Ramar Paatham
()
About this ebook
Read more from Vidhya Subramaniam
Nilavum Malarum Rating: 5 out of 5 stars5/5Mudhal Mazhai Rating: 0 out of 5 stars0 ratingsCauvery Karaiyil Oru Kaadhal Kathai Rating: 0 out of 5 stars0 ratingsThunbam Nergaiyil… Rating: 5 out of 5 stars5/5Valampuri Sangu Rating: 0 out of 5 stars0 ratingsAnandha Alaigal Rating: 5 out of 5 stars5/5Pon Veenai Rating: 0 out of 5 stars0 ratingsAsaiye Alai Poley Rating: 0 out of 5 stars0 ratingsOomathai Pookkal Rating: 4 out of 5 stars4/5Neruppu Nila Rating: 0 out of 5 stars0 ratingsKaadhal Nilavey... Rating: 5 out of 5 stars5/5Varuvaal, Kaadhal Devathai… Rating: 3 out of 5 stars3/5Kaadhal 24x7 Rating: 4 out of 5 stars4/5Oomai Kuyil Rating: 5 out of 5 stars5/5Vittil Poochigal Rating: 5 out of 5 stars5/5Aval Mugam Kaana Rating: 4 out of 5 stars4/5Kopura Vasal Rating: 0 out of 5 stars0 ratingsVedikkai Manithargal…! Rating: 5 out of 5 stars5/5Malargale Malarungal Rating: 5 out of 5 stars5/5Kaagitha Odangal Rating: 0 out of 5 stars0 ratingsAgayam Ullavarai Rating: 0 out of 5 stars0 ratingsEnthanuyir Kaadhalaney! Rating: 5 out of 5 stars5/5
Related to Ramar Paatham
Related ebooks
Ramar Paatham Rating: 0 out of 5 stars0 ratingsPaathaiyora Paathigal Rating: 0 out of 5 stars0 ratingsNilavai Thazhuvatha Mehangal! Rating: 0 out of 5 stars0 ratingsVelichathai Thedi... Rating: 0 out of 5 stars0 ratingsNinnai Saranadainthen Rating: 5 out of 5 stars5/5Aboorva Ragam Rating: 5 out of 5 stars5/5Poomaalaiye Thol Serava Rating: 3 out of 5 stars3/5Nizhalattam Rating: 0 out of 5 stars0 ratingsSamharam Rating: 0 out of 5 stars0 ratingsSorna Jaalam Rating: 5 out of 5 stars5/5Devathai Vanthu Vittal Rating: 0 out of 5 stars0 ratingsTheerkkaa Sumangali Rating: 0 out of 5 stars0 ratingsKangal Sollum Kavithai Rating: 0 out of 5 stars0 ratingsSathya Kodugal Rating: 0 out of 5 stars0 ratingsNee Sooriyan, Naan Thamarai Rating: 5 out of 5 stars5/5En Iniya Pon Nilaavey! Rating: 5 out of 5 stars5/5Unakkaga Kaathirukkum Idhayam! Rating: 0 out of 5 stars0 ratingsKaattrukkenna Veli? Rating: 5 out of 5 stars5/5Mogathirai Rating: 0 out of 5 stars0 ratingsDevathai Vaazhum Veedu! Rating: 0 out of 5 stars0 ratingsVandhal, Sendral, Vendral... Rating: 0 out of 5 stars0 ratingsEndhan Manam Unnai Sutruthey... Rating: 4 out of 5 stars4/5Karpura Kaatru Rating: 0 out of 5 stars0 ratingsAgalya Kaathirukiral Rating: 0 out of 5 stars0 ratingsKanavu Kandean Drohi Rating: 0 out of 5 stars0 ratingsஅச்சம் விடு பச்சைக் கிளியே! Rating: 0 out of 5 stars0 ratingsAcham Vidu Pachai Kiliye Rating: 0 out of 5 stars0 ratingsLakshmi Rajarathnathin Kurunovelgal Rating: 0 out of 5 stars0 ratingsBramma Mudichu Rating: 0 out of 5 stars0 ratingsVizhiyele Malarnthathu Rating: 5 out of 5 stars5/5
Reviews for Ramar Paatham
0 ratings0 reviews
Book preview
Ramar Paatham - Vidhya Subramaniam
http://www.pustaka.co.in
ராமர் பாதம்
Ramar Paatham
Author:
வித்யா சுப்ரமணியம்
Vidhya Subramaniam
For more books
http://www.pustaka.co.in/home/author/vidhya-subramaniam
Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.
