Veerappan: Vazhvum Vathamum
By N. Chokkan
()
About this ebook
Read more from N. Chokkan
Mossad Rating: 3 out of 5 stars3/5Nalla Tamizh Ezhuthuvom Rating: 0 out of 5 stars0 ratingsBakthi Thamizh Anaithu Pagangal Rating: 0 out of 5 stars0 ratingsA. R. Rahman Rating: 5 out of 5 stars5/5Bookmarks Rating: 0 out of 5 stars0 ratingsSalman Rushdie Rating: 0 out of 5 stars0 ratingsBakthi Thamizh - Part 3 Rating: 0 out of 5 stars0 ratingsKhushwant Singh Rating: 0 out of 5 stars0 ratingsBakthi Thamizh Part 4 Rating: 0 out of 5 stars0 ratingsPlus One Rating: 0 out of 5 stars0 ratingsNam(n)bargal Rating: 0 out of 5 stars0 ratingsKathai Sollum Paadangal Rating: 0 out of 5 stars0 ratingsFBI Rating: 0 out of 5 stars0 ratingsVetrikku Sila Puthagangal Part 3 Rating: 4 out of 5 stars4/5Mobile Guide Rating: 0 out of 5 stars0 ratingsVetrikku Sila Puthagangal Part 4 Rating: 0 out of 5 stars0 ratingsKaasu, Panam, Dhuttu, Money Rating: 0 out of 5 stars0 ratingsWindows 7 Rating: 4 out of 5 stars4/5Vetrikku Sila Puthagangal Part 5 Rating: 0 out of 5 stars0 ratingsMennulagam Rating: 0 out of 5 stars0 ratingsAzim Premji Rating: 0 out of 5 stars0 ratingsVetri Ettu Dhikkum! Rating: 0 out of 5 stars0 ratingsMen Kalaikal Rating: 0 out of 5 stars0 ratingsBakthi Thamizh - Part 1 Rating: 0 out of 5 stars0 ratingsThiruppu Munaigal Rating: 0 out of 5 stars0 ratingsVanna Vanna Pookkal Rating: 0 out of 5 stars0 ratings
Related to Veerappan
Related ebooks
Chola Venghai Rating: 0 out of 5 stars0 ratingsPudhumaipithan Short Stories - Part 3 Rating: 0 out of 5 stars0 ratingsEezhavendhan Sangili Rating: 0 out of 5 stars0 ratingsPuthra Rating: 0 out of 5 stars0 ratingsRaja Nayagi Part 2 Rating: 0 out of 5 stars0 ratingsNandhipurathu Naayagi Part - 3 Rating: 0 out of 5 stars0 ratingsKamba Ramayanam - Sundara Kandam Rating: 5 out of 5 stars5/5Sarppa Pali Rating: 0 out of 5 stars0 ratingsEn Yaaththirai Anubavangal Rating: 0 out of 5 stars0 ratingsMaanikka Naagam Rating: 5 out of 5 stars5/5Kai Niraiya Vairam Rating: 0 out of 5 stars0 ratingsKamba Ramayanam - Ayodhya Kandam Rating: 0 out of 5 stars0 ratingsPon Vilangu Rating: 0 out of 5 stars0 ratingsVetri Muzhakkam Rating: 0 out of 5 stars0 ratingsKoondu Rating: 0 out of 5 stars0 ratingsGangapuri Kavalan Part - 2 Rating: 5 out of 5 stars5/5Mahabharatham Rating: 0 out of 5 stars0 ratingsAaru Mani Nerangal Rating: 5 out of 5 stars5/5Oru Ilakkiyavathiyin Kalaiulaga Anubavangal Rating: 4 out of 5 stars4/5Madiyil Sayum Neram Rating: 5 out of 5 stars5/5Kanchi Sundari Rating: 5 out of 5 stars5/5Thirakkoodaatha Kathavu Rating: 0 out of 5 stars0 ratingsVallathu Ilavarasi Rating: 0 out of 5 stars0 ratingsIrunda Veedu Rating: 0 out of 5 stars0 ratingsNithilavalli Rating: 0 out of 5 stars0 ratingsThiyaga Vallaban Rating: 0 out of 5 stars0 ratingsRani Mangammal Rating: 0 out of 5 stars0 ratingsOru Veedu Pooti Kidakkirathu Rating: 0 out of 5 stars0 ratingsPaettai Rating: 0 out of 5 stars0 ratingsParanthakan Magal Rating: 5 out of 5 stars5/5
Reviews for Veerappan
0 ratings0 reviews
Book preview
Veerappan - N. Chokkan
http://www.pustaka.co.in
வீரப்பன்: வாழ்வும் வதமும்
Veerappan: Vazhvum Vathamum
Author:
என். சொக்கன்
N. Chokkan
For more books
http://www.pustaka.co.in/home/author/n-chokkan-novels
Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.
