Bakthi Thamizh - Part 2
By N. Chokkan
()
About this ebook
Read more from N. Chokkan
Mossad Rating: 3 out of 5 stars3/5Veerappan: Vazhvum Vathamum Rating: 0 out of 5 stars0 ratingsBookmarks Rating: 0 out of 5 stars0 ratingsA. R. Rahman Rating: 5 out of 5 stars5/5Salman Rushdie Rating: 0 out of 5 stars0 ratingsBakthi Thamizh - Part 3 Rating: 0 out of 5 stars0 ratingsKaasu, Panam, Dhuttu, Money Rating: 0 out of 5 stars0 ratingsFBI Rating: 0 out of 5 stars0 ratingsNalla Tamizh Ezhuthuvom Rating: 0 out of 5 stars0 ratingsWindows 7 Rating: 4 out of 5 stars4/5Kathai Sollum Paadangal Rating: 0 out of 5 stars0 ratingsVetrikku Sila Puthagangal Part 3 Rating: 4 out of 5 stars4/5Bakthi Thamizh Part 4 Rating: 0 out of 5 stars0 ratingsAdutha Kattam Rating: 0 out of 5 stars0 ratingsMaadevan Malarthogai Rating: 0 out of 5 stars0 ratingsAzim Premji Rating: 0 out of 5 stars0 ratingsPlus One Rating: 0 out of 5 stars0 ratingsKhushwant Singh Rating: 0 out of 5 stars0 ratingsBakthi Thamizh Anaithu Pagangal Rating: 0 out of 5 stars0 ratingsBhoologam Ananthathin Ellai Rating: 0 out of 5 stars0 ratingsVetri Ettu Dhikkum! Rating: 0 out of 5 stars0 ratingsMennulagam Rating: 0 out of 5 stars0 ratingsMen Kalaikal Rating: 0 out of 5 stars0 ratingsBakthi Thamizh - Part 1 Rating: 0 out of 5 stars0 ratingsThiruppu Munaigal Rating: 0 out of 5 stars0 ratings
Related to Bakthi Thamizh - Part 2
Related ebooks
Aanandha Thaandavam Rating: 5 out of 5 stars5/5Ponniyin Selvan - Part 2 Rating: 5 out of 5 stars5/5Akanaanuru Rating: 0 out of 5 stars0 ratingsBakthi Thamizh Anaithu Pagangal Rating: 0 out of 5 stars0 ratingsEllu Vayal Pookkaley Rating: 0 out of 5 stars0 ratingsTheekkul Viralai Vaithal Rating: 0 out of 5 stars0 ratingsManam Kamazhum Thirumaraigal Rating: 0 out of 5 stars0 ratingsPonni Nadhi Karaiyil Punitha Aalayangal Part - 1 Rating: 0 out of 5 stars0 ratingsSowbarnika Rating: 0 out of 5 stars0 ratingsThailand Rating: 0 out of 5 stars0 ratingsThirukurugoor Thiruvanthathi Rating: 0 out of 5 stars0 ratingsThanjai Ezhilan Kavithaigal Rating: 0 out of 5 stars0 ratingsBakthi Thamizh - Part 1 Rating: 0 out of 5 stars0 ratingsKai Nilai Rating: 0 out of 5 stars0 ratingsTamizhiyal Katturaigal Rating: 0 out of 5 stars0 ratingsNonbugal Arivom Rating: 0 out of 5 stars0 ratingsVinnappa Kalivenba Rating: 0 out of 5 stars0 ratingsThiruvasaga Thean Rating: 0 out of 5 stars0 ratingsNatrinai Rating: 0 out of 5 stars0 ratingsNoi Theera, Inbam Sera, Vinai Theya Devaram, Thiruvasagam! Rating: 0 out of 5 stars0 ratingsVengai Aronin Kavithaigal Rating: 0 out of 5 stars0 ratingsKannan Ennum Mannan! Rating: 5 out of 5 stars5/5லாக்டவுன் காலமே நீ வாழி: Rali & Thamizh Inbam Rating: 0 out of 5 stars0 ratingsGangapuri Kavalan Part - 2 Rating: 5 out of 5 stars5/5Avvai Sol Virumbu Rating: 0 out of 5 stars0 ratingsNaalam Naalam Thirunaalam Rating: 0 out of 5 stars0 ratingsTherkku Vaasal Mohini Rating: 0 out of 5 stars0 ratingsParavasam Thantha Nava Tirupathiyum, Nava Kailasamum Rating: 0 out of 5 stars0 ratingsKali Thogai Rating: 0 out of 5 stars0 ratingsPonniyin Selvan - Part 1 Rating: 5 out of 5 stars5/5
Reviews for Bakthi Thamizh - Part 2
0 ratings0 reviews
Book preview
Bakthi Thamizh - Part 2 - N. Chokkan
http://www.pustaka.co.in
பக்தித் தமிழ் பாகம் 2
Bakthi Thamizh - Part 2
Author:
என். சொக்கன்
N. Chokkan
For more books
http://www.pustaka.co.in/home/author/n-chokkan-novels
Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.