All other copyright © by Author.
All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.
பொருளடக்கம்
1. ராமர் பாதம்
2. உயிர்மை
3. நானும் அவனும்
4. அமிர்தா
5. கடையாணி
6. வீடு
7. அப்பாவின் அறை ,
8. வீடென்பது
9. பூக்களும் முட்களும்
10. குடிசை
11. வெள்ளிச் சொம்பு
12. அம்மா
13. குட்டிகள்
14. ஞானம்
15. தன்வினை
16. எடை
17. நான்
18. வாலிபம் என்பது
19. அடைப்பு
20. மெளனக் கதறல்
21. உச்சி வெய்யில்
22. வெளிச்சம்
23. காட்டுப் பூணுால்
24. வதம்
25. காதற்ற ஊசியும்…
26. பிரிவு
27. ஒரு நாள் ராஜாக்கள்
28. குளக்கரை
29. சலனங்கள்
ராமர் பாதம்
தெரு முழுக்க குமரேசனின் வீட்டில் கூடியிருந்தது. பெரிய வீடு. பெரிய கூடம். கூடத்தின் ஒரு பக்கம் செயற்கை மேடையமைக்கப்பட்டு சிகப்பு ஜமக்காளத் தால் போர்த்தப்பட்டிருந்தது. அதன் மீது புத்தகம் விரித்து வைக்கும் மரமடிப்பான் ஒன்றும், சின்ன மைக் ஒன்றும் வைத்திருந்தது.
சரியாய் ஆறுமணிக்கு பஞ்சாபகேசன் என்கிற பஞ்சு தோளில் போர்த்திய சிகப்பு சால்வை சகிதம் மேடையில் ஏறி கும்பிடு போட்டு விட்டு அமர்ந்து மைக்கை நிமிர்த்தி சரியாக வைத்துக் கொண்டார்.
மொட்டை மாடியில் பிழிந்து பாதி உலர்ந்த கட்டை வடகம் போல ஒரு கெச்சலான தேகம் பஞ்சுவுக்கு. நல்ல நிறம்தான் என்றாலும் சதைப் பிடிப்பில்லாததால் அந்த நிறம் மட்டாகவே தெரியும். பெரிய நெற்றியில் தென் கலை நாமம். பின் குடுமி. காதுகளில் வெள்ளைக்கல் பதித்த கடுக்கன்கள். பெரிய கண், ஒட்டிய கன்னம் தடித்த உதடுகள். நல்ல உயரம் காரணமாக லேசாக விழுந்திருந்த கூன், ஒட்டின வயிறு. நீள நீளமான கைகள். இதுதான் பஞ்சுவின் தோற்றம். இதே பஞ்சு வாயைத் திறந்து பேசினால் அந்த வெண்கலக் குரல் எவரையும் அசத்தும். அந்தக் குரலுக்கு சற்றும் சம்பந்தமில்லாத உருவத்தை முதன் முறை பார்க்கிறவர்கள் வியப்போடுதான் பார்ப் பார்கள். வடமொழி, கங்கை பிரவாகமாய் பிசிறின்றி அவர் வாயிலிருந்து வெளிப்படும்போது கூடியிருக்கும் கூட்டம் மகுடிக்கு மயங்கின சர்ப்பக் கூட்டம்போல் மெல்லிய தலையசைப்போடு கேட்டுக் கொண்டிருக்கும்.
குமரேசன் ஊருக்குப் பெரிய மனிதர். பணத்தை எப்படிச் செலவு செய்யலாம் என்று யோசிக்கிற அளவுக்கு பணப்புழக்கம். அப்பாவின் சஷ்டியப்த பூர்த்தியை ஒட்டி வீட்டில் பத்து நாள் சுந்தர காண்டம் படிப்பதற்காக பஞ்சாபகேசனை அழைத்திருந்தார். பஞ்சுவுக்கு பட்டு வேட்டி, அவர் மனைவிக்கு பட்டுப்புடவை என்று ஆரவாரமாய் தட்டில் வைத்து அதன் மீது ஆயிரத்தி ஒரு ரூபாய் தட்சிணையும் வைத்துக் கொடுத்து அழைத்து விட்டு வந்திருந்தார்.
