Rali & Thamizh Inbam - Jun 2020: Rali & Thamizh Inbam
()
About this ebook
உரைநடையை மூன்று நான்கு வார்த்தைகளாக உடைத்து ஒரு சந்தமும் இல்லாது 'கவிதை' என்ற பெயரில் ஏதேதோ வந்து விழுகிற இந்தக் காலத்தில் ஒரு விந்தை இந்த நூல்.
A rare collection of original & traditional Tamil poetry, mostly religious and some social, written in accordance with the rules of Tamil prosody.
உங்களுக்காக சில துளிகள் (Excerpts):
"கொஞ்சுது கொஞ்சுது சதங்கை யொலி
கெஞ்சுது பாதம் பார்ப் போர்க்கு
அஞ்சுது அஞ்சுது அதைக் கேட்டு
நஞ்சுண்டோன் கை யுடுக்கை யுமே"
"சாயத்தில் சீயத்தான் ஆகியொரு
சேயைத்தா ன் காத்தருளும்
மாயத்தான்"
'அரியறியாப் பாதன் கரியுரிகொள் தேகன்
நரிபரியாய் மாற்றிடும் நாதன் – எரியால்'
'விரிசடை கங்கை நதிநீரும் தண்ணே
திரிகிற வெண்மதி வீசொளி தண்ணே'
'மானானான் பின்னோடும் காகுத்தன் தங்கையின்
கோனானான் தேனான சொல்லாள் உயிரானான்'
'ஏழிரண் டாண்டு ஏதும் உண்ணாது
ஏழிரண் டாண்டு இமை மூடாது
ஏழிரண்டில் பெண் ஏறெடுத்தும் காணாது'
'இரக்கம் கொண்டே ஈசன் வரம் தர
அரக்கரை அழித்தே அயர்ந்தான் அரங்கன்'
"கொண்டனன் அக்கினி இருகரத் தழலென
கொண்டனன் நிலமதைத் தானாடுங் களமென
கொண்டதேன் பரவெளி சிதம்பர இரகசியம்"
'மருதமரம் சாய்த்து நிதிக்கோன் இளவல்
இருவரின் சாபம் முக்தியுறத் தாயிடம்
விரும்பிக் கட்டுண்ட குறும்புக் கண்ணன்'
Rali Panchanatham
ஸ்ரீரங்கம். அமெரிக்கா. நங்கநல்லூர். ஐ.டி. + தமிழ்க் கவிதை + ஹாலிவுட் Srirangam. Dindigul. Madurai. IIT Madras. Boston. Los Angeles. Nanganallur. Business of I.T. Outsourcing & Soft Skills Training. Like: Nammoor Sappadu. Italian & Mexican food. Hollywood. Carnatic Music. Tamil Poetry. Chinnanjchiru Kiliye !