All other copyright © by Author.
All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.
பொருளடக்கம்
அத்தியாயம் 26
அத்தியாயம் 27
அத்தியாயம் 28
அத்தியாயம் 29
அத்தியாயம் 30
அத்தியாயம் 31
அத்தியாயம் 32
அத்தியாயம் 33
அத்தியாயம் 34
அத்தியாயம் 35
அத்தியாயம் 36
அத்தியாயம் 37
அத்தியாயம் 38
அத்தியாயம் 39
அத்தியாயம் 40
அத்தியாயம் 41
அத்தியாயம் 42
அத்தியாயம் 43
அத்தியாயம் 44
அத்தியாயம் 45
அத்தியாயம் 46
அத்தியாயம் 47
அத்தியாயம் 48
அத்தியாயம் 49
அத்தியாயம் 50
26
திருப்பதி இப்போது ஆந்திரப் பிரதேசத்தில் இருக்கிறது. என்னதான் நாடுமுழுவதிலும் இருந்து பக்தர்கள் சென்று வணங்கினாலும், தெலுங்குதான் அங்கே முதன்மை மொழி.
பாஷை அடிப்படையில் திருப்பதி ஆந்திரர்களிடம் சென்றிருந்தாலும், முன்பு அது தமிழகத்தின் ஒரு பகுதியாகவே இருந்தது. அம்மலையைக் குறிப்பிடும் ‘வேங்கடம்’ என்ற பெயரே தமிழிலிருந்து வந்ததுதான் என்பார்கள்.
‘வேங்கடம்’ என்பதை வேம் + கடம் என்று பிரிக்கவேண்டும். ‘வேம்’ என்றால் பாவங்கள், ‘கடம்’ என்றால் எரித்தல், பாவங்களை எரிக்கும் மலை வேங்கடம், அதில் எழுந்தருளியிருப்பவன் வேங்கடாசலபதி, அதாவது, வேங்கடம் + அசலம் + பதி: வேங்கட மலையின் தலைவன்!
இன்னும் சிலர் இதனை வேய் + கடம் என்று பிரிப்பார்கள். ‘வேய்’ என்றால் மூங்கில், ‘கடம்’ என்றால் காட்டு வழி. மூங்கில்கள் நிறைந்த காட்டு வழி கொண்ட மலை என்ற அர்த்தத்தில் இந்த ஊருக்கு ‘வேய்ங்கடம்’ என்று பெயர் வந்து, பின்னர் அது ‘வேங்கடம்’ என மாறியிருக்கலாம்.
இந்த மலையில் யானைகள் அதிகம். அவற்றின் மதத்துக்கு ‘வேங்கடம்’ என்று ஒரு பெயர் உண்டு. அதுவும் இந்தப் பெயருக்குக் காரணமாக இருக்கலாம்.
எப்படியோ, வேங்கடமலை தமிழுக்கும் உரியதுதான். அந்தத் திருமலையைப்பற்றியும் அதில் எழுந்தருளியிருக்கும் வேங்கடவனைப்பற்றியும் ஏராளமான தமிழ்ப் பாடல்கள், பக்தி ரசம் சொட்டும் வர்ணனைகள் உண்டு.