பஞ்சுவுக்கு பரம சந்தோஷம். கல்யாணமாகி இரண்டு மாசம்தான் ஆகிறது அவருக்கு. கல்யாணத்திற்காக மாமனார் எடுத்துக் கொடுத்த பட்டு வேஷ்டியை விட உயர்தர வேட்டி. குமரேசன் போனதும் வேட்டியைத் தடவித் தடவிப் பார்த்து மகிழ்ந்தார். இப்படி இதுவரை யாரும் கொடுத்ததில்லை என்பதால் அவர் மனது பிரம்மித்துப் போயிருந்தது.
ஆனால் ரங்கநாயகியின் முகத்திலோ அத்தனை விலையுயர்ந்த புடவையைக் கண்டதும் பரவசத்திற்கு பதிலாக பயம்தான் தெரிந்தது. இது அன்பளிப்பா அல்லது ஆசை வலையா? அவள் கவலை கொண்டாள். பஞ்சுவை அவள் கைபிடித்து இரண்டு மாதம்தான் ஆகிறது. இந்த ஊருக்கு அவள் வந்ததிலிருந்து வாசற்பக்கம் கூட வந்ததில்லை. யாரையும் பழக்கமும் ஏற்படாத நிலையில் ஊருக்கு பெரிய மனிதர் வீடு என்று சொல்லி முதல் முறையா அவளை குமரேசனின் வீட்டுக்குத்தான் அழைத் துப் போனார் பஞ்சு. மிகப் பெரிய அந்த மாளிகையை மருண்ட விழிகளோடு பார்த்தவளை குமரேசனின் விழிகள் விழுங்கி விடுவது போல் பார்த்ததும் இரத்தம் சுண்டிப் போயிற்று அவளுக்கு. பஞ்சுவின் பின்னால் குருவிக் குஞ்சு போல் பதுங்கிக் கொண்டாள். உடம் பெல்லாம் பூரான்கள் ஊர்வது போலிருந்தது.
கல்யாணம்னாலே காத தூரம் ஒடறவன் எப்டிடா கல்யாணத்துக்கு ஒத்துக்கிட்டன்னு பார்த்தா இதானா காரணம்?
குமரேசனின் அம்மா ரங்கநாயகியைப் பார்த்தபடி சொன்னாள்.
"என்ன காரணம்? பஞ்சு கேட்டான்.
ஊர்ல. இருக்கற அழகையெல்லாம் உருட்டி எடுத்து பொண்ணாக்கி இந்தாடா பஞ்சு இதைக் கல்யாணம் பண்ணிக்கறயான்னு பிரம்மா அனுப்பி வெச்சா, விஸ்வா மித்திரர் விரதத்தை கை விடாம என்ன செய்வார்?
பஞ்சு வெட்கத்துடன் சிரித்தான். பெண்டாட்டியோடு பெரியவர்கள் காலில் விழுந்து வணங்கினான். தேய்ச்சு வெச்ச குத்து விளக்காட்டம் தகதகன்னு ஒரு பொண் டாட்டி கிடைச்சிருக்காடா பஞ்சு. இவளைக் கண்கலங்காம நல்லபடி வெச்சு குடித்தனம் நடத்து.
அந்த அம்மாள் அவர்களுக்கு தாம்பூலத்தட்டில் ஐநூறு ரூபாய் பணம் வைத்து வாழ்த்திக் கொடுத்தாள்.
அதற்கடுத்த இரண்டு நாள் கழித்து பஞ்சு தன் பிழைப்பைப் பார்க்க வெளியில் போனதும் சிறிது நேரம் கழித்து குமரேசன் அங்கு வந்தான்.
அவர் இல்ல
கதவுக்குப் பின்னால் இருந்தபடி சொன்னாள் அவள்.
அடடா... வெளில போய்ட்டாரா?
என்ன விஷயம்?
அன்னிக்கு வீட்டுக்கு வந்தப்பொ அம்மா இதைக் குடுக்க மறந்துட்டாளாம். என்னைக் குடுத்துட்டு வரச் சொன்னாங்க.
அப்டி வெச்சுட்டுப் போங்கோ.
அவன் எதையோ கூடத்து மேஜை மீது வைத்து விட்டுப் போனதும் அவள் வெளியில் வந்தாள். வெள்ளியில் ஒரு குங்குமச் சிமிழும், மீன் வடிவத்தில் ஒரு வெள்ளி மைக் கூடும் மேஜை மீது இருந்தது. அவள் அவற்றைக் கையில் எடுத்துப் பார்த்தபோது அவன் சட்டென்று உள்ளே வந்தான்.
