Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Kaagitha Odangal
Kaagitha Odangal
Kaagitha Odangal
Ebook152 pages1 hour

Kaagitha Odangal

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

Vidhya Subramaniam born in 1957. She was introduced in Mangaiyar Malar through a story Mudhal Konal in 1982. She has written more than 100 short stories and novels. She has got lots of rewards in her 27 years of career. Rewards like Anandhachari Arakattalai Virudhu for her essay Thennang Kaatru, Tamilnadu government award for her Vanathil Oru Maan short stories, Bharat State Bank's first prize for her Aagayam Arugil Varum essays, Kovai Lilly Deivasigamani Virudhu for her Kanniley Anbirunthal short stories. Beyond the Frontier has her outstanding short stories which are translated to english. Anthology of Tamil Pulp Fiction also has her 2 short stories.
Languageதமிழ்
Release dateDec 12, 2016
ISBN6580105701649
Kaagitha Odangal

Read more from Vidhya Subramaniam

Related to Kaagitha Odangal

Related ebooks

Reviews for Kaagitha Odangal

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Kaagitha Odangal - Vidhya Subramaniam

    http://www.pustaka.co.in

    காகித ஒடங்கள்

    Kaagitha Odangal

    Author :

    வித்யா சுப்ரமணியம்

    Vidhya Subramaniam

    For other books

    http://www.pustaka.co.in/home/author/vidhya-subramaniam

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    அத்தியாயம் 1

    அத்தியாயம் 2

    அத்தியாயம் 3

    அத்தியாயம் 4

    அத்தியாயம் 5

    அத்தியாயம் 6

    அத்தியாயம் 7

    அத்தியாயம் 8

    அத்தியாயம் 9

    அத்தியாயம் 10

    அத்தியாயம் 11

    அத்தியாயம் 12

    அத்தியாயம் 13

    அத்தியாயம் 14

    அத்தியாயம் 15

    அத்தியாயம் 16

    அத்தியாயம் 17

    அத்தியாயம் 18

    அத்தியாயம் 19

    அத்தியாயம் 20

    அத்தியாயம் 21

    அத்தியாயம் 22

    அத்தியாயம் 23

    அத்தியாயம் 24

    அத்தியாயம் 25

    அத்தியாயம் 26

    அத்தியாயம் 27

    அத்தியாயம் 28

    அத்தியாயம் 29

    காகித ஒடங்கள்

    1

    சில்லுனு ஒரு லைம் ஜூஸ் போடுப்பா! தெருவோர ஜூஸ் கடையில் யாரோ சொல்ல, அதைக் கேட்டதும் வைஜயந்திக்கும் தாகமெடுத்தது! சில்லென்று லைம் ஜூஸ் குடிக்க ஆசை வந்தது, ஆனால் முடியாது.

    இன்று காலையிலிருந்து ஒரு சோப்கூட விற்கவில்லை; கொண்டு வந்தவையெல்லாம் அப்படியே இருக்கிறது. இதற்குக் கிடைக்கப்போகும் மண்டகப்படியை நினைத்ததும் ஜூஸ் குடிக்கும் ஆசை போனது!

    சூரியன் உச்சியிலிருந்து சற்று இறங்கியிருந்தது; முகம் கழுத்தெல்லாம் வியர்வை வழிந்தது. புடவைக்குள் கால்களும் வியர்த்துக் கசகசத்தது! வீட்டுக்குப் போனதும் குளிக்க வேண்டும்; ஆனால் தண்ணீர் இருக்காது.

    மேற்கு மாம்பலத்தில் தண்ணீர்ப் பஞ்சம். ஆறு குடித்தனங்கள் வசிக்கும் ஒண்டுக் குடித்தன ஸ்டோரில் இருப்பது ஒரே ஒரு கைப்பம்பு. அதுவும் போரிங். கார்ப்பரேஷன் தண்ணீருக்கு தெருக் கோடியில் ஒரு வீட்டுக்குப் போனால் குடிக்க மட்டும் ஒரு குடமோ ரெண்டு குடமோ கிடைக்கும். தவிர மெட்ரோ வாட்டர் லாரி ஒரு நாள் விட்டு ஒரு நாள் வரும்.

    வீட்டுக்கு ஒரு டோக்கன் கிடைக்கும்; நாலு குடம் தண்ணீர் பிடித்துக் கொள்ளலாம். சாமர்த்தியம் இருப்பவர்கள் ஏமாற்றி இன்னும் நாலு பிடித்துக் கொள்வார்கள்.

    வைஜயந்திதான் தண்ணீர் பிடிக்கப் போவாள். உனக்குச் சாமர்த்தியம் போதாது என்று வீட்டில் திட்டும் வாங்கிக் கொள்வாள்.

