களாச் செடிபட்டை
189. பட்டைகள் அகராதி
மருந்தின் அளவீடுகள்
முன்னுரை
இயற்கைத் தாவரங்கள் பூமித்தாயின் குழந்தைகள் எனலாம். மரம் செடி, கொடிகள் அனைத்தும் தாவரங்களே!
மரங்கள் இப்பூமியில் தோன்றி 30 கோடி ஆண்டுகளுக்கு மேல் இருக்கலாம் என தாவர வல்லுநர்கள் கருதுகின்றனர்.
மரங்கள் மழை, காற்று, காய், கனிகள் மட்டும் நமக்குத் தரவில்லை. மருந்துணவுகளையும் தருகின்றன.
மரங்களின் வேர்களும், பட்டைகளும் தரும் மருத்துவப் பலன்கள் தான் மனிதரை வாழவைக்கின்றன.
மாதா ஊட்டாத சோறில்லை மருந்தை தராத மரமில்லை
எனக் கூறுமளவு மரங்கள் மருந்தாகி நமது ஆயுள் காக்கின்றன.
ஆஞ்சியோஸ்ப் பெர்ம்கள்
எனும் பூக்கும் தாவரங்களில் சுமார் 1,50,000க்கும் மேற்பட்ட இனங்கள் பூமியில் உள்ளன. இவற்றில் 3000-க்கு மேற்பட்டவை மர இனங்களாகும்.
மரக் கட்டைக்கும் - மரப்பட்டைக்கும் நடுவே வளர்படை எனும் கேம்பியம் (Cambium) உள்ளது. இந்த மெல்லிய தொலியல் உயிருள்ள செல்கள் இருக்கின்றன. இந்த கேம்பியம் வளர்ந்து தான் பட்டையை மரத்திசுவை தடிக்கச் செய்கிறது.
மரத்தின் ஆடைகள் பட்டைகள் எனலாம். பட்டைகளில் மரங்களின் மருத்துவ குணங்கள் பரவியிருக்கும்.
எவ்வகை பட்டைகளிலும் துவர்ப்புச் சுவையுடைய டானின் எனும் வேதிப் பொருள் இருக்கும்.
இதுதவிர நறுமண எண்ணெய், ஆல்கலாய்டுகள் கிளைக்கோ சைடுகள், மியூசிலேஜ், தரசமணிகள், கால்சியம், ஆக்ஸலேட் ஆகிய வேதிய பொருள்களும் அடங்கியுள்ளன.
எனவே, நோய் வகைக்கேற்ப பட்டைகளை கஷாய மாகவோ, குடிநீராகவோ, சூரணமாகவோ செய்து, மருந்தாக உட்கொண்டால், நோய் குணமாகிறது.
பட்டைகளை வசந்த காலம் முன் கோடை காலத்தில் சேகரிப்பது நல்ல பலன் தரும். இத்தருணங்களில் பட்டையை உருவாக்கும் செயல் வேகமாக நடைபெறும். எனவே தண்டுகளிலிருந்து இலகுவாகப் பிரித்தெடுக்கலாம். பட்டைகளின் நோய் நீக்கும் வேதிப் பொருள்களின் சேமிப்பும் அதிகமாக இருக்கும்.
பட்டைகளை நிழலில் உலர்த்திப் பயன்படுத்த வேண்டும். தண்டுப்பட்டை - வேர்ப்பட்டைகள் அடுப்புக் கரியின் வெப்பத்திலும் உலர்த்தலாம்.
பட்டையில் பெல்லோஜன் அல்லது கார்க் கேம்பியம், பெல்லம் (அ) கார்க், பெல்லோடெர்ம் எனும் மூன்று தசயப்பகுதிகள் உள்ளன.
கார்க் கேம்பியம் தான் பட்டையை உருவாக்குகின்ற ஆக்குத் திசுவாகும். கார்க் கேம்பியத்திலிருந்து உருவாகின்ற வெளிச் செல்கள் தான் பெல்லம் (அ) கார்க் ஆகும். பெல்லோ டெர்ம் செல்களில் நோய் நீக்கும் வேதிப் பொருட்கள் சேமிக்கப் படுகின்றன. ஆகவே, பட்டைகள் மருந்தாக பயன்படுகின்றன.
தாவரங்களின் பட்டைகள், இலைகள், வேர்களில் உள்ள டேனின்கள் பாலிபினால் கூட்டு பொருள்களாகும். இப்பொருள், உடல் திசுக்களை சுருக்கி விரியச் செய்யும் தன்மையுடையதாகும். நோயுண்டாக்கும் உயிரிகள் உடலினுள் நுழைவதை தடை செய்கின்றன. வயிற்றுப் போக்கு ஏற்படும் போது கூடுதல் நீர் சுரப்பினை தடுத்து உலர வைக்கின்றன. தோலினை நோய் வராமல் பாதுகாக்கின்றன.
ஓக்பட்டை, வேலம் பட்டையில் டேனின்கள் அதிகமாக உள்ளன. மரப்பட்டை, தண்டுப்பட்டை, வேர்ப்பட்டைகள் ஏராளமான நோய் தீர்க்கம் மருந்தாகின்றன.
மனிதர் தேகத்தில் 4448 வியாதிகள் இருப்பதை அக்காலத்திலேயே அறிந்துள்ளனர்.
