Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Rali & Thamizh Inbam - Oct 2016
Rali & Thamizh Inbam - Oct 2016
Rali & Thamizh Inbam - Oct 2016
Ebook95 pages24 minutes

Rali & Thamizh Inbam - Oct 2016

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

உரைநடையை மூன்று நான்கு வார்த்தைகளாக உடைத்து ஒரு சந்தமும் இல்லாது 'கவிதை' என்ற பெயரில் ஏதேதோ வந்து விழுகிற இந்தக் காலத்தில் ஒரு விந்தை இந்த நூல். 

 

A rare collection of original & traditional Tamil poetry, mostly religious and some social, written in accordance with the rules of Tamil prosody.

 

உங்களுக்காக சில துளிகள்  (Excerpts):

 

" தேடினான் சித்தார்த்தன் ஓடினான் வாழ்முழுதும்
  கூடினான் குழந்தை பெற்றான் "

 

" இல்லானை இல்லாளும் எந்நாளும் வேண்டாள் என
  எல்லாம் உள்ளானை உலகு உவந்தேத்தும் "

 

" இல்லாரை வையம் தூற்றிடினும் யாருக்கும்
  இல்லாது போமோ இறையருள் "

 

" இல்லானை இல்லானென் றேசும் பலகோடி
  பல்லா யிரமுள்ளா னையுமேசும் வையகம் "

 

" பொய்யாம் இரவில்நாம் காணும் கனவுபோல்
  பொய்யாம் பகலில் உலகு "

 

" ஐயம் உடையார்க்கு இவ்வுலகும் மேலுலகும்
  உய்ப்பதோர் இன்பமும் இல் "

 

" துண்டுதுண்டாய் என்னுடலை வெட்டிப்பார்த் துக்கண்டு
  கொண்டேன்நான் வேறு பொருள் "

Languageதமிழ்
Release dateJul 8, 2020
ISBN9781393391333
Rali & Thamizh Inbam - Oct 2016
Author

S Ramamurthy

குடந்தையைச் சேர்ந்தவர். பித்தன் என்னும் பெயரில் பக்திநெறித் தமிழ்க் கவிதை எழுதுபவர். Native of Kumbakonam, retired from government service. Has passion for spirituality and Tamil poetry. Under a nickname ‘Pithan’, his prosodic rendering ranges from lifestyle to nature and glory of the almighty.

Read more from S Ramamurthy

Related to Rali & Thamizh Inbam - Oct 2016

Related ebooks

Related categories

Reviews for Rali & Thamizh Inbam - Oct 2016

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Rali & Thamizh Inbam - Oct 2016 - S Ramamurthy

    Published by:

    Rali & Thamizh Inbam

    22/26 Third Main Road

    Nanganallur Chennai 600061

    All rights reserved

    முன்னுரை

    வாழிய செந்தமிழ் வாழ்க நற்றமிழர்

    வாழிய பாரத மணித்திரு நாடு

    மரபுக் கவிதைக்குரிய இலக்கணம், சந்தங்கள் இவற்றிற்கு முன்னுரிமை இன்றி, பொருள் வெளிப்பாட்டுக்கு முன்னுரிமை தந்து எழுதப்படும் தற்காலக் கவிதைகளுக்கு நடுவே, கருத்தை வெளிப்படுத்துவதை முடிந்தவரை இலக்கண விதிகளுக்குட்பட்டு, சந்தம், ஓசைநயம் இவற்றுடன் சேர்ந்த படைப்புகளாகச் செய்யும் ஆவலால் விளைந்ததே இக்கவிதைத் தொகுப்பு.

    தமிழ் இலக்கியத்தில், பக்தி இலக்கியத்தைச் சார்ந்து, பாட்டுடைத் தலைவனாம் இறைவனை பல்வேறு வடிவங்களில் பாட்டிடை வைத்துப் படைக்கப்பட்ட கவிதைகள் பெருமளவில் இங்கு இடம் பெற்றுள்ளன.

    இவை தவிர, இயற்கை, நாட்டு நடப்பு போன்ற கருத்துக்களைக் கொண்ட ஓரிரு  பொதுக் கவிதைகளும் இத்தொகுப்பில் இடம் பெற்றுள்ளதைக் காணலாம்.

    தமிழின்பம் நுகர்வதற்கு அழைக்கிறோம்.

    ––––––––

    நன்றி.