திருமழிசையாழ்வாரின் நான்முகன் திருவந்தாதியில், வேங்கடமலைபற்றிய அற்புதமான பல பாடல்களைக் காணலாம். அவருடைய கையைப் பிடித்துக்கொண்டு, கொஞ்ச நேரம் அந்த ‘ஏழு மலை வாசன்’ ராஜ்ஜியத்தில் நடந்துவருவோம்:
காணல் உறுகின்றேன், கல் அருவி முத்து உதிர
ஓண விழவில் ஒலி அதிர, பேணி
வரு வேங்கடவா! என் உள்ளம் புகுந்தாய்,
திரு வேங்கடம் அதனைச் சென்று
ஓண விழாவா? அது கேரளப் பண்டிகை ஆயிற்றே, எப்படி திருப்பதியில்?
இங்கே ‘ஓணம்’ என்பது திருவோணத்தைக் குறிக்கிறது. அதுதான் வேங்கடவனுடைய அவதார நட்சத்திரம். அதை முன்னிட்டு, அந்த ஓணத் திருநாளன்று திருப்பதியில் எங்கு பார்த்தாலும் வேதங்கள் ஒலிக்கப்படுகின்றன, பக்தர்கள் மகிழ்ச்சியில் ஆடிப் பாடுகிறார்கள், அந்தச் சத்தத்தில் மலையே அதிர்கிறது.
இன்னொருபக்கம், அருவிகளில் நீர் முத்துப்போல் விழுகிறது. அந்த ஒலி ‘கல்’ என்று எங்கேயும் கேட்கிறது!
இப்படிப்பட்ட வேங்கட மலைக்கு, பக்தர்கள் கூட்டம் கூட்டமாக வருகிறார்கள். வேங்கடவனைத் தரிசிக்கிறார்கள். அத்தகைய பெருமை கொண்ட இறைவனே, நீ என் உள்ளத்தில் புகுந்தாய்!
இனி, நான் இங்கே இருந்து என்ன செய்யப்போகிறேன்? இதோ, நீ வாழும் திருவேங்கடமலைக்கு நானும் வருகிறேன்!
பெருமை நிறைந்த இந்தத் திருப்பதி மலைக்கு இன்னும் யார் யாரெல்லாம் வருகிறார்கள்? அடுத்து வரும் பாடலில் அதைச் சொல்கிறார் திருமழிசையாழ்வார்:
சென்று வணங்குமினோ, சேண் உயர் வேங்கடத்தை,
நின்று வினை கெடுக்கும் நீர்மையால், என்றும்
கடிக் கமல நான்முகனும் கண் மூன்றத்தானும்
அடிக் கமலம் இட்டு ஏத்தும் அங்கு
பக்தர்களே, நீங்கள் உயர்ந்த வேங்கடமலைக்குச் சென்று வணங்குங்கள். அதனால் நீங்கள் செய்த பிழைகள் எல்லாம் நீங்கிவிடும், நீங்கள் தூய்மையாகிவிடுவீர்கள்!
சந்தேகமாக இருக்கிறதா? அதோ, பாருங்கள். வாசனை நிறைந்த தாமரையில் எழுந்தருளியிருக்கும் பிரம்மனும், மூன்று கண்களைக் கொண்ட சிவபெருமானும் வேங்கடமலைக்கு வருகிறார்கள். அங்கே உள்ள வேங்கடவன் பாதங்களில் தாமரை தூவித் தொழுகிறார்கள்.
அடுத்த பாடலில், ஓர் அழகான இயற்கைக் காட்சி. இரவு நேரம், வேங்கடமலையில் இருக்கும் யானை ஒன்று கையை மேலே தூக்கிச் சத்தமிடுகிறது. அதைப் பார்த்த ஆழ்வாருக்கு இப்படிக் கற்பனை:
வைப்பன் மணி விளக்கா மாமதியை மாலுக்கு என்று
எப்பொழுதும் கை நீட்டும் யானை
அந்த யானையும் திருமாலை வணங்கிவந்தது. அவர் கோயிலுக்கு விளக்கு வைக்கவேண்டும் என்று ஆசைப்பட்டது.