Read more from Rali Panchanatham
Rali & Thamizh Inbam - Oct 2018: Rali & Thamizh Inbam Rating: 0 out of 5 stars0 ratingsRali & Thamizh Inbam - Nov 2019: Rali & Thamizh Inbam Rating: 0 out of 5 stars0 ratingsRali & Thamizh Inbam - Mar 2017 Rating: 0 out of 5 stars0 ratingsRali & Thamizh Inbam - Nov 2016 Rating: 0 out of 5 stars0 ratingsRali & Thamizh Inbam - Oct 2017 Rating: 0 out of 5 stars0 ratingsRali & Thamizh Inbam - Feb 2019 Rating: 0 out of 5 stars0 ratingsRali & Thamizh Inbam - Jun 2016 Rating: 0 out of 5 stars0 ratingsராலி & தமிழின்பம் - Dec 2017 Rating: 0 out of 5 stars0 ratingsRali & Thamizh Inbam - Dec 2018: Rali & Thamizh Inbam Rating: 0 out of 5 stars0 ratingsRali & Thamizh Inbam - Sep 2018 Rating: 0 out of 5 stars0 ratingsRali & Thamizh Inbam - Aug 2016 Rating: 0 out of 5 stars0 ratingsராலி & தமிழின்பம் - Jun 2019: Rali & Thamizh Inbam Rating: 0 out of 5 stars0 ratingsRali & Thamizh Inbam - Dec 2016 Rating: 0 out of 5 stars0 ratingsராலி & தமிழின்பம் - Dec 2019 Rating: 0 out of 5 stars0 ratingsலாக்டவுன் காலமே நீ வாழி: Rali & Thamizh Inbam Rating: 0 out of 5 stars0 ratingsRali & Thamizh Inbam - Sep 2017 Rating: 0 out of 5 stars0 ratingsRali & Thamizh Inbam - Mar 2020: Rali & Thamizh Inbam Rating: 0 out of 5 stars0 ratingsRali & Thamizh Inbam - Sep 2019: Rali & Thamizh Inbam Rating: 0 out of 5 stars0 ratingsRali & Thamizh Inbam - Nov 2017 Rating: 0 out of 5 stars0 ratingsRali & Thamizh Inbam - Oct 2019: Rali & Thamizh Inbam Rating: 0 out of 5 stars0 ratingsRali & Thamizh Inbam - Mar 2018: Rali & Thamizh Inbam Rating: 0 out of 5 stars0 ratingsRali & Thamizh Inbam - Apr 2017 Rating: 0 out of 5 stars0 ratingsRali & Thamizh Inbam - Apr 2020: Rali & Thamizh Inbam Rating: 0 out of 5 stars0 ratingsRali & Thamizh Inbam - Dec 2015 Rating: 0 out of 5 stars0 ratingsராலி & தமிழின்பம் - ஜனவரி 2019 Rating: 0 out of 5 stars0 ratingsRali & Thamizh Inbam - Feb 2020 Rating: 0 out of 5 stars0 ratingsராலி & தமிழின்பம் - Jul 2018 Rating: 0 out of 5 stars0 ratings
Related to Rali & Thamizh Inbam - Jun 2020
Related ebooks
Rali & Thamizh Inbam - Jan 2018 Rating: 0 out of 5 stars0 ratingsRali & Thamizh Inbam - Apr 2017 Rating: 0 out of 5 stars0 ratingsRali & Thamizh Inbam - Feb 2020 Rating: 0 out of 5 stars0 ratingsRali & Thamizh Inbam - Jul 2017 Rating: 0 out of 5 stars0 ratingsRali & Thamizh Inbam - Mar 2016 Rating: 0 out of 5 stars0 ratingsRali & Thamizh Inbam - Sep 2016 Rating: 0 out of 5 stars0 ratingsRali & Thamizh Inbam - Aug 2016 Rating: 0 out of 5 stars0 ratingsRali & Thamizh Inbam - May 2020: Rali & Thamizh Inbam Rating: 0 out of 5 stars0 ratingsManam Kamazhum Thirumaraigal Rating: 0 out of 5 stars0 ratingsKaalathai Vendra Kavignan Kannadhasan Rating: 0 out of 5 stars0 ratingsRali & Thamizh Inbam - Sep 2017 