Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Rali & Thamizh Inbam - Apr 2017
Rali & Thamizh Inbam - Apr 2017
Rali & Thamizh Inbam - Apr 2017
Ebook87 pages24 minutes

Rali & Thamizh Inbam - Apr 2017

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

உரைநடையை மூன்று நான்கு வார்த்தைகளாக உடைத்து ஒரு சந்தமும் இல்லாது 'கவிதை' என்ற பெயரில் ஏதேதோ வந்து விழுகிற இந்தக் காலத்தில் ஒரு விந்தை இந்த நூல். 

 

A rare collection of original & traditional Tamil poetry, mostly religious and some social, written in accordance with the rules of Tamil prosody.

 

உங்களுக்காக சில துளிகள்  (Excerpts):

 

" ஓங்கினான் மாலயன்
      கண்டுவக்க தேவகங்கை
  தாங்கினான் தன்சடையில் "

 

" அஞ்செழுத்தான் நெஞ்சினில்
      வஞ்சமின்றி தஞ்சமென்றார்
  நெஞ்சடைந்தான் நெஞ்சடையா
      நஞ்சடைந்தான் " 

 

" அண்டபிரான் முப்புரம்
      வென்றபிரான் வேதங்கள்
  விண்டபிரான் தீத்தூணாய்
      நின்றபிரான் " 

 

" பார்ப்பவன் அன்பினால் என்னையும் தன்னிடத்
  தீர்ப்பவன் தீயவன் நல்லன் எனாதெனை
  ஏற்பவன் "

 

" ஓயா கால வெளியில் ஓடி
  ஓயும் வாழ்வின் ஓசை " 

 

" ஆலடியில் அமர்ந்தவன்
  நாலடிக் குறுமுனி
  போலடியோர் துதித்தவன் " 

 

" பாதுகை பரதன் பறிக்க
  மாதினை மானும் மயக்க " 

 

" கேட்கத் தந்தான் பாதுகையை அசுரன்
  கேட்டே கொடுத்தான் அடைக்கலமே " 

Languageதமிழ்
PublisherRali
Release dateJul 9, 2020
ISBN9781393141471
Rali & Thamizh Inbam - Apr 2017
Author

B K Rajagopalan

விஞ்சுபுகழ்த் தமிழ் கொண்டு, விடையேறுமீசனை வெண்பாவால் வாழ்த்திக் கவிபாட வந்த கட்டுமானப் பொறியாளர்(பணி ஓய்வு) Born in Madurai, structural design engineer by profession - retired. Fascinated by Tamil poetry from childhood, kept writing verses off and on. Passionate in writing Venpa form. Loves to write poetry expressing positivity.

Read more from B K Rajagopalan

Related to Rali & Thamizh Inbam - Apr 2017

Related ebooks

Related categories

Reviews for Rali & Thamizh Inbam - Apr 2017

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Rali & Thamizh Inbam - Apr 2017 - B K Rajagopalan

    Published by:

    Rali & Thamizh Inbam

    22/26 Third Main Road

    Nanganallur Chennai 600061

    All rights reserved

    முன்னுரை

    வாழிய செந்தமிழ் வாழ்க நற்றமிழர்

    வாழிய பாரத மணித்திரு நாடு

    மரபுக் கவிதைக்குரிய இலக்கணம், சந்தங்கள் இவற்றிற்கு முன்னுரிமை இன்றி, பொருள் வெளிப்பாட்டுக்கு முன்னுரிமை தந்து எழுதப்படும் தற்காலக் கவிதைகளுக்கு நடுவே, கருத்தை வெளிப்படுத்துவதை முடிந்தவரை இலக்கண விதிகளுக்குட்பட்டு, சந்தம், ஓசைநயம் இவற்றுடன் சேர்ந்த படைப்புகளாகச் செய்யும் ஆவலால் விளைந்ததே இக்கவிதைத் தொகுப்பு.

    தமிழ் இலக்கியத்தில், பக்தி இலக்கியத்தைச் சார்ந்து, பாட்டுடைத் தலைவனாம் இறைவனை பல்வேறு வடிவங்களில் பாட்டிடை வைத்துப் படைக்கப்பட்ட கவிதைகள் பெருமளவில் இங்கு இடம் பெற்றுள்ளன.

    இவை தவிர, இயற்கை, நாட்டு நடப்பு போன்ற கருத்துக்களைக் கொண்ட ஓரிரு  பொதுக் கவிதைகளும் இத்தொகுப்பில் இடம் பெற்றுள்ளதைக் காணலாம்.