அவள் திடுக்கிட்டுத் திரும்பினாள்.
என்னோட அங்கவஸ்திரத்தை விட்டுட்டேன்
. அவன் அவளை விழுங்குவதுபோல் பார்த்தபடி அங்க வஸ்திரத்தை எடுத்
தான்.
நீ ரொம்ப அழகார்க்க. ஆனா இந்தப் பஞ்சுவை எப்டி * கல்யாணம் பண்ணிக்கிட்டன்னுதான் புரியல. பெளர்ணமி சந்திரனுக்குப் பக்கத்துல சொறி நாய் மாதிரி. நீ பாவம் என்ன செய்வ? ஏழையா பொறந்துட்ட. இவன் தலையில உன்னைக் கட்டி வெச்சுட்டர். அப்டித்தானே?
எனக்கு உன்னைப் பார்த்தாத்தான் சொறி நாயாட்ட மிருக்கு. நான் கல்லெடுத்து எறியறதுக்குள்ள போய்டு.
அவள் அவன் முகத்தைக் கூடப் பார்க்காமல் சொல்லி விட்டு உள்ளே போனாள். அவன் முகம் சுருங்க வெளி யேறினான். அவள் அதற்குப் பிறகு அந்தக் குங்குமச் சிமிழையும் மைக்கூடையும் தொடவேயில்லை.
இந்த விஷயத்தை பஞ்சுவிடம் சொல்வதா வேண் டாமா என்ற குழப்பம் ஏற்பட்டது. ஏற்கனவே அவளைக் கல்யாணம் செய்து கொண்டதற்காகக் குற்ற உணர்ச்சியில் இருந்தவனிடம் இதையும் வேறு சொல்வானேன் என்று தோன்ற, அவள் அதை அவனிடம் சொல்லவில்லை.
"உன் அழகுக்கும் சமத்துக்கும் இன்னும் நல்ல நிலைமைல உள்ள யாரையாவது பார்த்து உங்கப்பா உன்னைக் கல்யாணம் பண்ணிக் கொடுத்திருக்கலாம். போயும் போயும் என்னை மாதிரி பஞ்சைப்பனாதை கிட்ட வந்து சேர்ந்தயே. முதல் நாள் ராத்திரியிலேயே பஞ்சு பேசின முதல் பேச்சு இதுதான். அவளைத் தொடுவதற்கே கூசிப் போய் ஒதுங்கிப் போனவனை சமாதானப்படுத்த அவளுக்கு ஒரு வாரமாயிற்று.
பகவான் யார்கிட்ட யாரைச் சேர்க்கணும்னு நினைக்கறானோ, அதன்படிதான் இங்க எல்லாம் நடக்கும். அழகுன்றது வெறும் தோற்றம் சம்பந்தப்பட்டதுன்னு நினைக்கல நான். அப்படி அது வெறும் தோற்றம்தான்னா, அது வயசானா போய்டும். நம்ம தோற்றம் எப்படி இருக்கணும்னு நாமளா முடிவு பண்ணிண்டு பொறக்க றோம்? அதுவும் கடவுளின் சித்தம்தானே. தோலும், நிறமும், கண்ணும், மூக்கும், பாரம்பரியம் தீர்மானிக்கற விஷயம். ஆனா மனசுங்கறது நம்ம கிட்ட இருக்கு. அதை அழகா வெச்சுக்கறதும் அவலட்சணமாக்கிக்கறதும் நம்ம கைலதான் இருக்கு. நீங்க உபன்யாசம் பண்றவர். எத்தனையோ விஷயங்கள் படிக்கறவர். உங்களுக்கு நான் சொல்லணுமா?
அவன் அவளது பேச்சில் குளிர்ந்து போனான். ஆனாலும் அவ்வப்போது அவனது குற்ற உணர்வு தலைகாட்டிக் கொண்டுதானிருந்தது. அதனால்தான் அவள் அந்த விஷயத்தை அவனிடம் சொல்லவில்லை. அதுவே கும ரேசனுக்கு கூடுதல் தைரியத்தைக் கொடுத்து விட்டதோ என்னவோ?
எதையாவது சாக்கு வைத்துக் கொண்டு அவன் வரும் போதும், போகும் போதும், தப்பித் தவறிக்கூட அவன் கண்ணில் பட்டு விடாமல் ஜாக்கிரதையாக இருந்தாள்.