Rating: 0 out of 5 stars0 ratingsRali & Thamizh Inbam - Jan 2020: Rali & Thamizh Inbam Rating: 0 out of 5 stars0 ratingsYaathumaagiye… Rating: 0 out of 5 stars0 ratingsKaadhal Muthaleedu Rating: 0 out of 5 stars0 ratingsராலி & தமிழின்பம் - ஜனவரி 2019 Rating: 0 out of 5 stars0 ratingsIlanthamizharukkul Pavendar Rating: 0 out of 5 stars0 ratingsValaiyil Vandhe Alaiyil Midhakkum Kavithaigal Rating: 0 out of 5 stars0 ratingsPuththaga Poonga Rating: 0 out of 5 stars0 ratingsSinthaiyil Thulirthavai Rating: 0 out of 5 stars0 ratingsUna(r)vu Thiruvizha Rating: 0 out of 5 stars0 ratingsRasamadevi Rating: 0 out of 5 stars0 ratingsKaadhalum Veeramum Rating: 0 out of 5 stars0 ratingsRali & Thamizh Inbam - Oct 2016 Rating: 0 out of 5 stars0 ratingsRali & Thamizh Inbam - Jul 2016 Rating: 0 out of 5 stars0 ratingsRali & Thamizh Inbam - Jul 2019: Rali & Thamizh Inbam Rating: 0 out of 5 stars0 ratings12288 Kaadhal Vakaigalil Ilakkiyam Tharum Sila Kaatchigal! Rating: 0 out of 5 stars0 ratingsIravin Katharal Rating: 0 out of 5 stars0 ratingsராலி & தமிழின்பம் - Dec 2017 Rating: 0 out of 5 stars0 ratingsNinaivin Aazhiyil Alaiyum Kayalkal Rating: 0 out of 5 stars0 ratingsKilai Nila Rating: 0 out of 5 stars0 ratings
Related categories
Reviews for Rali & Thamizh Inbam - Jun 2020
0 ratings0 reviews
Book preview
Rali & Thamizh Inbam - Jun 2020 - Rali Panchanatham
Published by:
Rali & Thamizh Inbam
22/26 Third Main Road
Nanganallur Chennai 600061
All rights reserved
முன்னுரை
வாழிய செந்தமிழ் வாழ்க நற்றமிழர்
வாழிய பாரத மணித்திரு நாடு
மரபுக் கவிதைக்குரிய இலக்கணம், சந்தங்கள் இவற்றிற்கு முன்னுரிமை இன்றி, பொருள் வெளிப்பாட்டுக்கு முன்னுரிமை தந்து எழுதப்படும் தற்காலக் கவிதைகளுக்கு நடுவே, கருத்தை வெளிப்படுத்துவதை முடிந்தவரை இலக்கண விதிகளுக்குட்பட்டு, சந்தம், ஓசைநயம் இவற்றுடன் சேர்ந்த படைப்புகளாகச் செய்யும் ஆவலால் விளைந்ததே இக்கவிதைத் தொகுப்பு.
தமிழ் இலக்கியத்தில், பக்தி இலக்கியத்தைச் சார்ந்து, பாட்டுடைத் தலைவனாம் இறைவனை பல்வேறு வடிவங்களில் பாட்டிடை வைத்துப் படைக்கப்பட்ட கவிதைகள் பெருமளவில் இங்கு இடம் பெற்றுள்ளன.
இவை தவிர, இயற்கை, நாட்டு நடப்பு போன்ற கருத்துக்களைக் கொண்ட ஓரிரு பொதுக் கவிதைகளும் இத்தொகுப்பில் இடம் பெற்றுள்ளதைக் காணலாம்.
தமிழின்பம் நுகர்வதற்கு அழைக்கிறோம்.
––––––––
நன்றி.
தமிழின்பக் குழு.
––––––––
இப்பதிப்பில் கீழ்க்கண்டோரின் கவிதைகள் இடம் பெற்றுள்ளன.
P. இராமலிங்கம் (ராலி)
B. K. இராசகோபாலன் (BKR)
S. K. சந்திரசேகரன் (SKC)
K. நாகராஜன் (KN)
S. சுரேஷ்
V. கல்யாணராமன் (VKR)
B. சாந்தி
S. இராமமூர்த்தி (பித்தன்)
குறிப்பு:
WhatsApp-பில் இடம் பெறும் எங்கள் தமிழ்க் கவிதை Group-ல் இருந்து 2020 ஜூன் மாதம் வெளிவந்த கவிதைகளை அப்படியே எடுத்துக் கீழே தந்திருக்கிறோம். பெரிதாக format எதுவும் பண்ணவில்லை
அணிந்துரை
தாணுமாலயன்
பண்டைக் காலந் தொட்டு இக்காலம் வரை தமிழ் மொழியோடு கூட தமிழ் கூறும் நல்லுலகின் வளர்ச்சியும் உருமாறிக் கொண்டே வந்திருக்கிறது.
