Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Rali & Thamizh Inbam - Mar 2017
Rali & Thamizh Inbam - Mar 2017
Rali & Thamizh Inbam - Mar 2017
Ebook57 pages20 minutes

Rali & Thamizh Inbam - Mar 2017

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

உரைநடையை மூன்று நான்கு வார்த்தைகளாக உடைத்து ஒரு சந்தமும் இல்லாது 'கவிதை' என்ற பெயரில் ஏதேதோ வந்து விழுகிற இந்தக் காலத்தில் ஒரு விந்தை இந்த நூல். 

 

A rare collection of original & traditional Tamil poetry, mostly religious and some social, written in accordance with the rules of Tamil prosody.

 

உங்களுக்காக சில துளிகள்  (Excerpts):

 

" நிலவுலகில் நான்படும் பாட்டை நினைந்து
  உலகழிக்கும் அன்பே சிவம் "

 

" நதியில் புனலின் நடுவில் சுழியாய்
  விதியின் முடிவில் வினவும் வினைதான் "

 

" ஆலத்தை உட்கொண்ட கண்டத்தால் ஆவலுடன் 
  ஆலவாய்ப் பிட்டையும் உண்டனையே  "

 

" ஆருக்கும் தொல்லையின்றி ஆனந்த மாயாட
  ஆரூரன் தேர்ந்தான் சுடுகாட்டை  "

 

" கண்டதைத் தின்று கழுத்தில் இறங்க அவன்
  உண்டதை நிறுத்தி உயிர் காத்த அன்னை "

 

" வெள்ளநீர் தன்முடி கொள்ளுவான் தென்திசை
  குள்ளமுனி தன்மணம் காணவே பண்ணுவான் "

 

" நட்டுவன் இன்றியாடும் ஈசனை எண்ணினால்
  விட்டுவிடும் பாசபந்தம் அன்றோ. "

Languageதமிழ்
PublisherRali
Release dateJul 9, 2020
ISBN9781393586388
Rali & Thamizh Inbam - Mar 2017
Author

S Suresh

S. Suresh   பொருள் விளங்கு சொல் தேடும் யதார்த்த கவிஞர் Avid reader of Tamil literature born in a family with Tamil literary background, with interest in street plays and theatre. Designed and published small magazines. Has a unique style of communicating views on issues.

Read more from S Suresh

Related to Rali & Thamizh Inbam - Mar 2017

Related ebooks

Related categories

Reviews for Rali & Thamizh Inbam - Mar 2017

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Rali & Thamizh Inbam - Mar 2017 - S Suresh

    Published by:

    Rali & Thamizh Inbam

    22/26 Third Main Road

    Nanganallur Chennai 600061

    All rights reserved

    முன்னுரை

    வாழிய செந்தமிழ் வாழ்க நற்றமிழர்

    வாழிய பாரத மணித்திரு நாடு

    மரபுக் கவிதைக்குரிய இலக்கணம், சந்தங்கள் இவற்றிற்கு முன்னுரிமை இன்றி, பொருள் வெளிப்பாட்டுக்கு முன்னுரிமை தந்து எழுதப்படும் தற்காலக் கவிதைகளுக்கு நடுவே, கருத்தை வெளிப்படுத்துவதை முடிந்தவரை இலக்கண விதிகளுக்குட்பட்டு, சந்தம், ஓசைநயம் இவற்றுடன் சேர்ந்த படைப்புகளாகச் செய்யும் ஆவலால் விளைந்ததே இக்கவிதைத் தொகுப்பு.

    தமிழ் இலக்கியத்தில், பக்தி இலக்கியத்தைச் சார்ந்து, பாட்டுடைத் தலைவனாம் இறைவனை பல்வேறு வடிவங்களில் பாட்டிடை வைத்துப் படைக்கப்பட்ட கவிதைகள் பெருமளவில் இங்கு இடம் பெற்றுள்ளன.

    இவை தவிர, இயற்கை, நாட்டு நடப்பு போன்ற கருத்துக்களைக் கொண்ட ஓரிரு  பொதுக் கவிதைகளும் இத்தொகுப்பில் இடம் பெற்றுள்ளதைக் காணலாம்.

    தமிழின்பம் நுகர்வதற்கு அழைக்கிறோம்.

    ––––––––

    நன்றி.

    தமிழின்பக் குழு.

    ––––––––

    இப்பதிப்பில் கீழ்க்கண்டோரின் கவிதைகள் இடம் பெற்றுள்ளன.

    S. சுரேஷ்

    P. இராமலிங்கம் (ராலி)

    B. K. இராசகோபாலன் (BKR)

    K. ரவீந்திரன்

    G. ராமசுப்ரமணியன் (GRS)

    S. K. சந்திரசேகரன் (SKC)

    V. கல்யாணராமன் (VKR)

    S. இராமமூர்த்தி (பித்தன்)

    ––––––––

    குறிப்பு:

    WhatsApp-பில் இடம் பெறும் எங்கள் தமிழ்க் கவிதை Group-ல் இருந்து

    2017  மார்ச் மாதம் வெளிவந்த கவிதைகளை அப்படியே எடுத்துக் கீழே தந்திருக்கிறோம். பெரிதாக format எதுவும் பண்ணவில்லை

    அணிந்துரை

    KJ

    ––––––––

    சுந்தரத் தமிழில்  ஒவ்வொரு மாதமும்  தனிக் கவிதைகளை நல்ல கற்பனை வளத்துடன் ராலியும் அன்பர்களும் எழுதியதைத் தொகுத்து வெளியிடும் இம்மாதப் பகுதியில் வெண்பாக்கள், சந்தக்கவிகள், ஈரடி குறள்கள் என பல களத்தில் இயற்றி இருக்கிறார்கள்.

    உடுக்கை ஒலி பற்றிய அன்பர்களின் தொடர் கவிதைகள் அந்த ஈசனையும் மகிழ்விக்கும். பக்தியும் வேதாந்தமும் கலந்த ஒரு தொடர்.

    அன்பே சிவமா பௌத்தமா என்ற விவாதம் வித்தியாசமான பார்வைகள்

    அன்பு சகோதர்களான திரு. சந்திரசேகர் & திரு சுரேஷ் அவர்களின்  சந்தங்களுடன் உள்ள பல கவிதைகள் இனிமை சேர்க்கிறது.

    இரண்டு வெண்பா வேந்தர்கள் திரு. ராமலிங்கம் & திரு. ராசகோபாலன் விவாதங்கள் கவிதை எழுத முயற்சிப்பவருக்கு ஒரு பாடமாக இருக்கும்.

    திரு. ராமலிங்கத்தின் கவிதைகள் அமர்க்களம். பேத்தி பிறந்த ஆனந்தமோ?

    வாருங்கள் படைப்புக்களை ரசிப்போம்.

    ––––––––

    குறிப்பு:

    KJ என்ற பெயரில் எழுதும் திரு K. நாகராஜன் ஓய்வு பெற்ற வங்கி அதிகாரி. மகா பெரியவர் & ரமண மகரிஷியிடம் மிகுந்த பக்தி கொண்டவர். வேதாந்தத்தில் அதிக ஈடுபாடு உண்டு. தமிழ் மொழி மீதும் தமிழ் கவிதைகளிலும் மீது நாட்டம் உண்டு. கண்ணதாசனின் பெரும் ரசிகர்.

    MAR 2017

    3/3/17

    Enjoying the preview?
    Page 1 of 1