ஆனால், காட்டில் வாழும் யானை, விளக்குக்கு எங்கே போகும்?
அப்போது, அந்த யானை கண்ணில் மேலே உள்ள சந்திரன் தென்படுகிறது. ‘அதோ, அந்த விளக்கைப் பிடித்துத் திருமாலுக்கு வைத்துவிடலாம்’ என்று நினைத்துக் கை நீட்டுகிறது!
யானைகள்மட்டுமா? திருவேங்கடத்தில் இன்னும் பல உண்டு. அவற்றை இந்தப் பாடலில் காணலாம்:
நல் மணிவண்ணன் ஊர், ஆளியும் கோள் அரியும்
பொன்மணியும் முத்தமும் பூ மரமும் பன்மணி நீ
ரோடு பொருது உருளும் கானமும் வானரமும்
வேடும் உடை வேங்கடம்
நல்ல மணியைப்போன்ற வண்ணம் கொண்ட எம்பெருமானின் ஊர், வேங்கடமலை. அங்கே நான் பார்த்த காட்சிகள் என்னென்ன தெரியுமா?
யாளிகளைப் பார்த்தேன், சிங்கங்களைப் பார்த்தேன், குரங்குகளைப் பார்த்தேன், வேடுவர்களைப் பார்த்தேன்!
அப்புறம், தங்கமும் ரத்தினங்களும் முத்துகளும் பார்த்தேன்!
காட்டில் இதெல்லாம் ஏது?
வேங்கடமலையில் ஆறு ஓடி அருவியாக விழுகிறதல்லவா? அது இந்த விலை உயர்ந்த பொருள்களையெல்லாம் அடித்துக்கொண்டு வந்துள்ளது. அவற்றோடு, பூக்களும் சேர்ந்து புரள்கின்றன!
யானை, சிங்கம், குரங்கு எல்லாம் இருக்கட்டும். திருப்பதியில், இறைவனை வணங்க வருகிறவர்களில் பெரும்பாலும் இளைஞர்களா, அல்லது முதியவர்களா?
‘ரிடையரானபிறகு உம்மாச்சி கும்பிடலாம்’ என்று தள்ளிப்போடாதீர்கள், ‘இளம் வயதிலேயே இறைவனைச் சென்று தரிசித்துக் கும்பிடுங்கள்’ என்கிறார் திருமழிசையாழ்வார்:
குமரன் நிற்கும் பொழில் வேங்கட மலைக்கே
போம் குமரர் உள்ளீர், புரிந்து!
இங்கே ‘குமரன்’ என்பது முருகன் அல்ல, என்றைக்கும் இளமையாகத் தோற்றமளிக்கும் வேங்கடவன், அவன் நிற்கின்ற, பொழில்கள் நிறைந்த மலை வேங்கடம்.
அவனைப்போல், நாம் என்றைக்கும் இளமையோடு இருக்கமுடியாது. ஆகவே, இப்போது இளமையாக உள்ளவர்களே, உடனே கிளம்பிச் செல்லுங்கள், பக்தியோடு அவனை வணங்குங்கள்!
‘கோயிலுக்குச் செல்லலாம், ஆனால் வேலை அதிகமாக இருக்கிறதே, எனக்கு ஆஃபீஸில் லீவே இல்லையே’ என்பார்கள் சிலர். ‘வரணும்ன்னுதான் நினைக்கறேன், ஆனா ஏதாவது ஓர் இடைஞ்சல் வந்துடுது!’ என்று சாக்குச் சொல்வார்கள்.
இவர்களுக்குப் பாடம் சொல்வதுபோல் ஒரு நிகழ்வு, சேக்கிழார் பெருமான் எழுதிய பெரிய புராணத்தில் வருகிறது.
