Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Rali & Thamizh Inbam - Jul 2019: Rali & Thamizh Inbam
Rali & Thamizh Inbam - Jul 2019: Rali & Thamizh Inbam
Rali & Thamizh Inbam - Jul 2019: Rali & Thamizh Inbam
Ebook50 pages17 minutes

Rali & Thamizh Inbam - Jul 2019: Rali & Thamizh Inbam

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

உரைநடையை மூன்று நான்கு வார்த்தைகளாக உடைத்து ஒரு சந்தமும் இல்லாது 'கவிதை' என்ற பெயரில் ஏதேதோ வந்து விழுகிற இந்தக் காலத்தில் ஒரு விந்தை இந்த நூல். 

 

A rare collection of original & traditional Tamil poetry, mostly religious and some social, written in accordance with the rules of Tamil prosody.

 

உங்களுக்காக சில துளிகள்  (Excerpts):

 

" பொங்கிவரும் கங்கையெனும் 
  நங்கையுடன் சடையில்
  திங்கள்பிறை சூடும் சங்கரன் "

 

" அரியவன் வேதனொடு தேடினும் காணா
  அரியவன் ஆழ்நீல கண்டன் " 

 

" பெண்பால் இனத்தவன் ஆண்பால் இனத்தவன்
  வெண்பால் கடல்நஞ்சு உண்டவொரு ஆண்டவன் "

 

" அலையான் இலையான் 
  நிலையாள் சிலையான்
  தலையான் துலையான் அரங்கன் "

 

" சங்கைகைக் கொண்டானும் தங்கைகை கொண்டானும்
  எங்கணும் தேட அகப்படான் "

 

" சேயிவனைப் பேணும் சேலை பச்சைக்காரி
  தாயவள் புகழ் பாட தங்கத் தமிழுண்டு "

 

" பெற்றவர் அற்றவன் கொற்றவை கொற்றவன்
  பற்றிலார் பற்றிடும் பற்றவன் " 

 

" மனமே வினையின் வித்தென்றால் 
  வினையின் விளைவே பிறப்பாகும் "

 

" நீராடை போர்த்தி நிலமகளும் நாண
   வாராது வந்த மாமழையும் காண் "

 

Languageதமிழ்
Release dateJul 13, 2020
ISBN9781393940210
Rali & Thamizh Inbam - Jul 2019: Rali & Thamizh Inbam
Author

Rali Panchanatham

ஸ்ரீரங்கம். அமெரிக்கா. நங்கநல்லூர்.  ஐ.டி. + தமிழ்க் கவிதை + ஹாலிவுட் Srirangam. Dindigul. Madurai. IIT Madras. Boston. Los Angeles. Nanganallur. Business of I.T. Outsourcing & Soft Skills Training. Like: Nammoor Sappadu. Italian & Mexican food. Hollywood. Carnatic Music. Tamil Poetry. Chinnanjchiru Kiliye !

Read more from Rali Panchanatham

Related to Rali & Thamizh Inbam - Jul 2019

Related ebooks

Related categories

Reviews for Rali & Thamizh Inbam - Jul 2019

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Rali & Thamizh Inbam - Jul 2019 - Rali Panchanatham

    Published by:

    Rali & Thamizh Inbam

    22/26 Third Main Road

    Nanganallur Chennai 600061

    All rights reserved

    முன்னுரை

    வாழிய செந்தமிழ் வாழ்க நற்றமிழர்

    வாழிய பாரத மணித்திரு நாடு

    மரபுக் கவிதைக்குரிய இலக்கணம், சந்தங்கள் இவற்றிற்கு முன்னுரிமை இன்றி, பொருள் வெளிப்பாட்டுக்கு முன்னுரிமை தந்து எழுதப்படும் தற்காலக் கவிதைகளுக்கு நடுவே, கருத்தை வெளிப்படுத்துவதை முடிந்தவரை இலக்கண விதிகளுக்குட்பட்டு, சந்தம், ஓசைநயம் இவற்றுடன் சேர்ந்த படைப்புகளாகச் செய்யும் ஆவலால் விளைந்ததே இக்கவிதைத் தொகுப்பு.

    தமிழ் இலக்கியத்தில், பக்தி இலக்கியத்தைச் சார்ந்து, பாட்டுடைத் தலைவனாம் இறைவனை பல்வேறு வடிவங்களில் பாட்டிடை வைத்துப் படைக்கப்பட்ட கவிதைகள் பெருமளவில் இங்கு இடம் பெற்றுள்ளன.

    இவை தவிர, இயற்கை, நாட்டு நடப்பு போன்ற கருத்துக்களைக் கொண்ட ஓரிரு  பொதுக் கவிதைகளும் இத்தொகுப்பில் இடம் பெற்றுள்ளதைக் காணலாம்.

    தமிழின்பம் நுகர்வதற்கு அழைக்கிறோம்.

    ––––––––

    நன்றி.

    தமிழின்பக் குழு.

    ––––––––

    இப்பதிப்பில் கீழ்க்கண்டோரின் கவிதைகள் இடம் பெற்றுள்ளன.

    S. K. சந்திரசேகரன் (SKC)

    B. K. இராசகோபாலன் (BKR)

    P. இராமலிங்கம் (ராலி)

    K. நாகராஜன் (KN)

    V. கல்யாணராமன் (VKR)

    குறிப்பு:

    WhatsApp-பில் இடம் பெறும் எங்கள் தமிழ்க் கவிதை Group-ல் இருந்து

    2019 ஜூலை மாதம் வெளிவந்த கவிதைகளை அப்படியே எடுத்துக் கீழே தந்திருக்கிறோம். பெரிதாக format எதுவும் பண்ணவில்லை.

    அணிந்துரை

    சதாசிவக்கவி

    உலகளவில் மிகவும் அதிகம் வாசிக்கப்பட்ட இலக்கியத் திறனாய்வு கட்டுரை ஒன்றில், டி.எஸ்.எலியட் கூறுகிறார் (Tradition and Individual Talent - T.S.Eliot) - சமகாலத்து இலக்கியகர்தாக்கள் அனைவரும் ஏதோ ஒரு விதத்தில் கடந்த கால இலக்கியத்தின் தாக்கத்திற்கு ஆளாகிறார்கள்.  அந்த நோக்கில் ஒத்துப் போவதும் மறுதளிப்பதும் ஒன்றுதான்.

    இங்கே எழுதியிருக்கும் கவிஞர்களின் பங்களிப்பை பார்க்கும்போது, அது தேவாரம், திருவாசகம், திவ்யப்பிரபந்தம் போன்ற பெரும் பக்தி இலக்கியங்களின் நீட்சியாகவே கொள்ளலாம். புராணங்களின் மேற்கோள்கள் என்ன, திருமந்திரத்தின் சாயல் என்ன இப்படி சம்பிரதாயங்களிருந்து வழுவாமல் படைக்கப்பட்ட கவிதைகள். பொருள் சுத்தம் அப்படி இருக்கச் சொல்லும் சம்பிரதாயமாகத்தானே இருக்கும்? பிறகு எதுகை மோனைக்கும் சீர், தளை கட்டமைப்புக்கும் கேட்பானேன்?

    புதுக்கவிதையில் நம்பிக்கையில்லாது ஒரு குறையென்றாலும் அவர்களது தமிழ்ப்பற்றும் பாண்டித்தியமும் பெரிய அளவில் இக்குறையை ஈடுசெய்கின்றன.

    குறிப்பு:

    சதாசிவக்கவி அவர்கள் ஒரு இலக்கிய ஈடுபாடு

    Enjoying the preview?
    Page 1 of 1