சிரசில்307 வியாதிகளும்
செவியில்7 வியாதிகளும்
வாயல்186 வியாதிகளும்
கண்களில்96 வியாதிகளும்
கழுத்தில்42 வியாதிகளும்
மூக்கில்27 வியாதிகளும்
கன்னத்தில்40 வியாதிகளும்
நெற்றியில்32 வியாதிகளும்
பிடரி (பின்)10 வியாதிகளும்
கைகளில்130 வியாதிகளும்
காலில்190 வியாதிகளும்
துடையில்201 வியாதிகளும்
குறுக்கில்306 வியாதிகளும்
தனத்தில்32 வியாதிகளும்
தொப்புளில்56 வியாதிகளும்
விலா முதுகில்200 வியாதிகளும்
பிடரியில் (முன்)81 வியாதிகளும்
வயிற்றில்75 வியாதிகளும்
ஆண்குறியில்556 நோய்களும்
அபானத்தில்183 நோய்களும்
விதையில்61 நோய்களும்
கையெரிச்சலில்25 நோய்களும்
மூச்சுத்திணறலில்100 நோய்களும்
வெப்புப்பாவை96 நோய்களும்
வைசூரியில்56 நோய்களும்
காமாலை63 வகைகளும்
நரம்பு8 வகைகளும்
முட்டு உள்27 வகைகளும் 51 வகைகளும்
சொறி60 வகைகளும் வழலை
4 வகைகளும்
மட்டில் நோய்108 வகைகளும் செஞ்சாலி61 வகைகளும்
பித்தரோகம்83 வகைகளும்
கைக்கு அடியில் 40 வியாதிகளும்
மார்பில்63 வியாதிகளும்
இருமல், சுவாசகாசம்300 வியாதிகளும் உள்ளன.
இந்த நோய்கள் ஒவ்வொன்றிற்கும் பட்டைகளில் மருத்துவம் உண்டு.
பூவரசன்பட்டையை மென்று சாறு விழுங்க, சர்க்கரை நோய் தீரும். நாவல்பட்டை பெரும்பாடு போக்கும். விளாம்பட்டை நூறாண்டு வாழவைக்கும். அத்திப்பட்டை வெள்ளை படுதலை போக்கும். அரசம்பட்டை மலடு நீக்கும். ஆயில்பட்டை முப்பிணி போக்கும். ஆலம் பட்டை ஆண்மை நீட்டும். ஆடாதோடை கபம் போக்கும். இலுப்பை மண்டை கொதிப்பை போக்கும். புங்கம் பட்டை ரத்த ஒழுக்கை நிறுத்தும். வன்னி வாதம் போக்கும். வகுளம் கரு உண்டாக்கும்.
இப்படி மனித உடலில் தோன்றும் ஒவ்வொரு நோய்க்கும் ஒவ்வொரு பட்டை மருந்தாகிறது.
நோயின்றியிருந்தால் தான் ஆரோக்கியமும், ஆயுளும் கூடும். மரங்கள் அதன் பட்டைகளில் உள்ள அபூர்வ சக்திகள் அறிவியல் பெருக்கத்திற்கு முன்பாகவே சித்தர்களும், ஞானிகளும் கண்டறிந்து தங்களது மொழிப்புரையில் எழுதிவிட்டுப் போயுள்ளனர். அவர்களது அறிவுச் செல்வம் தான் இந்த இயற்கை மருத்துவமாகும்.
வேர், பட்டை, கொப்புகள் கனிகள் ஆகியவற்றை கொதிக்கும் நீரில் இட்டு வடிநீர் தயாரிக்கும் முறை பண்டைக் காலத்திலேயே இருந்துள்ளது. இயற்கை மருத்துவத்தில் இதனை குடிநீர் என பெயரிட்டு அழைக்கப்பட்டது.
இதுதவிர எண்ணெய்களும், தைலங்களும் பட்டைகளி லிருந்து தயார் செய்து பூசு மருந்தாக பயன்படுத்தி நோயிலிருந்து விடுபட்டுள்ளனர்.
காரணம், தேகம் நீட்புடன் இருந்தால் தான் வாழ்க்கை உயிர்ப்புடன் இருக்கும். தேகம்
என்றால் என்ன?
மனிதரது தேகம் உயிரால் இயங்குகிறது. உயிர் இயங்க ஆரோக்கியம் தேவைப்படுகிறது. நோயின்றி இருப்பதே ஆரோக்கியமான வாழ்வாகும்.
உடையையும் உயிரையும் சுமந்து கொண்டிருப்பது மாத்திரம் தேகம் அல்ல. தேகம் பல உண்டு.
அகத்தியர் மாந்திரீக காவியம் 1000த்தில் தேகம் பற்றி சொல்லப்பட்டுள்ளது. அதன்பாடல் :
"கூறுவேன் தேகமது என்ன வென்றால்
குருபரனே எலும்புதனை காலாய் நாட்டி மாறுபடா எலும்புக்குத் துவாரமிட்டு
வன்மையுடன் நரம்பினால் வலித்துக்கட்டி தேறுதலாய் இரத்தமதை உள்ளே ஊற்றி
தேற்றமுடன் அதன் மேலே தோலை மூடி ஆறுதலாய்வாய்வுதனை உள்ளடக்கி
அப்பனே தேகமென்ற கூறுண்டாச்சே."
தேகம் ஐந்துவிதம் என்பனர் சித்தர்கள். இருள் தேகம், தூல தேகம், மருள் தேகம், சுத்த தேகம், பிரணவ தேகம், ஞான தேகம் என வகைப்படுத்துவர். 1. இருள் தேகமென்பது தூல தேகமாகும். 2. மாயை சம்பந்தமாய்த் தனக்குத் தெரியாமலே அகங்காரம் கொள்வதும், பகுத்தறிவை இழப்பதும் மருள் தேகமாகும்.
3. கருவி கரணாதிகள் இழந்து, அறிவு தானே விளங்கிப் பார்க்கும் பொருள் அனைத்தும்