Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

லாக்டவுன் காலமே நீ வாழி: Rali & Thamizh Inbam
லாக்டவுன் காலமே நீ வாழி: Rali & Thamizh Inbam
லாக்டவுன் காலமே நீ வாழி: Rali & Thamizh Inbam
Ebook84 pages18 minutes

லாக்டவுன் காலமே நீ வாழி: Rali & Thamizh Inbam

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

2020ம் வருஷம் நாட்டில் பரவிய கோவிட்-19 வைரஸ் காரணமாக தமிழக அரசு பிறப்பித்த 'லாக்டவுன்' காலத்தில் சில கவிஞர்களாய் எழுதப் பட்ட கவிதைகளின் தொகுப்பு இது. 

 

இவைகளில் வெகு சிலவே அந்த நோயைப் பற்றி உள்ளன. பெரும்பாலான கவிதைகள் பக்தி இலக்கியத்தைச் சார்ந்து, பாட்டுடைத் தலைவனாம் இறைவனைப் பல்வேறு வடிவங்களில் பாட்டிடை வைத்துப் படைக்கப்பட்ட கவிதைகளே.

பிரபஞ்சத்தைப் படைத்தது இறையருள். அந்த இறைவனை அடையவும் அறியவும் கவிதை ஒரு கருவி. கவிதை உணர்வுகளின் வடிகாலாகவும் அமைவது உன்னத அனுபவம். கவிஞனுக்கும் அவன் கற்பனைச் சிறகுகளுக்கும் வானமே எல்லையெனில் மிகையாகாது.

 

வசன கவிதைகள் அவசர அவசரமாக வாரி இறைப்பவர்களின் நடுவில் இந்நூல் தம் உள்ளுணர்ந்து மன உணர்ச்சிகளின் வெளிப்பாடாய் கவிஞர்கள் குழு வடிவமைத்த கவிதைத் தொகுப்பாக அமைந்திருக்கிறது.

 

'எமக்குத் தொழில் கவிதை' எனப் புறப்பட்டிருக்கும் இத்தமிழின்பக் குழுவின் தொடர் முயற்சிக்கு இப்பதிவு சான்று.

 

உங்களுக்காக சில துளிகள்:

 

ராலி:
மாதத்தில் பாவையாம் நோன்பேற்றுக் கண்ணனைக்
காதலித்து ஒன்றானாள் கோதை.

 

இராசகோபாலன்:
படங்கொண்ட பாம்பணியும் பித்தனென் உள்ளத்
திடங்கொண்டு வீற்ற சிவன்.

 

சந்திரசேகரன்:
அயர்ந்த அரி எழுந்திருக்க அரனவன் ஆடல் கண்டு
பெயர்ந்தது அரவு நிலமே பதஞ்சலி யாக வந்து

 

சுரேஷ்:
பாலுறை வெண்ணையை விரும்பியே யுண்பவன்
பாலுறை வெண்ணையாய் பரம்பொருள் உரைத்தவன்

 

கல்யாணராமன்:
கூற்றின்வாய் வீழ்ந்தோரை குனிந்தெடுத்து
மாற்றுயிர் தந்த மறவரை மருத்துவரை

 

உதய கிருத்திகா:
கெட்ட பலன் நல்ல பலன் 
கட்டம் சொல்லித் தருவ தில்லை

Languageதமிழ்
Release dateSep 15, 2020
ISBN9781393697893
லாக்டவுன் காலமே நீ வாழி: Rali & Thamizh Inbam
Author

Rali Panchanatham

ஸ்ரீரங்கம். அமெரிக்கா. நங்கநல்லூர்.  ஐ.டி. + தமிழ்க் கவிதை + ஹாலிவுட் Srirangam. Dindigul. Madurai. IIT Madras. Boston. Los Angeles. Nanganallur. Business of I.T. Outsourcing & Soft Skills Training. Like: Nammoor Sappadu. Italian & Mexican food. Hollywood. Carnatic Music. Tamil Poetry. Chinnanjchiru Kiliye !