சுந்தரமூர்த்தி நாயனாரும் சேரமான் பெருமாள் நாயனாரும் சிவபெருமானைத் தரிசிக்கத் திருக்கண்டியூர் சென்றார்கள். அவரை வணங்கி மகிழ்ந்தார்கள்.
அடுத்து, அவர்களுக்குத் திருவையாறு செல்ல ஆசை. ஆனால், வழியில் காவிரி ஆறு குறுக்கிட்டது.
அதனால் என்ன? படகிலோ ஓடத்திலோ நதியைக் கடக்கலாமே!
உண்மைதான். ஆனால் அப்போது, பெருமழை பொழிந்து ஆற்றில் வெள்ளம் புரண்டுகொண்டிருந்தது. சாதாரண வெள்ளம் இல்லை, படகுகளை உடைத்து எறியக்கூடிய அளவு ஆவேசம் நிறைந்த வெள்ளம்.
என்ன செய்யலாம்? இப்படியே திரும்பிவிடலாமா?
சேரமான் பெருமாளுக்கு மனம் வரவில்லை. ‘இவ்வளவு தூரம் வந்துவிட்டு, ஈசனைத் தொழாமல் திரும்பிச் செல்வதா?’ என்று தயங்கினார்.
சுந்தரர் யோசித்தார். ‘அவன் தாள் தொழ விரும்புகிறோம், அதற்கு வழி இல்லாதபடி ஆற்றில் வெள்ளம் பாய்கிறது. இந்நிலையில் நமக்கு வேறு யார் உதவமுடியும்? அந்தச் சிவபெருமானையே கேட்போம்!’ என்றார். பாட ஆரம்பித்தார்:
பரவும் பரிசு ஒன்று அறியேன் நான்,
பண்டே உம்மைப் பயிலாதேன்,
இரவும் பகலும் நினைத்தாலும்
எய்த நினையமாட்டேன் நான்,
கரவு இல் அருவி கமுகு உண்ணத்
தெங்கங்குலைக் கீழ் கருப்பு ஆலை
அரவம் திரைக் காவிரிக் கோட்டத்து
ஐயாறு உடைய அடிகேளோ!
காவிரியில் வெள்ளம் பாய்ந்து வருகிறது. அதனால், கரையில் நிற்கும் ஒரு பாக்கு மரமே மூழ்கிவிடுகிறது!
இன்னொருபக்கம், தென்னை மரம். அதில் காய்கள் குலைகுலையாகக் காய்த்துள்ளன. அவற்றுக்குக் கீழே கரும்பைப் பிழியும் ஆலைகளின் சத்தம் கேட்கிறது!
இப்படிக் காவிரிக் கரையில் ஐயாறு (திருவையாறு) என்ற திருத்தலத்தில் எழுந்தருளியிருக்கும் என் இறைவா, என்னுடைய கோரிக்கையைக் கேள்!
உன்னை எப்படிப் புகழ்வது என்பதுகூட எனக்குத் தெரியாது. ஆகவே, முன்பு உன்னுடைய பக்தனாக நான் இருக்கவில்லை.
இப்போது, நான் திருந்திவிட்டேன். இரவும் பகலும் உன்னையே நினைக்கிறேன். ஆனால், அது போதுமா என்ன? உன்னைச் சென்றடையவேண்டுமென்றால் நான் செய்யவேண்டிய நல்ல விஷயங்கள் இன்னும் ஏராளம் உண்டு!
ஆகவே இறைவா, திருவையாறு வந்து உன்னைத் தரிசிக்க விரும்புகிறேன். அதற்கு வழி செய்!
இப்படித் தொடங்கிப் பத்து பாடல்களைப் பாடினார் சுந்தரர். இறைவன் அவற்றை ஆனந்தமாகக் கேட்டு மகிழ்ந்தான்.
மறுகணம், காவிரியின் மத்தியில் ஒரு பாதை தோன்றியது. இருபுறமும் நீர் பெருக்கெடுத்து ஓட, நடுவில் இந்தப் பாதையில்மட்டும் துளி நீர் இல்லை.