சரித்திர காலங்களில் தமிழ் மொழியின் வளர்ச்சியில் புரவலர்கள் மற்றும் இரவலர்களின் பங்களிப்பு மிகுந்திருந்தது. கவிதையின் மூலம் மன்னர்கள் புகழ் பாடி பரிசு பெற்றுச் செல்வதும், பொற்கிழி பெறுவதும் நடைமுறை நிகழ்வுகளாய் இருந்தன.
பின்னர் காட்சிகள் மாற, ‘கவி அரங்கம் என்ற பெயரில் கவிஞர்கள் நடுவர் புகழ் பாட, பொற்கிழி
செக்கு (cheque) கிழி"யாக உருமாற்றம் கொள்ள, கவிஞர்கள் பயனடையத் துவங்கினர். இவைகளுக்கு நடுவில் வெறும் வயிற்றுப் பிழைப்பு என்றில்லாமல் தமிழை உணர்வுபூர்வமாக நேசித்து தமிழ் வளர்த்தவர்கள் மிகுந்த எண்ணிக்கையில் வரத் துவங்க, தமிழ் மொழி தன் இளமை மாறாது இன்றும் பீடு நடை பயில்கிறது. அவ்வாறான உணர்வுபூர்வமான குழுவாக இந்தத் தமிழின்பம் குழு செயல்படுவது மிகவும் மகிழ்ச்சியான விஷயமாக இருக்கிறது.
பக்கங்களைப் புரட்டி வருவோமேயானால் கவிஞர்களின் கவிதை முத்துக்கள் வசீகரிக்கின்றன. கந்த லஹரி
புனைந்து குருபரன் அருளில் திளைத்த திரு. சுரேஷ் இந்த முறை காஞ்சி முனிவரின் அவதார தினமான அனுஷ நக்ஷத்திரத்தில் பஞ்சகம் புனைந்து ஞான குருவின் அருளாசி தேடியிருப்பது சிறப்பு.
சுனாமியாக வந்து விழும் அவரது கவிதைகளைக் குறித்து சக கவிஞர் திரு. ராலி இப்பதிவில் எழுதியிருப்பதே இதற்குச் சான்று பகர்கிறது:
எழுதினால் அந்தாதி கந்த லஹரி
பழுத்தமுனி பஞ்சகம் என்று கனமாய்
அழுத்தமாய்ச் செய்வேன்நான் என்று இறையை
வழுத்தும் புலவன் சுரேஷ்.
வழக்கமாக சங்கரனைப் புகழ்ந்து பாடி சிவஸ்துதி செய்யும் திரு. இராசகோபாலன் இம்முறை மாலவனைப் புகழ்ந்தும் கவிதைகள் புனைந்திருக்கிறார்.
தாயத்தால் தேயத்தைத் தோற்றோரின் காயத்தை
நேயத்தால் நீக்கும் நியாயத்தான் - சாயத்தில்
சீயத்தான் ஆகியொரு சேயைத்தான் காத்தருளும்
மாயத்தான் மண்தின்ற மால்
இச்சபையின் நாயகர் திரு இராமலிங்கம் (ராலி) எப்போழுதும் போல் கவிதை மழை பொழிந்து நடு நாயகமாக ஜொலிக்கிறார். அவரது கவிதைப் புனைவுகள் ஆயிரத்து ஐந்நூறைக் கடந்திருப்பது மற்றுமொரு சிறப்பு.