அவனும் விக்கிரமாதித்தனுக்கு அண்ணனாய் மாறி விட்டாற்போல் விடா முயற்சியில் ஈடுபட்டிருந்தான்.
கஞ்சியோ கூழோ புருஷனோடு அதை சந்தோஷமாகக் குடித்து விட்டுக் கிடந்தால் போதும் என்று நினைத்தாள் அவள். அவனோ தன் பணத்தை வலையாய் வீசி அந்த அழகிய செம்மீனைப் பிடித்துத் தன் வீட்டு கட்டி லறையில் வைத்து அழகு பார்க்கத் துடித்தான்.
ராட்சத சுறா ஒன்றிற்கும் அழகிய தங்க மீனுக்கும் இடையே நடக்கும் இந்தப் போராட்டம் எதுவும் தெரியாமல் தங்கள் ஜீவனத்திற்கான போராட்டத்தில் ஈடுபட்டிருந் தான் பஞ்சு.
ஆயிரத்தி ஒரு ரூபாயை மொத்தமாகக் கண்ணால் கண்டதும் பஞ்சுவின் முகம் பிரம்மிப்பில் திணறியது.
என்ன சொல்லு. பெரிய மனுஷா பெரிய மனுஷாதான். பணம் கொட்டிக் கிடந்தாலும் குடுக்கறதுக்கு மனசு வேணுமே?
ரங்கநாயகி தனக்குள் சிரித்துக் கொண்டாள். பாரா யணத்துக்குப் போகும்போது நீயும் கூட வா, இந்தப் புடவையைக் கட்டிண்டா குமரேசனோட அம்மா சந்தோஷப்படுவா.
நான் வரல.
இல்ல. நீ வரணும். சஷ்டியப்த பூர்த்தி பண்ணிக்கறவா கிட்ட ஆசீர்வாதம் வாங்கிக்கணும்னுவா.
அவள் கவலையடைந்தாள். எப்படித் தப்பிப்பது என்று யோசித்தாள். வேறு வழியில்லாத நிலையில் வீட்டு விலக்கு என்ற கேடயத்தைக் கையிலெடுத்துக் கொண்டாள்.
என்ன இந்தவாட்டி சுருக்க ஒதுங்கிட்ட?
பஞ்சு சற்றே ஏமாற்றத்தோடு தான் மட்டும் புறப்பட்டுச் சென்றான்.
ரங்கநாயகி வரவில்லை என்ற விஷயம் வியப்பாக இல்லை குமரேசனுக்கு. அவன் எதிர்பார்த்ததுதான் அது. சொல்லப்போனால் அவள் வந்து விடக்கூடாதே என்று தான் அவன் கவலைப்பட்டான். பஞ்சு தனித்து வருவதைக் கண்டதும் அவன் முகம் மலர்ந்தது.
சுந்தர காண்ட பாராயணத்தைத் தொடர்ந்து ராமநாம பஜனையின் உச்சக்கட்ட பக்தியில் கூடியிருந்த கூட்டம் தன்னை மறந்திருக்க, குமரேசன் அங்கிருந்து மெல்ல நழுவினான். கொல்லைப் பக்கத்து குட்டைச் சுவரைத் தாண்டிக் குதித்துப் பின்பக்கமாக உள்ளே நுழைந்தான். பின் கதவு தாளிட்டிருந்தது. மெல்லத் தட்டினான். சற்று நேரத்தில் உள்ளே ரங்கநாயகி கண்ணாடி வளையல் சப்திக்க நடந்து வருவது கேட்டது.
கதவு விரிசல் வழியே கொல்லைப்புறம் நின்றிருந்த வனைப் பார்த்ததும் அவள் முகம் வெளிறியது.
அவன் மீண்டும் கதவை மெல்ல தட்டினான்.
நாந்தான் ரங்கநாயகி. கதவைத் திற.
நான் கத்தி கூப்பாடு போட்டு ஊரைக் கூப்பிடறதுக் குள்ள ஓடிப்போய்டு. சொல்லிட்டேன்.