    தமிழின்பம் நுகர்வதற்கு அழைக்கிறோம்.

    ––––––––

    நன்றி.

    தமிழின்பக் குழு.

    ––––––––

    இப்பதிப்பில் கீழ்க்கண்டோரின் கவிதைகள் இடம் பெற்றுள்ளன.

    திரு. ராமலிங்கம்

    திரு. ராசகோபாலன்

    திரு சந்திரசேகர்

    திரு சுரேஷ்

    திரு. ராமமூர்த்தி

    திரு. ராமசுப்ரமணியன்

    திரு. கல்யாணராமன்

    குறிப்பு:

    WhatsApp-பில் இடம் பெறும் எங்கள் தமிழ்க் கவிதை Group-ல் இருந்து

    2017  ஏப்ரல் மாதம் வெளிவந்த கவிதைகளை அப்படியே எடுத்துக் கீழே தந்திருக்கிறோம். பெரிதாக format எதுவும் பண்ணவில்லை

    அணிந்துரை

    KJ

    ––––––––

    கடும் கோடையில் கவிதை மழை பொழிந்த தமிழ் அன்பர்களுக்கு வாழ்த்துக்கள். எதை எழுதுவது, எதை விடுவது என்று ஒரு கணம் அயரவைத்த அற்புத படைப்புகள்.

    ராலியின் கவிதைகள் மகுடம் போன்று அமைந்துள்ளது. பல படைப்புகள் ஒன்றை ஒன்று விஞ்சும் அளவில் அமைந்துள்ளது. திரு. ராசகோபாலன் கொடுத்த அடுக்குத்தொடர் கவிஞர் என்ற பெயர் இவருக்கு பொருந்தும்.  அவரும் ராலிக்கு சளைக்காத பல கவிதை முத்துக்களை தந்துள்ளார். இருவரின் கவிதை இலக்கண உரையாடல் புதிதாக எழுத வருபவர்களுக்கு ஒரு பாடமாக இருக்கும்.

    திரு. ராசகோபால் எப்பொழுதும் ஈசனின் வழக்குரைஞர்.  வேலனுக்கு திருமணம் செய்வித்த ஈசன் அவன் அண்ணனை மறந்துவிட்டார் என்ற குற்றச்சாட்டினை வழக்குரைஞர் கவிதையால் வாதாடுவது அழகு

    திருமணத்திற்கு சிவனை வேண்டினால் சுந்தருக்கு இரு தாரம் முடித்த அவனை எப்படி வேண்டுவது என நயமான கற்பனை.

    திரு சந்திரசேகர் & திரு. சுரேஷ் இருவரின் கவிதைகள் எப்பொழுதும் போல ஒரு தனி விருந்து படைக்கிறது.

    திருவாரூர் தியாகராஜன் பெயர் சிறப்புடன் அதியமான் ஔவையார் பாடல்  ஒப்பீடு ரசிக்க வைக்கிறது.

    திரு. ராமமூர்த்தி நகைச்சுவை கலந்த கவிதையும்., திரு. ராமசுப்ரமணியன் கவிதைகளும் இடம் பெற்றிருக்கிறது

    வழக்கம் போல அடுக்களை தலைவிகள், தள்ளாத வயது பற்றிய கவிதைகள் நகைச்சுவை விருந்து படைக்கின்றன.

    முடிவாக,

    தள்ளலும் கொள்ளலும் வேண்டா ஒருமொந்தை

    கள்ளையுள் தள்ளி விடின்

    என்ற ராலியின் கள் அதிகார குறள் போல உள்ளிருக்கும் கவிதையின் சொல் பொருள் நிறைந்த படைப்புகள் ஆனந்தக் கள்ளை தரும் என்பது நிச்சயம்,

    குறிப்பு:

    KJ என்ற பெயரில் எழுதும் திரு K. நாகராஜன் ஓய்வு பெற்ற வங்கி அதிகாரி. மகா பெரியவர் & ரமண மகரிஷியிடம் மிகுந்த பக்தி கொண்டவர். வேதாந்தத்தில் அதிக ஈடுபாடு உண்டு. தமிழ் மொழி மீதும் தமிழ் கவிதைகளிலும் மீது நாட்டம் உண்டு. கண்ணதாசனின் பெரும் ரசிகர்.

    APR 2017

    4/1/17 - Rali Panchanatham: ராலியின் வெண்பா #306:

    Enjoying the preview?
    Page 1 of 1