இதைப் பார்த்த மக்கள் வியந்தார்கள். சுந்தரரும் சேரமான் பெருமாளும் அதில் நடந்து சென்று திருவையாறை அடைந்தார்கள். அங்கே ஈசனை வழிபட்டு நெகிழ்ந்தார்கள்.
பின்னர், அவர்கள் அதே பாதையின்வழியே திரும்பி வந்தார்கள். அவர்கள் கரையேறியதும், காவிரிக்கு நடுவில் தோன்றிய அந்த வழி மறைந்தது. பழையபடி ஆவேசத்துடன் வெள்ளம் ஓடத் தொடங்கியது!
ஆகவே, இறைவனைத் தரிசிக்கவேண்டும், வணங்கவேண்டும் என்று நாம் உண்மையாக விரும்பினாலே போதும், மற்ற எல்லாவற்றையும் அவன் பார்த்துக்கொள்வான்!
இவ்வளவு சொன்னாலும், செய்தாலும், சிலருக்குக் கோயில் செல்ல நேரம் இல்லை. செய்யும் வேலையை ஒழுங்காகச் செய்தால் அதுவே பக்தி என்பது இவர்களுடைய கட்சி.
அதுவும் சரிதான், ஆனால் அந்த வேலையின்போதும் இறைவனை நினைத்துக்கொண்டு செய்தால், சிரமமும் தெரியாது, நல்லவை நமக்குக் கிடைக்கும்!
இதற்குச் சாட்சி, ‘முக்கூடற்பள்ளு’ என்ற அருமையான மக்கள் பாடலில் இருக்கிறது. நெல்லை மாவட்டத்தில் உள்ள முக்கூடல் அழகர்(திருமால்)மீது பாடப்பட்ட நூல் இது.
அந்த முக்கூடலைச் சேர்ந்த விவசாயிகள், தங்களுடைய வயலில் நடவு தொடங்குகிறார்கள். அப்போது, களைப்புத் தெரியாமல் இருக்க அவர்கள் பாடும் பாடல் இது:
படை கொண்டே வரும் கரனையும், பொரு
விடயம் சேர் திரி சிரனையும்
பண்டு முடித்த கணையினார், குகன்
கண்டு பிடித்த துணைவனார்!
குடை குன்றாய்ப் பசுக்கு இடை நின்றார், முக்
கூடல் அழகர் வயல் உள்ளே
கொண்டாடிக் கொண்டு நடச் செய்தே, இன்று
கண்டோம் இது என்ன புதுமையோ!
கடிக்கும் அரவில் நடிக்கும் இறைவர்,
கஞ்சனார்க்கு ஒரு நஞ்சு அனார்,
கடையும் அமுதம் உடையும் திரையில்
காட்டி அண்டருக்கு ஊட்டினார்,
அடிக்குள் அடங்கும்படிக்கு முதல்வர்,
அழகர் முக்கூடல் வயல் உள்ளே
ஆடிப் பாடி நாற்று முடியை
அலைத்துக் குலைத்து நடச்செய்தே...
ராமாயணத்தில் சூர்ப்பனகைக்கு என்ன நடந்தது என்று நமக்குத் தெரியும். அவளுடைய மூக்கை லட்சுமணன் அறுத்துவிட, அவள் அலறிக்கொண்டு ஓடினாள்.
அவளுடைய உடன்பிறந்தவன் கரன். தங்கைக்கு நேர்ந்த அவமானத்துக்குப் பழி வாங்குவதற்காக இவன்தான் முதன்முறையாக ராமர், லட்சுமணர்மீது போர் தொடுத்து வந்தான். ராவணனெல்லாம் அதன்பிறகுதான்!
அந்தக் கரனையும், திரிசிரன் என்ற இன்னோர் அரக்கனையும் ராமர் தன்னுடைய அம்பால் வென்றார். அதை இந்தப் பாடலின் முதல் பகுதி சொல்கிறது.
இப்படி அரக்கர்களை அழித்த ராமர், குகன் என்ற வேடனுக்கு அன்புத் துணைவரானார்!
பின்னர், அவரே கிருஷ்ணராக அவதாரம் எடுத்தார். பசுக்களுக்கு இடையே உலவினார், பெரிய மழையின்போது கோவர்த்தன மலையைக் குடையாகத் தூக்கி நின்றார், உலகைக் காப்பாற்றினார், கடிக்கக்கூடிய பாம்பின்மீது (காளிங்கன்) நடனம் ஆடினார், கஞ்சன் என்கிற கம்சனுக்கு நஞ்சாக மாறி அவனை வீழ்த்தினார்.
தீயவனை அழித்த ராமர், நல்லவனுக்குத் துணையானதுபோல், தீய கம்சனுக்கு விஷம் ஊட்டிய அவர், நல்லவர்களுக்கு அமுதமும் ஊட்டினார்.
அதற்காக, அவர் ஒரு மோகினியாக அவதரித்தார். பாற்கடலைக் கடையும்போது அதிலிருந்து வந்த அமுதத்தைத் தேவர்களுக்குத் தந்தார்.
அவர் ஒரு சிறிய குள்ள வடிவம் எடுத்ததும் உண்டு. ஆனால் அவரது பாதங்களுக்குள் இந்த உலகையே அளந்துவிட்டார்!
இந்த ராமரும் கிருஷ்ணரும் மோகினியும் வாமனரும் வேறு யாரோ அல்ல, எங்களுடைய முக்கூடல் அழகரின் வெவ்வேறு வடிவங்கள்தான்!
அப்படிப்பட்ட முக்கூடல் அழகரை நாங்கள் பாடிப் போற்றுகிறோம், கொண்டாடுகிறோம். அவர் பெயரைச் சொல்லி வணங்கியபடி நாற்று நடுகிறோம்!
இப்படி அவன் புகழ் பாடியபடி எந்த வேலையைச் சிரத்தையாகச் செய்தாலும், அதுவும் பக்திதான்!
என். சொக்கன்...
03 02 2014
*****
27
ஊத்துக்காடு, ஊத்துக்குளி!
இந்த இரு ஊர்களுக்கும் பெயர்ப் பொருத்தம்தவிர, இன்னொரு பொதுப் புள்ளியும் உண்டு: வெண்ணெய்!
ஊத்துக்குளியில் வெண்ணெய் ஃபேமஸ். இன்னொருபக்கம் ஆயர்ப்பாடியில் வெண்ணெயை அள்ளி அள்ளி உண்ட கண்ணனை விதவிதமாகக் ‘கிருஷ்ண கானம்’ பாடிய வேங்கட சுப்பையரின் ஊர், ஊத்துக்காடு.
‘அலை பாயுதே’, ‘குழலூதி மனமெல்லாம்’, ‘பால் வடியும் முகம்’ என்று ஊத்துக்காடு வேங்கட சுப்பையரின் ஏராளமான பாடல்கள் கர்நாடக இசை மேடைகளிலும், மக்களிடையேயும் நன்கு பிரபலமானவை. வெண்ணெய் உண்ணும் கண்ணனின் அழகை, குறும்பை அவர் பலவிதமாகப் பதிவு செய்துள்ளார். அதில் கொஞ்சம் நாமும் அள்ளி உண்போமா?
ஓர் ஆயர் குலப் பெண். அவளுக்குக் கண்ணன்மேல் அன்பு. ஆனால் அவனோ, எந்நேரமும் வெண்ணெயைத் தின்றுகொண்டிருக்கிறான். இதனால் அந்தப் பெண்ணுக்கு வெண்ணெய்மேல் கோபம் வந்துவிடுகிறது. இப்படிப் பாடுகிறாள்:
பாரோடு விண்ணாகப் பரந்திருந்தானே,
பச்சைப் பிள்ளைத்தனம் போகவில்லையே!
மிச்சம் மீதி இல்லாது வெண்ணெய் களவாடுவான்,
அலைந்து வெண்ணெய் திருட, அதில் என்ன இருக்கோ!
இந்தக் கண்ணன் வாமனனாகப்