உன்னைத் தங்கத்தால இழைக்கறேன். ராணி மாதிரி வாழ வேண்டியவ நீ எதுக்கு இப்படிக் கஷ்டப்படற? ஒரு வார்த்தை சொல்லு. இந்தப் பஞ்சுப் பயல இந்த ஊரை விட்டே விரட்டிடறேன். அப்புறம் இந்த ஊருக்கே நீதான் மகாராணி. உன் அழகுக்கு நீ இந்தப் பாழடைஞ்ச வீட்லயா இருக்கறது? எப்படிப்பட்ட ஒரு வாழ்க்கையை நான் உனக்குத் தரணும்னு ஆசைப்படறேன்னு புரிஞ்சுக்கயேன்.
யாராவது ஓடி வாங்களேன். கொல்லைப் பக்கம் திருடன்..!
ரங்கநாயகி குரலெடுத்து கத்த, அவன் பல்லைக் கடித்தபடி பதறி ஓடி சுவர் தாண்டி குதித்து இருளில் ஓடி மறைந்தான்.
பஞ்சு தானமாய்க் கொடுக்கப்பட்ட அரிசி, தானியங்கள், தட்சணை, ரவிக்கைத் துண்டு, பலகாரங்கள் அனைத்தையும் பையில் போட்டு எடுத்துக்கொண்டு புறப்பட்ட போது வியர்க்க விறுவிறுக்க எதிரில் வந்தான் குமரேசன்.
எங்கே போய்ட்டேள்? அம்மா உங்களைத் தேடிண் டிருந்தா. எல்லாம் நல்லபடியா முடிஞ்சுது. நான் புறப்படறேன்.
பஞ்சு அவனைத் தாண்டி நடந்தார்.
பஞ்சு ஒரு நிமிஷம்
குமரேசன் அவரை நிறுத்தினான்.
என்ன சொல்லுங்கோ.
நான் எங்க போய்ட்டு வரேன் தெரியுமா?
எங்கே?
உம்ம வீட்டுக்குத்தான்.
பஞ்சு எதற்கு என்பதுபோல் பார்த்தார்.
நான் போனதை விடு. உம் பொண்டாட்டி ஏன் உங்ககூட எங்க வீட்டுக்கு வரலைன்னு தெரியுமா?
பஞ்சு விழி சுருக்கிப் பார்த்தார். நான் அங்க போகணும்னுதான் அவ இங்க வரலை. சும்மா சொல்லப்படாதுடா பஞ்சு, என் ஆயுசுல இப்படி ஒரு சந்தோஷம் கிடைச்சதில்ல. பிராமண சாபம் எனக் கெதுக்குன்னுதான் உண்மையை உங்கிட்ட சொல்லிட் டேன். தப்பு எங்க மேல இல்ல பஞ்சு. தங்க குத்து விளக்கு அவ. அது இருக்க வேண்டிய இடத்துல இருக்க வேண் டாமா? குருட்டுப் பிச்சைக்காரன் கிட்ட ஜாதி வைரக்கல் கிடைச்சாப்பல! மகரிஷியக் கல்யாணம் பண்ணிண் டாலும் அகலிகை ஆசைப்பட்டது இந்திரன் மேல தானே. அது அவ தப்பில்லை. நான் சொல்றது புரிஞ்சுதா?
குமரேசன் மிக தந்திரமாய் பாலில் விஷம் கலந்து விட்ட குரூர திருப்தியோடு நடந்தான். தன்னை நிரா கரித்ததோடல்லாமல் திருடன் என்று கூப்பாடு போட்ட வளுக்கு இதுதான் தண்டனை என்று நினைத்து மகிழ்ந்தான்.
பஞ்சு இறுகின முகத்தோடு வீட்டுக்கு வந்தான்.
"வந்துட்டேளா...? ரங்கநாயகியின் குரலில் பதற்றம் கலந்திருந்தது. அவர் அவளையே உற்றுப் பார்த்தார்.
நம்பாத்து கொல்லைப்பக்கம் திருடன் வந்துட்டான்... நான் கத்தி கூப்பாடு போட்டதும் ஓடியே போய்ட்டான்.
அவன் எவ்வித பதற்றத்தையும் காட்டாமல் கையி லிருந்த பொருட்களை கூடத்தில் வைத்துவிட்டு வேறு வேட்டியை மாற்றிக்கொண்டு, புது வேட்டியை கசக்கி சுருட்டி நடு முற்றத்தில் எறிந்து விட்டு அவளைப் பார்த் தான.
ம்... அப்புறம்..?
என்னன்னா...? பதட்டமே இல்லாம கேக்கறேள். ஏதோ கதை கேக்கறாப்பல?