    அதுக்கெல்லாம் முகராசி இருக்கணும்! இவ முகத்தைப் பார்த்தால் இன்னொரு குடம் தண்ணி கூடக் கொடுக்கற மாதிரியா இருக்கு அக்கா இடக்காகப் பேசுவாள்; தம்பியும் தங்கையும் சிரிப்பார்கள்!

    வைஜயந்திக்கு அழுகை வரும்; ஆனால் அழ மாட்டாள். அழுதால் அதற்கு வேறு தனியே திட்டு வாங்க வேண்டும்.

    போரிங் பம்ப்பில் தண்ணீர் மெலிசாகத்தான் வரும்; ஒரு பக்கெட் அடிப்பதற்குள் நெஞ்சு வலிக்கும். விடியற்காலையில் அடித்தால் கொஞ்சம் தாராளமாகத் தண்ணீர் வரும். இரவெல்லாம் ஊறியிருப்பதால் இந்தத் தாராளம்!

    நாலு மணிக்கு வைஜயந்திதான் எழுந்து தண்ணீர் அடிப்பாள்; அண்டா குண்டான் பாத்திரம் பக்கெட்டுகள் எல்லா வற்றிலும் அடித்து வைத்துவிட்டுக் குளிப்பாள். யாரும் வந்து உதவவும் மாட்டார்கள், பாராட்டவும் மாட்டார்கள், நன்றி சொல்லவும் மாட்டார்கள். தண்ணீர் அடித்து வைப்பது என்னவோ இவளுடைய தலையாய கடமை என்பது அவர்கள் நினைப்பு!

    மாய்ந்து மாய்ந்து இவள் அடித்து வைத்திருக்கும் தண்ணீரெல்லாம் ஒரு மணி நேரத்தில் காலியாகிவிடும்! தம்பி பல் தேய்க்கவே அரை பக்கெட் காலி செய்வான் என்றால், அக்கா வெறும் ஜாக்கெட் அலசி ஒரு பக்கெட்டை வீணாக்குவாள்.

    தண்ணியைக் கொஞ்சம் பார்த்துச் செலவழிக்கக் கூடாதா என்று ஒரே ஒரு முறை வைஜயந்தி மிக மிக மெதுவாகத்தான் கேட்டாள். வீடு இரண்டு பட்டது. அழுகை, ஆர்ப்பாட்டம், மத்தியஸ்தம், தீர்ப்பு என்று மினி கோர்ட்டே நடந்தது.

    இந்த அரை வேக்காட்டு மூஞ்சிக்கே இத்தனை திமிர் இருந்தால் எனக்கு எவ்வளவு இருக்குமென்று பொங்கி முழங்கினாள் அக்கா.

    எது எப்படியோ சண்டைக்குப் பிறகு ஒரு மனதாகத் தீர்ப்புக் கிடைத்தது! ஆளுக்கு ஒரு நாள் அத்தனை தண்ணீரும் அடிக்க வேண்டுமென்று.

    குடும்பத்தின் மூத்த மகன் அப்பா இல்லாத குடும்பத்தின் தலைமை என்பதால் அண்ணனுக்கு மட்டும் விதி விலக்கு அளிக்கப்பட்டது! தீர்ப்புக்குப் பிறகு அக்கா தங்கை தம்பியின் துவேஷம் இன்னும் அதிகரித்தது; கிண்டல் கூடியது; இவள் முகம் பலவிதமாய் விமர்சிக்கப்பட்டது.

    கேட்டுக் கேட்டுக் காது மரத்துவிட்டது வைஜயந்திக்கு.

    ஏம்மா… சொல்லிக்கிட்டு வந்துட்டயா?

    யாரோ கத்த வைஜயந்தி சட்டென்று கலைந்து திரும்பினாள்; ஆட்டோ ஒன்று பிரேக் போட்டு நின்றது.

    மூஞ்சியைப் பாரு! போம்மா நகர்ந்து… ஆட்டோக்காரன் கத்திய கத்தலில் கடைக்காரர்களும் சென்று கொண்டிருந்தவர்களும் அவளை வெறித்து வினோதமாகப் பார்க்க, கூசிப் போனாள் அவள்.

    தலைகுனிந்து விறுவிறுவென்று சாலையைக் கடந்து வந்து நின்ற பஸ் ஒன்றில் ஏறிக் கொண்டாள். அயோத்தியா மண்டபத்தில் இறங்கி, கொஞ்சதூரம் நடந்து குறுகலான சந்து ஒன்றில் இருந்த வீட்டை அடைந்து சோர்வோடு பையை வைத்துவிட்டுக் குளிப்பதற்காகத் தண்ணீர் அடிக்கப் போனாள்.

    குளிக்கும்போது பாத்ரூமில் இருந்த ரசம் போன கண்ணாடியில் தன் முகத்தை ஒரு முறை பார்த்தவளுக்கு அழுகை வந்தது. இடது பக்க முகமும் கழுத்தும் வெந்து சுருங்கி முண்டும் முடிச்சுமாய்க் கோரமாகி இருந்தது.

    2

    வைஜயந்திக்கு மூன்று வயதில் அந்த விபத்து நடந்தது. விபத்து என்பதைவிட அவள் தாயின் அஜாக்கிரதை என்றுதான் சொல்ல வேண்டும்.

    கொதிக்கக் கொதிக்க அடுப்பில் வெந்நீர் வைத்து மேடையில் இறக்கி வைத்திருந்தாள். ஆறு மாதக் குழந்தையான பாலாஜியைக் குளிப்பாட்டுவதற்காக வைத்திருந்த வெந்நீர் அது. அரை பக்கெட் தண்ணியை அடுக்களைக்கே கொண்டு வந்து வெந்நீரை அதில் விட்டு விளாவியிருக்கலாம் அவள். சோம்பேறித்தனம்.

    இடுப்பில் கைக்குழந்தையோடு அலட்சியமாய் இடுக்கியில் வெந்நீர் அடுக்கைப் பற்றி எடுத்துக் கொண்டு வெளியில் வந்தாள். வராண்டாவில் உட்கார்ந்து விளையாடிக் கொண்டிருந்த வைஜயந்தியின் அருகில் வரும்போது அடுக்கு கனம் தாங்காது இடுக்கியின் நட் பட்டென்று உடைய அடுக்கு வெந்நீரும் சரிந்து வைஜயந்தியின் மீது கொட்ட, அந்நேரம் பார்த்து அவள் முகத்தை நிமிர்த்தித் தாயைப் பார்க்க... எல்லாம் ஒரு விநாடியில் முடிந்து விட்டது.

    குழந்தை தரையில் விழுந்த மீனாகத் துடித்தது. திராவகம் பட்டாற்போல் அந்த முகத்தின் மென்மையான தோல் வழன்று போயிற்று. நல்ல காலம் கண்ணுக்குக் கேடு இல்லை. ஆஸ்பத்திரிக்கு எடுத்துக் கொண்டு ஓடினார்கள். ஒரு மாத மாயிற்று சரியாக. அழகான அவளுடைய முகம் ஒரு பக்கம் தாடைப் பகுதியில் விகாரமாய் மாறாத வடுவாய் மாறி இருந்தது.

    தன் அழகு பெரிதும் குறைந்து போய் விட்டதைக் கூட உணரும் வயதில்லை அவளுக்கு. ஐந்து வயதில் அந்தச் சம்பவம் கூட மறந்து விட்டது. என் மூஞ்சி ஏம்மா இப்படி ஆச்சு என்று அம்மாவையே கேட்டாள்.

    நீ பிறக்கும்போதே அப்படித்தான் பிறந்தாய் என்று அம்மா பொய் சொன்னாள். ஆனால் குடித்தனக்காரர்கள் சொல்லி விட்டார்கள். எப்படி ஆயிற்றென்று.

    அம்மாவின்மீது கோபம் வரவில்லை. மாறாக நல்ல காலம் தம்பியின் மீது கொட்டாமல் இருந்தாளே… இல்லா விட்டால் ஆறு மாதக் குழந்தை செத்தே அல்லவா போயிருக்கும் என்றுதான் நினைத்து நிம்மதி அடைந்தாள். அவள் அழகாயிருந்ததற்கு ஒரே சாட்சி ஏதோ ஒரு கல்யாணத்தில் அம்மாவின் இடுப்பில் சுருண்ட முடியும் குண்டு முகமுமாகச் சிரித்துக் கொண்டிருக்கும் புகைப்படம்தான்.

    இந்த விபத்து நேராமல் இருந்திருந்தால் ஒருக்கால் வீட்டில் எல்லாரையும்விட இவள்தான் அழகாய் இருந்திருப்பாள். இப்படி மற்றவர்கள் இளக்காரம் செய்யும் நிலைமை ஏற்பட்டு இருக்காது.

    அம்மாவின் அஜாக்கிரதைக்கு இவள் கூனிக் குறுகித் தெருவில் நடக்க வேண்டியிருக்கிறது; பார்வைக் கணைகளைத் தாங்க வேண்டியிருக்கிறது. ஆனால் அம்மாவுக்கு எந்தவிதக்

    Enjoying the preview?
    Page 1 of 1