விரிசடை கங்கை நதிநீரும் தண்ணே
திரிகிற வெண்மதி வீசொளி தண்ணே
என்ற அவரது கவிதை அவர் வார்த்தைச் சொல்லாடலை உறுதிப்படுத்துகிறது.
ஏகாந்த மூர்த்தி மனைவியின் தந்தைக்கு
ஆகாத மூர்த்தி அவனது வேள்விக்குப்
போகாத மூர்த்தி முனிவர் குருமூர்த்தி
எனும் கவிதையில் அவரது நகைச்சுவை உணர்வு மிளிர்கிறது.
எப்பொழுதும் மாலவன் புகழ் பாடும் திரு. சந்திர சேகரன்
ஏழிரண் டாண்டு ஏதும் உண்ணாது
ஏழிரண் டாண்டு இமை மூடாது
இருந்த இளவலின் பெருமைகளை எடுத்துரைக்கிறார்
.
மற்றும்
இரக்கம் கொண்டே ஈசன் வரம் தர
அரக்கரை அழித்தே அயர்ந்தான் அரங்கன்
எனும் அவரது கவிதையில் ஆதங்கம் வெளிப்படுகிறது.
கண்ணனையும் கைலாய நாதனையும் சமமாகப் பாடும் திரு. நாகராஜன் கவிதைகள் மிகச் சிறப்பு.
இந்தப் பதிவில் புதியதாக திரு. உதய கிருத்திகா இணைந்திருப்பது இக்குழுவிற்கு கூடுதல் பலம் சேர்க்கிறது. அவரது கவிதைகளில் அவரது நீண்ட அனுபவம் வெளிப்படுகிறது.
திரு. உதய கிருத்திகா தனது கவிதைகளில் திருச்செங்கொடு குறித்தும் மேல்மலையனூர் அங்காளம்மன் பற்றியும் கவிதை மழை பொழிந்திருக்கிறார். கோவிட் பரப்பும் அத்வைதம் குறித்த சாம ராக இசைப் பாடல், சுந்தரன் சரிதை, தில்லை நடனம், திருமுருகன் துதி போன்ற கவிதைகள் அவரது கவிப் புலமைக்குச் சான்றாகத் திகழ்கின்றன.
இத்தனை நற்கவி யாத்தவரை இவ்விடம்
இத்தனை நாள்நான் இணைத்திடாது விட்டது
எத்தனை தப்பது
எனும் திரு. ராலியின் கவிதைக் கூற்று இதனை மெய்ப்பிக்கிறது..
கவிதைப் போக்குவரத்து:
இந்தப் பகுதி மற்ற கவிதைத் தொகுப்புகளில் இருந்து இந்த நூலை வித்தியாசப்படுத்திக் காட்டுகிறது. வேறு எந்தப் பதிவுகளும் இம்முயற்சி செய்திருப்பதாய் நினைவில்லை.
இந்தக் குழுவின் பதிவுகள் மற்ற கவிதை நூல்களைப் போல் வெறும் கவிதைத் துணுக்குகளாக பாதசாரித்தனமாக (pedestrian) அமையாமல் கவிஞர்களின் கற்பனைகளுக்கும் வாதப் பிரதிவாதங்களுக்கும் வரையறை விதிக்காது அவர்களுக்குள் கருத்துப் பரிமாற்றங்களுக்கும் விதைக் களமாக இருப்பது குழுவின் மாறுபட்ட அணுகுமுறையைப் படம் பிடித்துக் காட்டுகிறது.
பழைய நூல்களைப் புரட்டிப் பார்க்கும்பொழுது இத்தகைய கவிதைப் போக்குவரத்து திருவிளையாடல் புராணத்தில் இருந்திருப்பதை நாம் அறிய முடிகிறது.