இன்னிக்கு பாராயணத்துல அகலிகை சாப விமோ சனம் பத்தி சொன்னேன். இந்த அகலிகையைப் பத்தி நீ என்ன நினைக்கற?
பாவம்!
வந்திருக்கறது புருஷனில்ல, அவன் ரூபத்துல இந்திரன்தான் வந்திருக்கான்னு அவளுக்குத் தெரியு மாமே.
அவளுக்கு அது தெரியுமோ தெரியாதான்னு அவளைக் கேட்டாத்தான் தெரியும். அவ கிடைக்க மாட்டான்ற நம்பிக்கைலதானே ஆளாளுக்கு ஒரு கதை விடறா. ஏதோ தானே அப்ப கூட இருந்து பாத்தாப்பல...
பத்து நிமிஷம் முன்னாடி நடக்கற விஷயமே கதையா திரியும்போது திரேதாயுகத்து சம்பவம் இஷ்டம்போல சொல்லப்படறதுல என்ன ஆச்சரியம்?
பஞ்சு இப்படிக் கேட்டதும் ரங்கநாயகி துணுக்குற்ற வாறு அவனை ஏறிட்டுப் பார்த்தாள். தன் மனசு பட படப்பதை மறைத்துக்கொள்ள வெகுவாகச் சிரமப் பட்டாள்.
நீங்க பேசறதே புரியல.
சரி சொல்லு. நம்பாத்து கொல்லைப்பக்கம் வந்தது திருடனா, தேவேந்திரனா?
ரங்கநாயகி நிலைகுலைந்து போனவளாய் அதிர்ச்சி யோடு அவனைப் பார்த்தாள். அவனுக்கு எப்படித் தெரிந்தது என்று புரியாமல் திகைத்தாள்.
தேவேந்திரன் இல்ல. தெருப்பொறுக்கி
என்றாள் ஈனஸ்வரத்தில்.
தேவேந்திரனார்ந்தாலும் நீச காரியம் பண்ணக் கிளம்பிட்டா அதானே பேரு. அப்பறம் சொல்லு.
ஏமார்றதுக்கு நான் அகலிகை இல்லையே. கத்தி கூப்பாடு போட்டு நாயை அடிச்சு விரட்டிட்டேன்.
அகலிகை ஏமாந்தான்னா சொல்ற? ஒரு ரிஷி பத்தினிக்கு புருஷனையும் மற்றவனையும் பிரிச்சறியற சக்தி கூடவா இருந்திருக்காது.
நான்தான் சொல்றேனே. புராணங்கள் சில விஷயத்தை புதிரோடதான் சொல்லியிருக்கும். அந்தப் புதிருக்கு விடை தேடற ஆர்வத்துல ஆளாளுக்கு ஒரு விடை கண்டு பிடிச்சு இதான் சரின்னுட்டு போவா. அகலிகை விவகாரம், வாலி வதம், கர்ண வதம், குருஷேத்ர யுத்தத்துல கிருஷ்ணர் பண்ணின தந்திரங்கள் எல்லாமே இப்படி மர்மங்கள் நிறைஞ்சதுதான். இப்ப எதுக்கு அதெல்லாம்? நான் அகலிகை இல்ல, நீங்க கெளதமனும் இல்ல.
பின்ன நாம யாரு?
நீங்க ராமன். நான் சீதை.
இந்த ஏழை ராமனைக் கல்யாணம் பண்ணிக்காம இருந்திருந்தா இந்நேரம் எந்த தேவேந்திரனுக்காவது இந்திராணியாகி நல்லபடியா இருந்திருப்ப இல்ல?
என்ன பேச்சு இது? இப்படிப் பேசற அளவுக்கு எந்த நாய் வந்து உங்களைச் சீண்டி விட்டுட்டுப் போச்சு?
அவன் பதில் சொல்லவில்லை.
நீங்க என்னை சந்தேகப்படறேளா?
நான் சந்தேகப்படறேனோங்கற சந்தேகம் உனக்கு வந்திருக்கா?