All other copyright © by Author.
All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.
பொருளடக்கம்
1. கூட்டுப் புழுத் திட்டம்
2. வீரப்பன்: ஒரு முன்கதைச் சுருக்கம்
3. பணங்காய்ச்சிக் கடத்தல்
4. புதையல்
5. வீரப்பர்?
6. கேள்விகள் ஆயிரம்
பின்னிணைப்பு 1: கால வரிசை
1. கூட்டுப் புழுத் திட்டம்
18 அக்டோபர் 2004. தர்மபுரிக்கு அருகே ஒரு சிறிய புறவழிப்பாதையில், அந்தக் காவலர் குழு மிகுந்த ஆர்வத்தோடும் படபடப்போடும் காத்திருந்தது.
நேரம் இரவு பத்து மணியைக் கடந்திருக்க, அந்தச் சாலையெங்கும் அடர்த்தியான இருள் படர்ந்திருந்தது. அதனூடே கூர்ந்து கவனித்தபடி அவர்கள் காத்திருந்தார்கள். அவர்கள் எதிர்பார்க்கும் அந்த வாகனம் இன்று வருமா, வராதா?
பல மாதங்களாக கவனத்துடன் திட்டமிடப்பட்ட சம்பவம் அது. கொஞ்சமும் பிசிறில்லாமல் சிந்தித்து, ஒவ்வொரு வசனத்தையும், ஒவ்வொரு காட்சியையும் முன்கூட்டியே கணித்து, கச்சிதமாக நிறைவேற்றியிருந்தார்கள். தூக்கமற்ற இரவுகளும் பதற்றம் கூடிய பகல் பொழுதுகளுமாக எத்தனை வருடங்கள் கழிந்துவிட்டன! இன்று ஒரு விடை கிடைத்தாக வேண்டும்.
கிட்டத்தட்ட முப்பது ஆண்டுகளாக, மூன்று மாநில காக்கிச் சட்டைகளின் கண்களில் விரலை விட்டு ஆட்டிக்கொண்டிருந்த அந்தப் பச்சைச் சட்டையை, அன்று துவைத்துக் காயப்போட்டுவிடுகிற முடிவோடு அவர்கள் அங்கே காத்திருந்தார்கள்.
ஆனால், வீரப்பன் இன்று வருவானா? அல்லது, கடைசி நேரத்தில் தன்னைச் சூழ்ந்திருக்கும் சதிவலையைப் புரிந்துகொண்டு, சுதாரித்துவிடுவானா?
அவர்களால் எதையும் நிச்சயமாகத் தீர்மானிக்கமுடியவில்லை. ஆகவே, அவன் தப்பிவிட வாய்ப்பின்றி ஒரு வலுவான வலையைப் பின்னிவிட்டு, அவனாக வந்து விழுவதற்காகக் காத்திருந்தார்கள்.
அந்த நீண்ட சாலையின் குறுக்கே, நான்கு இடங்களில் அவர்களின் குழுக்கள் மறைந்திருந்தன. அவன் அந்தச் சாலைக்குள் நுழைந்துவிட்டாலே போதும், அந்தப் பொறிகளில் ஏதாவது ஒன்றில் சிக்கியாகவேண்டும்.
ஒவ்வொரு இடத்திலும், சாலையின் குறுக்கே ஒரு பெரிய லாரி நிறுத்தப்பட்டிருந்தது. அதில் போதுமான அளவு மணல் மூட்டைகளை அடுக்கிவைத்திருந்தார்கள். ஏதோ ரிப்பேருக்காக வண்டியை நிறுத்தியிருப்பதுபோல் ஒரு தோற்றம்.
வீரப்பன் வரப்போகும் வாகனம், எத்தனை வேகமாக வந்தாலும், அந்த லாரியருகே வேகம் குறைந்தாகவேண்டும். அப்போது, அவனைச் சுற்றிவளைத்துவிடலாம் என்பது திட்டம்.
உண்மையில், வீரப்பன் வந்துகொண்டிருக்கும் அந்த 'ஆம்புலன்ஸ்', சிறப்புக் காவல் படையின் வாகனம்தான். அதை ஓட்டிவருவதும், சரவணன் என்ற காவலர்தான்.
என்றாலும், இந்தத் திட்டம் சரியாக நிறைவேறவேண்டுமே என்ற கவலை அந்தக் காவல் படையைக் கவ்வியிருந்தது. இதற்குமுன் எத்தனையோ அதிரடிப் படைகளும், சிறப்புக் குழுக்களும் வீரப்பனைப் பிடிப்பதற்குப் பலவிதமான திட்டங்களைத் தீட்டியிருந்தார்கள். சொல்லிவைத்தாற்போல், ஒவ்வொருமுறையும், போலீஸின் கண்களில் மண்ணைத் தூவித் தப்பித்துவிடுகிற மாயக்காரனாக இருக்கிறான் அவன்.
தமிழக சிறப்பு அதிரடிப் படையின் தலைவர் விஜயகுமார், கையில் துப்பாக்கியுடன் காட்டைச் சுற்றிவருவதால் மட்டும் வீரப்பனைப் பிடித்துவிடமுடியாது என்று உறுதியாய் நம்பினார். ஆகவே, அவனுடைய பாணியிலேயே, அவனைப்பிடிக்கும் பணியைச் செய்துமுடிக்கத் தீர்மானித்தார்.
முதல் வேலையாக, அதிரடிப் படையை இரண்டு பிரிவுகளாகப் பிரித்தார் அவர் - ஒன்று, தேடும் குழு. மற்றது பதுங்கும் குழு.
இவற்றில், 'தேடும் குழு' என்பது, எப்போதும்போல், காட்டினுள் நுழைந்து, வீரப்பனின் குழு எங்கே இருக்கிறது, எப்படி இயங்குகிறது என்பன போன்ற தடயங்களை அலசிக்கொண்டிருக்கும்.
மற்றொரு (புதிய) குழுவான 'பதுங்கும் குழு', நாளைய பாய்ச்சலுக்கான முன் ஆயத்தங்களாக, ரகசியமான சில நடவடிக்கைகளில் ஈடுபட்டது. இந்தக் குழுவிலிருந்த எல்லோரும், 'போலீஸ் வெட்டு' மறந்து, நிறைய தலைமுடி வளர்த்துக்கொண்டு, கிராமத்துமக்கள்போல் நடை, உடை, பாவனைகளை மாற்றிக்கொண்டு, வீரப்பனின் காட்டு எல்லையிலிருந்த கிராமங்களிலும், மலைப்பகுதிகளிலும் குடியேறினார்கள்.
விவசாயக் கூலிகளாக, வியாபாரிகளாக, இஸ்திரி போடுபவர்களாக, படகோட்டிகளாக, பேருந்து நடத்துனர்களாக, கட்டடத் தொழிலாளர்களாக, பிச்சையெடுப்பவர்களாக - இப்படிப் பலவிதமான வேஷங்களில், அந்த கிராமங்களில் புதிதாய்க் குடியேறியவர்களாக உருமாறினார்கள் அந்தக் காவலர்கள்.
'மாறுவேஷம்' என்றால் வெறுமனே ஒன்றிரண்டு நாள்களுக்கு அல்ல. மாதக்கணக்காக, அந்த கிராமங்களிலேயே தங்கி, அந்த மக்களுடன் கலந்து பழகி, உள்ளூர்க்காரர்களின் முழு நம்பிக்கையைப் பெற்றார்கள் அவர்கள்.
அந்தக் காட்டினுள் வீரப்பன் தைரியமாக உலா வருகிறான் என்றால், அதற்கு முக்கியமான காரணம், எல்லையோர கிராமங்களில் அவனுக்கிருந்த 'ஹீரோ' மரியாதையும், நண்பர்களும்தான். அவர்களுடைய உதவியால்தான், காட்டினுள் சக்தி மசாலா போட்டு சமைத்துச் சாப்பிட்டுக்கொண்டு, பி. பி. சி. தமிழோசை கேட்டுக்கொண்டு வாழ்கிறான் அவன்.
ஆகவேதான், போலீஸின் கண்ணில் படாத வீரப்பனை, அவனுடைய நம்பிக்கையைப் பெற்ற இந்த கிராமத்தவர்கள் சுலபமாய்ப் பார்க்கமுடிகிறது. அவனுக்குத் தேவையானவற்றைக் கொண்டுசெல்லமுடிகிறது. வெளியே ஊர், உலகத்தில் என்ன நடக்கிறது என்றெல்லாம் தகவல் தெரிவிக்கமுடிகிறது.
எனவே, வீரப்பனைச் சந்திக்கவேண்டும், அவனுடைய குழுவோடு கலக்கவேண்டும் என்று நினைத்த அதிரடிப் படையினர், அதற்கான முதல் படியாக, இந்த கிராமங்களில் குடியேறினார்கள். பின்னர், அவசரப்படாமல், சரியான வாய்ப்புக்காகப் பொறுமையோடு காத்திருந்தார்கள்.
ஆனால், திடீரென்று இந்த நடவடிக்கைகளெல்லாம் எதற்கு? அந்த கிராமங்களில் சென்று குடியேறினால், வீரப்பன் தானாக வந்து வலையில் சிக்கிவிடுவானா என்ன?
இங்கேதான், அதிரடிப் படையும், உளவுத் துறையும் புத்திசாலித்தனமாக இணைந்து செயல்பட்டது. வீரப்பனைப்பற்றிய தகவல்கள் எங்கே கிடைக்கும், எப்படிக் கிடைக்கும் என்று அலசி, ஆராய்ந்து, எல்லா வழிகளிலும் விஷயங்களைத் திரட்ட ஆரம்பித்தார்கள்.
அவர்கள் முக்கியமாக எதிர்பார்த்த விவரங்கள் - வீரப்பன் எங்கே இருக்கிறான்? எப்படி இருக்கிறான்? அவனோடு இருக்கும் 'குழு' என்பது, எத்தனை பேர்? யார் யார்? காட்டிலிருந்து அவர்களை வெளியே கொண்டுவரவேண்டுமானால், அதற்கு என்ன செய்யலாம்? அசைக்கமுடியாத இரும்புக் கோட்டையாக அறியப்பட்டிருக்கும் வீரப்பனின் கும்பலில், ஒரு சிறிய ஓட்டைகூடவா இருக்காது?
இந்தத் தகவல்களைச் சேகரிப்பதற்காக, வீரப்பனின் நடமாட்டம் அதிகமாய் இருக்கிற கிராமங்களிலும், தமிழகம் மற்றும் கர்நாடகச் சிறைகளில் இருக்கிற அவனுடைய முன்னாள் தோழர்களிடமும் கலந்து பழகியது அதிரடிப் படை. இதற்காகவே, சில காவலர்கள், கைதிகளாக 'திடீர்' அவதாரமெடுத்து, சிறைக்குள் சென்று, அங்கிருக்கும் கைதிகளிடம் சிநேகிதமானார்கள். போலீஸ் என்ற பாவனையில் 'அடித்து' விசாரிப்பதைவிட, இப்படி மறைமுகமாகத் தகவல் திரட்டுவது, அதிகப் பலன் தந்தது.
இதுதவிர, வேறொரு திசையிலிருந்தும், அதிரடிப் படையினரின் முயற்சிகள் நடந்தன. வீரப்பனின் காட்டைச் சுற்றியிருந்த கிராமத்து மக்கள், அதிரடிப் படையினரின்மீது பெரும் அதிருப்தியில் *(இதைப்பற்றி அடுத்த அத்தியாயத்தில் விரிவாகப் பார்க்கலாம்) இருக்கிறார்கள் என்பதைப் புரிந்துகொண்ட விஜயகுமார், மற்றும் அவருடைய குழுவினர், அந்த மக்களிடம் நேரடியாய்ப் பேசுவது, அவர்களுக்கு வேண்டிய உதவிகள், அடிப்படை சவுகர்யங்களைச் செய்து தருவது ஆகியவற்றின்மூலம், அவர்களுடைய நம்பிக்கையைப் பெற்றனர்.
இதனால், 'வீரப்பன்தான் நமக்கு நல்லது செய்வான், போலீஸார் நம்முடைய எதிரிகள்' என்று அதுவரை நினைத்துக்கொண்டிருந்த கிராமத்து / மலைவாசி மக்கள், இப்போது அதிரடிப் படையினரையும் மனப்பூர்வமாக நம்பத்தொடங்கினார்கள். சிலர் அவர்களுக்கு உதவ முன்வந்தார்கள்.
இப்படியாக, நேரடி மற்றும் மறைமுக விசாரணைகளின்மூலம், வீரப்பன் குழுவினரைப்பற்றி அதிரடிப் படையினருக்குச் சில முக்கியமான உண்மைகள் தெரியவந்தன.
முதலாவதாக, வீரப்பனுக்குத் தற்போது உடல்நிலை சரியில்லை. என்னதான் 'காட்டு' மனிதனானாலும், ஐம்பது வயதைக் கடந்துவிட்ட தளர்வு, அவனிடம் தெரியத்தொடங்கிவிட்டது. போதாக்குறைக்கு, அவனுடைய கண்ணில் ஏதோ கோளாறு - சிலர் 'காடராக்ட்' என்கிறார்கள், மேலும் சிலர், கண்ணில் ஏதோ அடிபட்டு, நன்றாக சீழ் பிடித்துவிட்டது என்கிறார்கள், இன்னும் சிலர், அவனுக்கு ஒரு கண்ணில் பார்வையே போய்விட்டது என்று சொல்கிறார்கள்.
இதில் எதை நம்புவது என்று நிச்சயமாகத் தெரியவில்லை. ஆனால், வீரப்பனுக்கு ஏதோ பெரிய பிரச்னை என்பதுமட்டும் நிச்சயம். ஆகவே, அவனுக்கு மருத்துவ உதவி தேவைப்படுகிறது.
சாதாரணமாக, வீரப்பன் குழுவில் யாருக்கேனும் உடம்பு சரியில்லாவிட்டால், அதற்கான டாக்டரையே காட்டினுள் அழைத்துச் சென்றுவிடுவான் என்றுதான் பேச்சு. ஆனால், இந்தமுறை அப்படிச் செய்யமுடியாது. ஏனெனில், கண் அறுவைச் சிகிச்சைக்கான வசதிகளைக் காட்டினுள் ஏற்பாடு செய்வது சிரமம். ஆகவே, அவன் நிச்சயமாக ஊருக்குள் வந்தாகவேண்டும்.
அடுத்து, வீரப்பனின் குழுவில் இரண்டாம் நிலையில் இருக்கும் சேத்துக்குளி கோவிந்தனும் வேறு சிலரும் தலைவர் பதவியின்மீது கண் வைத்திருப்பதாக சில தகவல்கள் கிடைத்தன. இதனால், வீரப்பனுக்கும் அவர்களுக்கும் சில கருத்து வேறுபாடுகள் இருக்கலாம்.
மூன்றாவதாக, வீரப்பனின் குழுவில் இருந்த சிலர், இந்தக் காட்டு வாழ்க்கையிலிருந்து விடுபட்டு, தங்களின் குடும்பத்தோடு சேர்ந்து வாழ விரும்பினார்கள். இதை அவன் ஏற்றுக்கொள்வானா? அனுமதிப்பானா?
ஒருவேளை வீரப்பன் இதற்குச் சம்மதித்தாலும், இவர்கள் விலகிவிட்டபின், தன் கும்பலுக்கான புதிய வீரர்களை எங்கிருந்து பிடிப்பது * (ஆதாரம்: Deccan Herald, அக்டோபர் 20, 2004) என்று அவன் தீவிரமாக யோசித்துக்கொண்டிருந்ததாகவும், சில நலன்விரும்பிகளிடம் இதுபற்றி விவாதித்திருப்பதாகவும் கேள்வி.
இந்தத் தகவல்களில் எதெல்லாம் உண்மை, எதெல்லாம் வதந்தி என்று உறுதியாகச் சொல்வதற்கில்லை. என்றாலும், வீரப்பனின் கும்பல் மனத்தளவிலும், உடலளவிலும்