Read more from Rali Panchanatham

Related to லாக்டவுன் காலமே நீ வாழி

Related ebooks

Related categories

Reviews for லாக்டவுன் காலமே நீ வாழி

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    லாக்டவுன் காலமே நீ வாழி - Rali Panchanatham

    ‘ராலி & தமிழின்பம்’ வெளியீடு

    Published by:

    Rali & Thamizh Inbam

    22/26 Third Main Road

    Nanganallur Chennai 600061

    All rights reserved

    பொருளடக்கம்

    முன்னுரை

    அணிந்துரை

    கவிதை வாழ்த்து

    S K சந்த்ரசேகரன் (SKC)

    ராலி

    தெக்காலக் கவிதைகள்

    அன்பே சிவம்

    வெண்பாக்கள்

    B K ராஜகோபாலன் (BKR)

    K நாகராஜன் (KN)

    S சுரேஷ்

    V கல்யாணராமன் (VKR)

    சாந்தி பாலசுப்ரமணியன்

    S. ராமமூர்த்தி (பித்தன்)

    உதய கிருத்திகா (RK)

    கவிதைப் போக்குவரத்து

    படித்ததில் பிடித்தது

    முன்னுரை

    வாழிய செந்தமிழ் வாழ்க நற்றமிழர்

    வாழிய பாரத மணித்திரு நாடு

    மரபுக் கவிதைக்குரிய இலக்கணம், சந்தங்கள் இவற்றிற்கு முன்னுரிமை இன்றி, பொருள் வெளிப்பாட்டுக்கு முன்னுரிமை தந்து எழுதப்படும் தற்காலக் கவிதைகளுக்கு நடுவே, கருத்தை வெளிப்படுத்துவதை முடிந்தவரை இலக்கண விதிகளுக்குட்பட்டு, சந்தம், ஓசைநயம் இவற்றுடன் சேர்ந்த படைப்புகளாகச் செய்யும் ஆவலால் விளைந்ததே இக்கவிதைத் தொகுப்பு.

    தமிழ் இலக்கியத்தில், பக்தி இலக்கியத்தைச் சார்ந்து, பாட்டுடைத் தலைவனாம் இறைவனை பல்வேறு வடிவங்களில் பாட்டிடை வைத்துப் படைக்கப்பட்ட கவிதைகள் பெருமளவில் இங்கு இடம் பெற்றுள்ளன.

    இவை தவிர, இயற்கை, நாட்டு நடப்பு போன்ற கருத்துக்களைக் கொண்ட ஓரிரு  பொதுக் கவிதைகளும் இத்தொகுப்பில் இடம் பெற்றுள்ளதைக் காணலாம்.

    தமிழின்பம் நுகர்வதற்கு அழைக்கிறோம்.

    ––––––––

    நன்றி.

    ராலி & தமிழின்பக் குழு.

    ––––––––

    குறிப்பு:

    எங்கள் வாசகராகிய உங்களிடம், கவிதையின்பால் ஓர் நாட்டத்தை உருவாக்கி, தங்களையும் ஓர் நல்ல கவி ஆக்கத் தூண்டுவதையே எங்கள் குறிக்கோளாகக் கொண்டுள்ளோம்.

    எங்கள் குழுவின் WhatsApp-பில் இடம் பெறும் ‘ராலி & தமிழின்பம்’ என்னும் எங்கள் தமிழ்க் கவிதை Group-ல் இருந்து 2020 ஜூலை மாதம் வெளிவந்த கவிதைகளைத் தொகுத்தாய்ந்து தந்திருக்கிறோம்.

    - ராலி & தமிழின்பக் குழுவினர்.

    கவிதை வாழ்த்து

    உள்ளத் துள்ளது கவிதை – இன்ப உருவெடுப்பது கவிதை

    தெள்ளத் தெளிந்த தமிழில் – உண்மை தெரிந்துரைப்பது கவிதை

    ஓலை எரியும் தாள் எரியும் உள்ளத் தெழுதி வைத்து நிதம்

    காலை மாலை ஓதுகவி கனவில் வெந்து கரிந்திடுமோ?

    கவிமணி தேசிக விநாயகம் பிள்ளை

    S K சந்த்ரசேகரன் (SKC)

    அள்ளி அள்ளி உண்ண உண்ண எமது தமிழ் இனியது

    ‘யாதும் ஊரே யாவரும் கேளிர்’

    ––––––––

    காசோலையில் பயணித்து பின்பு ஈசனைப் பாடத் துணிந்தவர். ஓய்வு பெற்ற வங்கி உதவிப்

    Enjoying the preview?
    Page 1 of 1