உங்களுக்குத் தெரியாத ராமாயணமா? சீதா பிராட்டி அயோத்தியை விட ஆரண்யத்துல ராமனோட இன்னும் சந்தோஷமா இருந்தாளாம். நானும் அப்படித்தான். இந்த ஏழை ராமன்தான் என் சந்தோஷம். இதுக்காக எத்தனை தேவேந்திரனை வேண்டாம்னு சொன்னேன் தெரியுமோ? எனக்கு பணக்காரியா வாழணுங்கற ஆசையும் இல்ல. லட்சியமும் இல்ல. எத்தனையோ பேர்க்கு முன்னால மரக்கட்டையா நின்ன தேகம், உங்க வலது காலை எடுத்து உள்ள வெச்சதுமே சிலிர்த்துப் போச்சு தெரியுமோ? இதுதான் என்னை உயிர்ப்பிக்கற மழைன்னு புரிஞ்சுபோச்சு. இந்த மரக்கட்டை, வெக்கம்னா என்னன்னு தெரிஞ்சுண்டது அன்னிக்குதான். அந்த கூடிணத்துலேர்ந்து நான்தான் சீதா, நீங்கதான் என் ராமன். எந்த அசோக வனத்துலயும் இந்த சீதா நெருப்பாதான் இருப்பா, சீதையை ஏமாத்த ராவன னும் ராமன் மாதிரி ரூபமெடுத்து வந்த கதை உங் களுக்குத் தெரியாதா? அந்த ரூபம் எடுத்ததுமே அவன் மனசும் சுத்தமாய்டுத்தாமே. சீதையை அடையற எண் ணமே தோணலையாமே. அதுதான் சீதாராமனோட சக்தி.
பஞ்சு அவளையே உற்றுப் பார்த்தான். எத்தனை நாளா நடக்கறது இந்தப் போராட்டம்.
கல்யாணமாகி வந்தன்னிலேர்ந்தே.
எங்கிட்ட சொல்லியிருக்கலாமே.
ஏற்கனவே குற்ற உணர்ச்சில புலம்பறவர்கிட்ட இதை வேற சொல்லி அதை இன்னும் அதிகமா கிளறுவா னேன்னுதான் சொல்லல. அது தப்புதான். அந்தத் தப்புக்கு என்னைத் தண்டிக்கறேளா ஏத்துக்க நானும் தயார்.
எப்படி தண்டிக்க..? கல்லாப் போய்டுன்னு சபிக்கட்டுமா?
இந்த வீட்ல வெச்சு கல்லா போன்னு சபிக்க முடியாதே.
ஏன்?
இந்த வீடு முழுக்க ராமர் பாதம் இல்ல வளைய வரும்! அந்தப் பாதம் பட்ட இந்தக் கல் மீண்டும் மீண்டும் சீதையாகி அவரைத் தழுவிக்குமே.
பஞ்சு அவளைத் தழுவிக் கொண்டான்.
நான் உன்னை சந்தேகப்படல. ஆனா இங்க வரும் போது மனசு முழுக்க குழப்பம் மண்டிக்கிடந்தது. உண்மையில் சாப விமோசனம் கிடைச்சது எனக்குத்தான் தெரியுமா?
விமோசனம் கிடைச்சுதா?
ம். குழப்பம் இல்ல. குற்ற உணர்வு இல்ல. இப்ப நான் சுத்தமான சீதாராமன்.
அப்படின்னா தேவேந்திரனுக்கு நன்றி சொல்ல வேண்டியதுதான்.
பஞ்சு அவளை விய்ப்போடு பார்த்தான். ஆமா.. சொல்லிடணும். நான் உன்னை முழுசும் தெரிஞ்சுக்க உதவி செய்திருக்கானே! அதுக்கொரு நன்றி சொல்லித் தான் ஆகணும்.
எனக்கு இன்னொரு தண்டனையும் வேணும்.
எதுக்கு.
பொய் சொன்னதுக்கு.
என்ன பொய்?
நான் வீட்டு விலக்குன்னு சொன்னதுக்கு அது பொய்.
அப்ப தண்டனை கொடுத்துட வேண்டியதுதான்.
என்ன தண்டனை
ரெண்டு தண்டனை ‘லவ குசா’!
ஆனா இந்த லவகுசா இந்த வீட்டுலதான் பொறப்பா. என் மடிலதான் வளருவா.
நான் ரெடி
அவள் அவனைக் காதலோடு பார்த்தபடி விளக்கை அணைத்தாள்.
உயிர்மை
மழை அற்புதமாகப் பெய்து கொண்டிருந்தது. அத் தனை பேரும் கண் இமைக்காமல் பார்த்தார்கள். இருண்ட வானம், அடர்த்தியான