பாண்டிய மன்னரின் சந்தேகத்தைத் தீர்க்கும் விடையாக இறைவன் தான் எழுதிய கவிதையை தருமியின் மூலமாக கொடுத்தனுப்பியதும், பெண்களின் கூந்தலுக்கு இயற்கையிலேயே மணம் உண்டா என்ற சர்ச்சை குறித்து இறைவனுக்கும் நக்கீரனுக்கும் இடையே நிகழ்ந்த வாதங்களும் இத்தகைய கவிதைப் போக்குவரத்துக்கு முன்னோடியாக இருந்திருக்கலாம்.
இவை தவிர, பக்திச் சுவையல்லாத பிற சுவைகளில் கவிதை எழுதுவது (புதுக் கவிதை) பற்றிய வாதம், திருமணமாகாத கணபதியைப் பற்றிய கிண்டல்கள், காதல் பற்றிய கருத்தாய்வு, ஸ்வாரஸ்யமான பத்தினி ஆட்டம் பற்றிய உரையாடல் கவிதைகள் என நூலின் பாதிப் பகுதி இவ்வாறான உரையாடல்களால் நிறைந்திருப்பதைக் காணும்போது இக்கவிஞர்களின் சிந்தனைச் சிதறல்களை நினைத்து வியக்கத் தோன்றுகிறது.
நல்ல கவிதைகளும், சுவையான கருத்துக்கள் கூடிய உரையாடல்களும் கலந்து நிறைய பக்கங்களுடன் இக்கவிதைத் தொகுப்பு இம்முறை வெளிவந்திருப்பது மகிழ்ச்சியான விஷயம். இவ்வளவு கருத்துப் பதிவுகளுடன் வேறு எந்தக் கவிதைத் தொகுப்பும் வந்திருப்பதாய்த் தெரியவில்லை.
ஒரு வேளை அவ்வாறு இருந்து யாரேனும் தெரிவித்தீர்களானால், எழுத்தாளர் திரு. சுஜாதா கூறியதைப் போல ‘பாதி ராஜ்யம் தரும் ‘உத்தேசம் இருக்கிறது.
தொகுப்பில் இருந்து சில முத்துக்கள்:
திரு. இராசகோபாலன்:
"சாயத்தில் சீயத்தான் ஆகியொரு
சேயைத்தா ன் காத்தருளும்
மாயத்தான்"
'அரியறியாப் பாதன் கரியுரிகொள் தேகன்
நரிபரியாய் மாற்றிடும் நாதன் – எரியால்'
திரு இராமலிங்கம் (ராலி):
'விரிசடை கங்கை நதிநீரும் தண்ணே
திரிகிற வெண்மதி வீசொளி தண்ணே'
'மானானான் பின்னோடும் காகுத்தன் தங்கையின்
கோனானான் தேனான சொல்லாள் உயிரானான்'
திரு. சந்திர சேகரன்:
'ஏழிரண் டாண்டு ஏதும் உண்ணாது
ஏழிரண் டாண்டு இமை மூடாது
ஏழிரண்டில் பெண் ஏறெடுத்தும் காணாது'
'இரக்கம் கொண்டே ஈசன் வரம் தர
அரக்கரை அழித்தே அயர்ந்தான் அரங்கன்'
திரு. சுரேஷ்:
கொண்டனன் அக்கினி இருகரத் தழலென
கொண்டனன் நிலமதைத் தானாடுங் களமென
கொண்டதேன் பரவெளி சிதம்பர இரகசியம்.
திரு. நாகராஜன்:
'மருதமரம் சாய்த்து நிதிக்கோன் இளவல்
இருவரின் சாபம் முக்தியுறத் தாயிடம்
விரும்பிக் கட்டுண்ட குறும்புக் கண்ணன்'
குறிப்பு:
தாணுமாலயன் – காசோலையில் பயணித்து (ஓய்வு பெற்ற வங்கி உதவிப் பொது மேலாளர்) பின்பு ஈசனைப் பாடத் துணிந்தவர்
JUN 2020
6/1/20 - Rali Panchanatham: ராலியின் வெண்பா #1482: