Kaadhal 24x7
4/5
()
About this ebook
Read more from Vidhya Subramaniam
Valampuri Sangu Rating: 0 out of 5 stars0 ratingsNilavum Malarum Rating: 5 out of 5 stars5/5Cauvery Karaiyil Oru Kaadhal Kathai Rating: 0 out of 5 stars0 ratingsThunbam Nergaiyil… Rating: 5 out of 5 stars5/5Pon Veenai Rating: 0 out of 5 stars0 ratingsAsaiye Alai Poley Rating: 0 out of 5 stars0 ratingsAnandha Alaigal Rating: 5 out of 5 stars5/5Mudhal Mazhai Rating: 0 out of 5 stars0 ratingsKaadhal Nilavey... Rating: 5 out of 5 stars5/5Vedikkai Manithargal…! Rating: 5 out of 5 stars5/5Varuvaal, Kaadhal Devathai… Rating: 3 out of 5 stars3/5Neruppu Nila Rating: 0 out of 5 stars0 ratingsOomathai Pookkal Rating: 4 out of 5 stars4/5Oomai Kuyil Rating: 5 out of 5 stars5/5Vittil Poochigal Rating: 5 out of 5 stars5/5Kopura Vasal Rating: 0 out of 5 stars0 ratingsKaagitha Odangal Rating: 0 out of 5 stars0 ratingsAgayam Ullavarai Rating: 0 out of 5 stars0 ratingsMalargale Malarungal Rating: 5 out of 5 stars5/5Aval Mugam Kaana Rating: 4 out of 5 stars4/5Enthanuyir Kaadhalaney! Rating: 5 out of 5 stars5/5
Related to Kaadhal 24x7
Related ebooks
Then Malli Poove... Rating: 2 out of 5 stars2/5Kalyana Oonjal Rating: 0 out of 5 stars0 ratingsInba Kaatru Veesattum... Rating: 5 out of 5 stars5/5Ennuyire... Rating: 5 out of 5 stars5/5Ullam Kuliruthadi Rating: 0 out of 5 stars0 ratingsAmma Kaadhalikkirean Please... Rating: 0 out of 5 stars0 ratingsAnbin Veli Rating: 3 out of 5 stars3/5Enathu Kavithai Neethan... Rating: 0 out of 5 stars0 ratingsEppozhuthum Un Soppanangal…! Rating: 4 out of 5 stars4/5Radhai Manadhil...! Rating: 0 out of 5 stars0 ratingsPuthu Vasantham Thedi Varum Rating: 0 out of 5 stars0 ratingsKannamochi Yenada? Rating: 0 out of 5 stars0 ratingsEn Ullam Kavarndha Devadhai Rating: 5 out of 5 stars5/5Manase Manase Rating: 5 out of 5 stars5/5Kalyaana Varam Rating: 5 out of 5 stars5/5Neruppu Nila Rating: 0 out of 5 stars0 ratingsKaadhal Rattinam Rating: 0 out of 5 stars0 ratingsKaadhalagik Kaninthu Rating: 3 out of 5 stars3/5Udhaya Geetham Rating: 0 out of 5 stars0 ratingsKuyil Koovum Solai! Rating: 0 out of 5 stars0 ratingsAnal Meley Panithuli Rating: 0 out of 5 stars0 ratingsSooriyakanthi Pookkal Rating: 5 out of 5 stars5/5Pala Naal Kanave! Rating: 0 out of 5 stars0 ratingsAnbin Vaasaliley... Rating: 0 out of 5 stars0 ratingsNilavu Thoongum Neram! Rating: 0 out of 5 stars0 ratingsBrammanin Thoorikai Rating: 0 out of 5 stars0 ratingsSembavala Kodi Neeye Rating: 0 out of 5 stars0 ratingsKaadhal Nilavey... Rating: 5 out of 5 stars5/5Thedi Vandha Kaadhal Rating: 0 out of 5 stars0 ratingsUn Ullam Naanariven Rating: 0 out of 5 stars0 ratings
Reviews for Kaadhal 24x7
1 rating0 reviews
Book preview
Kaadhal 24x7 - Vidhya Subramaniam
http://www.pustaka.co.in
காதல் 24x7
Kaadhal 24x7
Author :
வித்யா சுப்ரமணியம்
Vidhya Subramaniam
For other books
http://www.pustaka.co.in/home/author/vidhya-subramaniam
Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.
All other copyright © by Author.
All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.
பொருளடக்கம்
அத்தியாயம் 1
அத்தியாயம் 2
அத்தியாயம் 3
அத்தியாயம் 4
அத்தியாயம் 5
அத்தியாயம் 6
அத்தியாயம் 7
அத்தியாயம் 8
அத்தியாயம் 9
அத்தியாயம் 10
காதல் 24x7
1
முக்கால் நிலவு மிக வேகமாய் மேகங்களுக்கிடையே நகர்ந்து கொண்டிருந்தது. மொட்டை மாடியில் நின்றிருந்த சந்தோஷ் நிலவின் ஓட்டத்தை வியந்து பார்த்துக் கொண்டிருந்தான். எவ்வளவு முறை பார்த்தாலும் நிலவுதான் நகர்வதாகத் தெரிந்தது. அது நகராது. மேகம்தான் அதனைக் கடந்து செல்கிறது என்பது அறிவுபூர்வமாகத் தெரிந்தாலும் கண்கள் ஏமாறத்தான் செய்தன… இதுதான் மாயத் தோற்றம். நிறைய விஷயங்கள் இங்கே தவறாகவே உணரப்படுகின்றன.
அப்பாவுக்குக் கூட அவனது ஆசைகளும் லட்சியங்களும் வெறும் மாயமாக மட்டுமே தெரிகிறது. அவனால் அவற்றைச் சாதிக்க முடியாது என நினைக்கிறாரா? அல்லது அது தேவையில்லை என நினைக்கிறாரா எனப் புரியவில்லை. அவனைப்போல அவரும் நிறைய ஆசைகள் வைத்திருந்தார். அவற்றை அவன் மூலம் பூர்த்தி செய்து கொள்ள அவர் நினைத்ததுதான் அவனது வருத்தத்திற்குக் காரணம்.
அவன் மிகச் சிறந்த வழக்கறிஞராக வர வேண்டுமென்பது அவரது ஆசை என்றால், அவனுக்குள் இருப்பதோ ஐ பி எஸ் கனவு. அவன் கல்லூரிக்குள் கால் வைக்கத் தயாராகியிருக்கும் நிலையில் அவனது கனவும் அவரது ஆசையும் மோதிக் கொள்ள ஆரம்பித்திருந்தது. ஐந்தாம் வகுப்பு படிக்கிற வயதிலிருந்தே தன்னை ஒரு மிகச்சிறந்த ஐபிஎஸ் அதிகாரியாகத் தனக்குள் கண்டு ரசிப்பதில் அலாதி விருப்பம் அவனுக்கு. தன் விருப்பத்தை அவன் அவரிடம் சொன்ன போது அவரது முகம் சிறுத்துப் போயிற்று. அதெல்லாம் வேணாம். ஒழுங்கா பிஎல் சேர்ர வழியப் பாரு.
கண்டிப்பாகக் கூறினார் அவர். அவனும் கண்டிப்பாக இருந்தான். பிஏ சரித்திரம் படிப்பதென்று சிவில் சர்வீஸ் தேர்வில் சரித்திரத்தைத்தான் முதன்மைத் தாளாக எழுத விரும்பினான். அதனால் சரித்திரம்தான் டிகிரி படிப்பிலும் எடுப்பது என்பது அவன் ஏற்கெனவே எடுத்திருந்த முடிவு. இது அப்பாவுக்குப் பிடிக்கவில்லை. நேற்றுவரை தன் பேச்சைக் கேட்டு வளர்ந்தவன் இன்று மறுப்பதா என்று ஆத்திரப்பட்டார். தன்னை அவன் அவமதித்து விட்டதாகக் கருதினார்.
அவரை அவமதிக்கும் எண்ணம் என்றுமே அவனுக்கு இருந்ததில்லை. சொல்லப் போனால் அவர் மீது நிறையவே அன்பும் மரியாதையும் உண்டு அவனுக்கு. அப்பா கண்டிப்பானவர்தான். அதேநேரம் அவன் மீது மிகுந்த அன்புடையவர். நிறைய நல்லொழுக்கங்களை அவனுக்குக் கற்றுத் தந்தவர். அதிகம் அவர் பேசமாட்டார். அபூர்வமாய்த்தான் சிரிப்பார். மிக மிக நேர்மையானவர். படாடோபமில்லாதவர். எதற்கும் யாரையும் எதிர்பாராது, தன் காரியங்களைத் தானே செய்து கொள்பவர். நல்ல வேலையில் இருந்தாலும் கூட, அனாவசியமாய்ச் செலவுகள் செய்வதை விரும்ப மாட்டார். நல்ல பள்ளியில் அவனைப் படிக்க வைப்பதை முக்கியம் என்று நினைத்தாலும் கூட மற்ற எந்த ஆடம்பர சுகத்திற்கும் அவன் அடிமையாகி விடக் கூடாது என்பதில் கவனமாயிருந்தார். என்ன கஷ்டம் என்றாலும் தினமும்தானே அவனைப் பஸ்ஸில் அழைத்துச் சென்று பள்ளியில் விட்டு விட்டுச் செல்வார்.
அத்தனை பேரும் அங்கே காரிலும், ஸ்கூட்டரிலும், ஆட்டோ ரிக்ஷாக்களிலும் வந்திறங்கும்போது ஒரு நாயைப்போல அப்பா கையைப் பிடித்துக் கொண்டு நடந்து சென்றது இவன் மட்டும்தான்.
நாம மட்டும் ஏம்பா நடந்து வரோம்? நம்ம கிட்ட ஏன் கார் இல்ல?
ஒரு நாள் இவன் கேட்ட போது அப்பா புன்னகைத்தார்.
உன்னை நல்ல ஸ்கூல்ல சேர்த்திருக்கேன். நீ நல்லா படிச்சா பின்னாடி நல்லா சம்பாதிச்சு நீயே ஒரு கார் வாங்கலாம். எதுவுமே தூரத்துல இருந்தாதான் எட்டிப் பிடிக்கணுங்கற முயற்சியும் ஆர்வமும் ஏற்படும். கார் வாங்கணும்னு ஆசைப் பட்டா நிறைய நட. கால் வலிக்க நட. அப்பதான் அதற்கான முயற்சி செய்வ. புரிஞ்சுதா?
அவனுக்குப் பாதி புரிந்தது. அதே நேரம் அப்பா அதற்கான முயற்சியில் ஏன் ஈடுபடவில்லை என்ற சந்தேகமும் ஏற்பட, அவன் அடுத்த கேள்வியைக் கேட்டான்.
நீங்க நல்லாதானேப்பா படிச்சீங்க. நல்லாதானே சம்பாதிக்கறீங்க. அப்பறம் நீங்க ஏன் கார் வாங்கல?
எனக்குக் கார் தேவையில்லன்னுதான் வாங்கல.
ஏன் தேவையில்லை.
எங்கிட்டதான் டூ வீலர் இருக்கே.
எங்க இருக்கு? நாம பஸ்லதானே ஸ்கூலுக்கு வரோம்.
இதோ இருக்கு பார்.
அவர் தன் இரண்டு கால்களையும் காட்டினார். இதான் என் டூ வீலர். இது நல்லார்க்கறவரை நடப்பேன். ரொம்ப துாரமா போகணுமா? அரசாங்கம் பஸ் விட்ருக்கு, ரயில் விட்ருக்கு. அதுல போய்ட்டுப் போறது. இவ்வளவு வசதி இருக்கும்போது எனக்கெதுக்கு கார்னுதான் நான் வாங்கல.
நான் நிச்சயம் கார் வாங்குவேன்.
குட். அப்பொ நல்லாப் படி. வெறும் ஏட்டுப்படிப்பு மட்டும் போதாது. பொது அறிவையும் வளர்த்துக்க.. என்னால கார்தான் வாங்கித்தரமுடியாது. ஆனா புக்ஸ் எவ்வளவு வேணா வாங்கித் தரத் தயாரா இருக்கேன். என்ன புக் வேணா கேளு. வாங்கித் தரேன்.
அப்பாதான் அவனுக்குப் புத்தகம் படிக்கும் ஆர்வத்தை ஏற்படுத்தினார். நிறைய லைப்ரரிகளில் மெம்பர்ஷிப் எடுத்துக் கொடுத்தார்.
அவன் படித்த அதே பள்ளியில்தான் அம்மாவும்