    தமிழின்பக் குழு.

    ––––––––

    இப்பதிப்பில் கீழ்க்கண்டோரின் கவிதைகள் இடம் பெற்றுள்ளன.

    S. இராமமூர்த்தி (பித்தன்)

    P. இராமலிங்கம் (ராலி) 

    B. K. இராசகோபாலன் (BKR)

    S. K. சந்திரசேகரன் (SKC)

    V. கல்யாணராமன் (VKR)

    M. கோபிநாத்

    K. முத்துமணி

    குறிப்பு:

    WhatsApp-பில் இடம் பெறும் எங்கள் தமிழ்க் கவிதை Group-ல் இருந்து

    2016  அக்டோபர் மாதம் வெளிவந்த கவிதைகளை அப்படியே எடுத்துக் கீழே தந்திருக்கிறோம். பெரிதாக format எதுவும் பண்ணவில்லை

    அணிந்துரை

    கோ. ரமேஷ்

    இந்த தொகுப்பு மிகவும் பிரமிப்பாக உள்ளது. திரு. ராமலிங்கத்தின் பன்முக திறன் வெளிப்படும் அற்புத படைப்பு.

    குறளடியில் விதுர நீதி, மனு நீதி, பகவத் கீதை, ராமகிருஷ்ண பரமஹம்சரின் பொன் மொழிகள், சமஸ்கிருதத்தில் உயர்ந்த வாக்கியங்கள்,  உபநிடதம், ஆன்றோர் உபதேசம் என பல ஆன்மீக கருத்துக்களை எளிய தமிழில் பருகத் தந்திருப்பது அவர் தமிழ் கவிதைகளின் வித்தியாசமான முயற்சியையும் திறன் பட வெளியிட்டதில் அவருக்கு உள்ள  ஆளுமையும் வியக்க வைக்கின்றது.

    வெண்பாக்களில்  அறுமூத்து நாயன்மார்களை பற்றி எழுதிய தனிக்கவிதைகள் அருமை. ‘எக்காலம்’ தத்துவக்கவிதைகளும் உண்டு.

    திரு. ராசகோபாலனும்  அவரது தனி முத்திரையுடன் உயர்ந்த ஆன்மீக கருத்துக்களை பொதிந்த வெண்பாக்களை படைத்துள்ளார்.

    திரு. ராமமூர்த்தி அவர்கள் யதார்த்த கவிதைகளைப் பிரவாகமாக தந்துள்ளார். முருகனின் ஆறுமுகம் ஈசனை வரிசைப்படுத்திய கவிதை என கற்பனை வளமான கவிதைகள் இடம் பெற்றிருக்கின்றது.

    சந்தக்கவி சந்திரசேகர் கவிதைகள் கண்ணன், வள்ளி கணவன் பற்றிய கவிதைகள், நடுத்தர வர்க்க வாழ்வின் யதார்த்த நிலை கவிதைகள் இனிமை சேர்க்கின்றது.

    தீப ஒளிநாளாம் தீபாவளி வாழ்த்துக்களைக் கவிதையால் வாழ்த்த ராலியின் வேண்டுகோளுக்கு இணங்கி தமிழ் அன்பர்கள் அனைவரும் இனிய கவிதைகளை தந்து அமர்க்களப்படுத்தி  இருக்கிறார்கள்.

    மொத்ததில் ஓர் இனிய தீபாவளி சிறப்பு வெளியீடு.

    குறிப்பு:

    கோ. ரமேஷ் என்ற பெயரில் எழுதும் திரு K. நாகராஜன் ஓய்வு பெற்ற வங்கி அதிகாரி. மகா பெரியவர் & ரமண மகரிஷியிடம் மிகுந்த பக்தி கொண்டவர். வேதாந்தத்தில் அதிக ஈடுபாடு உண்டு. தமிழ் மொழி மீதும் தமிழ் கவிதைகளிலும் மீது நாட்டம் உண்டு. கண்ணதாசனின் பெரும் ரசிகர்.

    OCT 2016

    10/1/16 - V. Kalyanaraman: @ராலி @பித்தன்

    உங்களது கவிதை முயற்சிகளில் தொடர்ந்து மெருகேற்றம் தெரிகிறது. குறிப்பாக பித்தன் அடிப்படையில் கவியுள்ளம் படைத்தவர் ஆதலின்,அவரது

    Enjoying the preview?
    Page 1 of 1